குருவாயூர் கோயிலிடம் 263 கிலோ தங்கம் ரூ.1,700 கோடி டெபாசிட்

திரிச்சூர்: கேரள மாநிலம் குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலுக்கு இதுவரை 263.637 கிலோ தங்கம், 20,000 தங்கத் தகடுகளை பக்தர்கள் காணிக்கையாக வழங்கி உள்ளனர். மேலும், குருவாயூர் கோயில் பெயரில் ரூ.1,700 கோடிக்கு வங்கி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. தவிர, 271.05 ஏக்கர் நிலம் கோயில் பெயரில் காணிக்கையாக வழங்கப்பட்டுள்ளது. அந்த நிலத்தின் மதிப்பு இதுவரை கணக்கிடப்படவில்லை. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் முறையீடு செய்யப்பட்டு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அதிகாரிகள் அளித்த பதிலில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. Source … Read more

டிஜிபி மாநாட்டில் மோடி பேச்சு காலாவதியான கிரிமினல் சட்டங்களை நீக்க வேண்டும்

புதுடெல்லி: அகில இந்திய டிஜிபிக்கள் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் குறித்து காவல்துறையினருக்கு பயிற்சி அளிக்க வேண்டுமென வலியுறுத்தியதோடு, காலாவதியான கிரிமினல் சட்டங்களை நீக்க வேண்டுமெனவும் பரிந்துரைத்துள்ளார்.தலைநகர் டெல்லியில் 57வது அகில இந்திய டிஜிபி மற்றும் ஐஜிக்கள் மாநாடு கடந்த 20ம் தேதி தொடங்கியது. 3 நாள் மாநாட்டின் நிறைவு நாளான நேற்று பிரதமர் மோடி பங்கேற்று பேசியதாவது: காவல்துறையை இன்னும் அதிக உணர்திறன் மிக்க துறையாக உருவாக்க வேண்டும். அதற்கு வளர்ந்து … Read more

தாய் வீட்டுக்கு சென்ற மனைவி… கோபத்தில் ஆணுறுப்பை வெட்டிய இளைஞர்

Man Cuts Private Part: பிகாரின் மாதேபுரா மாவட்டத்தில் உள்ள ரஜினி நயநகர் பகுதியில், கடந்த வெள்ளிக்கிழமை (ஜன. 20) இரவு ஒரு அதிர்ச்சிக்கரமான சம்பவம் நடந்ததுள்ளது. ரஜினி நயநகர் பகுதியில் 25 வயதான கிருஷ்ணா பாசுகி என்ற இளைஞர் வசித்து வருகிறார். இவர் பிகாரின் கோல்போரா பகுதியில் வசித்து வரும் சோத் லால் பாசுகி என்பவரின் மகளான அனிதாவை திருமணம் செய்துள்ளனர்.  கிருஷ்ணா பாசுகி – அனிதா தம்பதியருக்கு மூன்று பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் … Read more

மகாராஷ்டிராவில் ஒரு மாணவனுக்காக மட்டும் செயல்படும் பள்ளி

மகாராஷ்டிரா மாநிலம் கணேஷ்புர் கிராமத்தில் ஒரேயொரு மாணவனுக்காக ஒரு பள்ளி இயங்கி வருகிறது. 150 பேர் வாழும் அந்த சிறிய கிராமத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரேயொரு மாணவன் மட்டும் பள்ளிக்குச் செல்கிறான். அந்தப் பள்ளியில் கிஷோர் என்று ஒரேயொரு ஆசிரியர் நியமிக்கப்பட்டு மாணவனுக்கு அனைத்துப் பாடங்களையும் கற்றுக் கொடுக்கிறார். அரசுப்பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவு அந்த ஒரு மாணவனுக்கும் கொண்டு வரப்படுகிறது. Source link

வெள்ளப்பெருக்கில் சேதமான பொருட்களுடன் கிடந்த ஏடிஎம் கார்டை பயன்படுத்தி ரூ.6.31 லட்சம் அபேஸ்: தமிழ்நாட்டைச் சேர்ந்த லாரி டிரைவர் கைது

திருவனந்தபுரம்: கேரளாவில்  இருந்து பழைய வீட்டு பொருட்களுடன் கிடைத்த ஏடிஎம் கார்டை பயன்படுத்தி  ரூ.6.31 லட்சம் பணத்தை அபேஸ் செய்த தமிழக லாரி டிரைவரை செங்கனூர் போலீசார்  கைது செய்தனர். கேரள மாநிலம் செங்கனூரை  சேர்ந்தவர் ஷாஜி. இவர் துபாயில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து  வருகிறார். கடந்த இரு வருடங்களுக்கு முன் செங்கனூர் பகுதியில் கடும்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் ஷாஜியின் வீட்டுக்குள்ளும் தண்ணீர்  புகுந்தது. இதில் வீட்டில் இருந்த ஏராளமான பொருட்கள் சேதமடைந்தன. … Read more

கேரளாவில் நாய்களிடையே பரவும் புதிய வைரஸ்..!! மனிதர்களுக்கு ஆபத்து?

