சுருக்கு மடி வலை வழக்கில் இன்று தீர்ப்பு

புதுடெல்லி: தமிழகத்தில் சுருக்குமடி வலைக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘சுருக்கு மடி வலையை பொருத்தமட்டில் மற்ற மாநிலங்கள் எப்படி அனுமதிக்கின்றன என்பது தெரியவில்லை. இருப்பினும் தமிழகத்தில் கடல் வளம் மற்றும் லட்ணக்கணக்கான பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்பதே பிரதானமாக உள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது‘ என தெரிவித்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த18ம் தேதி ஒத்திவைத்திருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கில் நீதிபதி … Read more

ஒரு குழந்தைக்கு மேல் பெற்றால் பெண் ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகள் – சிக்கிம் மாநில அரசு அறிவிப்பு

காங்டாக்: ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக் கொள்ளும் அரசு பெண் ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என்று சிக்கிம் மாநில அரசு அறிவித்துள்ளது. நாட்டின் மக்கள்தொகை 140 கோடியை தாண்டிச்சென்றுள்ள நிலையில். உலக அளவில் மக்கள்தொகையில் 2-வது இடத்தில் இந்தியா உள்ளது. இருந்தபோதும், வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிமில் மக்கள்தொகை குறைவாகவே உள்ளது. அங்கு பிறப்பு விகிதம் குறைவாக உள்ளதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், சிக்கிமை சேர்ந்த பெண் அரசு ஊழியர்கள் ஒரு குழந்தைக்கும் … Read more

போலி செய்திகள் மக்களை திசை திருப்புகின்றன: தலைமை தேர்தல் ஆணையர் வேதனை

புதுடெல்லி: தேர்தல் நேரங்களில் சமூக வலைதளங்களில் வெளியாகும் போலி செய்திகளால் மக்கள் திசை திருப்பப்படுகின்றனர் என்று தலைமை தேர்தல் ஆணையர் வேதனை தெரிவித்தார். இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் இரண்டாவது சர்வதேச மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. இதில் 17 நாடுகள் மற்றும் தேர்தல் அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்று வருகின்றனர். ‘தொழில்நுட்பத்தின் பயன்பாடு மற்றும் தேர்தல் ஒருமைப்பாடு’ என்ற தலைப்பில் நடைபெறும் இரண்டு நாள் மாநாட்டை தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தொடங்கி வைத்தார். … Read more

நடிகரின் தாய் மீது தாக்குதல் மனைவி மீது வழக்கு பதிவு

மும்பை: நடிகரின் தாயை தாக்கியதாக மனைவி மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக்குக்கும் ஆலியாவுக்கும் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடந்தது. சில மாதங்களுக்கு முன் நவாசுதீன் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாகவும், தன்னை ஏமாற்றி மோசடி செய்ததாகவும் போலீஸில் ஆலியா புகார் அளித்திருந்தார். இந்நிலையில், ஆலியா தன்னுடைய வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தன்னை தாக்கியதாக நவாசுதீனின் தாயாரான மெகருதீன் சித்திக் மும்பை போலீசில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் … Read more

வன்முறை எதிரொலி தேர்தல் சிறப்பு பார்வையாளர்கள் திரிபுராவில் ஆய்வு

அகர்தலா: வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகலாந்து சட்டப்பேரவைகளுக்கு அடுத்த 16ம் தேர்தல் நடத்தப்பட்டு, மார்ச் 2ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இவற்றில் திரிபுராவில் மட்டுமே பாஜ ஆட்சி நடந்து வருகிறது. இங்கு பாஜ.வை வீழ்த்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.  இதனையொட்டி இங்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு இரு கட்சியினரும் இணைந்து நடத்திய மோட்டார் சைக்கிள் பேரணியில் வன்முறை வெடித்தது. இது குறித்து தேர்தல் ஆணையம் மாநில … Read more

ஜம்முவில் இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் ராகுலுடன் காஷ்மீரி பண்டிட்கள் சந்திப்பு: பாஜ அரசால் சந்திக்கும் அவலங்களை விளக்கினர்

சம்பா: ஜம்முவில் இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் இடையே காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை காஷ்மீரி பண்டிட்கள் நேற்று சந்தித்து பேசினர். அப்போது, தீவிரவாதிகளால் குறிவைத்து கொல்லப்படும் அவலங்களையும், அதன் விளைவாக பணியிட மாற்றம் கோரி போராடும் அரசு பணியாளர்களின் பிரச்னைகள் குறித்து விவரித்தனர். நாடு முழுவதும் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் யாத்திரை, இறுதி கட்டத்தை நோக்கி கடந்த 20ம் தேதி ஜம்முவில் நுழைந்துள்ளது. அங்கு, ஜம்மு-பதன்கோட் நெடுஞ்சாலையில் … Read more

