மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி தனது பதவியில் இருந்து விலக முடிவு

மும்பை: மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி தனது பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார்.ஆளுநர் பதவியில் இருந்து தன்னை விடுவிக்குமாறு பிரதமர் மோடியிடம் விருப்பம் தெரிவித்துள்ளேன் என பகத்சிங் கோஷ்யாரி தகவல் தெரிவித்துள்ளார்.

ஒரே ஒரு மாணவர் மட்டும் படிக்கும் பள்ளி.. 12 கி.மீ பயணித்து வகுப்பெடுக்கும் ஆசிரியர்!

மகாராஷ்டிராவில் ஒரேயொரு மாணவருக்காக 12 கிலோ மீட்டர் பயணம் செய்து ஆசிரியர் ஒருவர் பாடம் நடத்தி வருகிறார். மகாராஷ்டிர மாநிலம் வாஷிம் மாவட்டத்தில் அமைந்துள்ளது கணேஷ்பூர் கிராமம். இந்த கிராமத்தில் 150 பேர் வசித்து வருகின்றனர். இந்தக் கிராமத்தில் அரசு ஆரம்பப் பள்ளி ஒன்று உள்ளது. இந்தப் பள்ளியில் ஒரேயொரு மாணவர் மட்டும் படிப்பதுதான் வியப்புக்குரிய விஷயம். கார்த்திக் ஷெகோக்கர் என்ற மாணவர் அந்தப் பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வருகிறார். Maharashtra | A Zilla … Read more

இந்தியாவின் செல்வாக்கை குறைக்க சீனா செய்வது என்னென்ன? – டிஜிபிக்கள் கூட்டத்தில் அளிக்கப்பட்ட அறிக்கை

புதுடெல்லி: இந்தியாவின் செல்வாக்கை குறைக்க சீனா என்னவெல்லாம் செய்கிறது என்பது குறித்த அறிக்கை, புதுடெல்லியில் நடைபெற்ற டிஜிபிக்கள் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பு சார்ந்த உயர்மட்ட ஆய்வுக்கூட்டம் புதுடெல்லியில் நடந்து முடிந்துள்ளது. 3 நாட்கள் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில், நாடு முழுவதிலும் இருந்து 350 மிக முக்கிய டிஜிபி-க்கள், ஐஜிபி-க்கள் கலந்து கொண்டனர். இந்த ஆய்வுக் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் … Read more

லடாக்கை பிரதமர் காப்பாற்ற வேண்டும்; நிஜ கொசஸ்கி பசப்புகழ் கோரிக்கை.!

இந்தியில் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் அமீர்கான் மற்றும் மாதவன் நடிப்பில் வெளியான 3 இடியட்ஸ் திரைப்படம், தமிழில் விஜய் நடிப்பில் நண்பன் என்ற பெயரில் வெளியானது. நண்பன் படத்தில் பஞ்சவன் பாரி வேந்தனாக அறிமுகமாகும் நடிகர் விஜய், இறுதியில் விஞ்ஞானி கொசஸ்கி பசப்புகழாக குழந்தைகளுக்கு செயல்வழிக் கற்றல் முறையில் பொறியியல் படிப்பை கற்று கொடுப்பார். கல்வியின் உண்மையான நோக்கத்தை அறிந்து படிப்பதால் ஏற்படும் நேர்மறையான விளைவுகளை உணர்வுப்பூர்வமாக காட்சிப்படுத்திய இப்படங்கள் வசூல் ரீதியிலும், விமர்சன ரீதியிலும் மிகுந்த … Read more

முன் பக்கம் உட்கார வைத்துக் கொண்டு திருட்டு பைக்கில் காதல் ஜோடி ஆபாச சேட்டை: சட்டீஸ்கர் போலீஸ் அதிரடி கைது

துர்க்: சட்டீஸ்கரில் திருட்டு பைக்கில் முன்பக்கம் அமரவைத்துக் கொண்டு ஆபாசமான முறையில் பயணம் செய்த காதல் ஜோடியை போலீசார் கைது செய்துள்ளனர். சட்டீஸ்கர் மாநிலம் துர்க் பகுதியில் காதல் ஜோடி பைக்கில் ெசன்றது. காதலன் பைக்கை ஓட்டிச் சென்ற போது, அவனுக்கு எதிரே முன்பக்கத்தில் காதலி அமர்ந்து கொண்டார். அவர் தனது காதலனை கட்டிப்பிடித்தவாறு அநாகரீகமான செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது அதையடுத்து அந்த காதல் ஜோடியை போலீசார் கண்டுபிடித்து கைது … Read more

