திருப்பதியில் ₹25 கோடியில் அமைக்கப்பட்டது ஜனவரி முதல் சோலார் மின் உற்பத்தி தொடங்க வேண்டும்

*கமிஷனர் உத்தரவு திருமலை : திருப்பதியில் ₹25 கோடியில் அமைக்கப்பட்ட உள்ள சோலார் மின் உற்பத்தி மையத்தை ஜனவரி முதல் மின் உற்பத்தியை தொடங்க வேண்டும் என்று கமிஷனர் அனுபமா அஞ்சலி உத்தரவிட்டுள்ளார். திருப்பதி மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் ரேணிகுண்டா மண்டலம் தூக்கிவாக்கத்தில் 26 ஏக்கரில் ₹25 கோடியில் சோலார் மின் உற்பத்தி மையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாநகராட்சிக்கு 6 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி கிடைக்க உள்ளது. இந்நிலையில், நேற்று சோலார் … Read more

எழுத்தாளர் இமையத்துக்கு குவெம்பு விருது

பெங்களூரு: கடலூர் மாவட்டத்தை சேர்ந்த எழுத்தாளரும், ஆசிரியருமான‌ இமையம் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நாவல், சிறுகதை, கட்டுரைகளை எழுதி வருகிறார். தனது முதல் நாவலான‌ ‘கோவேறு கழுதைகள்’ மூலம் தமிழ் இலக்கிய தளத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தினார். இமையத்தின் செடல், செல்லாத பணம், சாவு சோறு, பெத்தவன் உள்ளிட்ட படைப்புகள் வாசகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற‌ன. ஆங்கிலம் மட்டுமல்லாமல் கன்னடம், தெலுங்கு, மலையாளம், பிரெஞ்சு உள்ளிட்ட மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றன. ‘செல்லாத பணம்’ என்ற நாவலுக்காக … Read more

துரோகிகளுக்கு சி.எம் பதவியா? அடிச்சு பேசிய அசோக் கெலாட்… தீராத காங்கிரஸ் சண்டை!

வரும் 2024 மக்களவை தேர்தலில் காங்கிரஸின் எழுச்சி அவசியமானதாக இருக்கிறது. ஏனெனில் தொடர்ந்து இரண்டு பொதுத்தேர்தல்களில் தோல்வியை தழுவி பாஜகவிடம் ஆட்சியை இழந்தது. இந்த சூழலில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை பயணம் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. தற்போது மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் நடைபயணம் டிசம்பர் முதல் வாரத்தில் ராஜஸ்தான் மாநிலத்தை அடையவுள்ளது. வெடிக்கும் உட்கட்சி பூசல் இந்த சூழலில் அம்மாநில காங்கிரஸ் கட்சிக்குள் மீண்டும் … Read more

ராகுல் காந்தி 79வது நாளாக ஒற்றுமை நடைபயணம்: 2வது நாளாக பிரியங்கா காந்தி, ராபர்ட் வதேரா பங்கேற்பு

போபால்: நாடு முழுவதும் ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மத்தியப்பிரதேச மாநிலத்தில் தனது 79வது நாள் பயணத்தை தொடர்ந்து வருகிறார். குமரி முதல் காஷ்மீர் வரையிலான தனது நடைப்பயணத்தை ராகுல் காந்தி செப்.7ம் தேதி தொடங்கினார். கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மராட்டியம் ஆகிய மாநிலங்களை அடுத்து அவரது பயணம் நேற்று முன்தினம் மத்தியப்பிரதேச மாநிலத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இன்று காலை எல்லை நகரமான போர்கான் பகுதியில் ராகுல் காந்தி 79வது நாள் … Read more

பாலியல் வன்கொடுமைக்கு தண்டனை வெறும் 5 தோப்புக்கரணங்களா? – பீகார் பஞ்சாயத்தின் தீர்ப்பு!

