உலக பணக்காரர் பட்டியலில் 7ம் இடத்திற்கு தள்ளப்பட்ட அதானி.!

உலக அளவில் மூன்றாவது பணக்காரராகவும், ஆசியாவின் முதல் பெரிய பணக்காரராகவும் இருந்தவர் அதானி. கொரோனா காலத்தில் அனைத்து மக்களின் செல்வம் குறைந்தபோது அதானி, அம்பானி உள்ளிட்ட பெரும் பணக்காரர்களின் செல்வம் அதிகரித்ததாகவும், இந்தியாவின் வளங்கள் அதானிக்கு தாரைவார்க்கப்படுவதாகவும் எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்தநிலையில் பங்கு சந்தையில் அதானி குழுமம் பல்வேறு நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் நிறுவனம் ஆய்வறிக்கையை வெளியிட்டது. அதானி குழுமத்தைப் பற்றி பல்வேறு புகார்கள் அடங்கிய … Read more

மருமகளை திருமணம் செய்த மாமனார்… 42 வயது வித்தியாசம் – பொங்கும் நெட்டிசன்கள்

உத்தரப் பிரதேசத்தின் கோராக்பூர் நகரைச் சேர்ந்த கைலாஷ் யாதவ் (70) என்பவர் பர்ஹல்கஞ்ச் காவல் நிலையத்தில்  வாட்ச்மேனாக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி 12 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்துவிட்டார். அவருக்கு மொத்தம் 4 குழந்தைகள்.  சில ஆண்டுகளுக்கு, அவரது மூன்றாவது மகனும் உயிரிழந்தார். உயிரிழந்த அவரின் மகனுக்கு பூஜா என்ற பெண்ணுடன் திருமணமாகியிருந்தது. பூஜாவின் கணவர் உயிரிழந்தவுடன் அவர் மறுமணம் செய்துள்ளார். ஆனால், அந்த திருமணமும் சரியாக அமையததால் பூஜா தனியாக வசித்ததாக கூறப்படுகிறது.  இதையடுத்து, பூஜாவை … Read more

ஜம்மு காஷ்மீர் நடைபயணத்தில் பாதுகாப்பு விஷயத்தில் காவல்துறையினர் தோல்வியடைந்துவிட்டதாக த ராகுல்காந்தி குற்றஞ்சாட்டு

ஜம்மு காஷ்மீரில் தனது நடைபயணத்திற்கான பாதுகாப்பு விஷயத்தில், காவல்துறையினர் தோல்வியடைந்துவிட்டதாக, ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். ஜம்மு காஷ்மீரின் அனந்த் நாக்கில், ராகுல்காந்தி இன்று இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டார். 11 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபயணம் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், பயணம் தொடங்கிய 500 மீட்டரிலேயே ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து பேசிய ராகுல்காந்தி, ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் செயல்பாடு தோல்வியடைந்ததாகவும், கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டிய காவலர்களை எங்கும் காண முடியவில்லை என்றும் தெரிவித்தார். தான் மேற்கொண்டு யாத்திரை செல்வதை தனது … Read more

ஜம்மு காஷ்மீரில் தனது நடைபயணத்திற்கான பாதுகாப்பு விஷயத்தில், காவல்துறை தோல்வியடைந்துவிட்டது: ராகுல்காந்தி குற்றச்சாட்டு..!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தனது நடைபயணத்திற்கான பாதுகாப்பு விஷயத்தில், காவல்துறை தோல்வியடைந்துவிட்டதாக ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். ஜம்மு கஷ்மீரில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக ராகுல் காந்தியின் பாதயாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்திய ஒற்றுமை நடைப்பயணம் காஷ்மீரில் நிறைவடைய உள்ளது. தமிழ்நாட்டில் தொடங்கிய பயணம் கேரளா, கர்நாடாகா, தெலங்கானா, ஆந்திர பிரதேசம், மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களை தொடர்ந்து தற்போது காஷ்மீரில் … Read more

"அதுவரை தொடரமாட்டோம்!" காஷ்மீரில் ராகுலின் யாத்திரை திடீர் நிறுத்தம்!

பாரத் ஜோடோ யாத்திரைக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படாததால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. ராகுலின் நடைப்பயணம் திடீர் நிறுத்தம் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வரை யாத்திரையை தொடங்க மாட்டோம் எனவும் அக்கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால், “ஜோடோ யாத்திரையில் பாதுகாப்பு குறைபாடு உள்ளது. பாதுகாப்பு இல்லாமல் ராகுல் காந்தி செல்வதை அனுமதிக்க முடியாது. அவர் நடக்க நினைத்தாலும் அதை அனுமதிக்க முடியாது” என தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் இன்று … Read more

வீடு, வீடாக கடிதம் கொடுக்கிறது காங்கிரஸ்.. எதற்காக தெரியுமா..?

