”வாழ முடியாமல் பிரிகிறோம்” – வீடியோ வெளியிட்டு மனைவியை சுட்டுக்கொன்ற தொழிலதிபர் தற்கொலை!

மத்தியப் பிரதேசத்தில் தொழிலதிபர் ஒருவர் தனது மனைவியைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா நகரின் நகரின் மையப்பகுதியில் உள்ள கிஷோர் கஞ்ச் பகுதியில் ஜவுளி தொழிலதிபரான சஞ்சய் சேத் என்பவர் தனது மனைவி மீனுவுடன் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று சஞ்சய் சேத் மற்றும் மீனு ஆகிய இருவரும் வீட்டின் இரண்டாவது மாடியில் உள்ள அறையில் இருந்தனர். அப்போது திடீரென்று அவர்களது வீட்டிலிருந்து துப்பாக்கி சத்தம் கேட்கவே, பக்கத்து … Read more

தேவகவுடாவின் மருமகள் ஹாசனில் போட்டி – குடும்பத்தினர் மோதலால் மஜதவில் சலசலப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 150 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இந்நிலையில் தனது மகன் நிகில் குமாரசாமி ராம்நகர் தொகுதியில் போட்டியிட இருப்பதாக குமாரசாமி அறிவித்துள்ளார். இதனிடையே தேவகவுடாவின் மூத்த மகனான ரேவண்ணாவின் மனைவி பவானி, ஹாசன் தொகுதியில் போட்டியிட இருப்பதாக பகிரங்கமாக அறிவித்துள்ளார். இதற்கு அவரது கணவரும் முன்னாள் … Read more

ஒடிசா சுகாதார அமைச்சர் மீது துப்பாக்கி சூடு… உயிருக்கு ஆபத்தான நிலை..!

ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் தலைமையில் ஆட்சி நடந்து வருகிறது. கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் முதல்வராக உள்ளார். இந்த நிலையில், அம்மாநில சுகாதார அமைச்சர் நபா கிஷோர் தாஸ் மீது உதவி சப்-இன்ஸ்பெக்டர் நடத்திய துப்பாக்கி சூட்டில் அமைச்சர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுளளது. இதுகுறித்து, ஒடிஷா டிவி இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில், ஒடிசா சுகாதார அமைச்சரும் மூத்த பிஜேடி தலைவருமான நபா தாஸ் பிரஜராஜ்நகரின் காந்தி சக் அருகே … Read more

ஒடிசா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் நபாதாஸ் மீது துப்பாக்கிச்சூடு!

ஒடிசா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் நபாதாஸ் மீது மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கச் சென்ற அமைச்சர் நபாதாஸ் மீது மர்ம நபர் வழிமறித்து துப்பாக்கிச்சூடு எனத் தகவல் ஒடிசாவின் பிரஜ்ராஜ் நகர் என்ற பகுதியில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை அமைச்சர் மீது 2 ரவுண்டுகள் துப்பாக்கிச்சூடு நடத்திய போலீஸ் ஏட்டு கோபால் தாஸ் என்பவர் கைது போலீஸ் ஏட்டு குறிபார்த்து துப்பாக்கியால் சுட்டதில், நெஞ்சில் குண்டு பாய்ந்தது – … Read more

ஹிண்டன்பர்க் அறிக்கையால் ரூ.2.40 லட்சம் கோடி காலி உலக பணக்காரர்கள் பட்டியலில் 7ம் இடத்திற்கு பின்தங்கிய அதானி: இது வெறும் ஆரம்பம்தான்

புதுடெல்லி: ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையால் ஓரிரு நாளில் ரூ.2.40 லட்சம் கோடி சொத்துக்களை இழந்த கவுதம் அதானி, உலக பணக்காரர்கள் பட்டியலில் 3ம் இடத்திலிருந்து 7ம் இடத்திற்கு பின்தங்கி உள்ளார். அமெரிக்காவின் முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், கடந்த 2 ஆண்டாக நடத்திய ஆய்வில், இந்திய தொழிலதிபர் கவுதம் அதானியின், அதானி குழுமம் பங்குச்சந்தையில் வரலாறு காணாத மோசடிகளை செய்துள்ளதாகவும், அதன் மூலம் ரூ.17.80 லட்சம் கோடி முறைகேடாக சம்பாதித்துள்ளதாகவும் பல்வேறு ஆதாரங்களுடன் அறிக்கை வெளியிட்டது. கடந்த 24ம் … Read more

