சிறுநீரக செயலிழப்பு காரணமாக காலிஸ்தானி தீவிரவாதி பாகிஸ்தானில் மரணம்: இந்திய உளவுத் துறை தகவல்

புதுடெல்லி: பாகிஸ்தானில் பதுங்கியிருந்த காலிஸ்தானி தீவிரவாதி ஹர்விந்தர் சிங் ரிண்டா சிறுநீரக செயலிழப்பு காரணமாக உயிரிழந்ததாக இந்திய உளவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தியாவில் தடை செய்யப்பட்ட காலிஸ்தானி தீவிரவாத அமைப்பான ‘பாபர்  கல்சா இன்டர்நேஷனல்’ அமைப்பின் உறுப்பினராக ஹர்விந்தர் சிங் ரிண்டா என்பவன்  இருந்தான். இந்த ஆண்டு மே மாதம், மொஹாலியில் உள்ள பஞ்சாப் போலீஸ்  உளவுத்துறை தலைமையகத்தில் ராக்கெட் புரொபல்டு க்ரெனேட் (ஆர்பிஜி)  தாக்குதலின் பின்னணியில் ஹர்விந்தர் சிங் ரிண்டா பெயரும் இடம்பெற்றது.   … Read more

குளிருக்காக நிலக்கரி எரிப்பு – 2 பேர் பலி!!

குளிரை சமாளிக்க அறைக்குள் நிலக்கரியை எரித்ததால் மூச்சுத்திணறி 2 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லா மாவட்டத்தில் உள்ள கோட்கர் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தொழிலாளர்கள் குளிரை சமாளிக்க அறைக்குள் நிலக்கரியை எரித்தனர். நிலக்கரி எரிந்ததால் ஏற்பட்ட வாயு அறை முழுவதும் நிரம்பியதால் சுவாசிக்க காற்று இல்லாமல் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. மறுநாள் உள்ளூர்வாசிகள் கதவைத் திறந்து பார்த்த போது, தொழிலாளர்கள் அனைவரும் மயக்க நிலையில் இருந்தனர். அவர்களை மீட்டு … Read more

சபரிமலையில் இன்று ஒரு லட்சம் பக்தர்கள் தரிசனம்: கூடுதல் பஸ்கள் இயக்கம்

திருவனந்தபுரம்: சபரிமலையில் இன்று கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. ஒரு லட்சத்துக்கும் மேல் பக்தர்கள் தரிசனத்துக்காக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதையொட்டி கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன.சபரிமலையில் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டுவிட்டதால் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இருந்ததை போல மண்டல காலத்தில் பக்தர்கள் வருகை அதிக அளவில் காணப்படுகிறது. கடந்த 16ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறந்த நேரம் முதல் பக்தர்கள் சபரிமலையில் குவிந்து வருகின்றனர். அதன்படி கடந்த 4 நாளில் மட்டும் … Read more

இப்படியொரு ஆழமான காதலா! இறந்துபோன காதலியை திருமணம் செய்த காதலன்! கலங்கி நின்ற உறவினர்கள்

உயிரிழந்த காதலியை திருமணம் செய்து கொண்ட இளைஞரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அசாம் மாநிலத்தில் பிடுப்பன் என்ற இளைஞரும் பிராத்தனா என்ற பெண்ணும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் காதலித்து வந்தது இருவீட்டாருக்கும் தெரிய வந்தது. பின்னர், அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள இரு வீட்டாரும் சம்மதித்தனர். ஆனால் சில நாட்களுக்கு முன்பு, பிராத்தனாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. உடனே அவர் கவுஹாத்தியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் … Read more

அதிர்ச்சி! தூக்கிய தொங்கிய 5 ஸ்டார் ஹோட்டல் உரிமையாளர்!!

பிரபல 5 ஸ்டார் ஹோட்டர் உரிமையாளர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி அருகே கவுஷாம்பி என்ற பகுதியில் அமைந்துள்ள ராடிசன் ப்ளூ என்ற 5 ஸ்டார் ஹோட்டல் மிகவும் பிரபலம். அதன் உரிமையாளர் அமித் ஜெயின் நொய்டா பகுதியில் வசித்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று கிழக்கு டெல்லியில் வசிக்கும் அமித், வீட்டிலுள்ள மின் விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதனை கண்ட வீட்டில் வேலை செய்யும் … Read more

மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு… திட்டமிட்ட தீவிரவாத தாக்குதல் முயற்சி கோவை சம்பவத்திற்கு தொடர்பா?

