அதிர்ச்சி.. நடனமாட மறுத்த சிறுமி.. பெட்ரோல் ஊற்றி தீவைத்த இளைஞர்கள்..!

பீகாரில், நடனமாட மறுத்த சிறுமி மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொளுத்திய இளைஞர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள வைஷாலி மாவட்டத்தில் பகுவரா என்ற கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் சில நாட்களுக்கு முன் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் அப்பகுதி இளைஞர்கள் உற்சாகமாக நடனமாடினர். மதுபோதையில் இருந்த இளைஞர்கள் அங்கிருந்த 10 வயது சிறுமியை தங்களுடன் நடனமாட வற்புறுத்தியுள்ளனர். சிறுமி மற்றும் அவரது தோழிகள் இதற்கு மறுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் மறுநாள் காலை அச்சிறுமி … Read more

விபத்துக்கு நஷ்டஈடு கேட்ட இளைஞரை 3 கி.மீ. தூரம் காரில் இழுத்து சென்ற பெண்

பெங்களூரு: பெங்களூருவில் கடந்த 17ம் தேதி சாலை விபத்து தொடர்பான சண்டையில் சஹில் அஹமது என்ற இளைஞர் 71 வயது முதியவரை இரு சக்கர வாகனத்தில் இழுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று ஞானபாரதி நகர் சாலையில் மாருதி காரும், நெக்ஸான் காரும் உரசிக் கொண்டதால் இரு கார்களின் ஓட்டுந‌ர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மாருதி காரின் ஓட்டுநர் தர்ஷன் (29) நெக்ஸான் காரின் ஓட்டுநர் பிரியங்காவிடம் தனது வாகனத்தை பழுது பார்க்க … Read more

அகில இந்திய டிஜிபி மாநாடு: பிரதமர் மோடி பங்கேற்பு!

தலைநகர் டெல்லி பூசாவில் உள்ள தேசிய வேளாண் அறிவியல் வளாகத்தில் கடந்த 20ஆம் தேதி அகில இந்திய காவல்துறை தலைவர்கள் (டிஜிபி/ஐஜிபி) மாநாடு தொடங்கியது. நேரடி மற்றும் காணொலி என இருவகைகளிலும் நடைபெறும் இந்த மூன்று நாள் மாநாட்டில் இன்றும், நாளையும் பிரதமர் மோடி கலந்து கொள்ளவுள்ளார். பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த காவல்துறை தலைவர்கள், மத்திய ஆயுதப்படைகளின் தலைவர்கள், மத்திய காவல் அமைப்புகளின் தலைவர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் இந்த மாநாட்டில் நேரடியாக … Read more

”பொருளாதாரத்தில் இங்கிலாந்தை பின் தள்ளிவிட்டு இந்தியா 5வது இடத்திற்கு முன்னேறியது..” – அமைச்சர் எல்.முருகன்..!

பாஜக ஆட்சிக்கு வந்த எட்டு ஆண்டுகளில் பொருளாதாரத்தில் இங்கிலாந்தை பின் தள்ளிவிட்டு இந்தியா ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி உள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். திருநெல்வேலியில் நேற்று தொடங்கிய அகில பாரத வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் தென் தமிழக 28வது மாநில மாநாட்டின் இரண்டாவது நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார். வரலாற்றில் முதல் முறையாக பிரதமர் மோடி தலைமையில் ஜி20 மாநாடு இந்தியாவில் நடைபெறுவதை குறிப்பிட்ட மத்திய அமைச்சர், உலகின் … Read more

டெல்லியில் டிஜிபி-க்கள் மாநாடு: பிரதமர் மோடி பங்கேற்பு

புதுடெல்லி: அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் காவல்துறை தலைவர்கள் மற்றும் மத்திய காவல் படை தலைவர்களின் ஆண்டு மாநாடு, கடந்த 2014ம் ஆண்டு முதல் பிரதமர் மோடி நடத்தி வருகிறார். இதன்படி 2022ம் ஆண்டுக்கான மாநாடு டெல்லியில் உள்ள தேசிய வேளாண் அறிவியல் வளாகத்தில் நேற்று தொடங்கியது. இந்த மாநாடு 3 நாள் நடக்கிறது. இதில் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இந்த மாநாட்டில் காவல்துறை மற்றும் சிறைத்துறை சீர்திருத்தங்கள், சைபர் … Read more

