எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் மாதிரி நான்… சந்திரபாபு தான் முதுகில் குத்தியவர்- போட்டு தாக்கிய ஜெகன்!

எம்.ஜி.ஆர் என்றால் சொன்னால் அள்ளி அள்ளி கொடுக்கும் வள்ளல். தமிழ் திரையுலகின் ஜாம்பவான்களின் ஒருவர். முன்னாள் முதல்வர். அதிமுகவின் நிறுவனர் என்றெல்லாம் தமிழர்களின் மனங்களில் தோன்றும். எம்.ஜி.ஆர் கட்டி காத்த அதிமுக எப்படியெல்லாம் பூசலில் தவித்து வருகிறது என்பது ஊரறிந்த விஷயம். எம்.ஜி.ஆர் வகுத்த விதிகளை தூக்கி எறிந்து விட்டு, அவரது நிலைப்பாட்டிற்கு எதிரான விஷயங்களை கட்சி ஆளுமைகள் கையிலெடுத்து வருவதாக குற்றச்சாட்டுகள் குவிந்து வருகின்றன. இந்த சூழலில் ஆந்திர மாநிலத்தில் எம்.ஜி.ஆரின் பெயர் ஒலித்திருக்கிறது. அதுவும் … Read more

ரயில்வே அதிரடி அறிவிப்பு! டிக்கெட் முன்பதிவு குறித்து முக்கிய அப்டேட்

Indian Railways: நீங்களும் ரயிலில் பயணம் செய்தால், உங்களுக்கான ஒரு முக்கியமான செய்தி உள்ளது. 

கோவை, மங்களூரு குண்டு வெடிப்பு; கேரளா லாட்ஜில் தீட்டிய சதி: போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்

பெங்களூரு: கோவை மாநகரில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புள்ள குற்றவாளியுடன் மங்களூரு ஆட்டோ குக்கர் குண்டு வெடிப்பு குற்றவாளி ஷாரிக் ஒன்றாக கேரளாவில் தங்கி இருந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. கர்நாடகா மாநிலம், மங்களூருவில் கடந்த 19ம் தேதி ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டு வெடித்தது தொடர்பாக முக்கிய குற்றவாளியான முகமது ஷாரிக் பற்றி, மாநில போலீசார், தேசிய புலனாய்வு முகமை ஆகியவை நடத்தி வரும் விசாரணையில் தினமும் புதுப்புது தகவல்கள் கிடைத்து வருகின்றன. கடந்த செப்டம்பர் … Read more

மங்களூரு குண்டு வெடிப்பு வழக்கை என்ஐஏவிடம் ஒப்படைக்க கர்நாடகா முடிவு

பெங்களூரு: கர்நாடக மாநிலம் மங்களூருவில் கடந்த 19-ம் தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்ததில் ஆட்டோ ஓட்டுநர் புருஷோத்தம் பூஜாரி (37) காயமடைந்தார். குக்கர் குண்டுடன் ஆட்டோவில் பயணித்த முகமது ஷரீக் (24) தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். ஷரீக் தனது மத அடையாளத்தை மறைத்து செயல்பட்டது, போலி ஆதார் அட்டை மூலம் சிம் கார்டுவாங்கியது, ஷிமோகாவில் குண்டை வெடிக்க செய்து ஒத்திகையில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள மங்களூரு போலீஸார் 7 தனிப்படைகளை … Read more

NRC: வாக்களிக்க உரிமை உண்டு! ஆனால் இந்திய குடிமக்கள் இல்லை? மம்தா பானர்ஜி கேள்வி

“சில சமயங்களில் பொது மக்கள், இந்திய குடிமக்கள் இல்லை என்று கூறப்படுகிறது, ஆனால் அவர்கள் பொதுமக்கள் இல்லை என்றால், எப்படி வாக்களித்தார்கள்? எங்கள் வாக்குகளால் நீங்கள் பிரதமரானீர்கள்” பிரதமர் நரேந்திர மோடியை சாடும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி  

 கேரள ஐகோர்ட் தலைமை நீதிபதியை தாக்க முயற்சி பாதுகாப்பு குளறுபடி குறித்து ஒன்றிய உளவுத்துறை விசாரணை