அந்தமானில் 21 தீவுகளுக்கு ராணுவ வீரர்கள் பெயரை சூட்டினார் பிரதமர்

போர்ட் பிளேர்: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளையொட்டி அந்தமானில் 21 தீவுகளுக்கு ராணுவத்தினரின் பெயரை பிரதமர் மோடி நேற்று சூட்டினார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 126வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. அந்தமான் மற்றும் நிகோபர்  தீவில் நடந்த நேதாஜி பிறந்த நாள் விழாவில் பிரதமர் மோடி வீடியோகான்பரன்சிங் மூலமாக கலந்து கொண்டார். விழாவில், அந்தமானில் அமைக்கப்படவுள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நினைவிட மாதிரியை பிரதமர் திறந்து வைத்தார். மேலும்  21 தீவுகளுக்கு பரம்வீர் சக்ரா … Read more

Hacking: இந்திய வெளியுறவு அமைச்சக அதிகாரிகளின் மின்னஞ்சல்கள் ஹேக்கிங்! அலர்ட்

Cyber Crime:  “சைபர் அட்டாக்” என்ற இரண்டு வார்த்தைகள் மட்டுமல்ல, கடந்த 3 மாதங்களாக இந்திய அரசை சிக்கலில் ஆழ்த்தியுள்ளது. டார்க்வெப் தொடர்பான விசாரணையில், வெளிவிவகார அமைச்சின் மின்னஞ்சல் சேவையகம் ஹேக் செய்யப்பட்டதும்,  உயரதிகாரிகளின் மின்னஞ்சல்கள் விற்கப்பட்டதும் அம்பலமானது. அமைச்சக அதிகாரிகளின் ரகசிய மின்னஞ்சல்களை விற்றதாக ஹேக்கர் கூறியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரம் தேசிய பாதுகாப்பு தொடர்பானது என்பதாலும், உண்மை தெரிய வேண்டியதாலும், ஹேக்கரிடம் வாங்குபவராக பேரம் பேசத் தொடங்கிய்தாக தெரியவந்துள்ளது. ஜப்பானில் வசிப்பதாகவும், ஜூன் 2022 … Read more

ஆபாச வீடியோ விவகாரம் ராக்கி சாவந்த் மீது நடவடிக்கை எடுக்க தடை

மும்பை: ஆபாச வீடியோ விவகாரத்தில் நடிகை ராக்கி சாவந்த் மீது நடவடிக்கை எடுக்க மும்பை உயர்நீதிமன்றம் இன்று வரை தடை விதித்துள்ளது. பாலிவுட் கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்துக்கும்,சக நடிகை ஒருவருக்கும் இடையே மோதல் இருந்துவருகிறது. ஒருவர்மீது ஒருவர் போலீஸில் புகார் செய்திருக்கின்றனர். இருவரும் ஒருவர்மீது மற்றொருவர் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. தனது ஆபாச வீடியோக்கள், புகைப்படங்களை ராக்கி சாவந்த் சோசியல் மீடியாவில் பகிர்ந்ததாக சக நடிகை மும்பை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதனடிப்படையில் … Read more

ஜம்முவில் திக்விஜய் சிங் பேச்சால் சர்ச்சை சர்ஜிக்கல் தாக்குதலுக்கு ஆதாரமில்லை: பாஜ கடும் கண்டனம்

ஜம்மு: ‘பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாத முகாம்கள் மீது சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தியதற்கு ஒன்றிய பாஜ அரசு எந்த ஆதாரத்தையும் காட்டவில்லை. வெறும் பொய் மூட்டையைக் கொண்டு ஆட்சி செய்கிறார்கள்’ என காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் பேசியது சர்ச்சையாகி உள்ளது. ஜம்முவில் ராகுலின் இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் பங்கேற்ற காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், பொதுக்கூட்டத்தில் பேசுகையில், ‘‘கடந்த 2019ம் ஆண்டு,ஸ்ரீநகரில் இருந்து டெல்லிக்கு வீரர்களை ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்லும் சிஆர்பிஎப்பின் கோரிக்கையை … Read more