சொகுசு கப்பலை 13-ந் தேதி தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!….

பிரதமர் மோடி வாரணாசியில் இருந்து கங்கா விலாஸ் என்ற சொகுசு கப்பலை வருகிற 13-ந்தேதி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். பிரதமர் மோடி கங்கா விலாஸ் என்ற சொகுசு கப்பலை வாரணாசியில் இருந்து வருகிற 13-ந்தேதி மெய்நிகர் காட்சி வழியே கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இந்த கப்பலானது வாரணாசியில் புறப்பட்டு பாட்னா நகரை சென்றடைந்து, பின்னர் கொல்கத்தாவுக்கு செல்லும். அதன்பின்பு வங்காளதேசத்திற்கு புறப்பட்டு சென்று மீண்டும் இந்தியாவுக்கு திரும்பும். இதன் பயணம் அசாமின் திப்ரூகார் நகரில் முடிவடையும். 80 … Read more

வழுக்கை தலை உடையவர்களுக்கு மாதம் ரூ.6,000.. அரசிடம் கோரிக்கை..!

தெலுங்கானா மாநிலத்தில் வழுக்கை தலை உடையவர்கள் சேர்ந்து சங்கம் அமைத்துள்ளனர். இந்த சங்கத்தில் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்பட்டு, பாலையா என்பவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தலைவர் பதவியை ஏற்ற பாலையா தங்களின் கோரிக்கை அடங்கிய மனு ஒன்றை மாநில முதல்வர் சந்திரசேகர ராவுக்கு அனுப்பி உள்ளார். அதில், “சமூகத்தில் வழுக்கை தலையுடன் இருப்பவர்கள் பல பிரச்சனைகளையும், அவமானத்தையும் எதிர்கொள்கின்றனர். அதிலும், பலருக்கு சிறு வயதிலேயே வழுக்கை ஏற்பட்டு விடுகிறது. இதனால் அவர்கள் படும் வேதனை சொல்லி மாளாது. … Read more

ஜப்பானில் முதல் முறையாக நடைபெறும் விமானப் படை போர் ஒத்திகையில் இந்திய பெண் பைலட் பங்கேற்கிறார்

ஜோத்பூர்: ஜப்பானில் ‘வீர் கார்டியன் 2023’ என்ற பெயரில் இந்திய விமானப் படையும் ஜப்பான் விமானப் படையும் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபடுகின்றன. இந்த பயிற்சி ஜப்பானின் ஹியாகுரி விமானப் படை தளம் மற்றும் அதன் அருகில் உள்ள ஒமிடாமா மற்றும் சயாமாவில் உள்ள இருமா விமானப் படை தளம் ஆகிய வான் பகுதிகளில் ஜனவரி 16-ம் தேதி முதல் 26-ம் தேதி 10 நாட்கள் நடைபெற உள்ளது. விமானப் படையில் 3 பெண் போர் பைலட்கள் … Read more

கேரளாவின் வயநாடு வனப்பகுதியில் நடமாடும் PM -2 மக்னா யானையை பிடிக்கும் பணி தொடங்கியது

கேரளா: கேரளாவின் வயநாடு வனப்பகுதியில் நடமாடும் PM -2 மக்னா யானையை பிடிக்கும் பணி தொடங்கியது. 2 கும்கி யானைகள், மருத்துவ குழு உதவியுடன் யானையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். தமிழக வனப்பகுதியிலிருந்து கேரளாவுக்கு நுழைந்த மக்னா யானை மனிதர்களை தாக்க துவங்கியதால் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். 

டெல்லி: கட்டிடத்தின் தரைத்தளம் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு!..

டெல்லியில் கட்டிடத்தின் தரைத்தளம் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார், மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். வடக்கு டெல்லியின் குதுப் ரோடு பகுதியில் உள்ள நான்கு மாடி கட்டிடத்தின் தரை தளம் மற்றும் படிக்கட்டுகள் திடீரென சரிந்து விழுந்தது. தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள், மீட்பு பணியில் துரிதமாக ஈடுபட்டனர்.   இருப்பினும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி ஒருவர் உயிரிழந்தவர். அவர் பீகாரில் உள்ள சீதாமர்ஹியில் வசிக்கும் குலாப் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும் அந்த … Read more

