ரோஜ்கர் மேளா திட்டத்தில் அரசுத்துறைகளில் 71,000 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி..!

ரோஜ்கர் மேளா என்ற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நாடு முழுவதும்  பல்வேறு அரசுத்துறைகளில்  71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி காணொலி மூலம் இன்று வழங்கினார். ரோஜ்கார் மேளா திட்டத்தில் கடந்த அக்டோபர் மாதல் முதற்கட்டமாக 75,226 பேருக்கு அரசு பணிக்கான ஆணை வழங்கப்பட்டநிலையில், இன்று இரண்டாம் கட்டமாக பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. நாடு முழுவதும் இருந்து ஜூனியர் பொறியாளர்கள், லோகோ பைலட்கள், டெக்னீஷியன்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், கான்ஸ்டபிள், ஸ்டெனோகிராபர், … Read more

பாஜ கட்சியில் சேருங்கள்..அல்லது புல்டோசர் வரும்! காங்கிரசாருக்கு பாஜ அமைச்சர் திடீர் எச்சரிக்கை

குணா: காங்கிரஸ் தொண்டர்களே, பாஜவில் சேருங்கள்… இல்லாவிட்டால் புல்டோசரை எதிர்கொள்ள வேண்டும் என்ற மபி அமைச்சரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. உத்தர பிரதேச மாநிலத்தை போன்று மத்திய பிரதேசத்திலும் கலவரங்களில் ஈடுபட்டவர்களின் வீடுகள் புல்டோசர்கள் மூலம் இடிக்கப்படுகிறது. மத்திய பிரதேசத்தின் ரகோகார் நகராட்சிக்கு தேர்தல் நடக்கிறது. இதையொட்டி கடந்த புதனன்று நடந்த பிரசார கூட்டத்தில் அமைச்சர் மகேந்திர சிங் சிசோடியா கலந்து கொண்டார். இதில் அவர் பேசுகையில், ‘‘காங்கிரஸ் தொண்டர்கள் கவனிக்கவும். நீங்கள் கொஞ்சம், கொஞ்சமாக பாஜவில் … Read more

இந்தியா, நேபாளம் எல்லைக்கு அருகே சீனா அணை கட்டும் செயற்கைகோள் படங்கள் வெளியீடு..!

இந்திய எல்லைக்கு அருகே பிரம்மபுத்திரா நதியில் சீனா புதிய அணை கட்டும் செயற்கைக்கோள் புகைபடங்கள் வெளியிடப்பட்டுள்ளன. திபெத்தில் இருந்து பாயும் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே இந்தியா, நேபாளம் எல்லைக்கு அருகே சீனா அணையை கட்டிவருவது செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இந்த படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இண்டெல் ஆய்வகத்தின் புவிசார் நுண்ணறிவு ஆய்வாளர் டேமியன் சைமன், 2021-ம் ஆண்டின் முற்பகுதியில் இருந்து, இந்திய எல்லையிலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் இந்த அணை கட்டப்பட்டு … Read more

இயக்குனர் லீனா மணிமேகலையை கைது செய்ய தடை: உச்சநீதி மன்றம்

டெல்லி: இயக்குனர் லீனா மணிமேகலையை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. காளி பட சர்ச்சை போஸ்டர் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளுக்கு எதிரான இயக்குனர் லீனா மணிமேகலை தொடர்ந்த வழக்கு, மத்திய அரசு, டெல்லி, உத்திர பரிதேசம், உத்தரகாண்ட், மத்திய பிரதேசம் ஆகிய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் லீனா மணிமேகலை தயாரித்து வரும் குறும்படமான காளி பட போஸ்டர் தனது ட்விட்டர் … Read more

சிறுநீர் கழித்த விவகாரத்தில் இவ்வளவு அலட்சியமா?..ஏர் இந்தியாவுக்கு அபராதம்-டிஜிசிஏ அதிரடி!

விமானத்தில் சிறுநீர் கழித்த விவகாரத்தில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு, டிஜிசிஏ 30 லட்சம் அபராதம் விதித்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்தில் இருந்து தலைநகர் டெல்லிக்கு, கடந்த நவம்பர் மாதம் 26ஆம் தேதி புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில், சக பயணி ஒருவர் குடிபோதையில், அதே வகுப்பில் பயணித்துக் கொண்டிருந்த 70 வயது பெண்ணின் இருக்கை அருகே நின்று சிறுநீர் கழித்ததாகச் செய்திகள் வெளியாகின. இந்த விவகாரத்தில், ஏர் இந்தியா நிறுவனம் அலட்சியத்தைக் கையாண்டதற்காக, ரூ .30 … Read more

பீகார் சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி.!

