நேபாளம் மணிப்பூர் டெல்லியை தாக்கிய நிலநடுக்கம்! 6.2 ரிக்டர் அளவிலான பூகம்பம்

புதுடெல்லி: இன்று (2022, நவம்பர் 9) 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் டெல்லி-என்சிஆர் பகுதிகளில் உணரப்பட்டது. டெல்லி, நொய்டா, காசியாபாத் ஆகிய இடங்களில் வலுவான நடுக்கம் உணரப்பட்டது. நேபாளத்தில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. நேபாளம், மணிப்பூரில் நவம்பர் 9 ஆம் தேதி அதிகாலை 1.57 மணியளவில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் ஆழம் பூமிக்கு அடியில் 10 கிமீ ஆழத்தில் இருந்ததாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. Nepal | An … Read more

சந்திர கிரகணத்தில் பிரியாணி விருந்து: மாட்டு சாணம் வீசி அடிதடி

புவனேஸ்வர்: சந்திர கிரகணத்தின்போது, மூடநம்பிக்கை தகர்க்க நேற்று  ஒடிசாவின் பெர்ஹாம்பூரில் பகுத்தறிவாளர்கள் சிலர், சமூக விருந்துக்கு ஏற்பாடு செய்தனர். லோகியா அகாடமி வளாகத்தில் நடந்த விருந்தில் பிரியாணி பரிமாறப்பட்டது. இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். விருந்து நடக்கும் இடத்திற்குள் நுழைந்த அவர்கள், பிரியாணி சாப்பிட்டுக் கொண்டு இருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். விருந்தில் கலந்து கொண்டவர்கள் மீது மாட்டு சாணத்தை வீசியும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால், இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். போலீசார் விரைந்து … Read more

ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்: ஜி-20 கருப்பொருளை வெளியிட்டார் பிரதமர் மோடி

புதுடெல்லி: ஜி-20 அமைப்பின் தலைமையை இந்தியா வரும் டிசம்பரில் ஏற்கிறது. இதையொட்டி, ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்ற கருப்பொருளையும், தாமரை இலச்சினையையும் ­­பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். ஜி-20 அமைப்பு கடந்த 1999-ல் தொடங்கப்பட்டது. இதில் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், சீனா, இந்தியா, கனடா, துருக்கி, தென் ஆப்பிரிக்கா, சவுதி அரேபியா, தென்கொரியா, மெக்சிகோ, இத்தாலி, இந்தோனேசியா, பிரேசில், ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக … Read more

அத்வானிக்கு 95 வயது தலைவர்கள் வாழ்த்து

புதுடெல்லி: பாஜ மூத்த தலைவர் அத்வானியின் 95வது பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் மோடி, பாஜ தலைவர்கள் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பாஜ.வில் நீண்ட காலம் தலைவராக இருந்தவர் எல்கே அத்வானி. மூத்த தலைவரான அவர், நேற்று தனது 95வது பிறந்தநாளை கொண்டாடினார். இதனையொட்டி பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள், பாஜ தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பலர் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். பிரதமர் மோடி, பாதுகாப்பு … Read more

ஜார்கண்டில் சட்ட விரோதமாக 2 காங். எம்எல்ஏ.க்கள் ரூ.100 கோடி பரிமாற்றம்: வருமான வரி சோதனையில் கண்டுபிடிப்பு

புதுடெல்லி: ஜார்கண்டில் 2 காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் ரூ.100 கோடிக்கு சட்ட விரோத பணபரிமாற்றம் செய்திருப்பது, வருமான வரித்துறை சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வருமான வரித்துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நிலக்கரி மற்றும் இரும்புத் தாது வணிகம் முறைகேடு தொடர்பாக, ஜார்கண்ட், பீகார், மேற்கு வங்கம், அரியானா மாநிலங்களில் 50 இடங்களில் கடந்த 4ம் தேதி சோதனை நடந்தப்பட்டது. இதில், ஜார்கண்ட் காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் அனுப் சிங், பிரதீப் யாதவ் எனப்படும் குமார் ஜெய்மங்கல் ஆகியோரின் … Read more

எம்பிபிஎஸ் படிக்க ரூ.24 லட்சம் கட்டணம் ஆந்திர அரசு உத்தரவை ரத்து செய்தது செல்லும்: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