ஐடி நிறுவனங்களில் தொடரும் வேலை இழப்பு: நிலைமையை ஆராய மத்திய அரசுக்கு கேஜ்ரிவால் வேண்டுகோள் 

புதுடெல்லி: தகவல் தொழில்நுட்ப நிறுவனங்ளில் நிகழ்ந்து வரும் வேலை இழப்பு குறித்து கவலை தெரிவித்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், இந்தியாவில் சூழலை ஆராய்ந்து தேவையான நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். சமீபகாலங்களில் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள தகவல் தொழில்வநுட்ப நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டு பணியாளர்களை பணியில் இருந்து விடுவித்து வருகிறது. இதுகுறித்து அரவிந்த் கேஜ்ரிவால் இந்தியில் வெளியிட்டுள்ள தனது ட்விட்டர் பதிவில், “ஐடி நிறுனங்களில் இருந்து பெருமாளவிலான இளைஞர்கள் … Read more

மும்பை உள்ளாட்சி தேர்தல்; உத்தவ் தாக்கரேவுடன் இணைந்த அம்பேத்கர் பேரன்.!

மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, பிரகாஷ் அம்பேத்கரின் வஞ்சித் பகுஜன் அகாடியுடன் (VBA) கூட்டணியை இன்று அறிவித்தார். வரவிருக்கும் மும்பை உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராகும் பொருட்டு இந்த கூட்டணி நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டு உத்தவ் தாக்கரேயின் அரசாங்கம் கவிழ்க்கப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் பெரிய தேர்தல் இதுவாகும். ‘‘இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய பீம் ராவ் அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கருடன், இரண்டு மாதங்களுக்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இன்று ஜனவரி 23, பாலாசாகேப் தாக்கரேவின் … Read more

நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் பிறந்த தினத்தையொட்டி, 21 தீவுகளுக்கும் பரம்வீர் சக்ரா விருது பெற்ற வீரர்களின் பெயர்களை சூட்டினார் பிரதமர்

சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளை பராக்ரம திவாஸ் என்ற பெயரில் மத்திய அரசு கொண்டாடி வரும் நிலையில், அந்தமான் நிகோபார் தீவில் உள்ள 21 பெரிய தீவுகளுக்கு பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்களை பிரதமர் மோடி சூட்டினார். காணொலி காட்சி மூலமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மோடி, அந்தமானில் தான் இந்தியாவின் முதல் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டதோடு, சுதந்திர இந்தியாவின் முதல் அரசும் இங்கு தான் ஏற்படுத்தப்பட்டது என்றார். வீரசாவர்கர் … Read more

மகாராஷ்டிரா அரசுப் பள்ளியில் ஒரு மாணவருக்காக பாடம் எடுக்கும் ஆசிரியர்

புனே: மகாராஷ்டிரா மாநிலம் வாஷிம் மாவட்டம் கணேஷ்பூர் கிராமத்தில் 150 பேர் வசித்து வரும் நிலையில், அந்த கிராமத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் கார்த்திக் ஷெகோக்கர் என்ற 3ம் வகுப்பு மாணவர் ஒருவர் மட்டுமே படித்து வருகிறார். அவருக்கு பாடம் நடத்துவதற்காக கிஷோர் மங்கார் என்ற ஆசிரியர் தினமும் 12 கி.மீ. பயணம் செய்து பள்ளிக்கு வருகை தருகிறார். காலையில் வகுப்பு தொடங்குவதற்கு முன்பு இருவரும் தேசிய கீதம் பாடுகின்றனர். அதன்பின்னர் வகுப்பு தொடங்கும். இதுபற்றி … Read more

ஏழைகளுக்கு இலவசமாக ஆடைகளை வாரி வழங்கும் அனோகா மால்..!!

லக்னோவின் ரஹிம்நகரில் உள்ள அனோகா மாலில், ஆடை மற்றும் அனைத்து பொருட்களும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. ஏழைகளுக்குத் தேவையான ஆடைகள் மட்டுமே அங்கு உள்ளன. டாக்டர் அஹ்மத் ரஸா கான் என்பவர், ஏழைகளுக்காக இந்த வணிக வளாகத்தை அமைத்துள்ளார்.இந்த வளாகத்திலுள்ள ஒரு கடை, ரிக்ஷா ஓட்டுநர்கள், தொழிலாளர்கள், குடிசை வாசிகள், அடித்தட்டு மக்கள் போன்றவர்களுக்கு இலவச ஆடைகளை வழங்கி வருகிறது. குளிர்காலத்தில் உடலுக்கு ஏற்ற கம்பளி ஆடைகள், போர்வைகளை இலவசமாக வழங்கி வருகிறது இந்த அனோகா மால். … Read more