பசுக்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்தினாலே உலகின் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து விடும்: குஜராத் நீதிமன்றம் கருத்து

காந்திநகர்: பசுக்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்தினாலே உலகின் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து விடும் என்று குஜராத் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் இருந்து 16 பசு மாடுகளை சட்ட விரோதமாக கடத்தி வந்ததாக கூறி முகமது அமீன் என்பவரை குஜராத் போலீசார் கடந்த 2020-ம் ஆண்டு கைது செய்தனர். இந்த வழக்கில் டாப்பி மாவட்ட நீதிமன்ற நீதிபதி வினோத் சந்திரா தீர்ப்பு வழங்கியுள்ளார். அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முகமது அமீனுக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி தனது உத்தரவின் … Read more

இந்த முறை தமிழ்நாடு என்று குறிப்பிட்டுள்ள ஆளுநர்!!

அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு என்பதை விட தமிழகம் என்று அழைப்பது பொருத்தமாக இருக்கும் என்று கூறியது பெரும் சர்ச்சையானது. அதைத் தொடர்ந்து பொங்கல் விழாவுக்காக ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையிலும் தமிழகம் என்று இருந்தது. அதே போல் இலச்சினை மத்திய அரசுடையது இருந்தது. இந்த இரண்டு விவகாரமும் பேசு பொருளாக மாறியது. ஆளுநர் மாளிகையின் அந்த அழைப்பிதழுக்கு பல்வேறு கட்சிகளும் கண்டனங்களை தெரிவித்தன. இதனையடுத்து திமுக எம்பி டி.ஆர்.பாலு, அமைச்சர் ரகுபதி … Read more

பிரதமர் குறித்த பிபிசி ஆவணப் படத்துக்கு 300-க்கும் மேற்பட்ட பிரபலங்கள் எதிர்ப்பு

புதுடெல்லி: பிரதமர் மோடி குறித்து பிபிசி வெளியிட்ட ஆவணப் படத்துக்கு முன்னாள் நீதிபதிகள் உட்பட 300-க்கும் மேற்பட்ட பல்துறை பிரபலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடந்த 2002-ம் ஆண்டு குஜராத்தில் கலவரம் நடந்தது. அதுபற்றியும், அந்த கலவரத்துக்கும் அப்போது முதல்வராக இருந்த பிரதமர் மோடிக்கும் தொடர்பு இருப்பது போன்றும் ‘இந்தியா – மோடி கொஸ்டியன்’ என்ற தலைப்பிலான ஆவணப்படத்தில் கருத்துகள் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது. இதற்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்தியாவின் 13 … Read more

உத்தரப்பிரதேசத்தில் 80 தொகுதிகளிலும் பாஜ.வுக்கு தோல்வி: அகிலேஷ் யாதவ் பேச்சு

லக்னோ: உ.பி.யில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளிலும் பாஜ தோல்வியை சந்திக்கும் என்று சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார். நாடு முழுவதற்குமான பொது தேர்தல் வரும் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில், பாஜ.வின் 2 நாள் செயற்குழு கூட்டம் கடந்த வாரம் உபி.யில் நடந்தது.  இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், “அடுத்த 50 ஆண்டுகள் ஆட்சி செய்ய போவதாக கூறி வரும் கட்சி, முடிவுக்கான நாட்களை எண்ணிக் கொண்டுள்ளது. … Read more

முற்றிய வாக்குவாதம்… இளைஞரை காரின் முன்பக்கம் வைத்து இழுத்து சென்ற பெண்! பரபரப்பு வீடியோ

பட்டப்பகலில் பிரதான சாலையில் ஸ்கூட்டியில் 71 வயது முதியவரை ஒருவர் இழுத்துச்சென்ற கொடூரம் நடந்து சில தினங்களே ஆகியுள்ள நிலையில், தற்போது பெண்ணொருவர் பெங்களூரு சாலையில் தன் காரின் முன்புறம் 29 வயது மதிக்கத்தக்க ஒருவரை சுமார் 3 – 4 கி.மீ.க்கு இழுத்துச்சென்ற சம்பவம் நடந்துள்ளது. பலர் தடுக்க முயன்றும் அப்பெண் நிறுத்தாமல் சென்றுள்ளது, சாலையில் சென்றோர் எடுத்த வீடியோக்களில் பதிவாகியுள்ளது. பெங்களூருவில் ஞானபாரதியை சேர்ந்த உலால் மெயின் ரோடு பகுதியில் நடந்த சம்பவத்தின்படி, பெண்ணொருவர் காரில் 29 … Read more

