மகாராஷ்டிரா அரசுப் பள்ளியில் ஒரு மாணவருக்காக பாடம் எடுக்கும் ஆசிரியர்

புனே: மகாராஷ்டிரா மாநிலம் வாஷிம் மாவட்டம் கணேஷ்பூர் கிராமத்தில் 150 பேர் வசித்து வரும் நிலையில், அந்த கிராமத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் கார்த்திக் ஷெகோக்கர் என்ற 3ம் வகுப்பு மாணவர் ஒருவர் மட்டுமே படித்து வருகிறார். அவருக்கு பாடம் நடத்துவதற்காக கிஷோர் மங்கார் என்ற ஆசிரியர் தினமும் 12 கி.மீ. பயணம் செய்து பள்ளிக்கு வருகை தருகிறார். காலையில் வகுப்பு தொடங்குவதற்கு முன்பு இருவரும் தேசிய கீதம் பாடுகின்றனர். அதன்பின்னர் வகுப்பு தொடங்கும். இதுபற்றி … Read more

ஏழைகளுக்கு இலவசமாக ஆடைகளை வாரி வழங்கும் அனோகா மால்..!!

லக்னோவின் ரஹிம்நகரில் உள்ள அனோகா மாலில், ஆடை மற்றும் அனைத்து பொருட்களும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. ஏழைகளுக்குத் தேவையான ஆடைகள் மட்டுமே அங்கு உள்ளன. டாக்டர் அஹ்மத் ரஸா கான் என்பவர், ஏழைகளுக்காக இந்த வணிக வளாகத்தை அமைத்துள்ளார்.இந்த வளாகத்திலுள்ள ஒரு கடை, ரிக்ஷா ஓட்டுநர்கள், தொழிலாளர்கள், குடிசை வாசிகள், அடித்தட்டு மக்கள் போன்றவர்களுக்கு இலவச ஆடைகளை வழங்கி வருகிறது. குளிர்காலத்தில் உடலுக்கு ஏற்ற கம்பளி ஆடைகள், போர்வைகளை இலவசமாக வழங்கி வருகிறது இந்த அனோகா மால். … Read more

நேதாஜிக்கும் ஆர்எஸ்எஸ்ஸுக்கும் இலக்கு ஒன்றுதான்: மோகன் பாகவத்

கொல்கத்தா: பாதைகள் வேறாக இருந்தாலும் நேதாஜி மற்றும் ஆர்எஸ்எஸ் இரு தரப்பின் இலக்கும் ஒன்றுதான் என்று மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். நேதாஜி சுபாஷ் சந்திர போசின் பிறந்த தினத்தை முன்னிட்டு கொல்கத்தாவில் ஆர்எஸ்எஸ் விழா நடைபெற்றது. இதில், அம்மாநில பாஜக தலைவர் சுகந்த மசும்தார், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி உள்ளிட்டோர் ஆர்எஸ்எஸ் சீருடையில் கலந்து கொண்டனர். மேலும், சீருடை அணிந்த தொண்டர்களும் அதிக அளவில் கலந்து கொண்டனர். அவர்கள் மத்தியில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் … Read more

திருப்பதி கோயில் மூடப்படுமா? மார்ச்சில் தொடங்கும் தடபுடல் ஏற்பாடுகள்!

ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் திருக்கோயிலில் ஆனந்த நிலைய கோபுரங்கள் தங்கத்தால் மின்னும். ஏனெனில் இவற்றின் மீது தங்க முலாம் பூசப்பட்டுள்ளது. கடைசியாக 1958ஆம் ஆண்டு தங்க முலாம் பூசும் பணிகள் நடந்தன. இந்நிலையில் 65 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் தங்க முலாம் பூச திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதன் பணிகள் வரும் மார்ச் முதல் வாரத்தில் தொடங்கும். பாலாலயம் ஏற்பாடு முன்னதாக பிப்ரவரி கடைசி வாரத்தில் திருமலை கோயிலில் பாரம்பரிய … Read more

மல்யுத்த கூட்டமைப்பில் பாலியல் புகார் குறித்து விசாரிக்க மேற்பார்வை குழு அமைப்பு

டெல்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பில் பாலியல் புகார் தொடர்பாக விசாரிக்க 5பேர் கொண்ட மேற்பார்வை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில் குழு அமைத்து மத்திய விளையாட்டுத்துறை உத்தரவு அளித்துள்ளது.