தேசிய அளவிலும், மாநில அளவிலும் வளர்ச்சி மற்றும் சமூகநீதித் திட்டங்களை செயல்படுத்த சாதிவாரி புள்ளிவிவரங்கள் தேவை என்பதால், மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து சாதி வாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், மக்கள் தொகை கணக்கெடுப்பையே நடத்ததாத மத்திய அரசு சாதி வாரி கணக்கெடுப்பு கோரிக்கைகளுக்கு செவி சாய்ப்பதாக தெரியவில்லை. இருப்பினும், மாநில அரசுகள் விரும்பினால் அவர்களே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்திக்கொள்ளலாம் என … Read more

பெண் பயணி மீது சக பயணி சிறுநீர் கழித்த விவகாரத்தில் ஏர் இந்தியாவுக்கு ரூ.30 லட்சம் அபராதம்..!!

டெல்லி: பெண் பயணி மீது சக பயணி சிறுநீர் கழித்த விவகாரத்தில் ஏர் இந்தியாவுக்கு ரூ.30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பிரச்சனையை முறையாக கையாளவில்லை என்று கூறி விமான போக்குவரத்து இயக்குனகரகம் ரூ.30 லட்சம் அபராதம் விதித்தது. அநாகரிக நிகழ்வு நடந்தபோது விமானத்தை இயக்கிய விமானியின் ஓட்டுனர் உரிமத்தை 3 மாதத்துக்கு ரத்து செய்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மகளிர் ஆணையத் தலைவிக்கு பாலியல் துன்புறுத்தல் – கார் டிரைவர் கைது

புதுடெல்லி: டெல்லி மகளிர் ஆணையத் தலைவராக இருப்பவர் ஸ்வாதி மாலிவால். அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது; டெல்லியில் பெண்களின் பாதுகாப்பு நிலைமை குறித்து ஆய்வில் ஈடுபட்டிருந்தேன். அப்போது, போதையில் இருந்த கார் டிரைவர் ஒருவர் என்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். காரில் தப்பிக்க முயன்ற அவரை பிடிக்க முற்பட்டபோது எனது கை அந்த காரின் ஜன்னல் கதவில்மாட்டிக் கொண்டது. இதையடுத்து,காருடன் 10-15 மீட்டர் தொலைவுக்கு இழுத்துச் செல்லப்பட்டேன்.மகளிர் ஆணையத் தலைவிக்கே பாதுகாப்பு இல்லை என்றால் மற்ற பெண்கள் எவ்வளவு … Read more

மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை; 7 பேர் கொண்ட குழு அமைப்பு.!

உத்தரபிரதேச பாஜக எம்.பி. பிரிஜ் பூஷன் சரண் சிங், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக உள்ளார். இவர் பெண் மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்குவதாக மல்யுத்த வீராங்கனைகள் குற்றம் சாட்டினர். இதையடுத்து, மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் உள்ளிட்டோருக்கு எதிராக ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மல்யுத்த கூட்டமைப்பின் நிர்வாகத்தை மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி மல்யுத்த வீரர்களும், வீராங்கனைகளும் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 18ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். … Read more

ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் 4 இந்திய திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன..!

ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் 4 இந்திய திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. நடப்பாண்டிற்கான ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரைகள் வருகின்ற 24-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான பரிந்துரைப் பட்டியலில் குஜராத்தி மொழித் திரைப்படமான செல்லோ ஷோ (Chhello Show) இடம்பெற்றுள்ளது. RRR திரைப்படத்தில் உள்ள நாட்டு நாட்டு பாடல் சிறந்த பாடலுக்கான விருதுக்காக பரிந்துரைக்கப்படுகிறது. சிறந்த ஆவணப் படத்திற்கு ஆல் தட் ப்ரீத்ஸ் என்ற ஆவணப்படமும், சிறந்த ஆவண குறும்படத்திற்கு தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் என்ற … Read more