TET தேர்வின் ஹால் டிக்கெட்டில் நடிகை சன்னி லியோனின் புகைப்படம்! -அதிர்ச்சியான தேர்வாளர்கள்

நவம்பர் 6ம் தேதி, கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் (TET-2022) கலந்து கொண்ட ஒரு விண்ணப்பதாரரின் தேர்வு ஹால் டிக்கெட்டில் பாலிவுட் நடிகை சன்னி லியோனின் படம் அச்சிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, நடிகை சன்னி லியோனின் புகைப்படம் அச்சிடப்பட்ட ஹால் டிக்கெட் வைரலானதை அடுத்து, சம்பவம் குறித்து கல்வித்துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்தில் பங்குபெற ஆயிரணக்கானோர் பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் ருத்ரப்பா கல்லூரியில் நடைபெற்ற ஆசிரியர் தகுதி … Read more

நக்சல் தீவிரவாதம் 55% குறைந்துள்ளது: மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட ஆண்டறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய உள்துறை அமைச்சகத்தின் நடவடிக்கைகளால் சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், உள்ளிட்ட மாநிலங்களில் நக்சல் தீவிரவாதிகளின் ஆதிக்கம் கணிசமாக குறைந்துள்ளது. கடந்த 2013-ல் நக்சல் தீவிரவாதிகள் 1,136 தாக்குதல்களை நடத்தினர். கடந்த 2021-22-ம் ஆண்டில் அவர்களின் தாக்குதல் 509 ஆக குறைந்துள்ளது. இதன்படி கடந்த 8 ஆண்டுகளில் 55% அளவுக்கு நக்சல் தீவிரவாதம் குறைந்திருக்கிறது. இதேபோல கடந்த 2013-ல்நக்சல் தீவிரவாதிகளின் தாக்குதலில் 397 பேர் உயிரிழந்தனர். கடந்த 2021-22-ல் 147 … Read more

Delihi – Nepal earthquake live news: நேபாளம் டூ டெல்லி… ஒரே இரவில் நடந்த 6 சம்பவங்கள்- நிலநடுக்கமும், மக்கள் பீதியும்!

வட இந்தியாவிற்கு இன்று (நவம்பர் 9) காலை மிகவும் பதற்றமான பொழுதாக விடிந்திருக்கிறது. அதற்கு காரணம் தலைநகர் டெல்லியில் ஏற்பட்ட நில அதிர்வு. இது மிகவும் லேசாகத் தான் உணரப்பட்டுள்ளது. இதனால் பெரிய அளவிலான பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும் நில அதிர்வை உணர்ந்த மக்கள் அச்சத்துடன் நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்துள்ளனர். வெறும் 10 வினாடிகளே நில அதிர்வு உணரப்பட்டாலும், அதன்பிறகு தூக்கமே போச்சு என திக் திக் இரவாக தொடர்ந்துள்ளது. இந்த … Read more

பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப்புக்குள் ஊடுருவிய ட்ரோனை சுட்டு வீழ்த்திய பிஎஸ்எப் வீரர்கள்

சண்டிகர்: பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப்புக்குள் ஊடுருவிய ட்ரோனை எல்லையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பிஎஸ்எப் வீரர்கள் சுட்டு வீழ்த்தினார். டிரோன் ஊடுருவிய பகுதியை சுற்றிவளைத்து பாதுகாப்புப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

7 வயது சிறுவனின் உயிரை பறித்த திடீர் மாரடைப்பு: என்னதான் நடந்தது?

