ஐக்கிய நாடுகள் சபை சார்பில் சூடானில் இந்திய பெண் போலீஸ் படை முகாம்

நியூயார்க்: கிழக்கு ஆப்பிரிக்காவில் சூடான் உள்ளது. இங்கிலாந்தும் எகிப்தும் இணைந்து அந்த நாட்டை ஆட்சி செய்து வந்தன. கடந்த 1956-ம் ஆண்டில் சூடான் விடுதலை அடைந்தது. அதன்பிறகு வடக்கு சூடான் பகுதி மக்களுக்கும் தெற்கு சூடான் பகுதி மக்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த 2011-ம் ஆண்டில் தெற்கு சூடான் தனிநாடாக உதயமானது. சூடான் மற்றும் தெற்கு சூடான் எல்லையில் அப்யேய் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியை இரு நாடுகளும் சொந்தம் கொண்டாடி … Read more

மே மாதம் ஸ்ரீநகரில் ஜி20 விளக்க மாநாடு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் வரும் மே மாதம் ஜி20 விளக்க மாநாடு நடத்தப்பட உள்ளது. இந்தோனேசியாவில் நடந்த ஜி-20 உச்சி மாநாட்டின் போது, இந்தாண்டிற்கான ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, வரும் செப்டம்பர் மாதம் ஜி-20 உச்சி மாநாடு டெல்லியில் நடைபெற உள்ளது. இதன் தொடர்ச்சியாக நாடு முழுவதும் 200க்கும் மேற்பட்ட நகரங்களில் ஜி-20 கூட்டமைப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் கருத்தரங்குகள் நடைபெற உள்ளன. இந்த நிகழ்ச்சிகளுக்கு ஒத்துழைப்பு … Read more

கண்ணீர் வர வைக்கும் செய்தி.. உறுப்புகள் தானம் செய்து 2 பேருக்கு வாழ்வு தந்த 18 மாத பச்சிளம் குழந்தை..!!

ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த தம்பதியின் ஒன்றரை வயது ஆண் குழந்தை, சில தினங்களுக்கு முன்பு வீட்டில் தொலைக்காட்சி வைத்திருந்த டேபிள் மீது ஏறி விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, திடீரென தவறி கீழே விழுந்ததில் குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழந்தை அனுமதிக்கப்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் குழந்தை இருந்ததால், மேல் சிகிச்சைக்காக கடந்த 2-ம் தேதி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தலையில் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டது. மருத்துவர்கள் குழு … Read more

உபி டிஜிபி அலுவலகத்தில் அகிலேஷுக்கு விஷம் கலந்த டீ தரப்பட்டதா?… வீடியோவால் பரபரப்பு

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் எதிர்க்கட்சியான சமாஜ்வாடியின் டிவிட்டர் சமூக வலைதளத்தை நிர்வகிப்பவர் மணிஷ் ஜெகன். இவர், தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், மார்பிங் படங்கள் மூலம் தனது பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக மிரட்டுவதாகவும் பாஜ இளைஞரணியின் சமூக வலைதளபிரிவு பொறுப்பாளர் ரிச்சா ராஜ்புத் கடந்த 4ம் தேதி போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, மணிஷ் ஜெகனை நேற்று கைது செய்தனர். இத்தகவல் அறிந்த சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் தலைமையில் … Read more

நான் உன்னை காதலிக்கிறேன். விடுமுறை நாட்களில் உன்னைப் பிரிந்து வாடுகிறேன்

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் வன்கொடுமை சம்பவங்களில் சிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. தெலுங்கானா, ஆந்திரா, அரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களை விட இந்த வகையான கொடூரங்கள் உத்திர பிரதேச மாநிலத்தில் அரங்கேறுவது சமூக ஆர்வலர்களையும் பெற்றோர்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. சிறுமிகளை உறவினர்கள், தெரியாதவர்கள் என பாலியல் தொல்லைகள் கொடுத்து வரும் நிலையில், பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களே சில … Read more

ஆம்பளைங்க கண்டுக்கிறதே இல்ல…மக்கள் தொகை பற்றிய நிதிஷ் பேச்சால் சர்ச்சை

பாட்னா: பீகாரின் வைசாலியில் நடந்த பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார், ‘‘பெண்கள் படிப்பறிவு பெற்றால்தான் மக்கள் தொகை பெருக்கத்தை குறைக்க முடியும். அதுவரை மக்கள் தொகை பெருக்கத்தை குறைக்க முடியாது. இந்த விஷயத்தில் ஆண்கள் தங்களின் செயலின் தாக்கத்தை உணரத் தயாராக இல்லை. எனவே பெண்கள் முறையான கல்வி பெற்றால் தவிர மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியாது’’ என்றார். இதற்கு பாஜ கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாஜ செய்தி தொடர்பாளர் … Read more

