விமானத்தில் பெண் மீது சிறுநீர் கழித்த நபர்: 6 வாரங்களுக்கு பின் கைது!

ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது மது போதையில் சிறுநீர் கழித்த மும்பையைச் சேர்ந்த நபர் ஆறு வாரங்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டு உள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்தில் இருந்து தலைநகர் டெல்லிக்கு, ஏர் இந்தியா விமானம் கடந்த நவம்பர் மாதம் 26 ஆம் தேதி புறப்பட்டது. அப்போது, சக பயணி ஒருவர் குடி போதையில், அதே வகுப்பில் பயணித்துக் கொண்டிருந்த 70 வயது பெண்ணின் இருக்கை அருகே நின்று அவர் மீது சிறுநீர் … Read more

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாகவே மாவோயிஸ்ட்டுகள் இல்லாத தேசமாக இந்தியா மாறும் – அமித்ஷா

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாகவே மாவோயிஸ்ட்டுகள் இல்லாத தேசமாக இந்தியா உருவெடுக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். சத்தீஸ்கரின் கோர்பா நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், நாட்டில் மாவோயிஸ்ட் வன்முறை சம்பவங்களின் எண்ணிக்கை 2009ஆம் ஆண்டில் 2 ஆயிரத்து 258-ஆக இருந்த நிலையில், 2021ஆம் ஆண்டில் 509ஆக குறைந்துள்ளதாக குறிப்பிட்டார். மாவோஸ்ட்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதியில் ஆயுதம் ஏந்திய இளைஞர்களுக்கு, கல்வி மற்றும் வேலை வாய்ப்பு கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்ததாகவும் … Read more

விமானத்தில் பெண் மீது சிறுநீர் கழித்தவர் கைது: 14 நாள் நீதிமன்ற காவல்

புதுடெல்லி: ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சங்கர் மிஸ்ரா பெங்களூருவில் பதுங்கியிருந்தபோது டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நியூயார்க்கில் இருந்து  கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது சக ஆண் பயணி ஓருவர் குடிபோதையில் சிறுநீர் கழித்ததாக புகார் எழுந்தது.   அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்ட … Read more

இடதுசாரிகள் ஆளும் கேரளா உள்ளிட்ட 22 மாநிலங்களில் தொழில் – விமர்சனங்கள் குறித்து விரிவாக பேசிய அதானி

புதுடெல்லி: உலகின் மூன்றாவது பெரிய பணக்காரர் என்ற அந்தஸ்த்தை பெற்றுள்ளார் இந்திய தொழிலதிபர் கௌதம் அதானி. சமீப ஆண்டுகளாக இவரின் வளர்ச்சி அபாரமாக உள்ளது. இதையடுத்து பிரதமர் மோடிக்கு நெருக்கமான நண்பர் என்பதால் அவரின் உதவியால் தான் அதானி இவ்வளவு செல்வத்தை சேர்க்கிறார் என்று பொதுவான குற்றச்சாட்டு உண்டு. எதிர்க்கட்சி தரப்பில் ராகுல் காந்தி உள்ளிட்டோர் இதனை முதன்மையான குற்றச்சாட்டாக முன்வைக்கின்றனர். ஆனால், இந்த விமர்சனங்கள் பொய்யனது என்று அதானி முதல்முறையாக விளக்கம் கொடுத்துள்ளார். இந்தியா டிவிக்கு … Read more

படித்தவுடன் கிழித்து விட்டு தனியாக வரவும்; மாணவிக்கு ஆசிரியர் எழுதிய காதல் கடிதம்!

நாடு முழுவதும் பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு ஆசிரியர்களாலேயே பாலியல் தொல்லை கொடுக்கப்படுவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. கல்வி கற்க வரும் பிள்ளைகளை காம இச்சைக்கு அவர்கள் பயன்படுத்திக்கொள்வது மனித நேயத்தை குழிதோண்டி புதைக்க விதமாகவே உள்ளது. பள்ளிகளில் நடக்கும் பாலியல் வன்முறை சம்பவங்கள் பல சந்தர்ப்பங்களில் வெளியே தெரிவதில்லை. புகார் கொடுத்தாலும், பள்ளி நிர்வாகங்கள் அந்த புகார்களை முறையாக விசாரிப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு பல காலமாக நீடிக்கிறது. அதே சமயம் தடைகளை தாண்டி, நீதிமன்றத்தில் வழக்கு நடந்து … Read more

புத்தாண்டு இரவில் பிரியாணி சாப்பிட்ட மாணவி மரணம்..! அவதிக்குள்ளான அந்த 7 நாட்கள்..!