ரிசர்வ் வங்கியும் செபியும் அதானி குழுமத்திடம் தீவிர விசாரணை நடத்த வேண்டும் – காங்கிரஸ் கோரிக்கை

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், அதானி குழும விவகாரம் தொடர்பாக மத்திய அரசிடம் நேற்றுமுன்தினம் கேள்வி எழுப்பினார். “பிரதமர் மோடிக்கும் அதானிக்கும் நீண்ட காலமாக நெருங்கிய உறவு இருக்கிறது. அதனால், கருப்புப் பணம் ஒழிப்பு குறித்து பேசும் மோடி அரசு, அதானியின் முறைகேடுகளுக்கு கண்ணை மூடிக்கொள்ள முடிவெடுத்துள்ளதா” என்று கேட்டார். மேலும் அவர், “பொதுத் துறை நிறுவனமான எல்ஐசி, அதானி குழுமத்தில் ரூ.74,000 கோடி முதலீடு செய்துள்ளது. அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்ட கடன்களில் எஸ்பிஐ-யின் பங்களிப்பு … Read more

குடியரசுத் தலைவர் மாளிகை தோட்டம் ஜன.,31இல் திறப்பு!

குடியரசுத் தலைவர் மாளிகைத் தோட்டங்கள் ‘முகல்’ (முகலாய) தோட்டங்கள் என்று அழைக்கப்பட்டு வந்தன. இந்திய சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டு விழாவை அமிர்தப் பெருவிழாவாக கொண்டாடி வருவதையொட்டி, குடியரசுத் தலைவர் மாளிகைத் தோட்டங்களுக்கு ‘அம்ரித் உத்யன்’ என்று பொதுவான பெயர் சூட்டப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில், குடியரசுத் தலைவர் மாளிகையின் தோட்டங்கள் பார்வையாளர்களுக்குத் திறக்கப்படும் உத்யன் உத்சவ் 2023 நிகழ்ச்சி இன்று நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்றுத் தோட்டங்களைத் திறந்து … Read more

நாக்பூரில் இருந்து மும்பை சென்ற இண்டிகோ விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற பயணி மீது வழக்குப்பதிவு

நாக்பூர்: நாக்பூரில் இருந்து மும்பை சென்ற இண்டிகோ விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற பயணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது அவசர கதவை பயணி ஒருவர் திறக்க முயன்றுள்ளார். விமானத்தில் பாதுகாப்பு விசயத்தில் எந்தவித சமரசமும் செய்து கொள்ளப்படமாட்டாது என இண்டிகோ விமானம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சியை ஆவணப்படமாக ஏன் எடுக்கவில்லை? – கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் கேள்வி

ஆங்கிலேயர் ஆட்சியில் நடந்த அட்டூழியங்களை ஆவணப்படங்களாக ஏன் எடுக்கவில்லை? எனக் கேள்வியெழுப்பியுள்ளார் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான்.   கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இந்து சமய மாநாடு ஒன்றில் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் கலந்துகொண்டார். இந்தக் கூட்டம் வட அமெரிக்காவைச் சேர்ந்த கேரள இந்துகள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பேசிய ஆளுநர் ஆரிப் முகமது கான், பிரதமர் நரேந்திர மோடி குறித்த பிபிசியின் ஆவணப்படத்தை கடுமையாக விமர்சனம் செய்தார். … Read more

இந்தியா ஜனநாயகத்தின் தாய் என்பதை தமிழ்நாட்டின் உத்திரமேரூர் கல்வெட்டுகள் பறைசாற்றுகின்றன: பிரதமர் நரேந்திர மோடி

புதுடெல்லி: இந்தியா ஜனநாயகத்தின் தாய் என்பதை தமிழ்நாட்டின் உத்திரமேரூர் கல்வெட்டுகள் பறைசாற்றுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் முதல் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா – ஜனநாயகத்தின் தாய் என்ற புத்தகம் குறித்து குறிப்பிட்டார். அதில், ஆர்வத்தைத் தூண்டக்கூடிய பல்வேறு விஷயங்கள் இருப்பதாகத் தெரிவித்த அவர், மிகச் சிறந்த கட்டுரைகளை அந்த புத்தகம் கொண்டிருப்பதாகக் கூறினார். நமது நரம்புகளில், நமது கலாச்சாரத்தில், நாம் மேற்கொள்ளும் பணிகளில் ஜனநாயகம் … Read more