16 மாதங்களில் 38 பேர் டிஸ்மிஸ் – 'ஓபி' அடிக்கும் ஊழியர்களை களையெடுக்கும் ரயில்வே துறை

கடந்த 16 மாதங்களில் மட்டும் ஒவ்வொரு 3 நாட்களுக்கும் ஒரு செயல்படாத/ஊழல் அதிகாரியை களையெடுத்துள்ளது ரயில்வே துறை. உலகின் மிகப்பெரிய ரயில்வேயில் ஒன்று இந்திய ரயில்வே. ஆனாலும் இந்திய ரயில்வே நிறுவனம் லாபகரமானதாக இயங்கவில்லை என்கிற குறை ஆட்சியாளர்கள் தரப்பில் முன்வைக்கப்படுகிறது. ரயில்வே துறை சரியாக இயங்காமல் போனதற்கு உள்கட்டமைப்புகளை வலுப்படுத்தாமல் இருப்பது, நிர்வாகச் சீர்கேடு, ஊழல் உள்ளிட்ட காரணங்கள் முதன்மையானதாக உள்ளது. இச்சூழலில் தான் இந்திய ரயில்வே துறையை மறுசீரமைக்கும் முயற்சிகளில் இயங்கி உள்ளது மத்திய … Read more

என்ன மனுஷன்யா நீ..? 6 மாத கர்ப்பிணி என்று கூட பார்க்காமல் வரதட்சணைக்காக கொடுமைபடுத்தி கொலை செய்த கணவன்..!!

கர்நாடக மாநிலம் கங்ககொண்டனஹல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்குமார்(வயது 25). இவருக்கும் அருகே உள்ள ஐகூர் கிராமத்தை சேர்ந்த சந்திரகலாவுக்கும்(21) கடந்த 7 மாதத்திற்கு முன்பு ஏப்ரல் 13- ஆம் தேதி திருமணம் நடந்தது. சந்திரகலாவின் தந்தை பால் வியாபாரம் செய்து வரும் ஏழை என்றாலும் திருமணதத்தின் போது மோகன்குமார் அதிகமாக கேட்ட அனைத்து வரதட்சணை பொருட்கள் மற்றும் பணத்தை கொடுத்து தனது மகளின் திருமணத்தை விமர்சையாக நடத்தி உள்ளார். திருமணம் முடிந்து ஒரே மாதத்தில் சந்திரலேகா கர்ப்பமான … Read more

புதிய தேர்தல் ஆணையராக 24 மணி நேரத்தில் அருண் கோயலை எப்படி நியமித்தீர்கள்: ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

டெல்லி: புதிய தேர்தல் ஆணையராக 24 மணி நேரத்தில் அருண் கோயலை எப்படி நியமித்தீர்கள் என ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான வழக்கில் ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. மே மாதத்தில் காலியாக இருந்த தேர்தல் ஆணையர் பதவி நவ.17ல் உச்சநீதிமன்றம் வழக்கை விசரிக்க தொடங்கிய பிறகு நியமிக்கப்பட்டுள்ளது. 4 அதிகாரிகளில் அருண் கோயலை தேர்ந்தெடுத்தது எப்படி என்பது குறித்து அரசு வழக்கறிஞர் … Read more

எதிரியை இடைமறித்து தாக்கும் அக்னி 3 ஏவுகணை சோதனை வெற்றி!

இந்திய ராணுவத்தில் பல்வேறு அதிநவீன தொழில்நுட்பங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் வகையிலான கூடுதல் அம்சங்களுடன் புதிய தலைமுறை ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டு ராணுவத்தில் இணைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, அதி நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட அக்னி 3 ஏவுகணை வடிவமைக்கப்பட்டது. எதிரியை இடைமறித்து தாக்கும் திறன் கொண்ட இந்த அக்னி 3 ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம் பாலசோர் கடற்கரையில் உள்ள அப்துல்கலாம் ஏவு தளத்தில் … Read more

கேரளா, குஜராத் மற்றும் ஜார்க்கண்டில் குழந்தைகள் இடையே தட்டம்மை பாதிப்பு அதிகரிப்பு: ஆய்வு பணிக்கு ஒன்றிய குழு விரைவு