புத்தாண்டு இரவு மந்தி பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்ட கல்லூரி மாணவி, உணவே விஷமானதால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு பரிதாபமாக பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக ரெஸ்டாரண்ட் உரிமையாளர் உள்ளிட்ட 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் பெரும்பாலாவை சேர்ந்தவர் கல்லூரி மாணவி அஞ்சு ஸ்ரீ பார்வதி . இவர் டிசம்பர் 31-ஆம் தேதி ஆன்லைன் வாயிலாக குழி மந்தி பிரியாணி, சிக்கன் 65, மயோனஷ் ஆர்டர் செய்து குடும்பத்துடன் … Read more

திருவனந்தபுரம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தீக்குளித்து தற்கொலை-கடன் தொல்லையால் பரிதாபம்

திருவனந்தபுரம் : திருவனந்தபுரம் அருகே கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர்.திருவனந்தபுரம்  அருகே கடினம்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேசன் (48). இவரது மனைவி சுலஜா  குமாரி (46). இந்த தம்பதியின் ஒரே மகள் ரேஷ்மா (22). துபாயில்  பணிபுரிந்து வந்த ரமேசன் நேற்று முன்தினம் ஊருக்கு வந்திருந்தார். அவருக்கு கடன் தொல்லை  இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 3 பேரும்  வழக்கம்போல வீட்டில் … Read more

ராமர் கோயிலில் தரிசனம் செய்ய ராகுல் காந்திக்கு அழைப்பு.!

கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி, அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பிரதமர் நரேந்திர மோடி பூமி பூஜையில் கலந்து கொண்டார். அதன்படி, ராமர் கோவில் கட்டுவதற்கு ராம ஜென்ம பூமி அறக்கட்டளை உருவாக்கப்பட்டு, அதன் மூலம் கட்டுமானப் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே, கடந்த நவம்பர் மாதம் பேட்டி அளித்த உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், “அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப் … Read more

விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த மும்பை நபர் கைது: வலைதளம், கிரெடிட்கார்டு பயன்படுத்திய போது போலீசில் சிக்கினார்..!!

டெல்லி: விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த மும்பையை சேர்ந்த சங்கர் மிஸ்ரா கைது செய்யப்பட்டார். நியூயார்க்கிலிருந்து  டெல்லி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் கடந்த நவம்பர் மாதம்  பயணித்த சங்கர் மிஸ்ரா சக பெண் பயணி மீது சிறுநீர் கழித்திருக்கிறார். இதுகுறித்து அந்த பெண் புகார் அளித்த நிலையில் போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை தேடிவந்தனர். மேலும் அவரை காணவில்லை என்று லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்து விமான … Read more

அரசியலில் இருந்து எஸ்.எம்.கிருஷ்ணா ஓய்வு

பெங்களூரு: கர்நாடகாவை சேர்ந்த மூத்த அரசியல் தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணா 50 ஆண்டுகளுக்கும் மேலாக‌ காங்கிரஸில் முக்கிய பொறுப்புகளை வகித்தார். கடந்த 2019-ல் காங்கிரஸில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்தார். எஸ்.எம்.கிருஷ்ணா பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘எனக்கு 90 வயதாகிறது. இனி அரசியலில் தீவிரமாக செயல்பட முடியாது. அதனால் முழு நேர அரசியலில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன். ஆனாலும் அரசியலில் இருந்து முழுமையாக விலகவில்லை. பாஜக தலைவர்கள் விரும்பினால் உரிய அரசியல் ஆலோசனைகளை வ‌ழங்குவேன். பாஜகவில் … Read more