மேற்கு வங்கத்தை இரண்டாக பிரிக்க சதி: முதல்வர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு!

மேற்கு வங்க மாநிலத்தை இரண்டாக பிரிக்க சிலர் சதி செய்து வருவதாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி உள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில், முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. நாடியா மாவட்டம் ரணகாட்டில் இன்று நடைபெற்ற அதிகாரிகள் கூட்டத்தில், முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேசியதாவது: பாஜக மற்றும் மத்திய புலனாய்வு அமைப்புகளை இலக்காகக் கொண்ட குற்றச்சாட்டுகளில், அமைதியின்மையை உருவாக்கி, மாநிலத்தை இரண்டாக பிரிக்க ஒரு பிரிவினர் … Read more

நேருக்கு ந்நெர் மோதிக் கொண்ட கார்கள்… மனம் பதற வைக்கும் CCTV காட்சிகள்!

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள கழுக்கூட்டம் நெடுச்சாலை வழியாக திருவனந்தபுரம் நோக்கி இன்று அதிகாலை நான்கு மணி அளவில் அதிவேகத்தில் வந்து கொண்டிருந்த ஷிப்ட் கார் ஒன்று , கட்டியாங்கோணம் என்னும் பகுதி அருகே வரும்போது அதிவேகத்தால் திடீரென கட்டுப்பாட்டை இழந்த ஷிப்ட் கார் எதிரே வந்த இன்னோவா கார் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் இரு கார்களின் முன்பக்கமும் முழுவதுமாக நொறுங்கின.மேலும் இந்த விபத்தில் இரு வாகனங்களிலாக பயணித்த ஒரு குழந்தை உட்பட ஆறு … Read more

கூடங்குளம் அணுஉலையில் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து ஆய்வறிக்கை: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவு

புதுடெல்லி: கூடங்குளம் அணு உலை விவகாரத்தில், இதுவரை மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து இன்னும் 2 வாரத்தில் ஒன்றிய அரசு ஆய்வறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டார். கூடங்குளம் அணுஉலை தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் சுந்தர்ராஜன் ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், கூடங்குளம் அணு உலையில் அணுக்கழிவுகள் சரியாக கையாளப்படாமலும், உரிய பாதுகாப்பு விதிகளை பின்பற்றாமலும் இருந்து வருகிறது. மேலும், அணுக்கழிவுகளை … Read more

பரபரப்பு.. கடற்கரையில் கரை ஒதுங்கியது பச்சிளம் குழந்தையின் உடல்..!

வீராம்பட்டினம் கடற்கரையில், பச்சிளம் பெண் குழந்தையின் உடல் கரை ஒதுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலம் வீராம்பட்டினம் மீனவ கிராம கடற்கரையில் பச்சிளம் குழந்தையின் உடல் ஒன்று கரை ஒதுங்கியது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள், சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கடற்கரையில் இருந்த பச்சிளம் பெண் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன், அந்த குழந்தை … Read more

குஜராத் தேர்தலில் மனைவிக்கு சீட்: பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன ரவீந்திர ஜடேஜா

அகமதாபாத்: குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட தனது மனைவி ரிவாபாவுக்கு வாய்ப்பு அளித்ததற்காக, பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜோ நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவு: “குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை பெற்றதற்காக ரிவாபாவுக்கு வாழ்த்துகள். கடின உழைப்பின் மூலம் நீங்கள் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளையும் நினைத்து பெருமைப்படுகிறேன். சமூகத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பணியாற்ற … Read more

அமெரிக்க விசா பெறுவதில் 2023-ம் ஆண்டிற்குள் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா 2-ம் இடம் பிடிக்கும்: அமெரிக்க தூதரக அதிகாரி தகவல்

டெல்லி: அமெரிக்க விசா பெறுவதில் 2023-ம் ஆண்டிற்குள் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா இரண்டாம் இடம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகளவில் அமெரிக்க விசா பெறுவதில் மெக்சிகோ முதலிடம் வகிக்கிறது. அதற்கு அடுத்தபடியாக 2-ம் இடத்திற்கு இந்தியா முன்னேறி வருகிறது. இது குறித்து அமெரிக்க தூதரகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: அடுத்த ஆண்டுக்குள் அமெரிக்க விசா பெறுவதில் இந்தியா 2-வது இடத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசா வழங்குவதில் அமெரிக்காவிற்கு இந்தியா தான் இப்போது முதலிடத்தில் … Read more

இமாச்சலப் பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பொதுசிவில் சட்டம் அமல்படுத்தப்படும் -அமித்ஷா

இமாச்சலப் பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று தேர்தல் பரப்புரை கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான அமித்ஷா இன்று இமாச்சலப் பிரதேசம் பாலம்பூரில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “கடந்த 5 ஆண்டுகளில் இமாச்சலப் பிரதேசத்தின் வளர்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மாநில முதல்வர் ஜெய்ராம் தாகூர் ஆகியோர் எந்த … Read more

லாலுவுக்கு சிறுநீரகம் தானமாகத் தருகிறார் இளைய மகள் ரோஹிணி; சிங்கப்பூரில் சிகிச்சை

பாட்னா: பிஹார் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவுக்கு சிங்கப்பூரில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட இருப்பதாகவும், அவரது இளைய மகள் ரோஹிணி சிறுநீரகம் தானமாகக் கொடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. லாலு பிரசாத் யாதவின் மகள் ரோஹிணி ஆச்சார்யா. இவர் சிங்கப்பூரில் வசிக்கிறார். சிறுநீரகப் பிரச்சினைகளால் கடந்த சில ஆண்டுகளாகவே சிரமப்பட்டு வரும் லாலு பிரசாத் யாதவ் சிங்கப்பூரில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று நீண்ட காலமாகவே ரோஹிணி … Read more

மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்: பிரியங்கா காந்தி தேர்தல் வாக்குறுதி!

குஜராத், ஹிமாச்சலப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால், மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என, அக்கட்சி பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வாக்குறுதி அளித்துள்ளார். ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில், முதலமைச்சர் ஜெய்ராம் தாக்குர் தலைமையிலான பாஜக ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 68 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் 12 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் மாதம் … Read more

மாலத்தீவு விபத்து : தொடர்பு எண்களை வெளியிட்டது இந்திய தூதரகம்..!

மாலத்தீவு தீ விபத்தில் 8 இந்தியர்கள் உடல்கருகி இறந்த நிலையில் தொடர்பு எண்களை இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது. மாலத்தீவின் தலைநகர் மாலேயில் இன்று காலையில் வாகனம் பழுது நீக்கும் பட்டறையில் ஏற்பட்ட தீ விபத்தில் கட்டடத்தின் மேல் பகுதியில் தங்கியிருந்தவர்கள் தீயில் சிக்கிக் கொண்டனர். தீயணைப்புத் துறையினர்  4 மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தி கருகிய நிலையில் 10 உடல்களை மீட்டனர். இதில்,8 பேர் இந்தியாவைச் சேர்ந்த தொழிலாளர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  தொடர்பு எண்கள் : +9607361452 … Read more