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் சுமார் 72 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தெரு நாய்கள் உள்ளன. இந்நிலையில், அங்கு கடந்த 3 மாதங்களாக ஏராளமான தெரு நாய்கள் அதிகளவில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த கால்நடைத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் இதற்கு காரணம் தெருநாய்களிடையே பரவும் கேனைன் டி வைரஸ் என்றும், இந்த வைரஸ், பாதிப்புக்குள்ளான நாய்களிடமிருந்து மற்ற நாய்களுக்கு பரவும் என்றும் கால்நடைத்துறையினர் தெரிவித்தனர். ஆனால், மனிதர்களுக்கு இந்த வைரஸ் பரவாது என கூறிய அவர்கள், … Read more

70 வயது பெரியவர் என கூட பார்க்காமல் கொடூரமாக தாக்கிய பெண் போலீசார்..!! வைரலாகும் வீடியோ

பீகார் மாநிலம் கைமூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் நேவல் கிஷோர் பாண்டே (70). இவர், 40 ஆண்டுகளாக ஆசிரியராகப் பணியாற்றியவர். அந்த நிலையில் சம்பவத்தன்று தனியார் பள்ளியில் சில குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்துவிட்டு அவர் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, ​பாட்னாவில் இருந்து 200 கிமீ தொலைவில் உள்ள பபுவாவில் உள்ள பரபரப்பான பகுதியில் அவரது சைக்கிளில் இருந்து சறுக்கி விழுந்தார். இதனால் அவருக்கு பின்னால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உடனே, … Read more

நாட்டில் அமைதியை பேண மாநில காவல்துறையும், மத்திய அமைப்புகளும் ஒத்துழைப்பை அதிகரிக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்

நாட்டில் அமைதியை பேண மாநில காவல்துறை மற்றும் மத்திய விசாரணை அமைப்புகள் இடையே கூடுதல் ஒத்துழைப்பு தேவை என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற  டிஜிபிக்கள் மாநாட்டில் உரையாற்றிய அவர், மாநில காவல்துறையும், மத்திய அமைப்புகளும் தங்களது அனுபவங்களையும், தொழில்நுட்ப திறன்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொண்டார். நடந்து ரோந்து செல்வது போன்ற பாரம்பரிய கண்காணிப்பை காவல்துறையினர் வலுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று கூறிய பிரதமர், மாறி வரும் தொழில்நுட்பத்துக்கு ஏற்றவாறு … Read more

நீதிபதிகள் நியமனம்: உச்ச நீதிமன்றம் மீது ஓய்வு பெற்ற நீதிபதி விமர்சனம்: ஆடியோவை வெளியிட்டார் ஒன்றிய அமைச்சர்

புதுடெல்லி: உச்சநீதிமன்றத்தால் சட்டங்களை உருவாக்க முடியாது என்று ஓய்வு பெற்ற  நீதிபதி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். இது சம்மந்தமான ஆடியோவை ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ வெளியிட்டுள்ளார். உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களுக்கு நீதிபதிகள் நியமிக்கும் விவகாரத்தில் ஒன்றிய அரசுக்கும் உச்சநீதிமன்றத்துக்கும் இடையே கடும் இழுபறி நீடித்து வருகிறது. நீதிபதிகளை நியமனம் செய்யும் கொலீஜியத்தின் நடைமுறைகள் வெளிப்படையாக இல்லை. எனவே, கொலீஜியத்தில் ஒன்றிய அரசு பிரதிநிதி இடம் பெற வேண்டும் என உச்ச நீதிமன்றத்துக்கு கடிதம் எழுதி உள்ளதாக … Read more

கேரளாவை அச்சுறுத்திய பிடி-7 யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது

பாலக்காடு: பாலக்காடு மாவட்டம் தோணி பகுதியில் மக்களை அச்சுறுத்தி வந்த பிடி-7  என்கிற காட்டுயானையை வனத்துறையினர் நேற்று மயக்கஊசி செலுத்திப்பிடித்து  கூண்டிற்குள் அடைத்தனர். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில்  தோணி, அகத்தேத்தரை, முண்டூர், மலம்புழா மற்றும் கஞ்சிக்கோடு ஆகிய  இடங்களிலுள்ள மலையடிவார பகுதியில்  பிடி-7 என்ற ஒற்றை யானை, ஊருக்குள்  புகுந்து தோட்ட பயிர்களை துவம்சம் செய்தது. மக்கள் வீட்டை விட்டு வெளியேற  முடியாத நிலையில் கடந்த சில மாதங்களாகவே அந்த யானை அச்சுறுத்தி வந்தது.  யானையை … Read more