’கறுப்பாக இருக்கிறாய்’… கோயிலுக்குள் நுழைய முயன்ற பெண்ணை வெளியில் துரத்திய அறங்காவலர்!

கர்நாடகாவில் கோயிலுக்குள் நுழைய முயன்ற பெண்ணை, தடுத்து வெளியில் இழுத்துவந்து விடும் வீடியோ காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு அமிர்தஹள்ளி என்ற பகுதியில் புகழ்பெற்ற நரசிம்ம சுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு பெண் ஒருவர் சாமி கும்பிடச் சென்றுள்ளார். ஆனால், அவரை உள்ளே விடாமல், அவரது தலைமுடியை இழுத்துப் பிடித்தபடி வாசலில் கொண்டுபோய் விடுகிறார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. … Read more

“அரிய வகை நோய்க்கான நிதியுதவித் திட்டத்தால் யாருமே பயனடையவில்லை” – மத்திய அரசுக்கு பாஜக எம்.பி கடிதம்

புதுடெல்லி: அரிய வகை நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் ரூ.50 லட்சம் உதவித்தொகை திட்டத்தால் இதுவரை எந்த நோயாளியும் பயனடையவில்லை என்று பாஜக எம்.பி வருண் காந்தி கூறியுள்ளார். இது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு வருண் காந்தி கடிதம் எழுதியிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சகம், அரிய வகை நோய்களால் பாதிக்கப்பட்டவர்களை காக்கும் வகையில் கடந்த 2021 மார்ச் 30-ம் தேதி ‘அரிய வகை நோய்களுக்கான … Read more

ஜோஷிமத் நிலச்சரிவு..வீடுகளை இழந்த மக்கள்..ராகுல் காந்தி கவலை.!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஜோஷிமத் பகுதியானது, பத்ரிநாத் மற்றும் ஹேம்குந்த் சாஹிப் மற்றும் சர்வதேச பனிச்சறுக்கு இடமான அவுலி போன்ற புகழ்பெற்ற யாத்திரை தலங்களின் நுழைவாயிலாக உள்ளது. இங்கு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு, ஜோஷிமத்தில் உள்ள வீடுகள், சாலைகள் மற்றும் வயல்களில் பெரிய விரிசல்கள் உருவாகி படிப்படியாக மூழ்கி வருகிறது. பல வீடுகள் இடிந்து விழுந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். ஆபத்தில் உள்ள வீடுகளில் வசிக்கும் 600 குடும்பங்களை உடனடியாக வெளியேற்ற உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் … Read more

வீட்டு வாடகை படி விதிகளில் திருத்தம்.! அரசு, பொதுத்துறை ஊழியர்களுக்கு கிடுக்கி: ஒன்றிய நிதித்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் வீட்டு வாடகை படி விதிகளில் ஒன்றிய நிதியமைச்சகம் திருத்தம் செய்துள்ளது. அதனால் ஒரே குடியிருப்பை இருவர் பகிர்ந்து கொண்டால் வீட்டு வாடகை படி கிடைக்காது. வீட்டு வாடகை கொடுப்பனவு என்பது வாடகை வீட்டில் வசிக்கும் தனது ஊழியருக்கு ஊதியத்துடன் வழங்கும் குறிப்பட்ட தொகையாகும். இந்த தொகைக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அரசுத் துறையின் குறிப்பிட்ட துறையில் குடியிருப்பு போன்ற வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றது. … Read more

ஆன்லைனில் ‘குழிமந்தி பிரியாணி’ வாங்கி சாப்பிட்ட 20 வயது பெண் பலி – கேரளாவில் தொடரும் சோகம்

உணவகத்திலிருந்து ஆன்லைனில் ஆர்டர் செய்து ‘குழிமந்தி பிரியாணி’ சாப்பிட்ட 20 வயது இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் இந்த வாரத்தில் மட்டும் பிரியாணி சாப்பிட்டு ‘ஃபுட் பாய்சனால்’ இரண்டாவது உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது என்பது அங்கு சற்று அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் காசர்கோடுக்கு அருகில் உள்ள பெரம்பல என்ற ஊரைச் சேர்ந்தவர் 20 வயதான அஞ்சு ஸ்ரீபார்வதி. இவர், கடந்த 31-ம் தேதி அருகில் உள்ள ரோமனிஷியா என்ற உணவகத்திலிருந்து குழிமந்தி … Read more