ஒரே ஒரு மாணவனுக்காக தினமும் 12 கி.மீ பயணம் செய்து வரும் ஆசிரியர்..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் கணேஷ்பூர் என்ற சிறிய கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 150 மக்கள் மட்டுமே வசிக்கும் நிலையில், அங்கு ஒரு ஆரம்பப் பள்ளி உள்ளது. இந்த பள்ளி அனைவருக்கும் கல்வி என்ற அரசு திட்டத்தின் கீழ் இயங்கி வருகிறது. இந்த ஆரம்பப் பள்ளியில் 4 ஆம் வகுப்பு வரை கற்பிக்கப்படுகிறது. ஆனால் அந்த பள்ளியில் கார்த்திக் சேகர் என்ற மாணவர் மட்டுமே படித்து வருகிறார். அவருக்கு மதிய உணவு உட்பட அனைத்து வசதிகளையும் அரசு செய்து … Read more

இந்த ஆண்டு குடியரசு தின விழா எப்படி இருக்கும்? – விரிவான தகவல்கள்

புதுடெல்லி: பொதுமக்களின் பங்கேற்புடன் கூடிய குடியரசு தின விழாவாக இந்த ஆண்டு குடியரசு தின விழா இருக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், அது எவ்வாறு நடைபெற இருக்கிறது என்பது குறித்து தற்போது பார்ப்போம். சாதாரண மக்களுக்கு முதல் வரிசை: இந்த ஆண்டு குடியரசு தின விழாவின் சிறப்பம்சமாக பொதுமக்கள் பங்கேற்புடன் குடியரசு தின விழா என்பது கருப்பொருளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பினை மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக, குடியரசு தின விழாவின் … Read more

'நேதாஜியின் கனவை நிறைவேற்றுவோம்!' – மோகன் பாகவத் பேச்சு!

நேதாஜியின் கனவை முன்னெடுத்துச் சென்று நிறைவேற்றுவோம் என, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் தெரிவித்து உள்ளார். சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 126 ஆவது ஆண்டு பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமுடன் கொண்டாடப்படுகிறது. சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் ஜனவரி 23 ஆம் தேதி பராக்கிரம தினமாக கொண்டாடப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில், அவரது பிறந்த நாளை முன்னிட்டு, அந்தமான் மற்றும் நிகோபார் … Read more

திருப்பதி மாவட்டத்தில் காவலர் பணிக்கான தேர்வை 28,848 பேர் எழுதினர்-2,404 பேர் ஆப்சென்ட்

திருப்பதி : திருப்பதி மாவட்டத்தில் காவலர் பணிகளுக்கான முதற்கட்ட எழுத்து தேர்வை 28,848 பேர் எழுதினர். மேலும், 2,404 பேர் பங்கேற்கவில்லை.  ஆந்திர மாநில காவல் துறையில் கான்ஸ்டபிள் காவலர் பணிகளுக்கான   முதற்கட்ட எழுத்து தேர்வு நேற்று நடைபெற்றது. திருப்பதி மாவட்டத்தில் எஸ்வி கலைக்கல்லூரி, பிரகாசம் பவன், சடலவாடா ரமணம்மா பொறியியல் கல்லூரி, மங்கலம் எஸ்வி பொறியியல் கல்லூரி, அன்னமாச்சார்யா பொறியியல் கல்லூரி ஆகிய இடங்களில் நடைபெற்றது. இந்த தேர்வு மையங்களை எஸ்பி பரமேஸ்வர் நேரில் சென்று … Read more

கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக மாணவிகள் வழக்கு

புதுடெல்லி: அரசு கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்து வந்து தேர்வெழுத அனுமதி பெற்றுத் தருமாறு கோரி உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக மாநில மாணவிகள் சிலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் அமர்வு முன் வந்தது. இந்த மனுவை விசாரிக்க மூன்று நபர் கொண்ட அமர்வை அமைப்பது குறித்து பரிசீலிப்பதாக நீதிபதி தெரிவித்தார். கடந்த 2022 அக்டோபரில் இதே வழக்கில் உச்ச நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. … Read more