திருவனந்தபுரம்: கொச்சியில்  கேரள ஐகோர்ட் தலைமை நீதிபதி மணிக்குமாரின் காரை பின்தொடர்ந்து சென்று  வாலிபர் தாக்க முயற்சித்த சம்பவம் குறித்து ஒன்றிய உளவுத்துறை விசாரணை நடத்தி வருகிறது. கேரள ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருப்பவர் மணிக்குமார். சென்னையை சேர்ந்த இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவில் கொச்சி விமான நிலையத்தில் இருந்து காரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு  வாலிபர் பைக்கில் சுமார் 4  கிமீ தூரம் பின்தொடர்ந்து வந்து, திடீரென தலைமை நீதிபதியின் … Read more

காசி விஸ்வநாதர் கோயிலில் தமிழர்கள் இசைக்க வேண்டும் – அறக்கட்டளையின் முதல் தமிழர் கே.வெங்கட்ரமண கனபாடிகள் விருப்பம்

புதுடெல்லி: உ.பி. வாரணாசியில் உள்ள காசிவிஸ்வநாதர் கோயில் அறக்கட்டளைக்கு தலைவர் மற்றும் 4 செயற்குழு உறுப்பினர்கள் என 5 நிர்வாகிகள் உள்ளனர். மூன்று வருட கால இப்பதவியில் முதல்முறையாக கே.வெங்கட்ரமண கனபாடிகள் எனும் தமிழர் நியமிக்கப்பட்டுள்ளார். தனது நியமனம் குறித்து, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் வெங்கட்ரமண கனபாடிகள் கூறியதாவது: காசி விஸ்வநாதரை தரிசனம்செய்ய வருவோருக்கு உரியவசதிகளை செய்து தருவது, வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளுதல் எங்கள் பணியாகும். காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி நடைபெறும் போது என்னை … Read more

சபரிமலையில் 6 நாட்களில் 2.61 லட்சம் பேர் தரிசனம்: கேரள தேவசம் போர்டு அமைச்சர் தகவல்

திருவனந்தபுரம்: சபரிமலையில் நேற்று முன்தினம் வரை 2 லட்சத்து 61 ஆயிரத்து 874 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். வரும் நாட்களில் பக்தர்கள் வருகை மேலும் அதிகரிக்கும் என்று கேரள தேவசம் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் கூறினார். மண்டல கால பூஜைகளை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பக்தர்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கேரள தேவசம் போர்டு அமைச்சர் … Read more

மனைவியை கொன்று துண்டு துண்டாய் வெட்டி வீசிய கணவர் – உ.பி.யில் நடந்த கொடூரம்

உத்தரப் பிரதேசத்தில் மனைவியை கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டி வீசிய கணவரை காவல்துறையினர் கைது செய்தனர். கடந்த நவம்பர் 8 ஆம் தேதி அன்று உத்தரப் பிரதேசம் மாநிலம் சீதாபூர் மாவட்டத்தில் உள்ள குலாரிஹாவ் பகுதியில், துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண்ணின் உடல் பாகங்கள் கிடப்பதாக ராம்பூர் கலன் போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர். இதனையடுத்து அங்கு வந்த போலீசார் பெண்ணின் உடல் பாகங்களை மீட்டு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை … Read more

பாஜக போட்டி வேட்பாளர்கள் 12 பேர் குஜராத்தில் சஸ்பெண்ட்

அகமதாபாத்: குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் பாஜக பிரமுகர்கள் 12 பேர் அக்கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர். குஜராத் சட்டப்பேரவைக்கு டிசம்பர் 1, 5 ஆகிய தேதிகளில் 2 கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இரண்டு கட்ட தேர்தலுக்கான மனு தாக்கல், பரிசீலனை, மனு திரும்பப் பெறுதல் ஆகியவை முடிந்துள்ளன. முதல்கட்ட தேர்தலுக்கு இன்னும் 1 வாரமே உள்ளது. 6 முறை எம்எல்ஏ: இந்நிலையில் டிச.5-ம் தேதி நடைபெறும் 2-ம் கட்ட தேர்தலில்பாஜகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு … Read more