டெல்லி: கேரளா, குஜராத் மற்றும் ஜார்க்கண்டில் குழந்தைகள் இடையே தட்டம்மை பாதிப்பு அதிகரித்துள்ள சூழலில் ஆய்வு பணிக்கு மத்திய குழு விரைந்து உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் 2 ஆண்டுகளாக பரவி பெருந்தொற்றாக உருவெடுத்து உள்ள சூழலில், சமீப நாட்களாக நாடு முழுவதும் தொற்று குறைந்து வருகிறது. இந்த நிலையில், நாட்டின் சில பகுதிகளில் தட்டமை பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன்படி, மராட்டியத்தின் மும்பை, கேரளாவின் மலப்புரம், குஜராத்தின் ஆமதாபாத் மற்றும் ஜார்க்கண்டின் ராஞ்சி ஆகிய நகரங்களில் … Read more

மனைவியை விஷ ஊசி போட்டு கொன்று தற்கொலை நாடகம் ஆடிய கணவன் – விசாரணையில் அம்பலம்!

செவிலியராக இருக்கும் கணவரிடம் போலீசார் துருவித்துருவி விசாரித்ததில் தனது மனைவியை அவர் விஷ ஊசி போட்டு கொன்றது அம்பலமானது. மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தை சேர்ந்த சாவந்த் மற்றும் பிரியங்கா தம்பதியருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்கள் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர். தனியார் மருத்துவமனை ஒன்றில் சாவந்த் செவிலியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி அன்று  சாவந்த் தனது மனைவி பிரியங்கா தற்கொலை முயற்சி … Read more

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மிக மகிழ்ச்சியான செய்தி

இபிஎஃப்ஓ ஊழியர்களுக்கு மத்திய அரசு பெரிய பரிசை வழங்கியுள்ளது. அதன்படி 2022ஆம் நிதியாண்டிற்கான வட்டிப் பணம் உங்கள் கணக்கில் வரத் தொடங்கியது

நாம் ஒன்றாக நடக்கும்போது அடிகள் வலுவாக இருக்கும்; இந்திய ஒற்றுமை பயணத்தில் இணைந்த அண்ணன் – தங்கை..!

இந்தூர்: இந்திய ஒற்றுமை பயணத்தில் ராகுல் காந்தியுடன் இணைந்து பிரியங்கா காந்தி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த மாதம் 7ம் தேதி தமிழ்நாடு கன்னியாகுமரியில், பாதயாத்திரையை தொடங்கிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, குஜராத் என தற்போது மத்தியபிரதேசத்தில் பாதயாத்திரை பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். நேற்று மத்தியபிரதேசம் வந்த ராகுல்காந்திக்கு, காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மத்தியபிரதேசத்தில், ராகுல்காந்தி பாதயாத்திரை 12 நாட்கள் நடக்கிறது. இன்று … Read more

'இணைந்து நடந்தால் வலிமை அதிகம்..' – இந்திய ஒற்றுமை யாத்திரையில் ராகுல் காந்தியுடன் பிரியங்கா  

இந்தூர்: இந்திய ஒற்றுமை யாத்திரையில் ராகுல் காந்தியுடன் அவரது சகோதரியும் உ.பி. காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி இணைந்து கொண்டார். காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடந்த செப்டமர் 7ஆம் தேதி முதல் இந்திய ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டுள்ளார். தமிழகத்தில் யாத்திரையை தொடங்கிய அவர் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, மஹாராச்டிரா மாநிலங்களில் யாத்திரையை முடித்து தற்போது மத்தியப் பிரதேசத்தில் யாத்திரையில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் இன்று காலை யாத்திரையில் ராகுல் காந்தியுடன் அவரது சகோதரி பிரியங்கா … Read more

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 408 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி: ஒன்றிய சுகாதாரத்துறை அறிவிப்பு

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 408 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 408 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,46,70,483 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 5,881- ஆக உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4,41,34,001 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு … Read more