கர்நாடகாவின் மங்களூருவில் 7 வயது சிறுவனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு, சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் அமரமுத்னூர் கிராமத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தவர்தான், சிறுவன் மோக்‌ஷித். சிறுவன் மோக்‌ஷித்துக்கு, கடந்த சில தினங்களாக காய்ச்சல் இருந்துவந்துள்ளது. இந்நிலையில் கடந்த வாரத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றபின்னர் சிறுவன் மோக்‌ஷித் மயக்கமடைந்து விழுந்திருக்கிறார். உடனடியாக அவரது தந்தை சந்திரசேகர ஆச்சார்யா, மகனை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்திருக்கிரார். இதுகுறித்து அப்பகுதி … Read more

ஜி 20 இலச்சினையில் தாமரை | சுய விளம்பரத்தை தவறவிடாத பாஜக: காங்கிரஸ் விமர்சனம்

புதுடெல்லி: ஜி 20 அமைப்பிற்கு இந்தியா தலைமை ஏற்க உள்ள நிலையில் அதற்காக வெளியிடப்பட்டுள்ள இலச்சினையில் தாமரை பயன்படுத்தப்பட்டிருப்பது குறித்து காங்கிரஸ் கட்சி கடும் விமர்சனம் செய்துள்ளது. ஜி-20 அமைப்பின் தலைமையை இந்தியா வரும் டிசம்பரில் ஏற்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ இலச்சினையை பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை வெளியிட்டார். இந்தியாவின் தேசிய கொடியில் உள்ள நான்கு வண்ணங்களையும் உள்ளடக்கி உருவாக்கப்பட்டுள்ள அந்த இலச்சினையில், பூமிப்பந்து ஒரு தாமரையின் மீது வைக்கப்பட்டிருப்பது போல வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து காங்கிரஸ், தன்னை முன்னிலைப்படுத்தி … Read more

சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவத்துக்கு ஜாமீன்!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் கோரேகானில் உள்ள பத்ரா சால் பகுதி 2008ஆம் ஆண்டில் வீட்டு வசதி மற்றும் பகுதி வளர்ச்சி ஆணையத்தின் (எம்எச்ஏடிஏ) சார்பில் மேம்படுத்தப்பட்டது. இந்த குடியிருப்பினை மறுவடிவமைப்பு செய்ததில் சுமார் ரூ.1,034 கோடி நிதி முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, இந்த புகார் தொடர்பாக உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ராவத்திடம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறையினர், கடந்த ஆகஸ்ட் … Read more

வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

டெல்லி: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 29ம் தேதி தொடங்கியது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடலில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடந்த வாரம் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. சென்னை மற்றும் அதனையொட்டிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்தது. சென்னையில் 36 மணி நேரத்தில் 35 செ.மீ. … Read more

ஜார்க்கண்டில் நடந்த வருமான வரி சோதனையில் ரூ.2 கோடி ரொக்கம் பறிமுதல்

ராஞ்சி: ஜார்க்கண்டில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் ரூ.2 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ராஞ்சி, கோடா, பெர்மோ, டும்கா, ஜாம்ஷெட்பூர், சாய்பாசா, பாட்னா, குருகிராம், கொல்கத்தா உள்ளிட்ட நாட்டின் 50-க்கும் மேற்பட்ட நகரங்களில் வருமான வரித்துறையினர் அண்மையில் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது ஜார்க்கண்டைச் சேர்ந்த 2 காங்கிரஸ் எம்எல்ஏக்களான ஜெய் மங்கள் சிங், பிரதீப் யாதவ் மற்றும் தொழிலதிபர்களின் வீடுகள், அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்றது. அப்போது ரூ.2 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.100 … Read more

இந்தியா வளர அம்பானிகளும், அதானிகளும் தேவை: ஜி20 தலைவர் பேச்சு!

ஜி20 அமைப்பு கடந்த 1999ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதில் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், சீனா, இந்தியா, கனடா, துருக்கி, தென் ஆப்பிரிக்கா, சவுதி அரேபியா, தென்கொரியா, மெக்சிகோ, இத்தாலி, இந்தோனேசியா, பிரேசில், ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் தலைமை தற்போது இந்தோனேசியாவிடம் உள்ளது. இந்த நிலையில், வருகிற டிசம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் ஜி20 அமைப்பின் தலைமையை இந்தியா ஏற்கவுள்ளது. இதையொட்டி பிரதமர் … Read more