தெல்டும்டே ஜாமீன் என்ஐஏ மனு தள்ளுபடி

புதுடெல்லி:  மகாராஷ்டிராவில் 2018ம் ஆண்டு புனே அருகே உள்ள பீமா கோரேகானில் நடந்த வன்முறையில் ஒருவர் உயிரிழந்தார். இதற்கு ஒரு நாள் முன்னதாக 2017ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி புனேவில் எல்கார் பரிஷத் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதுதான், வன்முறைக்கு வித்திட்டதாக கூறி வழக்கு தொடரப்பட்டது. பின்னர், இந்த வழக்கு என்ஐஏ.வுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் 16 பேர் கைது செய்யப்பட்டனர். சமூக செயற்பாட்டாளர் ஆனந்த் தெல்டும்டே 2020ம் ஆண்டு கைது செய்யப்பட்டு நவி மும்பையில் உள்ள … Read more

தமிழக அரசு மேல்முறையீடுக்கு ஆன்லைன் நிறுவனங்கள் பதில்: உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

புதுடெல்லி: ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற இணையவழி சூதாட்ட விளையாட்டுகளுக்குத் தடைவிதித்து தமிழக அரசு சட்டம் இயற்றியது.  இந்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி ஜங்லி கேம்ஸ், ப்ளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்தது. அதில், ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு எதிரான தமிழ அரசின் சட்டத்தை ரத்து செய்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக கடந்த ஆண்டு நவம்பர் … Read more

சோலார் பேனல் மோசடி உணவில் விஷம் கலந்து கொடுத்து சரிதா நாயரை கொல்ல முயற்சி: முன்னாள் டிரைவர் மீது குற்றப்பிரிவு போலீஸ் வழக்கு

திருவனந்தபுரம்: சோலார் பேனல் மோசடி வழக்கில் கைதான சரிதா நாயரை அவரது முன்னாள் டிரைவர் உணவில் விஷம் கலந்து கொடுத்து கொல்ல முயற்சித்ததாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கேரளா, தமிழ்நாட்டில் சோலார் பேனல் அமைத்துத் தருவதாக கூறி பலரை ஏமாற்றி கோடிக்ககணக்கில் மோசடி செய்ததாக கூறப்பட்ட புகாரில் கேரள மாநிலம், செங்கனூரை சேர்ந்த சரிதா நாயர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 10 வருடங்களுக்கு முன் உம்மன்சாண்டி ஆட்சியின்போது இந்த மோசடி நடந்தது. முதல்வராக இருந்தபோது … Read more

குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து இளம்பெண்களை ஆபாச வீடியோ எடுத்து பாலியல் தொழிலில் தள்ளிய கொடுமை: பல லட்சம் பறித்த பெண் உட்பட 2 பேர் கைது

திருமலை: ஆந்திராவில் இளம்பெண்களுக்கு குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி விபச்சாரத்தில் தள்ளியதோடு, இன்ஸ்டாகிராமில் வாலிபர்களுக்கு வலை விரிக்க வைத்து, அவர்கள் உல்லாசமாக இருக்கும் வீடியோக்களையும் எடுத்து பல லட்சம் பறித்த, பெண் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம், என்டிஆர் மாவட்டம், விஜயவாடாவில் உள்ள படமடாதோட்டவாரி தெருவை சேர்ந்தவர் பசராகுரு நாகசாய். இவர் படமடா மேல்நிலைப்பள்ளி அருகே துணிக்கடை நடத்தி வருகிறார். நாகசாய் தனது கடைக்கு வரும் … Read more

தமிழகத்தில் ரயில்வே திட்டத்துக்கு ரூ.3946 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும்

புதுடெல்லி: தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்காக ரூ.3,946 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என டெல்லியில் நேற்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த 2023-24ம் ஆண்டின் பட்ஜெட் ஆலோசனை கூட்டத்தில், தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தி உள்ளார். நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 1ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இந்த பட்ஜெட் பணிகள் தொடங்குவது முன்பு அனைத்துத்துறை நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்துவது வழக்கம். அதுபோல், 2023-24ம் ஆண்டுக்காக இடைக்கால பட்ஜெட் … Read more

மற்ற மாநிலங்களை ஓரம் கட்டி அனைத்து திட்டங்களையும் குஜராத்துக்கு கொண்டு செல்லும் ஒன்றிய அரசு: இரண்டே மாதங்களில் ரூ.2.2 லட்சம் கோடி கொட்டியது

