மேற்குவங்கம் | வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மீது மீண்டும் கல்வீச்சு: சில நிமிடங்கள் ரயில் நிறுத்தம்

போல்பூர்: மேற்குவங்க மாநிலம் ஹவுரா-புதிய ஜல்பைகுரி பகுதியை இணைக்கும் வகையில் இயங்கி வருகிறது வந்தே பாரத் விரைவு ரயில். அண்மையில் தொடங்கப்பட்டது இந்த ரயிலின் சேவை. இந்நிலையில், இந்த ரயிலை குறிவைத்து மூன்றாவது முறையாக கல்வீச்சு சம்பவம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஞாயிறு அன்று நடைபெற்ற இந்த கல்வீச்சில் சி14 பெட்டி சேதமடைந்துள்ளது. இதில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் போல்பூர் ரயில் நிலையத்தில் சுமார் 10 நிமிடங்கள் வந்தே பாரத் ரயில் நின்றுள்ளது. … Read more

இம்ரான் ஆட்சி கவிழ்ப்பில் ராணுவ தளபதிக்கு தொடர்பு: முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இம்ரான் கான் ஆட்சி கவிழ்க்கப்பட்டதில் முன்னாள் ராணுவ தளபதிக்கு தொடர்பு இருப்பதாக முன்னாள் வெளியுறவு அமைச்சர் பவாத் சவுதாரி குற்றம் சாட்டியுள்ளார். பாகிஸ்தானில் பிரதமராக இருந்த இம்ரான் கான் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதால் ஆட்சி கவிழ்ந்தது. இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு பேட்டி அளித்த முன்னாள் வெளியுறவு அமைச்சர் பவாத் சவுதாரி, “பிடிஐ ஆட்சிக்கு வர 22 ஆண்டுகளானது. ஆனால் சதியினால் வெளியேற்றப்பட்டது. இந்த சதியில் … Read more

இந்தியா-வங்கதேச எண்ணெய் குழாய் அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு திறப்பு: அதிகாரி தகவல்

கவுகாத்தி: இந்தியா-வங்கதேசம் இடையேயான நட்புறவு எண்ணெய் குழாய் திட்டம் அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரி தெரிவித்தார்.இந்தியா  வங்கதேசம் இடையே, நட்புறவு எண்ணெய் குழாய் பதிக்கும் பணியை  கடந்த 2018, செப்டம்பர் 18 அன்று வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, இந்திய பிரதமர் மோடி ஆகியோர் தொடங்கி வைத்தனர். மொத்தம் 130 கிமீ தூரம் கொண்ட இந்த திட்டம் ரூ.377.08 கோடியில் செயல்படுத்தப்படுகிறது. அசாம், நுமலிகார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் சிலிகுரி டெர்மினலில் இருந்து வங்க … Read more

குளிர் அலை எதிரொலி; டெல்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை.!

வட மாநிலங்களில் புதிய ஆண்டானது பிறந்ததற்கு பிறகு கடுமையான மூடு பனி மற்றும் குளிர் நீடித்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. விமான சேவை மற்றும் ரயில் சேவை, சாலை போக்குவரத்திலும் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. அதைத் தொடர்ந்து டெல்லியை பொறுத்தவரை இதற்கு முன்பு குளிர் காரணமாக ஆரஞ்சு மட்டுமல்லாமல் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுருந்தது. இந்த குளிர் காற்று காரணமாக உத்தரப் பிரதேசம் கான்பூரில் 25க்கும் மேற்பட்ட உயிர்பலி ஏற்பட்ட சம்பவம் அரங்கேறி … Read more

பாஜக புனித கங்கை நதி..அதில் சேர்ந்தால் பாவங்கள் தீரும்..திரிபுரா முதல்வர்.!

இடதுசாரி தலைவர்களை பாஜகவில் சேருமாறு வேண்டுகோள் விடுத்த திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா, தனது கட்சி கங்கை நதி போன்றது என்றும், அதில் நீராடுவது அனைத்து பாவங்களிலிருந்தும் விடுபட உதவும் என்றும் கூறினார். தெற்கு திரிபுராவின் கக்ராபானில் ஜன் விஸ்வாஸ் பேரணியின் ஒரு பகுதியாக பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய மாணிக் சஹா, இந்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார். கங்கை நதி போன்றது என்பதால் ஸ்டாலின், லெனின் … Read more

மாதம் ரூ. 6 ஆயிரம் ஓய்வூதியம்… வழுக்கை தலை உடையோர் சங்கம் அரசுக்கு கோரிக்கை!

