கடந்த 5 ஆண்டுகளில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் – 79% பேர் உயர் வகுப்பினரே!

”நீதிபதிகளை நியமிப்பதற்கான முதன்மைப் பொறுப்பை கொலீஜியம் அமைப்பு ஏற்று 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், நீதிபதிகள் நியமனத்தில் அனைத்துச் சமூகங்களையும் சோ்ந்தவா்களுக்கு இன்னும் சமவாய்ப்பு கிடைக்கவில்லை” என நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் நீதித் துறை அளித்துள்ள விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது. நீதிபதிகள் நியமனம் தொடா்பாக நீதித் துறை சாா்பில் சட்டம்-நீதி சாா்ந்த நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் அளிக்கப்பட்ட விரிவான விளக்கத்தில், ’கடந்த 2018 முதல் 2022 வரை நாட்டில் உள்ள உயா்நீதிமன்றங்களுக்கு 537 நீதிபதிகள் நியமிக்கப்பட்டனா். அவா்களில் பழங்குடியினத்தைச் … Read more

மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் நுபுர் ஷர்மா போட்டியிட்டால் ஆச்சரியப்பட மாட்டேன்: ஒவைசி

புதுடெல்லி: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் நுபுர் ஷர்மா போட்டியிட்டால், தான் ஆச்சரியப்பட மாட்டேன் என அகில இந்திய மஜ்லிஸ் இ இத்தஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவர் அசாதுதின் ஒவைசி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு மே மாத இறுதியில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாஜகவின் அப்போதைய செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா, முகம்மது நபி குறித்து விமர்சித்துப் பேசினார். இது பெரும் சர்ச்சையானது. அவரது பேச்சுக்கு நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. இஸ்லாமிய … Read more

விமானத்தில் ஷங்கர் மிஸ்ரா மது அருந்தி இருந்தது ஏன்? – சக பயணி பேட்டி!

ஏர் இந்தியா விமானத்தில், மது போதையில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஷங்கர் மிஸ்ரா, மது அருந்தியதற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்தில் இருந்து தலைநகர் டெல்லிக்கு, ஏர் இந்தியா விமானம் கடந்த நவம்பர் மாதம் 26 ஆம் தேதி புறப்பட்டது. அப்போது, சக பயணி ஒருவர் குடி போதையில், அதே வகுப்பில் பயணித்துக் கொண்டிருந்த 70 வயது மூதாட்டியின் இருக்கை அருகே நின்று … Read more

“அந்த ராகுல் காந்தி இப்போது இல்லை…” – ராகுலின் ஹரியாணா பேட்டியும் நெட்டிசன்கள் ரியாக்‌ஷனும்

சண்டிகர்: “அந்த ராகுல் காந்தி இப்போது இல்லை” என ஹரியாணா மாநிலத்தில் இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்குண்டுள்ள ராகுல் காந்தி அளித்த பேட்டி ஒன்று கவனம் பெற்றுள்ளது. பேட்டியின்போது செய்தியாளர் ஒருவர், ‘இந்த யாத்திரை உங்கள் அடையாளத்தை மாற்றி இருக்கிறதா?’ என்று வினவினார். அதற்குப் பதிலளித்த ராகுல் காந்தி, “உங்கள் மனதில் என்ன மாதிரியான ராகுல் காந்தி அடையாளப்படுத்தப்பட்டு இருக்கிறாரோ அந்த ராகுல் காந்தியை நான் கொலை செய்துவிட்டேன். அந்த ராகுல் என் நினைவில் இல்லை. அவர் … Read more

மக்கள் தன்னை வழிபட வேண்டும் என பிரதமர் விரும்புகிறார்; ராகுல் காந்தி பேட்டி.!

ராகுல் காந்தியின் நடைபயணம் ஹரியானா மாநிலத்தில் நுழைந்துள்ளது. அவர் சமனாவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ராகுல் காந்தி கூறும்போது, ‘‘நாட்டில் உள்ள அனைத்து மக்களும் தன்னை வணங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி விரும்புகிறார். பாரத் ஜோடோ யாத்ரா என்பது சமூகத்தில் பரப்பப்படும் வெறுப்பு மற்றும் பயத்திற்கு எதிரானது. பாத யாத்திரை சுய தியானம் பற்றியது. பணத்தைப் பயன்படுத்தி, நிறுவனங்களைக் கைப்பற்றி, அச்சத்தை உருவாக்குவதன் மூலம் மக்கள் வலுக்கட்டாயமாக தங்களை வழிபட வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் … Read more

பொது சிவில் சட்டம் தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவிற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: பொது சிவில் சட்டம் தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவிற்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம்  தள்ளுபடி செய்தது. மாநில அரசுகளுக்கு இத்தகைய குழுக்கள் அமைக்க அதிகாரம் உள்ளதாக கூறி மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.  

