ஏழுமலையான் கோயிலில் சொர்க்க வாசல் தரிசனம் – பக்தர்கள் முகக் கவசம் அணிந்து வருவது கட்டாயம்

திருமலை: வைகுண்ட ஏகாதசி ஏற்பாடுகள் குறித்து நேற்று மாலை திருப்பதிதிருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி. சுப்பாரெட்டி தலைமையில் தலைமை நிர்வாக அதிகாரி அணில்குமார் சிங்கால், திருப்பதி மாவட்ட ஆட்சியர் வெங்கடரமணா ரெட்டி, கூடுதல் நிர்வாக அதிகாரி வீரபிரம்மம், இணை நிர்வாக அதிகாரி சதா பார்கவி, திருப்பதி எஸ்பி. பரமேஸ்வர் ரெட்டி உட்பட பல்வேறு அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து சுப்பாரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது: வைகுண்ட ஏகாதசியையொட்டி … Read more

திருப்பதியில் புதிய கட்டுப்பாடு அமல்: பக்தர்கள் கவனத்திற்கு!

உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளது. குறிப்பாக, சீனாவில் அதிவேகமாக பரவி வரும் பிஎப்7 (BF.7) வகை கொரோனா மாறுபாடு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த புதிய கொரோனா மாறுபாடு தடுப்பூசியின் நிலையைப் பொருட்படுத்தாமல் வேகமாக பரவி வருவதாகவும், இதன் வீச்சு அதிகமாக இருக்கும் எனவும் எச்சரிக்கைகள் விடுக்கப்படுகின்றன. இந்தியாவை பொறுத்தவரை பிஎப்7 ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று மொத்தம் 4 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன. … Read more

Breaking: பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் மருத்துவமனையில் அனுமதி!

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடியின் உடல்நிலை மோசமடைந்துள்ளதை அடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் விரைவில் மருத்துவமனைக்கு சென்று தாயாரை சந்திப்பார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமரின் தாயார் ஹீராபென் மோடி அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, குஜராத் சட்டசபை தேர்தலின் போது பிரதமர் மோடி தனது தாயாரை காந்திநகரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார். பிரதமர் நரேந்திர மோடி தனது தாயார் ஹீராபென் மோடியை காந்திநகரின் … Read more

இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தியின் பாதுகாப்பை உறுதி செய்ய கோரி ஒன்றிய அரசுக்கு காங்கிரஸ் சார்பில் கடிதம்

டெல்லி: இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தியின் பாதுகாப்பை உறுதி செய்ய கோரி ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவுக்கு, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கடிதம் எழுதியுள்ளார். கடந்த 24ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற ஒற்றுமை யாத்திரையில் ராகுல் காந்தியின் பாதுகாப்பு ஏற்பாட்டில் குளறுபடி ஏற்பட்டது. ஜனவரி 3ம் தேதி தொடங்க உள்ள ஒற்றுமை யாத்திரை பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் வழியாக செல்ல உள்ளது. பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீரில் ராகுல் காந்திக்கு முறையான பாதுகாப்பு … Read more

பிரியாணியில் எலும்புத் துண்டு இருந்ததால் போலீசை நாடிய நபர்.. மேனேஜர் மீது பாய்ந்த FIR!

குஸ்கா என்ற ப்ளைன் பிரியாணி ஆர்டர் செய்யும் போது அதில் தவறுதலாக சிக்கன் அல்லது மட்டன் பீஸ் இருந்தால் அசைவ பிரியர்களை கையிலேயே பிடிக்க முடியாது. ஆனால் இப்படியான சம்பவம் ஒன்று சைவ பிரியருக்கு நடந்ததோடு, அது காவல்துறையிடம் புகார் கொடுக்கும் அளவிற்கு சென்றிருக்கிறது. அந்த வகையில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஆகாஷ் தூபே என்பவர்தான் தனக்கு கிடைத்த சைவ உணவில் எலும்புத் துண்டு இருந்ததாக குறிப்பிட்டு உணவக உரிமையாளர் மீது புகார் தெரிவித்திருக்கிறார். அதன்படி, வெஜ் … Read more