1995ம் ஆண்டில் இருந்து, இடையில் சுமார் ஒன்றரை ஆண்டு தவிர, இன்று வரை தங்களுக்கு ஈடுமில்லை இணையுமில்லை என்ற இருமாப்புடன் குஜராத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்துள்ள பாஜவுக்கு சிம்ம சொப்பனமாக மாறியிருக்கிறது ஆம் ஆத்மி. நாட்டின் பொருளாதார வளர்ச்சி, உள்கட்டமைப்பு திட்டங்கள், வளர்ச்சிப் பணிகள் என எல்லாவற்றுக்கும் ‘குஜராத் மாடலை’ முன்னுதாரணமாகவும், தங்களின் முகவரியாகவும் காட்டி வந்த பாஜவின் முகத்தில் துடைப்ப கீறல்கள் ’முக வரிகளாக’ விழுந்து சிதைத்துக் கொண்டிருக்கின்றன. என்னதான் வெளியில் காட்டிக்கொள்ளாவிட்டாலும், பிரதமர் மோடியின் பிரசாரத்தில் … Read more

மங்களூரு ஆட்டோ குக்கர் குண்டு வெடிப்பு வழக்கு என்ஐஏ விசாரிக்க உத்தரவு

மங்களூரு: மங்களூருவில் நடைபெற்ற ஆட்டோ குக்கர் குண்டு வெடிப்பு  சம்பவத்தை விசாரிக்க தேசிய புலனாய்வு முகமையிடம் ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஒப்படைத்தது. கர்நாடகா மாநிலம், மங்களூருவில் கடந்த 19ம் தேதி ஆட்டோவில்  குக்கர் வெடிகுண்டு வெடித்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரிக்க உத்தரவிடும்படி, ஒன்றிய உள்துறை அமைச்சகத்துக்கு கர்நாடக அரசு பரிந்துரை செய்தது. இது தொடர்பாக,  நேற்று முன்தினம் கடிதம் எழுதியது. இதை ஏற்று, இந்த  வழக்கை என்ஐஏ விசாரிக்க ஒன்றிய உள்துறை அமைச்சர் … Read more

மார்க்கெட் பகுதியில் 2வது நாளாக பற்றி எரியும் தீ; 400 கோடி பொருட்கள் சேதம்.!

டெல்லி சந்தினி சௌக் பகுதியில், எலக்ட்ரானிக்ஸ் கடைகள், கிடங்குகள் அடங்கிய பகிரத் பேலஸ் எனப்படும் வணிக வளாகத்தில் நேற்று இரவு 9 மணிக்கு ஏற்பட்ட தீ, இது வரை 3 கட்டிடங்களை தரைமட்டமாக்கிவிட்டது. சுமார் 150 கடைகள் தீக்கிரையாகிவிட்டன. இன்று காலை நிலவரப்படி தீ மட்டுப்பட்டுவிடும் என நினைத்தபோது, அருகில் உள்ள கடைகளுக்கு பரவிய தீ கொளுந்து விட்டு எரிந்து கொண்டு இருக்கிறது. இதனால் அருகருகில் உள்ள 5 அடுக்குமாடி கட்டிடங்களில் 3 கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. … Read more

கெஜ்ரிவாலை கொல்ல சதி : பாஜ மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

புதுடெல்லி: டெல்லி மாநகராட்சிக்கு வரும் 4ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில், பாஜ, ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில்,  டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா நேற்று அளித்த பேட்டியில், ‘பாஜ எம்பி மனோஜ் திவாரி, முதல்வர் கெஜ்ரிவாலுக்கு வெளிப்படையாக மிரட்டல் விடுத்துள்ளார்.   இந்த பேச்சின் மூலம் கெஜ்ரிவாலை கொலை செய்வதற்கான சதி திட்டம்  தெரிகிறது. குஜராத், டெல்லி மாநகராட்சி தேர்தலில் பாஜ.வுக்கு தோல்வி பயம் ஏற்பட்டு விட்டது. அதனால்தான்  கெஜ்ரிவாலை … Read more

ஏடிஎம் திருட்டு கேள்விப்பட்டிருப்பீங்க… ரயில் இன்ஜின் திருட்டை பாத்திருக்கீங்களா?

பீகார் மாநிலம், முசாஃபர்பூர் மாவட்த்துக்குட்ட பகுதியில் ஒரு பிரபல இரும்பு கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் இரும்பு பொருட்கள் அவ்வபோது திருடு போய் கொண்டிருந்தன. இதுகுறித்து கடை உரிமையாளரிடம் இருந்து தொடர் புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. ஆனால் கடையில் அவ்வபோது கைவரிசை காட்டி வந்த திருடர்களை போலீசாரால் அவ்வளவு எளிதாக பிடிக்க இயலவில்லை. இதனால் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த முசாஃபர்பூர் மாவட காவல் கண்காணிப்பாளர், திருடர்களை பிடிக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டார், தனிப்படை … Read more