வெறுப்புணர்வுக்கு எதிராக தேசிய ஒற்றுமை யாத்திரை: ராகுல் காந்தி பேட்டி

குருஷேத்ரா: ஹரியானா மாநிலம் குருஷேத் ராவில் நேற்று தேசிய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்ட ராகுல் அளித்த பேட்டியில் கூறியதாவது. சமூகத்தில் பரப்பப்படும் வெறுப்புணர்வு, அச்சம் மற்றும் வேலை வாய்ப்பின்மை, பணவீக்கம் ஆகியவற்றுக்கு எதிராக நான் தேசிய ஒற்றுமை யாத்திரை மேற்கொள்கிறேன். நாட்டின் உண்மையான குரலை மக்கள் கேட்க வைப்பதுதான் இந்த யாத்திரையின் நோக்கம். இந்த யாத்திரையில் நாட்டு மக்களின் மனதில் என்ன இருக்கிறது என்பதை நேரடியாக கேட்க முடிகிறது. Source link

உலகின் மிக நீண்ட தூர சொகுசு கப்பல் சுற்றுலாவை ஜனவரி13ம் தேதி தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி..!!

உத்தரப்பிரதேசம்: உலகின் மிக நீண்ட தூர சொகுசு கப்பல் சுற்றுலாவை வருகிற 13ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் இருந்து வங்கதேசம் வழியாக அசாம் மாநிலத்தின் திப்ருகர் வரை செல்லும் சொகுசு கப்பல் சுற்றுலாவுக்கு ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது. உலகின் மிக பெரிய சுற்றுலா திட்டமாக கருதப்படும் கங்கா விலாஸ் சொகுசு கப்பல் சுற்றுலாவை பிரதமர் மோடி வரும் 13ம் தேதி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். வாரணாசியின் ரவிதாஸ் படித்துரையில் இருந்து கிளம்பும் சொகுசுக்கப்பல் … Read more

கோவாவாக்ஸ் பூஸ்டர் தடுப்பூசிக்கு விரைவில் அனுமதி கிடைத்துவிடும்: ஆதர் பூனவல்லா

புனே: கோவாவாக்ஸ்(Covovax) தடுப்பூசியை பூஸ்டர் டோஸ்-க்குப் பயன்படுத்துவதற்கு இன்னும் 10-15 நாட்களில் அனுமதி கிடைத்துவிடும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் சிஇஓ அதார் பூனாவாலா தெரிவித்துள்ளார். மகாராஷ்ட்ராவின் புனே நகரில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்ற அதார் பூனாவாலா பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் கரோனா தடுப்பூசிகளான கோவிஷீல்டு, கோவாவாக்ஸ் ஆகியவற்றின் இருப்பு மத்திய அரசிடம் போதுமான அளவு உள்ளது. இவற்றை பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கும் பயன்படுத்த அனுமதி … Read more

”ராமர் பாலத்தை இடித்து, அறிவியல் சாத்தியமில்லாத நீர் வழித்தடத்தை உருவாக்க சேது சமுத்திர திட்டம்..” – அண்ணாமலை..!

இந்தியாவின் பாரம்பரிய நம்பிக்கையான ராமர் பாலத்தை இடித்து, அறிவியல் சாத்தியமில்லாத நீர் வழித்தடத்தை உருவாக்க சேது சமுத்திர திட்டம் தீட்டப்பட்டதாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், நீதிமன்றத்தால் தடுக்கப்பட்ட அத்திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தால் இந்தியாவின் மானம் கப்பலேறி இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் கனவுத்திட்டமான தங்க நாற்கர நெடுஞ்சாலை திட்டத்தின் தொடக்கத்திலும், முடிவிலும் இல்லாமல், இடையில் மத்திய அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலு, எவ்வாறு அதனை தனிப்பட்ட சாதனையாக கூற முடியும் … Read more