88 வயது முதியவருக்கு லாட்டரியில் ரூ.5 கோடி பரிசு

புதுடெல்லி: பஞ்சாப்பை சேர்ந்த 88 வயது முதியவருக்கு, லாட்டரி சீட்டில் ரூ.5 கோடி பரிசு கிடைத்துள்ளது. 40 ஆண்டுகளாக லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் உடையவருக்கு பம்பர் பரிசு கிடைத்துள்ளது. பஞ்சாப் மாநிலம் தேராபாசி நகரைச் சேர்ந்தவர் மகந்த் துவாரகா தாஸ்(88). இவர் கடந்த 40 ஆண்டுகளாக லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் உடையவர். ஆனால் ஒரு தடவை கூட பம்பர் பரிசை வென்றதில்லை. மகரசங்கராந்தியை முன்னிட்டு ரூ.5 கோடி பம்பர் லாட்டரி விற்பனை செய்யப்பட்டது. தனது … Read more

ஜம்முவில் உள்ள நர்வாலில் அடுத்தடுத்து நடைபெற்ற இரட்டை குண்டுவெடிப்பில் பொதுமக்கள் 7 பேர் படுகாயம்..!

ஜம்முவில் உள்ள நர்வால் பகுதியில் இன்று அடுத்தடுத்து நடைபெற்ற சக்திவாய்ந்த இரட்டை குண்டு வெடிப்பில் பொதுமக்கள் 7 பேர் படுகாயம் அடைந்தனர். பரபரப்பாக காணப்படும் இப்பகுதியில் காலை 11 மணியளவில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் பொதுமக்களில் 5 பேர் படுகாயம் அடைந்த நிலையில், 30 நிமிட இடைவேளையில் மீண்டும் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் ராவணுவத்தினரும், தடயவியல் குழுவினரும் ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில், அப்பகுதியில் உள்ள சிசிடிவியில் … Read more

தமிழ்நாடு – ஒடிசா விளையாட்டு துறைகள் இடையே ஒப்பந்தம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து..!

புவனேஸ்வர்: தமிழ்நாடு, ஒடிசா மாநிலங்களுக்கு இடையில் விளையாட்டு, உள்கட்டமைப்புகளை பகிர்ந்துகொள்ளும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. 15-வது ஹாக்கி உலக கோப்பை போட்டிகளை காணவும், அம்மாநில விளையாட்டு கட்டமைப்பு களை பார்வையிடவும் சென்ற இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் நேற்று ஒடிசா மாநில விளையாட்டுத் துறை அமைச்சக அதிகாரிகளுடன் விளையாட்டு மேம்பாடு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தமானது,இளம் திறமையாளர்கள், பயிற்சியாளர்கள், விளையாட்டு … Read more

இளம்பெண்ணின் இரக்கமற்ற செயல்!! வைரல் வீடியோ

கர்நாடக மாநிலம் பெங்களூரு மரியப்பன பாளையா பகுதியை சேர்ந்தவர் தர்ஷன் (31). இவர், பாப்பிரெட்டி பாளையாவில் சொந்தமாக ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். நேற்று காலையில் அவர் தனது வீட்டில் இருந்து காரில் ஓட்டலுக்கு புறப்பட்டு சென்றார். அவருடன் சகோதரர் சுஜன், தர்ஷனின் நண்பர்களான யஷ்வந்த், வினய் ஆகிய 3 பேரும் இருந்தார்கள். ஞானபாரதி அருகே உல்லால் மெயின் ரோட்டில் தர்ஷன் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது சிக்னல் இருந்தாலும், ஒரு பெண் காரை ஓட்டி வந்து … Read more

ஜம்மு | நார்வால் பகுதியில் நடந்த இரட்டை கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 7 பேர் காயம் 

ஸ்ரீநகர்: ஜம்மு நகரின் நார்வால் பகுதியில் இன்று(சனிக்கிழமை) நடந்த இரண்டு கார் குண்டுவெடிப்பு சம்பவங்களில் குறைந்தது 7 பேர் காயம் அடைந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். ஜம்மு ரயில் நிலையம் அருகே இன்று இரண்டு கார்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடம் வணிகப் பகுதி. இங்கு வாகனங்களுக்கான டயர் மற்றும் வாகன உதிரி பாகங்களுக்கான கடைகள் அதிகமாக உள்ளன. வாகன உரிமையாளர்கள் தங்களின் வாகனங்களை பழுது நீக்க இங்கே வருவதால் நாள் முழுவதும் இந்த இடம் பரபரப்பாகவே … Read more