மத்திய அரசின் தோல்விகளை சுட்டிக் காட்டி, வீடு வீடாகச் சென்று கடிதம் அளிக்கும் புதிய பிரச்சாரத்தை காங்கிரஸ் தொடங்கியுள்ளது. காங்கிரசை வலுப்படுத்த அந்த கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் பாரத ஒற்றுமை பேரணியை தொடங்கினார். இதன் ஒரு பகுதியாக, மத்திய அரசின் தோல்விகளை சுட்டிக் காட்டி, வீடு வீடாகச் சென்று கடிதம் அளிக்கும் இயக்கத்தை காங்கிரஸ் நேற்று தொடங்கியது. இதுகுறித்து காங்கிரஸ் வட்டாரங்கள் கூறும்போது, ‘குடியரசு தின … Read more

லடாக் எல்லையை சுற்றுலா தலமாக்க திட்டம்

புதுடெல்லி: சீனாவின் அச்சுறுத்தலை முறியடிக்க லடாக் எல்லையை சுற்றுலா தலமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. லடாக் எல்லையை ஒட்டிய சீன பகுதிகளில் அந்த நாட்டு ராணுவம் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தி வருகிறது. இந்த சூழலில் கடந்த வாரம்நடைபெற்ற காவல் துறை தலைவர்கள் மாநாட்டில் லடாக் எல்லைதொடர்பாக விரிவான ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதில், “லடாக்கின் எல்லைப்பகுதிகளில் மக்கள் நடமாட்டத்தை அதிகரிக்க செய்ய வேண்டும். அதற்கு லடாக் எல்லைப் பகுதிகளை உள்நாடு மற்றும்வெளிநாட்டினர் வந்து செல்லும் வகையில் பிரபல சுற்றுலாத் தலமாக மாற்ற வேண்டும்” … Read more

விமர்சனம் என்பது ஜனநாயகத்தின் சுத்திகரிப்பு போன்றது; பிரதமர் பேச்சு.!

ஒவ்வொரு ஆண்டும் பொதுத் தேர்வுக்கு முன்னதாக மாணவர்களுடன் பிரதமர் உரையாடுவது வழக்கம். ‘பரிக்ஷா பே சர்ச்சா’ எனப் பெயர் கொண்ட இந்த நிகழ்ச்சியில், பங்கேற்பதற்காக இந்த ஆண்டு 38 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 16 லட்சத்திற்கும் அதிகமானோர் மாநில பாடத்திட்டத்தைச் சேர்ந்ததவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் மாணவர்களுடன் உரையாடிய பிரதமர் மோடி, விமர்சனங்கள் குறித்த மாணவர்களின் கேள்விக்கு பதலளித்துள்ளார். பல்வேறு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் விமர்சனங்கள் குறித்து கேட்டதற்கு ஒரு மாணவருக்குப் பதிலளித்த பிரதமர், … Read more

திருப்பதி: ஒரு மெஷினுக்கு ரூ.50 கோடி நன்கொடை…! வாரி வழங்கிய ஜியோ

திருப்பதி திருமலையில் பக்தர்களின் வசதிக்காக தங்கும் விடுதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. எப்போது கூட்டம் வந்தாலும் அதனை சமாளிக்கும் வகையில் உணவுக்கூடங்கள் முதல் கழிப்பறைகள் வரை எப்போதும் தயார் நிலையிலேயே இருக்கும். காரணம், அங்கு நாள்தோறும் 30 முதல் 50 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்வதாக கூறப்படுகிறது. இதனால், அவர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பிலும், நன்கொடையாளர்ளின் சார்பிலும் பல்வேறு வசதிகள் செய்யப்படுகின்றன. அந்தவகையில், தானியங்கி பூந்தி இயந்திரம் திருப்பதி தேவஸ்தானத்தில் நிறுவப்பட … Read more

.ராகுல் நடைப்பயணத்தில் எவ்வித பாதுகாப்பு குறைபாடும் இல்லை: ஜம்மு காஷ்மீர் போலீசார் விளக்கம்

காஷ்மீர்: ராகுல் நடைப்பயணத்தில் எவ்வித பாதுகாப்பு குறைபாடும் இல்லை என ஜம்மு காஷ்மீர் போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். காஷ்மீரில் நடக்கும் பாரத் ஜோடா யாத்திரையில் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதாகவும் போலீசார் தெரிவித்தனர். நடைப்பயணத்தின் போது பங்கிஹாலில் பெரும்கூட்டம் இணைவது பற்றி அமைப்பாளர்கள் தகவல் தரவில்லை என்றும் போலீசார் கூறினர்.