இமயமலை எல்லை பகுதிகளில் எதிரி இலக்குகளை தகர்க்க ட்ரோன்கள் – டிஆர்டிஓ தயாரிப்பு

நாக்பூர்: இமயமலை எல்லை பகுதிகளில் எதிரி இலக்குகள் மீது குண்டுகளை வீசும் வகையிலான ட்ரோன்களை ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையம்(டிஆர்டிஓ) உருவாக்கியுள்ளது. இந்த ட்ரோன்களில் 5 கிலோ முதல் 25 கிலோ எடையுள்ள பொருட்களையும் கொண்டு செல்ல முடியும். இது மகாராஷ்டிராவில் நடந்த 108-வது அறிவியல் மாநாட்டில் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த ட்ரோன்கள் சிக்கிம் மலைப்பகுதிகளில் 14,000 அடி உயரம் வரை பறக்கவிட்டு வெற்றிகரமாக பரிசோதனை நடத்தப்பட்டது. 30 கிலோ எடை..: 30 கிலோ எடையுள்ள பொருட்களை கொண்டு … Read more

டிஜிட்டல் கண்டுபிடிப்புகளில் சமூக நீதி – குடியரசுத் தலைவர்!

டெல்லியில் நடைபெற்ற 7ஆவது டிஜிட்டல் இந்தியா விருதுகள் வழங்கும் நிகழ்வில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டு விருதுகளை வழங்கி சிறப்பித்தார். நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், டிஜிட்டல் இந்தியா விருதுகள் 2022, அரசு நிறுவனங்கள் மட்டுமின்றி, ஸ்டார்ட்அப் நிறுவனங்களையும் டிஜிட்டல் இந்தியா இயக்கத்தின் நம்பிக்கையை நிறைவடையச் செய்ய அங்கீகரித்து, ஊக்குவிக்கிறது என்றார். இந்த விருதுகள், டிஜிட்டல் ஆளுகையை திறம்பட பயன்படுத்துவதன் மூலம் மக்களின் திறனை வெளிக் கொண்டு வந்து, டிஜிட்டல் அதிகாரம் பெற்ற சமூகமாக … Read more

திாிணாமுல் காங். தேர்தல் பத்திரம் மூலம் ரூ.528 கோடி வருமானம்

புதுடெல்லி: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வருமானம் குறித்த ஆண்டு தணிக்கை அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில், கடந்த 2021-2022ம் ஆண்டில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வருமானம் ரூ.545.74கோடியாகும். இதில் ரூ.528.14கோடியானது தேர்தல் பத்திரங்கள் மூலமாக பெறப்பட்டுள்ளது. கட்சி உறுப்பினர்களிடம் இருந்து கட்டணம், சந்தா மூலமாக ரூ.14.36கோடி வந்துள்ளது. வருமானத்தில் 96சதவீதம் தேர்தல் பத்திரங்கள் மூலமாக பெறப்பட்டுள்ளது. கடந்த 2020-2021ம் ஆண்டில் தேர்தல் பத்திரங்கள் மூலமாக கட்சியானது ரூ.42கோடி நிதியை பெற்றது என குறிப்பிடப்பட்டுள்ளது.

விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்தவருக்கு 14 நாள் நீதிமன்ற காவல்

ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சங்கர் மிஸ்ராவை 14 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது சக ஆண் பயணி ஓருவர் மதுபோதையில் சிறுநீர் கழித்ததாக புகார் எழுந்தது. இச்செயலில் ஈடுபட்ட நபர் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட வெல்ஸ் பார்கோ என்ற பன்னாட்டு நிதி சேவை … Read more

2-வது பெண்குழந்தை பிறந்ததால் விரக்தி: குழந்தையை கொன்ற தாய்!

மராட்டியத்தில் 2-வது பெண் குழந்தை பிறந்ததால் மனமுடைந்த பெண், பிறந்து 3 நாட்களேயான குழந்தையை கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உஸ்மானாபாத்தில் ஹோலியில் வசிக்கும் 25 வயதான பெண்ணுக்கு, காசர் ஜவாலா கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் 2-வது பெண்குழந்தை பிறந்ததால் மனமுடைந்த அந்த பெண், கடந்த டிசம்பர் 29 அன்று குழந்தையை கைக்குட்டையால் கழுத்தை நெரித்துக் கொன்றார். விசாரணையில் தாயே குழந்தையைக் கொன்றது தெரிய வந்தது. இதையடுத்து … Read more