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தண்டனைகள் கடுமையாக்கப்பட்டாலும் குற்றங்கள் ஓய்ந்தபாடில்லை. உலகின் பல நாடுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகளவில் நடந்தாலும், இந்தியாவில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கில் குற்றங்கள் பதிவாவதால், ’பாலியல் வல்லுறவின் தலைநகரம் இந்தியா’ என்றே அழைக்கப்படுவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதனை நிரூப்பிக்கும் விதமாக 5 வயது சிறுமியை ஏமாற்றி அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய நபருக்கு 5 தோப்புக்கரணங்களை தண்டனையாக வழங்கியுள்ளது பீகாரின் ஒரு கிராம பஞ்சாயத்து. … Read more

சபரிமலை பெயரை பயன்படுத்தக் கூடாது.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

சபரிமலை என்ற பெயரை பயன்படுத்தக் கூடாது என ஹெலி கேரளா எனும் தனியார் நிறுவனத்துக்கு கேரள ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற அய்யப்பன் கோவிலில், மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், கொச்சியில் இருந்து சபரிமலைக்கு ஹெலிகாப்டர் சேவை வழங்குவதாக ஹெலி கேரளா என்ற நிறுவனம் சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்தது. அதன்படி, கொச்சியில் இருந்து சன்னிதானத்தில் விஐபி … Read more

ஜனநாயக ரீதியிலான ஆலோசனை முடிந்த பிறகு பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும் – அமித் ஷா தகவல்

புதுடெல்லி: ஜனநாயக ரீதியிலான விவாதங்கள், ஆலோசனைகள் நிறைவு பெற்ற பிறகு பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்படும். அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும். பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் ஆகிய முப்பெரும் வாக்குறுதிகளை பாஜக அளித்திருந்தது. இதன்படி கடந்த 2019-ம் ஆண்டி்ல் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. கடந்த 2019-ம் ஆண்டில் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட உச்ச … Read more

'எதிர்பார்க்காதது.. ஆச்சரியமா இருக்கு..!' – அசோக் கெலாட் மீது காங்கிரஸ் அப்செட்?

சச்சின் பைலட் குறித்து ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்த கருத்துக்கள் குறித்து காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்து உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில், முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில், முதலமைச்சர் அசோக் கெலாட்டிற்கு அடுத்த படியாக மூத்தத் தலைவராக பார்க்கப்படுபவர் சச்சின் பைலட். இளம் தலைவரான சச்சின் பைலட்டிற்கு, இளைஞர்களின் ஆதரவு அதிகம் உள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு, தனது ஆதரவு எம்எல்ஏக்களை திரட்டிக் … Read more

ஜெயலலிதாவின் பொருட்கள் ஏலம் விடக்கோரிய மனு தள்ளுபடி

டெல்லி: ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விடக்கோரி பெங்களுர் நரசிம்மமூர்த்தி மனு அளித்துள்ளார். மனுவை  உச்ச நீதிமன்ற தகவல் பெறும் மேல்முறையீட்டு அதிகார வரம்பு ஆணையம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

இலவச மின்சாரம் பெறுவதற்கு பதில் மின்சாரத்தை விற்று வருவாய் ஈட்ட முடியும் – குஜராத் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல்

காந்திநகர்: அரசிடமிருந்து பொதுமக்கள் மின்சாரத்தை இலவசமாக பெறுவதற்கு பதில் அதிலிருந்து வருவாய் ஈட்ட முடியும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். குஜராத் சட்டப்பேரவைக்கு டிசம்பர் 1 மற்றும் 5-ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, அம்மாநிலத்தின் ஆரவள்ளி மாவட்டம் மொடசா நகரில் பாஜக சார்பில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: குஜராத் மக்கள் மின்சாரத்தை இலவசமாக பெறுவதற்கு பதில் அதிலிருந்து வருவாய் ஈட்ட முடியும். இதற்கான வழி … Read more