எந்த பரிசீலனையும் மேற்கொள்ளாமல் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துவிட்டது: நீதிபதி நாகரத்னா விமர்சனம்..!

டெல்லி: பணமதிப்பிழப்பு நடவடிக்கையை ஒன்றிய அரசு மேற்கொள்ள அதிகாரம் உள்ளது என்ற கவாய் தீர்ப்பிலிருந்து மாறுபடுவதாக நீதிபதி நாகரத்னா அறிவித்துள்ளார். கடந்த 2016ம் ஆண்டு திடீரென ரூ.500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு வெளியிட்டார். இதனால் நாட்டு மக்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்தனர். இந்த நிலையில் பண மதிப்பிழப்புக்கு எதிராக 57 ரிட் மனுக்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகள் … Read more

மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் | உச்ச நீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்

புதுடெல்லி: கடந்த 2016ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் 4 பேர் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்றும் ஒரு நீதிபதி மாறுபட்ட தீர்ப்பும் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிரான 58 வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. தீர்ப்பின் சாராம்சம் தற்போது வெளியாகியுள்ள நிலையில் முழுமையான தீர்ப்பு இன்று மாலைக்குள் வெளியாகும் என்று … Read more

ஒன்றிய அரசு மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும்: ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு..!

டெல்லி: பணமதிப்பிழப்பு நடவடிக்கையை ரத்து செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு திடீரென ரூ.500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு வெளியிட்டார். இதனால் நாட்டு மக்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்தனர். இந்த நிலையில் பண மதிப்பிழப்புக்கு எதிராக 57 ரிட் மனுக்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தபோது, ‘‘பணமதிப்பிழப்பு விவகாரத்தில் ஒன்றிய அரசு … Read more

கொடூரம்..!! மானை வேட்டையாட சுட்டதில் 30 வயது கர்ப்பிணி பெண் வயிற்றில் பாயந்த குண்டு…!!

உத்தரபிரதேச மாநிலம் மஹோபா பகுதியில் வசித்து வருபவர் பூபேந்திர சிங். இவரது மனைவி வந்தனா (30). கர்ப்பிணிப் பெண்ணான இவர் தனது கணவருடன் சேர்ந்து வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் இருவர் புளூபக் வகை மானை வேட்டையாட வந்துள்ளனர். அவர் புளூபக் மானை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். ஆனால் அது தவறுதலாக வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்த பெண்ணின் வயிற்றில் சுடப்பட்டது. உடனடியாக அவர் சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கிருந்து அவர் … Read more

கேரளாவில் புத்தாண்டு அன்று மது விற்பனை எவ்வளவு தெரியுமா?

கேரளா முழுவதும் புத்தாண்டு தினத்தையொட்டி ரூ.107 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது. இந்த புத்தாண்டு தினத்தில் கேரளா முழுவதும் மது விற்பனை அமோகமாக நடைபெற்றது. கேரளாவில் மதுபான விற்பனை அரசின் பெவ்கோ நிறுவனம் மூலம் நடைபெறுகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் பெவ்கோ சார்பில் 266 கடைகள் உள்ளன. இந்த கடைகள் மூலம் நேற்று முன்தினம் 31-ந்தேதி மட்டும் சுமார் ரூ.107 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கடைகளிலும் சராசரியாக ரூ.10 லட்சத்திற்கும் … Read more

இந்தியா – பாகிஸ்தான் இடையே அணுசக்தி மையங்களின் பட்டியல் பரஸ்பர பரிமாற்றம்

புதுடெல்லி: அணுசக்தி மையங்களின் மீதான தாக்குதலை தவிர்ப்பதற்காக பரஸ்பர ஒப்பந்தப்படி தொடர்ந்து 32-வது ஆண்டாக இந்தியாவும், பாகிஸ்தானும் தங்களின் அணுசக்தி மையங்களின் பட்டியலை பகிர்ந்து கொண்டன. இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அணுசக்தி மையங்களின் மீதான தாக்குதலை தவிர்ப்பதற்காக இந்தியாவும், பாகிஸ்தானும், தங்கள் நாட்டில் உள்ள அணுசக்தி மையங்களின் பட்டியலை பகிர்ந்து கொள்ள கடந்த 1988-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி ஒப்பந்தம் செய்து கொண்டன. இந்த ஒப்பந்தப்படி இரு நாடுகளும் ஒவ்வொரு … Read more

காஷ்மீரில் தொடர் பதற்றம்: 4 பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில் குண்டுவெடிப்பு..!

ரஜோரி: ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாதிகளால் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சித்ரா பகுதியில் டிச.28ல் என்கவுன்ட்டரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் ஜம்முவின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள அப்பர் டாங்ரி என்ற கிராமத்திற்குள் நேற்று இரவு பயங்கரவாதிகள் திடீரென புகுந்துள்ளனர். பின்னர் அங்குள்ள 3 வீடுகளுக்குள் புகுந்து … Read more

ஜனவரி மாதத்தில் 15 நாட்கள் வங்கிகள் இயங்காது..!!

 வழக்கமாக ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு விடப்படும் விடுமுறைகளை ரிசர்வ் வங்கி அந்த மாதம் துவங்கத்திலேயே அறிவிப்பது வழக்கம் ஆகும். பொதுமக்கள் தங்களது வரவு – செலவு கணக்கு, பணத்தை டெபாசிட் செய்வது, எடுப்பது, லோன் உள்ளிட்ட தேவைகளுக்காக வங்கிகளை நாடி வருகின்றனர். எனினும் வங்கி பணி நாட்கள் எது என்று தெரியாமல் விடுமுறை நாட்களில் வங்கிக்கு சென்று திரும்புவதும் நடைபெறுகிறது. இதனால், வங்கி விடுமுறை நாட்களை ரிசர்வ் வங்கி முன்கூட்டியே அறிவித்து வருகிறது.   அந்த வகையில் … Read more

2023-ல் 10 மாநிலங்களில் சட்டசபை தேர்தல்.!…

புதிதாக பிறந்துள்ள 2023-ம் ஆண்டில், அடுத்தடுத்து சட்டசபை தேர்தல்கள் நடக்க உள்ளன. 2023 ஆம் ஆண்டில் 10 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. முதலில், நாகாலந்து, திரிபுரா, மேகாலயா ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களில் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. 3 மாநிலங்களிலும் ஒன்றாகவே தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே கூறியுள்ளது.   இந்த மாநிலங்களின் சட்டசபை பதவிக்காலம் மார்ச் மாதம் முடிவடைகிறது. திரிபுரா மாநிலத்தில் பாரதிய ஜனதா ஆட்சி … Read more

பிஹாரின் கயா மாநகராட்சி தேர்தலில் துப்புரவு பெண் தொழிலாளி துணை மேயராக தேர்வு

பாட்னா: சுமார் 40 ஆண்டுகளாக துப்புரவு தொழிலாளியாக பணியாற்றிய சிந்தா தேவி (62) பிஹாரின் கயா மாநகராட்சியின் துணை மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிஹார் மாநில உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 18, 28 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற்றது. 17 மாநகராட்சிகள், 70 நகராட்சிகள், 137 ஊராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. கடந்த 30-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. பிஹாரில் தற்போது ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. … Read more