'இந்திய ஒற்றுமை யாத்திரை பாஜகவை பதற்றப்பட வைத்துள்ளது' – மல்லிகார்ஜூன கார்கே

புதுடெல்லி: ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை யாத்திரை பாஜகவை பதற்றப்பட வைத்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் 138வது நிறுவன தினம், புதுடெல்லியில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று கொண்டாடப்பட்டது. இதில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, ஜெய்ராம் ரமேஷ், மணிசங்கர் ஐயர், அம்பிகா சோனி உள்ளிட்ட மூத்த தலைவர்கள், காங்கிரஸ் சேவாதள தொண்டர்கள் என பலரும் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன … Read more

'ரொம்ப அசிங்கமா போச்சு குமாரு' – துப்பாக்கியால் திணறிய போலீஸ் ; கலாய்க்கும் நெட்டிசன்கள்

உத்தரப் பிரதேசத்தின் கோத்வாலி மாவட்டத்தில் உள்ள சண்ட் கபிர் நகரில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில்,  காவல் துறை ஐஜி ஆர்.கே. பரத்வாஜ் திடீரென ஆய்வு செய்தார். அப்போது,கலிலாபாத் காவல் நிலையத்தில், சென்ற அவர், ரைஃபிள் துப்பாக்கியை லோட் செய்யுமாறு அந்த காவல் நிலையத்தின் உதவி காவல் ஆய்வாளரிடம் ஐஜி கூரியுள்ளார். ஆனால், அந்த உதவி ஆய்வாளர் துப்பாக்கி லோட் செய்ய தெரியாமல் திணறியுள்ளார்.  அதுமட்டுமின்றி, துப்பாக்கியின் குண்டை, குழாய் வழியாக வைத்து லோட் செய்ய வேண்டும் … Read more

ஜம்மு காஷ்மீரில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ஆலோசனை?

ஸ்ரீநகர்: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீரில் இன்று ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாலை 3 மணிக்கு லடாக்கிலும், 4 மணிக்கு ஜம்மு காஷ்மீரிலும் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் இன்று எத்தனை பேருக்கு கொரோனா தொற்றால் பாதிப்பு? மத்திய சுகாதாரத்துறை தகவல்

உலகமெங்கும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் இன்றைய புள்ளி விவரங்கள் படி நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் மட்டும் 188 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதே நேரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 141 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை ஒட்டுமொத்தமாக 4,41,43,483 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். நாடு முழுவதும் தற்போது 3,468 … Read more

கர்நாடகாவில் மராத்தி பேசும் கிராமங்களை சட்டப்பூர்வமாக இணைக்க நடவடிக்கை – மகாராஷ்டிர பேரவையில் தீர்மானம்

நாக்பூர்: மகாராஷ்டிரா, கர்நாடகா இடையேஎல்லைப் பிரச்சினை கடந்த 1957-ம் ஆண்டு முதல் இருந்து வருகிறது. கர்நாடக மாநிலத்தின் பெலகாவி, முன்பு பாம்பேவின் ஒரு பகுதியாக இருந்தது. மகாராஷ்டிரா எல்லையை ஒட்டியுள்ள கர்நாடக பகுதியில் 800-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் மக்கள் மராத்தி பேசுகின்றனர். அதனால் இந்தப் பகுதிகளை தங்கள் மாநிலத்துடன் இணைக்க வேண்டும் என மகாராஷ்டிரா கூறுகிறது. மாநிலங்கள் மறுசீரமைப்பு சட்டத்தின்படி மொழி அடிப்படையில் செய்த வரையறை தொடர்பாக மகாஜன் ஆணையம் கடந்த 1967-ம் ஆண்டு தாக்கல்செய்த … Read more