மங்களூருவில் ஆட்டோவில் குக்கர் குண்டுவெடிப்பு சம்பவம் திட்டமிட்ட தீவிரவாத தாக்குதல் முயற்சி என, கர்நாடக முதல்வரும், அம்மாநில டிஜிபியும் கூறியுள்ளனர். கோவை சம்பவத்துடன் தொடர்பிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், குண்டுவெடிப்பில் காயமடைந்த நபருக்கு சிம் கார்டு வாங்கி கொடுத்த புகாரில், ஊட்டியைச் சேர்ந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.  கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள நாகுரி என்ற இடத்தில், நேற்று மாலை சாலையில் சென்றுக் கொண்டிருந்த ஆட்டோவில் மர்ம பொருள் திடீரென வெடித்தது. இதில் ஆட்டோ ஓட்டுநரும், அதில் … Read more

பாலியல் பலாத்காரத்தில் கர்ப்பம் ஆனதால் மாணவியை விஷம் கொடுத்து கொன்று கிணற்றில் வீசியெறிந்த ஆசிரியர் கைது

போபால்: மத்திய பிரதேசத்தில் பாலியல் பலாத்காரத்தில் கர்ப்பமடைந்த மாணவியை விஷம் கொடுத்து கொன்று கிணற்றில் வீசி எறிந்த ஆசிரியரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மத்தியப் பிரதேச மாநிலம் ஷாஹோல் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி ஒன்றில் ஆசிரியர் சிவேந்திரா என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் அந்த பள்ளியில் படிக்கும் 17 வயது மாணவி ஒருவரிடம் நெருக்கமாக பழகி வந்தார். பின்னர் அந்த மாணவியை பாலியல் பலாதகாரம் செய்தார். இந்த விஷயத்தை அந்த மாணவி தனது பெற்றோரிடம் … Read more

24 வயது நடிகை மாரடைப்பால் மரணம்!!

பிரபல பெங்காலி நடிகை ஐந்த்ரிலா ஷர்மா (24) தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். இவர் நடித்துள்ள ‘ஜியோன்கதி’ என்ற தொடர் பெங்காலி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் போனதை தொடர்ந்து, கடந்த 2015ஆம் ஆண்டு இவரது கால் எலும்பில் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து இவருக்கு கீமோதெரபி அளிக்கப்பட்டு, 2016ஆம் ஆண்டு அந்த நோயிலிருந்து மீண்டார். கடந்த ஆண்டு இவரது நுரையீரலில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அதற்கும் … Read more

3 ஆண்டுகளில் பிரதமரின் கிசான் திட்ட பயனாளிகள் 67% சரிவு: ஆர்டிஐ தகவல்

புதுடெல்லி: கடந்த 3 ஆண்டுகளில் பிரதமரின் கிசான் திட்ட பயானாளிகள் எண்ணிக்கை 67% சரிந்துள்ளதாக ஆர்டிஐ தகவலில் தெரியவந்துள்ளது. 2019 தேர்தலுக்கு முன்னர் பாஜக தான் அறிவித்த மெகா திட்டமாக பறைசாற்றிக் கொண்ட திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து சமூக ஆர்வலர்கள், விவசாய சங்கத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர். பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதியின் (PM-KISAN) கீழ், தகுதியான விவசாயிகளுக்கு ஆண்டின் ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும் ஒரு முறை தலா ரூ 2,000 வீதம் என, மூன்று … Read more

2வது திருமணம் செய்து கொண்டதால் தம்பதிக்கு செருப்பு மாலை; சிறுநீரை குடிக்க வைத்த கொடூரம்: ராஜஸ்தான் சமுதாய பஞ்சாயத்தில் தீர்ப்பு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட இளைஞனுக்கும், அவரது மனைவிக்கும் செருப்பு மாலை அணிவித்து சிறுநீர் குடிக்க வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நகரின் மதோராஜ்புரா பகுதியை சேர்ந்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைராகி வருகிறது. அந்த வீடியோவில், திருமணமான தம்பதிக்கு செருப்பு மாலை அணிவித்து, அவர்களுக்கு பாட்டிலில் நிரப்பட்ட சிறுநீரை குடிக்க வைத்துள்ளனர். கிராம பஞ்சாயத்து தலைவர்கள் முன்னிலையில் நடந்த இந்த சம்பவம், கடந்த மூன்று … Read more