விமான பணிப்பெண்ணிடம் வம்பு: டெல்லியில் 2 பயணிகள் கைது

ஐதராபாத்: டெல்லியில் இருந்து ஐதராபாத் சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் பணியாற்றும் விமான பணிப்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட பயணி அப்சர் ஆலம் என்பவரை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது. இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘டெல்லியில் இருந்து ஐதராபாத் நோக்கிச் சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணி அப்சர் ஆலம் என்பவரும், அவருடன் வந்த மற்றொரு பயணியும் டெல்லியில் விமானத்தில் ஏறும் போது விமான பணிப்பெண்ணிடம் மோசமாகவும், ஆபாசமாகவும் நடந்து கொண்டனர். இதையடுத்து அவர்கள் … Read more

`சும்மா அதிருதுல்ல…’-கடும் நிலநடுக்கத்தை #Earthquake போட்டு ட்ரெண்டாக்கும் டெல்லிவாசிகள்

இன்று நேபாளில் 5.8 ரிக்டர் அளவில் பலமான நிலநடுக்கம் ஏற்பட்டிருந்த நிலையில், டெல்லியிலும் அதை சுற்றியுள்ள இடங்களிலும் அது உணரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தேசிய நில அதிர்வு மையம், “மதியம் 2.28 மணி அளவில் நேபாளில் 5.8 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது” என்றுள்ளது. Earthquake of Magnitude:5.8, Occurred on 24-01-2023, 14:28:31 IST, Lat: 29.41 & Long: 81.68, Depth: 10 Km ,Location: Nepal for more information Download the … Read more

உளவு அமைப்புகளின் அறிக்கைகளை உச்ச நீதிமன்ற கொலீஜியம் வெளியிட்டது கவலை அளிக்கிறது: கிரண் ரிஜிஜு

புதுடெல்லி: உளவு அமைப்புகளின் அறிக்கைகளை உச்ச நீதிமன்ற கொலீஜியம் வெளியிட்டது மிகவும் கவலைக்குரிய விஷயம் என்று மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கக் கோரி உச்ச நீதிமன்ற கொலீஜியம் அளித்த பரிந்துரைகளில் சில பெயர்களை மத்திய அரசு நிராகரித்தது. மீண்டும் அதே பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டதை அடுத்து, அந்தப் பெயர்கள் ஏன் நிராகரிக்கப்பட்டன என்பதற்கான ஐபி, ரா ஆகிய உளவு அமைப்புகள் கொடுத்த அறிக்கைகள் கொலீஜியத்திடம் பகிர்ந்துகொள்ளப்பட்டன. இந்நிலையில், கொலீஜியம் கடந்த … Read more

ஜெயலலிதாவின் சொத்துக்களை முறைப்படி ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்: கர்நாடக அரசுக்கு, நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு: கர்நாடக சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள ஜெயலலிதாவின் சொத்துக்களை முறைப்படி ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு வழக்கறிஞரை நியமித்து ஏலம் விட நடவடிக்கை எடுக்குமாறு கர்நாடக அரசுக்கு, பெங்களூரு நகர சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதாவின் சொத்துக்களில் புடவைகள், காலனி, சால்வைகள் ஆகியவற்றை ஏலம் விடும் கோரி வழக்கறிஞர் நரசிம்மமூர்த்தி தாக்கல் செய்த மனுவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“ராணுவம் நடத்திய துல்லியத் தாக்குதலுக்கு ஆதாரம் தேவையில்லை” – ராகுல் காந்தி

ஜம்மு: இந்திய ராணுவம் நடத்திய துல்லியத் தாக்குதலுக்கு ஆதாரம் தேவையில்லை என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஜம்முவில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ராணுவம் துல்லியத் தாக்குதல் (சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்) நடத்தியதற்கு ஆதாரம் ஏதும் இல்லை என்று விமர்சித்திருந்தார். ”பாகிஸ்தானுக்குள் சென்று துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டதாக மத்திய அரசு கூறுகிறது. ஆனால், அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. பொய்களின் உதவியுடன் பாஜக … Read more