சாதனை புரிந்த 11 குழந்தைகளுக்கு தேசிய விருது

மத்திய அரசு குழந்தைகளின் சிறப்பான சாதனைகளுக்காக பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருதை வழங்குகிறது. தேசிய அங்கீகாரத்திற்கு தகுதியான கலை மற்றும் கலாச்சாரம், துணிச்சல், புத்தாக்கம், கல்வியியல், சமூக சேவை மற்றும் விளையாட்டு ஆகிய ஆறு பிரிவுகளில் சிறந்து விளங்கும் 5-18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு, கலை மற்றும் கலாச்சாரத் துறையில் 4 விருதுகளும், துணிச்சல் மற்றும் சமூக சேவைக்கு தலா 1 விருதும், புதுமை பிரிவில் … Read more

நாடாளுமன்றத்தில் நேதாஜி பிறந்தநாள் விழா 80 மாணவர்கள் பங்கேற்பு

புதுடெல்லி: முக்கிய தலைவர்களின் பிறந்தநாளில் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடக்கும் விழாவில் அரசியல் தலைவர்கள் மட்டும் பங்கேற்பார்கள். பிரதமர் மோடியின் அறிவுரையின்படி மாணவர்களும் பங்கேற்கும் நடைமுறை கடந்த ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி முதல் பின்பற்றப்படுகிறது. இன்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து நாடாளுமன்றத் தின் மைய மண்டபத்தில் உள்ள நேதாஜியின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்ய நாடு முழுவதும் இருந்து 35 மாணவிகள், 45 மாணவர்கள் என 80 … Read more

இந்திய கடற்படையில் ஐஎன்எஸ் வகிர் என்ற புதிய நீர் மூழ்கி கப்பல் இன்று இணைப்பு!

ஐஎன்எஸ் வகிர் என்ற புதிய நீர் மூழ்கி கப்பல் இன்று கடற்படையில் சேர்க்கப்பட உள்ளது. இந்திய கடற்படையில் தற்போது 150-க்கும் மேற்பட்ட போர்க் கப்பல்களும், 17 நீர்மூழ்கி கப்பல்களும் உள்ளன. இதில் 2 நீர்மூழ்கி கப்பல்கள் அணு ஆயுத தாக்குதல் நடத்தும் திறன் கொண்டவை. கடந்த 2005-ம்ஆண்டில் பிரான்ஸின் நேவல் குரூப் நிறுவனத்துடன் இணைந்து 6 புதிய நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. இதன்படி கடந்த 2007-ம்ஆண்டில் மும்பை கட்டுமான தளத்தில் நீர்மூழ்கி … Read more

பாலியல் புகார் எதிரொலி மல்யுத்த கூட்டமைப்பு செயல்பட ஒன்றிய அரசு அதிரடி தடை: அவசர பொதுக்குழு கூட்டம் ரத்து

அயோத்தி: வீராங்கனைகளின் பாலியல் புகார் விவகாரத்தை தொடர்ந்து, இந்திய மல்யுத்த கூட்டமைப்பு செயல்பட ஒன்றிய விளையாட்டு அமைச்சகம் அதிரடி தடை விதித்துள்ளது. இதனால், கூட்டமைப்பின் அவசர பொதுக்குழு கடைசி நிமிடத்தில் நேற்று ரத்து செய்யப்பட்டது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜ எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாகவும், சர்வாதிகாரமாக செயல்படுவதாகவும், வினேஷ் போகத், பஜ்ரங் புனியா, சாக்சி மாலிக் உள்ளிட்ட நாட்டின் முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் குற்றச்சாட்டு … Read more

குருவாயூர் கோயிலிடம் 263 கிலோ தங்கம் ரூ.1,700 கோடி டெபாசிட்

திரிச்சூர்: கேரள மாநிலம் குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலுக்கு இதுவரை 263.637 கிலோ தங்கம், 20,000 தங்கத் தகடுகளை பக்தர்கள் காணிக்கையாக வழங்கி உள்ளனர். மேலும், குருவாயூர் கோயில் பெயரில் ரூ.1,700 கோடிக்கு வங்கி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. தவிர, 271.05 ஏக்கர் நிலம் கோயில் பெயரில் காணிக்கையாக வழங்கப்பட்டுள்ளது. அந்த நிலத்தின் மதிப்பு இதுவரை கணக்கிடப்படவில்லை. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் முறையீடு செய்யப்பட்டு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அதிகாரிகள் அளித்த பதிலில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. Source … Read more