டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு மசாஜ் செய்தவர் ஒரு கைதி – சிறைத்துறை தகவல்

புதுடெல்லி: திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் அவருக்கு மசாஜ் செய்தவர் ஒரு கைதி என்றும் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டெல்லி மாநில உள்துறை மற்றும் சுகாதாரத் துறை அமைச்சராக இருப்பவர் சத்யேந்தர் ஜெயின். இவர் தனது வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.47 கோடி அளவுக்கு சொத்து சேர்த்துள்ளதாக சிபிஐ கடந்த 2017-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. போலி நிறுவனங்கள் பலவற்றை நடத்தி அதன்மூலம் நிதி … Read more

பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களுக்கு மத்திய அரசு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்ககோரி ஆர்ப்பாட்டம்-சித்தூரில் நடந்தது

சித்தூர் :  சித்தூர் கலெக்டர் அலுவலகம் முன்பு பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களுக்கு மத்திய அரசு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க கோரி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சித்தூர் கலெக்டர் அலுவலக முன்பு பிற்படுத்தப்பட்டோர் சங்க மாவட்ட தலைவர் ஞான ஜெகதீஷ் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் அவர் பேசியதாவது: ஆந்திர மாநில பிற்படுத்தப்பட்ட வகுப்பு சேர்ந்த சங்கத் தலைவர் சங்கர் ராவ் உத்தரவின் பெயரில் மாநிலம் முழுவதும் அனைத்து கலெக்டர் அலுவலகங்கள் முன்பு நாங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு … Read more

மக்களே முக்கிய அறிவிப்பு ..!! ஆதாருடன் பான் கார்டு இணைக்க கடைசி தேதி இதுவே…

பான் கார்டுதாரர்கள் மார்ச் 31, 2022க்குள், ஆதார் கார்டுடன் இணைக்கத் தவறினால் ரூ. 1000 வரை அபராதம் விதிக்கப்படும் என வருமான வரித்துறை எச்சரித்து இருந்தது. இருப்பினும், கால வரம்பு நீட்டித்து வழங்கப்பட்டது. 2023, மார்ச் வரை பான் கார்டை ஆதாருடன் இணைக்க அவகாசம் வழங்கப்பட்டது. ஜூலை 1, 2017-ன் படி பான் கார்டு வழங்கப்பட்டு, ஆதார் எண்ணைப் பெறத் தகுதியுடையவர்கள், 31 மார்ச் 2022 அன்று அல்லது அதற்கு முன் பரிந்துரைக்கப்பட்ட அதிகாரியிடம் ஆதார் குறித்து … Read more

டெல்லி மாநகராட்சி தேர்தல் | சீட் விற்பனை சர்ச்சையில் ஆம் ஆத்மி எம்எல்ஏ தாக்கப்பட்டதாக பாஜக வீடியோ

புதுடெல்லி: டெல்லியில் மாநகராட்சி தேர்தல் டிசம்பர் 4 ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் யாருக்கு சீட் வழங்கலாம் என்பதை பணத்தின் அடிப்படையில் ஆம் ஆத்மி நிர்ணயம் செய்வதாக பாஜக நீண்ட காலமாக குற்றஞ்சாட்டி வருகிறது. இந்நிலையில் சீட் சர்ச்சையில் ஆம் ஆத்மி எம்எல்ஏ குலாப் சிங் யாதவ் தொண்டர்களால் தாக்கப்படுவதாக பாஜக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சீட் பேர வாக்குவாதம் என்று கூறப்படும் வாக்குவாதத்தில் கைகலப்பு ஏற்பட்டு குலாப் சிங் யாதவ் அந்த இடத்தில் … Read more

சபரிமலைக்கு போறீங்களா? தரிசனத்திற்கு இனி நோ டென்ஷன்

உலகப்பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இந்த ஆண்டு மண்டல மற்றும் அகர விளக்கு பூஜைக்காக கடந்த 16 ஆம் தேதி மாலை திறக்கப்பட்டது. சபரிமலை நடைதிறப்பை முன்னிட்டு 13,000 போலீசார் ஆறு கட்டங்களாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தற்போது “வெர்ச்சுவல் கியூ” மூலம் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்படுகிறது. இதன் 6-வது நாளான நேற்று தந்திரி கண்டரரு ராஜீவரு மற்றும் மேல் சாந்தி ஜெயராமன் நம்பூதிரி தலைமையில் சன்னிதானத்தில் ஐயப்பனுக்கு விசேஷ பூஜைகளில் ஒன்றான களப … Read more