இது தான் சரியான மரியாதை: மோடியை பாராட்டிய ஆர்.என்.ரவி

அந்தமானில் 21 தீவுகளுக்கு, பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்களை சூட்டியது தீர நெஞ்சங்களுக்கு நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட மரியாதை என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். நேற்று (ஜனவரி 23 ) நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளையொட்டி, அந்தமான் நிகோபாரின் 21 தீவுகளுக்கு, ‘பரம்வீர் சக்ரா’ விருது பெற்ற ராணுவ வீரர்களின் பெயர்களை பிரதமர் நரேந்திர மோடி சூட்டினார். சுதந்திரப் போராட்டத் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாள், பராக்கிரம தினமாக கொண்டாடப்படும் என்று … Read more

அரசுப் பணியில் நிரந்தர ஊழியராக ஆவதற்காக 5 மாத பெண் குழந்தையை கால்வாயில் வீசியெறிந்த தம்பதி: ராஜஸ்தானில் பயங்கரம்

பிகானேர்: ராஜஸ்தான் அரசுப் பணியில் நிரந்தர ஊழியராக ஆவதற்காக, தங்களது 5 மாத பெண் குழந்தை தடையாக இருந்ததால், அந்த குழந்தையை தம்பதியினர் கால்வாயில் வீசியெறிந்து கொன்றனர். ராஜஸ்தான் மாநிலம் பிகானேர் பகுதியை சேர்ந்த ஜவர்லால் மேக்வால் (36) என்பவர், ஒப்பந்த ஊழியராக அரசுப் பணியில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த 5 மாதங்களுக்கு முன் மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்தது. ராஜஸ்தான் அரசு விதிமுறைகளின்படி, இரண்டு குழந்தைகளுக்கு மேல் … Read more

தலைநகரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. மக்கள் அலறியடித்து ஓட்டம்..!

தலைநகர் டெல்லியின் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று பிற்பகல் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லி – என்சிஆர் பகுதிகளில் இன்று பிற்பகல் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் மையம் நேபாளத்தில் உருவானதாக தகவல் வெளியாகியுள்ளது. சரியாக மதியம் 2.28 மணிக்கு நிலநடுக்கம் ஏற்படுட்டுள்ளதாக கூறப்படுகிறது. தேசிய புவியியல் மையத்தின் தகவலின்படி, இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக இருந்தது தெரிய வந்துள்ளது. தலைநகர் டெல்லியில் உணரப்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் … Read more

மணிக்கு 160 கி.மீ வேகம் | இந்தியாவின் அதிவேக மெட்ரோ ரயில்: சோதனை ஓட்டத்தில் RRTS சாதனை

சென்னை: இந்தியாவில் அதிவேக மெட்ரோ ரயில் என்று அழைக்கப்படும் ஆர்ஆர்டிஎஸ் (RRTS) ரயில் சோதனை ஓட்டத்தில் மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு தொழில்நுட்பங்களில் புதிய வகையில் ரயில்களை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறது. தற்போது இந்தியாவின் அதிக வேக ரயிலாக வந்தே பாரத் ரயில் உள்ளது. இதற்கு அடுத்த கட்டமாக மணிக்கு 160 கி.மீ வேகத்தில் இயங்க கூடிய RRTS என்று அழைக்கப்படும் Regional Rapid … Read more

'நீதித்துறையை கைப்பற்ற மத்திய அரசு விரும்புகிறது!' – அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு!

“நீதித் துறையை கைப்பற்ற மத்திய பாஜக அரசு விரும்புகிறது,” என, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டி உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுக்கும் – நீதித் துறைக்கும் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. “நீதித் துறையில் கொலிஜியம் முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை. அந்த முறையை மாற்றி வேண்டும். நீதிபதிகளை நியமிப்பது மத்திய அரசின் வேலை,” என்று, மத்திய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ … Read more