‘ரோஜ்கார் மேளா’ திட்டத்தின் மூலம் 2ம் கட்டமாக 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை: பிரதமர் மோடி வழங்கினார்

புதுடெல்லி: ‘ரோஜ்கார் மேளா’ வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் 2ம் கட்டமாக 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணையை பிரதமர் மோடி வழங்கினார். நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதை, வரும் நாடாளுமன்ற தேர்தலில் முக்கிய பிரச்னையாக முன்வைக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.  தற்போது, நடைபெற உள்ள குஜராத் மற்றும் இமாச்சல் சட்டப்பேரவை தேர்தலில் முக்கிய ஆயுதமாக வேலையில்லா திண்டாட்டத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன. இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் ஒன்றிய அரசின் … Read more

தொழிலதிபர் விஜய் சங்கேஸ்வர் வாழ்க்கை வரலாறு படம்: கர்நாடக முதல்வர் டிரைலரை வெளியிட்டார்

பெங்களூரு: கர்நாடகா தொழிலதிபர் விஜய் சங்கேஸ்வர் வாழ்க்கை, ‘விஜயானந்த்’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாகி இருக்கிறது. வரும் டிசம்பர் 9ம் தேதி கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் திரைக்கு வரும் இதை ரிஷிகா சர்மா இயக்கியுள்ளார். விஜய் சங்கேஸ்வர் கேரக்டரில் நிஹால் நடித்துள்ளார். மற்றும் ஆனந்த் நாக், ரவிச்சந்திரன், பாரத் பொப்பண்ணா, பிரகாஷ் பெலவாடி, பிரகலாத், வினயா பிரசாத், அர்ச்சனா, அனிஷ் குருவில்லா நடித்துள்ளனர். கீர்த்தன் பூஜாரி ஒளிப்பதிவு செய்ய, கோபி சுந்தர் … Read more

இந்தியா தலைமையில் உதய்பூரில் முதல் ஜி-20 மாநாடு: அழகுபடுத்தும் பணிகள் தீவிரம்

உதய்பூர்: ராஜஸ்தானில் டிசம்பர் 5 முதல் 7ம் தேதி வரையில் ஜி-20 அமைப்பின் முதல் பிரதிநிதிகள் மாநாடு நடக்கிறது. அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட 19 நாடுகள் மற்றும்  ஐரோப்பிய யூனியனை கொண்ட ஜி-20 அமைப்பின் 17வது உச்சி மாநாடு சமீபத்தில் இந்தோனேசியாவின் பாலி தீவில் நடைபெற்றது. டிசம்பர் 1ம் தேதி முதல் அடுத்த ஓராண்டுக்கு இந்த அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்கிறது. இந்தியாவில் அடுத்தாண்டு செப்டம்பர் 9-10ம் தேதிகளில் இதன் உச்சி … Read more

தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த 3 நக்சல்கள் சுட்டுக் கொலை; ஜார்கண்ட்டில் அதிரடி

ராஞ்சி: ஜார்கண்ட்டில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த 3 நக்சல்களை போலீசார் அதிரடியாக என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர். ஜார்கண்ட் மாநிலம் லதேஹார் வனப்பகுதியில் நக்சல்கள் பதுங்கி இருப்பதாக தனிப்பிரிவு போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து சம்பவ இடத்தை சுற்றிவளைத்த போலீசாரை நோக்கி நக்சல் கும்பல் தாக்குதல் நடத்தியது. அதற்கு போலீசார் பதிலடி தாக்குதல் நடத்தியதில் மூன்று நக்சல்கள் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுகுறித்து  லதேஹார் எஸ்பி அஞ்சனி அஞ்சன் கூறுகையில், ‘ஜார்கண்ட் ஜன்முக்தி பரிஷத் (ஜேஜேஎம்பி) தலைவர் பப்பு … Read more

அமைச்சருக்கு சிறையில் மசாஜ் செய்தது போக்சோ கைதி; அவரு பிசியோதெரபிஸ்ட் அல்ல…

புதுடெல்லி: டெல்லி திகார் சிறையில்அமைச்சருக்கு மசாஜ் செய்தது போக்சோ கைதி என்றும் அவர் பிசியோதெரபிஸ்ட் அல்ல என்று சிறைத்துறை தெரிவித்துள்ளது. பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம் ஆத்மி அமைச்சர் சத்யேந்தர ஜெயின், தற்போது சிறைக்குள் மசாஜ் செய்து கொண்ட விவகாரத்தில் சிக்கியுள்ளார். இவ்விகாரம் தொடர்பாக சிறைத்துறை மற்றும் அமலாக்கத்துறையிடம் நீதிமன்றம் விளக்கம் கோரியுள்ளது. மேலும், இவ்விவகாரத்தில் மருத்துவர்களின் ஆலோசனைபடி சத்யேந்திர ஜெயினுக்கு பிசியோதெரபிஸ்ட் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டதாக ஆம்ஆத்மி கட்சி … Read more

