கேரளாவில் தொடரும் சோகம்..!! பிரியாணி சாப்பிட்ட 13 மாணவர்கள், ஒரு ஆசிரியை மருத்துவமனையில் அனுமதி!!

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தின் கொடுமண்ணில் உள்ள கேரமல் என்ற ஹோட்டல் வெள்ளிக்கிழமை மாலை சந்தனப்பள்ளியில் உள்ள ரோஸ் டேல் ரெசிடென்ஷியல் சீனியர் செகண்டரி பள்ளியில் 200 சிக்கன் பிரியாணி தயார் செய்தது. அந்த உணவை உட்கொண்ட அனைவருக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. பின்னர், 13 மாணவர்கள் சிகிச்சைக்காக மூன்று மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர். ஐந்து ஆசிரியர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். காலை 11 மணிக்கு பள்ளிக்கு பிரியாணி கொண்டு வரப்பட்டதாகவும், மாலையில் தான் பிரியாணி … Read more

தொடரும் நிலவெடிப்பு: உத்தராகண்டின் ஜோஷிமத் நகரம் ‘பேரிடர் பகுதி’ ஆக அறிவிப்பு

சமோலி: ஜோஷிமத் நகர் பகுதியில் தொடர்ந்து நிலச்சரிவும், நிலவெடிப்பும் ஏற்பட்டு வரும் நிலையில், அப்பகுதி பேரிடர் ஏற்படும் பகுதி என அறிவிக்கப்பட்டிருப்பதாக சமோலி மாவட்ட நீதிபதி தெரிவித்தார். இதுகுறித்து சமோலி மாவட்ட நீதிபதி ஹிமான்சு குரானா இன்று கூறுகையில், “ஜோஷிமத் பகுதி பேரிடர் ஏற்படும் பகுதியாக அறிவிக்கப்படுகிறது. ஜல்சக்தி அமைச்சகத்தின் குழு உட்பட மத்திய அரசின் இரண்டு குழுக்கள் இங்கு வர இருக்கிறது. ஜோஷிமத், அதன் சுற்றுப்புற பகுதிகளில் கட்டுமானப்பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் … Read more

ஊழலை ஒழிக்க இளைஞர்கள் தீவிரமாக பணியாற்ற வேண்டும்-இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் பேச்சு

திருப்பதி : இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து ஊழலை ஒழிக்க இளைஞர்கள் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என்று மாவட்ட செயலாளர்  முரளி தெரிவித்துள்ளார். திருப்பதியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாவட்ட அளவிலான இளைஞர் பயிற்சி தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் முரளி தலைமை தாங்கினார். கூட்டத்தில், அவர் பேசியதாவது: உலக புரட்சி இயக்கத்தில் சே குவேரா, காஸ்ட்ரோ, மாவோ, சவு என் லீ என அனைவரும் … Read more

டெல்லி கார் விபத்து கொடூரம்: திட்டமிட்டு கொல்லப்பட்டாரா இளம்பெண் அஞ்சலி? நடந்தது என்ன?

குற்ற நிகழ்வுகளின் கூடாரமாகவும், புகலிடமாகவும் தலைநகர் டெல்லி மாறிக் கொண்டிருக்கிறதா என்ற அச்சம் அங்கு நித்தமும் நிலவும் கொடூர சம்பங்கள் மக்களை எண்ண வைத்து வருகிறது. 2023-ன் புத்தாண்டு நாளின் தொடக்கத்தில், டெல்லியில் காருக்கு அடியே சிக்கிய அஞ்சலி சிங் என்ற இளம்பெண் பல கிலோமீட்டர் தொலைவுக்கு இழுத்துச் செல்லப்பட்டு பலத்த காயங்களால் உயிரிழந்ததிருந்தார். மேலும் அவரது உடலும் நிர்வாணமாக சாலையில் கிடந்தது. ஆங்கில புத்தாண்டு தினத்தன்று நடந்த இக்கொடூர சம்பவம், நாட்டையே அதிர வைத்தது. தொடர்புடைய … Read more

முறையாக கைது செய்யப்படவில்லை; ஐசிஐசிஐ வங்கி முன்னாள் சிஇஓ விடுதலை; மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: பணமோசடி வழக்கில் கடந்த மாதம் சிபிஐ கைது நடவடிக்கைக்கு உள்ளான ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சந்தா கோச்சார், அவரது கணவர் சட்டப்படி கைது செய்யப்படவில்லை எனக் கூறி அவர்களை விடுதலை செய்ய மும்பை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் தீபக் கோச்சார் ஆகியோரை கடந்த மாதத்தில் சிபிஐ கைது செய்தது. சந்தா கோச்சார் ஐசிஐசிஐ வங்கியின் … Read more