ரோஜ்கர் மேளாவில் புதிதாக சேர்க்கப்பட்டவர்களுக்கு 71,056 நியமனக் கடிதங்களை வழங்கி பிரதமர் மோடி உரை

டெல்லி: அடுத்த ஒன்றரை ஆண்டுகளில், 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்குமாறு அனைத்து ஒன்றிய அரசு துறைகளையும் பிரதமர் மோடி கடந்த ஜூன் மாதம் கேட்டுக்கொண்டார். அதைத்தொடர்ந்து, கடந்த அக்டோபர் மாதம், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 75 ஆயிரம் பேருக்கு பிரதமர் மோடி பணி நியமன கடிதங்களை வழங்கினார். இந்தநிலையில், ஒன்றிய அரசின் ரோஜ்கார் மேளா வேலைவாய்ப்பு கண்காட்சி இன்று நடைபெற்றது. அதில், காணொலி காட்சி மூலமாக பங்கேற்ற பிரதமர் மோடி சுமார் 71 ஆயிரம் பேருக்கு பணி … Read more

நெஞ்சை உறைய வைக்கும் செய்தி..!! பெற்ற மகளுக்கு தந்தை செய்த கொடூரத்தை பாருங்க..!!

உத்தர பிரதேச மாநிலம் மதுரா மாவட்டம் யமுனா விரைவுச் சாலையின் வேளாண் ஆராய்ச்சி மையம் அருகே உள்ள முட்புதரில் சிவப்பு நிற டிராலி சூட்கேஷ் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கடந்த 18-ம் தேதி இந்த டிராலி சூட்கேஷை கைப்பற்றிய போலீசார், அதனை திறந்து பார்த்த போது இளம்பெண் ஒருவரின் சடலம் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதனைத் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அந்தப் பெண் டெல்லியைச் சேர்ந்த ஆயுஷி யாதவ் (21) என்பது தெரியவந்தது. அந்தப் பெண்ணின் … Read more

இந்தியாவை வளர்ந்த நாடாக்க இளைஞர்கள் உறுதியேற்க வேண்டும்: பிரதமர் மோடி

புதுடெல்லி: இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற இளைஞர்கள் உறுதியேற்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ‘ரோஜ்கர் மேளா’ எனும் வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் 71,056 பேருக்கு வேலைவாய்ப்புக்கான கடிதத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று வழங்கினார். வேலைவாய்ப்பைப் பெற்ற இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி, காணொலி காட்சி வாயிலாக புதுடெல்லியில் இருந்தவாறு பேசினார். அப்போது அவர், “நீங்கள் அனைவரும் மத்திய அரசின் பிரதிநிதிகளாக பணியாற்றப் போகிறீர்கள். உங்களுக்கு மிகப் … Read more

சி.எம் பதவி கொடுத்த மோடி… பிரசாந்த் கிஷோர் உடைக்கும் அரசியல் சீக்ரெட்!

மத்தியில் ஆளும் பாஜகவும் சரி, பிராந்திய கட்சிகளும் சரி. அனைவரது இலக்கும் 2024 மக்களவை தேர்தலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவை வீழ்த்த முடியுமா? காங்கிரஸின் திட்டம் என்ன? மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தலைவர்களின் அரசியல் கணக்கு வெற்றி பெறுமா? என்றெல்லாம் கேள்விகள் எழுந்து வருகின்றன. ஜன் சூரஜ் யாத்ரா இந்த சூழலில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே பாஜக தனது அரசியல் கணக்கை தொடங்கியிருப்பது பற்றி பிரசாந்த் கிஷோர் முக்கியத் … Read more

மேகதாது அணை குறித்து காவிரி ஆணையக் கூட்டத்தில் விவாதிக்கக் கூடாது என்று உத்தரவிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு கோரிக்கை

டெல்லி: மேகதாது அணை குறித்து காவிரி ஆணையக் கூட்டத்தில் விவாதிக்கக் கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் மேகதாது வழக்கில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆணையக் கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதிக்கலாம் என்ற ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞர் கருத்தை ஏற்க முடியாது. உச்ச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் வரை மேகதாது குறித்து விவாதிக்க தடை வேண்டும் என … Read more