காதல் பற்றி பேச மறுக்கும் தமன்னா

மும்பை: தென்னிந்திய மொழிகள் மட்டுமின்றி பாலிவுட்டிலும் திரைப்படங்கள் மற்றும் டி.வி நிகழ்ச்சி, வெப்தொடர், விளம்பரங்கள் என்று பிசியாக நடித்து வருபவர், தமன்னா. இந்நிலையில் அவரும், பாலிவுட் இளம் நடிகர் விஜய் வர்மாவும் நெருக்கமாக இருக்கும் சில போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. விரைவில் அவர்கள் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில், இதுவரை தமன்னாவும், விஜய் வர்மாவும் பதில் சொல்லாமல் மவுனமாக இருக்கின்றனர். இந்நிலையில் தமன்னா வெளியிட்டுளள ஒரு வீடியோவில், ‘தினமும் சந்தனம், காபி … Read more

தெலங்கானா முதல்வருக்கு வினோத கடிதம் வழுக்கை தலை உள்ளவர்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும்: ‘கோரிக்கையை நகைச்சுவையாக பார்த்தால் போராட்டம் வெடிக்கும்’

திருமலை: தெலங்கானா மாநிலத்தில் வழுக்கை தலை சங்கத்தின் தலைவராக உள்ளவர் பாலய்யா. இந்த சங்கத்திற்கு துணை தலைவர், பொருளாளர் என நிர்வாகிகளும், ஏராளமான உறுப்பினர்களும் உள்ளனர். இந்நிலையில், வழுக்கை தலை சங்கத்தின் தலைவர் பாலய்யா தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவுக்கு நேற்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ‘மனிதர்கள் வாழ்க்கையில் ஏதாவது ஒரு தருணத்தில் தான் கேலி கிண்டல்களுக்கு உள்ளாவார்கள். ஆனால், நாங்களோ பல வருடங்களாக தினமும் அடுத்தவர்களின் கேலிப்பொருளாக மாறி இருக்கிறோம். இதனால், நாங்கள் தாழ்வு … Read more

திருவனந்தபுரத்தில் பறவை காய்ச்சல் பரவியது 2 ஆயிரம் வாத்து, கோழிகளை கொல்ல முடிவு: முட்டை, இறைச்சி விற்பனைக்கும் தடை

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில்  ஒரு தனியார் பண்ணையில் வளர்க்கப்பட்டு வந்த கோழி மற்றும் வாத்துக்களுக்கு  பறவை காய்ச்சல் பரவி உள்ளது. இதையடுத்து 2,000 வாத்து, கோழிகளை  கொல்ல முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த பகுதியில் பறவை இறைச்சி, முட்டை  விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. திருவனந்தபுரம் மாவட்டம் அழூர்  அருகே பெருங்குழி பகுதியில் தனியாருக்கு சொந்தமான கோழி, வாத்துப் பண்ணை  உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான கோழி, வாத்துக்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன.  இந்தநிலையில் கடந்த சில தினங்களாக இந்த பண்ணையில் … Read more

மேற்குவங்கம் | வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மீது மீண்டும் கல்வீச்சு: சில நிமிடங்கள் ரயில் நிறுத்தம்

போல்பூர்: மேற்குவங்க மாநிலம் ஹவுரா-புதிய ஜல்பைகுரி பகுதியை இணைக்கும் வகையில் இயங்கி வருகிறது வந்தே பாரத் விரைவு ரயில். அண்மையில் தொடங்கப்பட்டது இந்த ரயிலின் சேவை. இந்நிலையில், இந்த ரயிலை குறிவைத்து மூன்றாவது முறையாக கல்வீச்சு சம்பவம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஞாயிறு அன்று நடைபெற்ற இந்த கல்வீச்சில் சி14 பெட்டி சேதமடைந்துள்ளது. இதில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் போல்பூர் ரயில் நிலையத்தில் சுமார் 10 நிமிடங்கள் வந்தே பாரத் ரயில் நின்றுள்ளது. … Read more