பேரிடர் அபாயம் உள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டது ஜோஷிமடம்! மக்களை வெளியேற்றும் அரசு

நியூடெல்லி: இந்தியாவில் ஆதிசங்கரர் நிறுவிய நான்கு மடங்களில் ஜோஷி மடமும் ஒன்று. இந்தியாவின் பாரம்பரிய ஆன்மீக இடங்களில் முக்கியமான ஒன்றான பத்ரிநாத் கோயில் புனித யாத்திரைக்கு செல்பவர்கள், ஜோஷி மடத்தின் வழியாகத் தான் செல்லவேண்டும். இமயமலையில் மலை ஏறும் குழுவினர்களுக்கும், இது மிகவும் முக்கியமான இடமாகும்.  பாரம்பரிய சிறப்பு பெற்ற ஜோஷிமடம் அமைந்திருக்கும் பகுதி, ’பேரிடர் அபாயம்’ உள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. பத்ரிநாத் கோவிலில் வீற்றிருக்கும் பத்ரி நாராயணன் 6 மாத குளிர் காலத்தின்போது, ஜோஷ்மடத்தில் உள்ள ஆலயத்தில் வந்து … Read more

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் கடும் குளிர் காரணமாக ஒரே நாளில் 25 பேர் பலி

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் கடும் குளிர் காரணமாக ஒரே நாளில் 25 பேர் மாரடைப்பு மற்றும் மூளை செயலிழப்பு ஏற்பட்டு உயிரிழந்தனர். உத்தர பிரதேசம், டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில நாள்களாக கடும் குளிர் நிலவி வருகிறது.  இதில் கான்பூரில் 25 பேர் ரத்த அழுத்தம் மற்றும் ரத்த உறைதலால் மாரடைப்பு ஏற்பட்டும், மூளை செயலிழந்தும் பலியாகினர். இவர்களில் பெரும்பாலானோர் முதியோர் ஆவர். இதனால் கடும் குளிர்காலங்களில் அதிகாலை நேரத்தில் நடைப்பயிற்சியைத் தவிர்க்கும்படி நிபுணர்கள் … Read more

டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக 15 விமானங்கள் தாமதமாக இயக்கம்

புதுடெல்லி: வட மாநிலங்களில் தற்போது கடுமையான குளிர் நிலவுகிறது. இந்த சீசனில் இதுவரை இல்லாத வகையில் 2.2 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையே பதிவானது. அதாவது 36 டிகிரி பாரன்ஹீட் வெப்பமே காணப்பட்டது. இதனால் டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் குளிர் வாட்டி எடுக்கிறது. இதனால் காலையில் வீடுகளை விட்டு வெளியே வரும் மக்கள் அதிக சிரமத்துக்கு ஆளாகிறார்கள். மேலும் டெல்லியில் இந்த குளிர்கால பருவத்தின் போது பல்வேறு பகுதிகளில் மிக கடுமையாக பனி சூழ்ந்து காணப்படுகிறது. காலை … Read more

அதிர்ச்சி! திருப்பதியில் ரூம் வாடகை மூன்று மடங்கு உயர்வு!!

திருப்பதியில் தங்கும் அறை வாடகை 3 முதல் 4 மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளது. திருப்பதி மலையில் உள்ள நாராயணகிரி விருந்தினர் மாளிகை பகுதியில் இருக்கும் நான்காவது கட்டட தொகுதியில் இதுவரை அறை ஒன்றுக்கு நாள் வாடகை 750 ரூபாயாக இருந்தது. அங்குள்ள அறைகளை மராமத்து செய்த தேவஸ்தான நிர்வாகம் அவற்றின் வாடகையை தலா 1,700 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஸ்பெஷல் டைப் காட்டேஜ்களின் ஒரு நாள் வாடகையை 750 ரூபாயில் இருந்து 2200 … Read more

ஹரியாணா | பனி மூட்டத்திற்கு நடுவில் பெண் சக்தியோடு தொடங்கிய இந்திய ஒற்றுமை யாத்திரை

கான்பூர்(ஹரியாணா): கடுமையான பனிப்பொழிவு எச்சரிக்கைக்கு மத்தியில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை பெண் சக்தி தினமாக இன்று (திங்கள்கிழமை) ஹரியானாவில் இருந்து தொடங்கியது. காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை யாத்திரை மீண்டும் ஹரியாணா மாநிலத்தை அடைந்துள்ளது. அங்கு பல்வேறு மாவட்டங்கள் வழியாக நடைபயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை குருஷேத்திரத்தை அடைந்தார். இந்தநிலையில் இன்றைய யாத்திரை பெண்கள் பங்கேற்கும் பெண்கள் சக்தி தினமாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, … Read more