ஷவர்மாவிற்கு அடுத்து பிரியாணி..? கேரளாவிற்கு வந்த சோதனை

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள பெரும்பாலா பகுதியைச் சேர்ந்தவர் அஞ்சு ஸ்ரீ பார்வதி (20). இவர் கடந்த டிசம்பர் 31-ம் தேதி ஆன்லைன் வாயிலாக பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். பின்னர் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. உடல்நிலை மோசமானதை தொடர்ந்து கர்நாடகாவின் மங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அவர் மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு … Read more

உத்தராகண்ட் | ஜோஷிமத் நகர விரிசல் பாதிப்புக்கு 'வளர்ச்சி' திட்டங்களே காரணம்: ஜோதிர் பீட சங்கராச்சாரியார்

ஜோஷிமத்: உத்தராகண்டின் ஜோஷிமத் நகரில் கட்டிடங்கள் மற்றும் நிலங்களில் ஏற்பட்டுள்ள விரிசல்களுக்கு வளர்ச்சி திட்டம் என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளே காரணம் என்று ஜோதிர்மடத்தின் பீடாதிபதி சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வரதி குற்றம்சாட்டியுள்ளார். ஆதிசங்கரரால் தோற்றுவிக்கப்பட்ட மடங்களில் ஒன்று ஜோதிர்மடம். நாட்டின் வடக்கு திசையில் கேதார்நாத் அருகே அமைந்துள்ள இந்த மடம் ஜோஷிமத் என்று அழைக்கப்படுகிறது. இந்த மடத்தின் பெயராலேயே இந்த நகரம் அழைக்கப்படுகிறது. இந்த நகரத்தில்தான் தற்போது கட்டிடங்களிலும், நிலங்களிலும் விரிசல்கள் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இங்குள்ள மக்கள் … Read more

மேலும் ஒரு தீவிரவாத இயக்கத்திற்கு தடை; மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி.!

2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீர் பகுதியில் அமைந்துள்ள உரி ராணுவ தளத்தில் நடைபெற்ற தாக்குதலில் 18 படையினர் கொல்லப்பட்ட சம்பவம் உள்ளிட்ட பல்வேறு தாக்குதல்களுக்கு ஜெய்ஷ்-இ-முகமது தான் காரணம் என இந்திய அதிகாரிகள் குற்றம்சாட்டினர். ஜெய்ஷ்-இ-முகமது குழுவானது ஒரு `பயங்கரவாத` அமைப்பு என இந்தியா, ஐக்கிய ராஜ்ஜியம், அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளன. உரி தாக்குதலோடு சேர்த்து 2016-ம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படைத் தளத்தில் நடைபெற்ற … Read more

பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்குவது குறித்து பரவிய தகவல் போலியானது: நிதி ஆயோக் தரப்பில் விளக்கம்

புதுடெல்லி: பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்குவது குறித்து பரவிய தகவல் போலியானது என நிதி ஆயோக் விளக்கமளித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவது குறித்து நிதி ஆயோக் பட்டியல் ஒன்றை வெளியிட்டிருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இந்த போலியானது என நிதி ஆயோக் கூறியுள்ளது. இதுதொடர்பாக நிதி ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவது குறித்து நிதி ஆயோக் தகவல் வெளியிட்டிருப்பதாக ஒரு போலியான பட்டியல் ஊடகங்களில் பரவி வருகிறது. இதுபோன்ற எந்த ஒரு … Read more

’படித்ததும் கிழித்துவிடவும்’… எட்டாம் வகுப்பு மாணவிக்கு காதல் கடிதம் எழுதிய ஆசிரியர்!

உத்தரப்பிரதேசத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு ஆசிரியர் ஒருவர் காதல் கடிதம் எழுதியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச கன்னோஜ் மாவட்டத்தில் சதார் கொத்வாலி கிராமத்தில் உயர்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிபவர் 47 வயதான ஹரி ஓம்சிங். இவர், அப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு காதல் கடிதம் எழுதியுள்ளார். அதில், ’நான், உன்னை அதிகம் நேசிக்கிறேன். பள்ளி விடுமுறை நாட்களில் உன்னைக் காணாதது அதிக வருத்தத்தைத் தருகிறது. ஆகையால், உனக்கு … Read more