இன்றைய நவீன நாகரிக உலகில் இளம் தலைமுறையினரும், வாலிப வயதினரும சந்திக்கும் பிர்ச்னைகளில் முக்கியமானது முடிநரைத்தல். பரம்பரை, மரபணு, பித்தம் அதிகரிப்பது என்பன போன்ற பல்வேறு காரணங்கள் இதற்கு கூறப்பட்டாலும் இளநரை பிரச்னை இன்றைய தலைமுறையினருக்கு மிகுந்த மனஉளைச்சலை அளித்து வருகிறது. இதேபோன்று, இளம் வயதிலேயே முடி உதிர்ந்து தலை வழுக்கை ஆகிவிடும் இளைஞர்கள் மற்றும் வாலிபர்களின் எ்ண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. ஆளுமை, தோற்றம் சம்பந்தப்பட்ட இந்த விஷயத்தில் தலை வழுக்கை எனும் … Read more

தென்னாப்பிரிக்காவில் இருந்து மேலும் 12 சிவிங்கி புலிகள் இந்தியா வருது..! ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் தகவல்

புதுடெல்லி: தென்னாப்பிரிக்காவில் இருந்து மேலும் 12 சிவிங்கி புலி இந்தியா கொண்டு வரவுள்ளதாக ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தியாவில் அழிந்துபோன இனமாக இருந்த சிவிங்கிப் புலிகளை (சீட்டா) மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டமாக, கடந்த ஆண்டு செப்டம்பரில் நமீபியாவில் இருந்து 8 சிவிங்கிப் புலிகள் கொண்டுவரப்பட்டன. அவற்றை, மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் பிரதமர் மோடி தனது பிறந்த நாளன்று திறந்துவிட்டார். தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடிந்த பிறகு, அவை வனப்பகுதியில் திறந்து விடப்பட்டன. … Read more

கடுங்குளிர் காரணமாக மூடப்படும் பள்ளிகள்!!

கடுமையான குளிர் காரணமாக டெல்லியில் தனியார் பள்ளிகள் அடுத்த வாரம் வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இம்முறை கடுமையான குளிர் நிலவுகிறது. குறைந்தபட்ச வெப்பநிலை 1.9 டிகிரி செல்சியஸ் என பதிவாகியுள்ளது. இந்நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்து கல்வி இயக்குநரகம் ஆலோசனை நடத்தியது. அதனைத் தொடர்ந்து அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் டெல்லியில் தொடர்ச்சியாக நிலவும் குளிர் அலையை அடுத்து, அனைத்து தனியார் பள்ளிகளையும் வரும் 15ஆம் தேதி வரை மூட அறிவுறுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு … Read more

5 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்.. 2 மாநிலத்துக்கு ஆரஞ்சு அலர்ட்!

வட மாநிலங்களில் நிலவும் கடுமையான பனிமூட்டம் காரணமாக குளிர்ந்த காற்று வீசி வருகிறது. இதனால் பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி மற்றும் உத்திரப்பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்து உள்ளது. அதேப் போல், ராஜஸ்தான் மற்றும் பீகார் மாநிலங்களுக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. குளிர்ந்த காற்று மற்றும் மோசமான மூடு பனியால் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மேலும், வட மாநிலங்களில் ஜனவரி 10ம் தேதி முதல் … Read more

கணவரை கால்வாயில் மூழ்கச் செய்து கொன்ற மனைவி!!

ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டி பகுதியில் வெங்கையா (40) அவரது மனைவி முகுந்தா (34) ஆகியோர் வசிந்து வந்தனர். அவர்களது பக்கத்து வீட்டில் தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த உதய்சாய் (35) என்பவர் மனைவி உஷாவுடன் (30) குடிவந்தார். வெங்கையா வேலை செய்த பட்டறை தொழிற்சாலையில் உதய்சாயும் வேலை செய்ததால் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர். அதே போல் இருவரின் குடும்பத்தாரும் நெருக்கமாக இருந்துள்ளனர். இந்நிலையில் உதய்சாய்க்கும் வெங்கையாவின் மனைவி முகுந்தாவுக்கும் காதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் முகுந்தாவின் கணவர் … Read more