புதுடெல்லி: எம்பிபிஎஸ் கல்வி கட்டணத்தை ரூ.24 லட்சமாக உயர்த்திய ஆந்திர அரசின் அரசாணையை ரத்து செய்தது செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. ஆந்திராவில் எம்பிபிஎஸ் படிப்பிற்கான கல்விக் கட்டணத்தை ரூ.24 லட்சமாக உயர்த்தி, கடந்த 2017ம் ஆண்டு அம்மாநில அரசு அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்று, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், அரசாணைக்கு தடை விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் … Read more

குஜராத்தில் ஓவைசி சென்ற வந்தே பாரத் மீது கல்வீச்சு: போலீஸ் மறுப்பு

சூரத்: குஜராத்தில் தான் சென்ற வந்தே பாரத் ரயில் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக ஓவைசி கூறியுள்ள குற்றச்சாட்டை போலீசார் மறுத்துள்ளனர். குஜராத்தில் அடுத்த மாதம் 1, 5ம் தேதிகளில் 2 கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது, இங்கு நடக்கும் தேர்தல் பிரசார பேரணியில் கலந்து கொள்வதற்காக ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவரும், ஐதராபாத் தொகுதி எம்பி.யுமான அசாதுதீன் ஓவைசி, வந்தே பாரத் ரயிலில் சூரத்துக்கு சென்று கொண்டிருந்த நிலையில், மர்ம நபர்கள் சிலர் கல்வீசி தாக்கியதில் கண்ணாடி … Read more

ராஜஸ்தானில் காதல் பரவசம் மாணவியை கரம் பிடிக்க ஆணாக மாறிய ஆசிரியை

பரத்பூர்: ராஜஸ்தான் மாநிலம், பாரத்பூரில் உள்ள பள்ளியில் உடற்கல்வி ஆசிரியையாக மீரா பணியாற்றினார். இதே பள்ளி மாணவி கல்பனா. முதல் முறையாக உடற்கல்வி வகுப்பில் சந்தித்த போதே ஒருவர் மீது ஒருவருக்கு இனம்புரியாத ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் காதலில் வீழ்ந்தனர். இதையடுத்து, கல்பனாவை திருமணம் செய்து கொள்ள விரும்பிய மீரா, பாலின மாற்று அறுவை சிகிச்சை மூலம் ஆணாக மாற முடிவு செய்தார்.கடந்த 2019ம் ஆண்டு முதல் அறுவை சிகிச்சையை படிப்படியாக செய்தார். தற்போது அவர் … Read more

பண மதிப்பிழப்பு நடவடிக்கை பொருளாதார இனப்படுகொலை: எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம்

புதுடெல்லி: பணமதிப்பிழப்பு மோடி அரசின் 6வது நினைவு நாள். இது பொருளாதார இனப்படுகொலை’ என்று எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து செய்துள்ளன. நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகளை கடந்த 2016ம் ஆண்டு நவம்பவர் 8ம் தேதி வாபஸ் பெறுவதாக (பணமதிப்பிழப்பு) பிரதமர் மோடி திடீரென அறிவித்தார். ஊழல், கருப்பு பணத்தை ஒழிக்கவும், மக்களிடம் பணப் புழக்கத்தை குறைத்து, வங்கி பரிமாற்றத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக இந்த பணமதிப்பிழப்பு செயல்படுவத்துவதாக அவர் அறிவித்தார். ஆனால், இந்த நோக்கம் … Read more

ஞானவாபி மசூதி சிவலிங்கம் வழிபாடு வரும் 14ம் தேதிக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு

வாரணாசி: ஞானவாபி மசூதியில் கண்டறியப்பட்ட சிவலிங்கத்தை வழிபட அனுமதிக்க கோரிய மனு மீதான தீர்ப்பை விரைவு நீதிமன்றம் வரும் 14ம் தேதிக்கு ஒத்தி வைத்தது. உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டி உள்ள ஞானவாபி மசூதியின் பக்கவாட்டு சுவரில் உள்ள அம்மன் சிலையை தினமும் வழிபட அனுமதி கோரி வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்ற உத்தரவின் பேரில், மசூதியில் நடத்தப்பட்ட ஆய்வில், அங்கு சிவலிங்கம் இருப்பதும் கண்டறியப்பட்டது. இதற்கிடையே, விஸ்வ வேத சனாதன … Read more