டிசம்பர் 1ம் தேதி முதல் ஜனாதிபதி மாளிகையை பொதுமக்கள் பார்க்கலாம்

புதுடெல்லி: வருகிற டிசம்பர் 1ம் தேதி முதல் ஜனாதிபதி மாளிகையை பொதுமக்கள் பார்க்க அனுமதிக்கப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து, புதன், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என வாரத்தின் 5 நாட்களில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஜனாதிபதி மெய்க்காவலர்கள் குழு மாற்றப்படும் நிகழ்ச்சியையும் பார்க்க அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்கு இணையதளத்தில் முன்பதிவு செய்து, நேர ஒதுக்கீடு பெற வேண்டும். அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து, புதன், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என வாரத்தின் … Read more

வீடு உள்பட 50 இடங்களில் ரெய்டு வருமான வரித்துறை அதிரடி, முக்கிய ஆவணங்கள் சிக்கின

ஐதராபாத்: தெலங்கானாவில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மல்லா ரெட்டியின் வீடு உள்பட அவருக்குச் சொந்தமான 50 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். அதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. தெலங்கானாவில் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி ஆட்சி செய்து வருகிறது. அங்கு தொழிலாளர் நலன் மற்றும் வேலை வாய்ப்பு துறை அமைச்சராக மல்லா ரெட்டி உள்ளார். இவரது மனைவி கல்பனா ரெட்டி. தம்பதிக்கு மகேந்திர … Read more

காது கேட்கும் கருவி பொருத்தியவுடன் முதன் முதலாக புன்னகைத்த குழந்தையின் அழகு சமூக வலைதளத்தில் குவியும் பாராட்டு

புதுடெல்லி: காது கேட்கும் கருவி பொருத்தியவுடன் கேட்கும் சக்தியை பெற்ற குழந்தை புன்னகைத்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.இந்தியாவில் காது கேளாதவர்கள் மற்றும் வாய்பேச முடியாத மாற்றுத்திறன் குழந்தைகள், சிறார்கள் 40 லட்சம் பேர். உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி, இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் காது கேளாமையால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காததால், அவர்களின் வாழ்க்கை முழுவதும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இதுபோன்ற பிரச்னைகளில் இருந்து மீள்வதற்கு … Read more

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை மாத பிரம்மோற்சவம்..!

திருப்பதி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் பிரம்மோற்சவத்தின் மூன்றாவது நாளான இன்று, பத்மாவதி தாயார், முத்துப்பந்தல் வாகனத்தில் எழுந்தருளி, 4 மாட வீதிகளிலும் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இன்று இரவு சிம்ம வாகனத்திலும், நாளை காலை கற்பக விருட்ச வாகனத்திலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். கோவிலில் நடைபெற்று வரும் கார்த்திகை மாத பிரம்மோற்சவம் வரும் 28-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. Source link

மின் கட்டண தொகையை செலுத்தாததால் டிவி, ப்ரிட்ஜ், ஏர் கூலரை அள்ளிச் சென்ற மின்வாரியம்; மத்திய பிரதேச மின் நுகர்வோர் அதிர்ச்சி

உஜ்ஜயினி: மத்திய பிரதேசத்தில் மின் கட்டண தொகையை முறையாக செலுத்தாததால், சம்பந்தப்பட்ட மின் நுகர்வோரின் வீடுகளில் இருந்த டிவி, ப்ரிட்ஜ், ஏர் கூலர் போன்றவற்றை தனியார் மின்வாரிய ஊழியர்கள் அள்ளிச் சென்றனர். மத்திய பிரதேச மாநிலத்தில் தனியார் நிறுவனம் தான் மக்களுக்கு மின்விநியோகம் செய்து வருகிறது. இந்நிலையில் மின்கட்டணத்தை முறையாக செலுத்தாத நுகர்வோரிடம் வித்தியாசமான முறையில் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதன்படி உஜ்ஜயினியை சேர்ந்த மின் நுகர்வோர் ஒருவர் பல மாதங்களாக மின்கட்டணம் செலுத்தாமல் இழுத்தடித்து வந்துள்ளார். அவருக்கு … Read more