காங்கிரசில் இருந்து விலகினார் ஏ.கே. அந்தோணியின் மகன் அனில் கே அந்தோணி
புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே. அந்தோணியின் மகன் அனில் கே அந்தோணி, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பிரதமர் மோடி குறித்த பிபிசி-யின் சர்ச்சைக்குரிய ஆவணப்படத்திற்கு எதிராக நேற்று கருத்து தெரிவித்திருந்த நிலையில், இந்த முடிவை எடுத்துள்ளார். இதுகுறித்து அனில் அந்தோணி இன்று(புதன்கிழமை) வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “காங்கிரஸ் கட்சியில் மாநில அளவிலும் தேசிய அளவிலும் நான் வகித்துவந்த அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுகிறேன். கருத்துச் சுதந்திரத்திற்காக போராடுபவர்கள் எனது ட்வீட்டை திரும்பப் பெறும்படி … Read more