வாக்காளர் பெயரை நீக்கும் விவகாரம் தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி: தமிழகத்தை சேர்ந்த தேவசகாயம் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மனுவில், ‘‘எந்த விதமான முன்னறிவிப்பும் இல்லாமல் பல தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் இருந்து ஏராளமான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படுகிறது. இது கடுமையான குழப்பங்களை ஏற்படுத்துகிறது. அதனால் வாக்காளர் பட்டியலில் இருந்து குறிப்பிட்ட வாக்காளர் பெயரை நீக்குவதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட நபருக்கு இதுதொடர்பான விவரங்களை தெரிவிப்பதுடன் அவரது பதிலையும் கேட்டுப்பெற ஏதுவாக தேர்தல் ஆணையத்திற்கு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்’’ என குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் … Read more

காங்கிரஸ் தலைவரான பிறகு முதல்முறையாக தொண்டர்களை சந்தித்தார் கார்கே

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பிறகு மல்லிகார்ஜுன கார்கே முதல்முறையாக கட்சித் தொண்டர்களை நேற்று சந்தித்தார். காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தல் கடந்த அக்டோபர் 17-ம் தேதி நடைபெற்றது. மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சசி தரூர் ஆகிய இருவரும் போட்டியிட்டனர். இதில் வெற்றி பெற்ற கார்கே, 26-ம் தேதி கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி முன்னிலையில் புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக, தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட பிறகு மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களிடம் கூறும்போது, … Read more

நாடு முழுவதும் சுமார் 71,000 பேருக்கு பணி நியமன கடிதங்களை இன்று வழங்குகிறார் பிரதமர் மோடி

டெல்லி: நாடு முழுவதும் சுமார் 71,000 பேருக்கு பனி நியமன கடிதங்களை பிரதமர் மோடி இன்று வழங்குகிறார். ஒன்றிய அரசின் வேலை வாய்ப்பு கண்காட்சி இன்று நடைபெறுவதை ஒட்டி கானொலிக்காட்சி மூலம் பிரதமர் மோடி வழங்குகிறார்.  அடுத்த ஒன்றரை ஆண்டுகளில், 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்குமாறு அனைத்து ஒன்றிய அரசு துறைகளையும் பிரதமர் மோடி கடந்த ஜூன் மாதம் கேட்டுக்கொண்டார். அதைத்தொடர்ந்து, கடந்த அக்டோபர் மாதம், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 75 ஆயிரம் பேருக்கு பிரதமர் மோடி … Read more

காரணமின்றி கைது செய்வதால் நீதித் துறையின் சுமை அதிகரிக்கிறது – முன்னாள் தலைமை நீதிபதி யு.யு.லலித் கருத்து

மும்பை: மும்பை உயர் நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி கே.டி.தேசாய் நினைவு சொற்பொழிவு நேற்று நடைபெற்றது. இதில் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி யு.யு. லலித் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். அவர் பேசியதாவது: குற்றவியல் நீதி நடைமுறைகள், நாகரிக சமுதாயத்தின் முதுகெலும்பாக விளங்குகிறது. எனினும் பாரபட்சமான நடவடிக்கைகளால் அப்பாவிகள் கைது செய்யப்படுவது மிகுந்த கவலை அளிக்கிறது. இத்தகைய அணுகுமுறையை தவிர்க்க வேண்டும், தடுக்க வேண்டும். உரிய காரணமின்றி பலர் கைது செய்யப்படுவதால் நீதித் துறையின் சுமை அதிகரிக்கிறது. … Read more

பழங்குடி மக்களை வஞ்சிக்கின்றனர் வனத்தையும் விற்கின்றனர்: குஜராத்தில் பாஜ மீது ராகுல் தாக்கு

மகுவா: பழங்குடியினரின் நிலங்களை பறித்து அவற்றை தொழிலதிபர்களுக்கு பாஜ கட்சி வழங்கி உள்ளது என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொண்டு  வருகிறார். இந்த ஒற்றுமை பயணம் நேற்று முன்தினம்  மத்திய பிரதேச எல்லை  வந்தடைந்தது. அதன் பின் இரவு அங்கு ஓய்வு எடுத்த அவர் நடைபயணத்தை தற்காலிகமாக நிறுத்தி கொண்டு, குஜராத்தில் நேற்று ஒருநாள் பிரசாரம் செய்தார். சமீபத்தில் இமாச்சலில் நடந்த தேர்தலில் பிரசாரம் செய்யாத … Read more

மனைவியை துண்டு துண்டாக வெட்டி காட்டில் புதைத்த கணவன்!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷாதோல் பகுதியை சேர்ந்த ராம் பட்டேல் – சரஸ்வதி தம்பதிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. அண்மையில் ஏற்பட்ட சண்டையை தொடர்ந்து இருவரும் பேசாமல் இருந்துள்ளனர். அப்போது மனைவியின் நடத்தையில் கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து சம்பவத்தன்று ராம் பட்டேல் மனைவியை தனியாக காட்டுக்குள் அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கோடாரியை எடுத்து மனைவியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் மனைவி சம்ப இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் மனைவியின் தலை … Read more

மத்திய அரசு உணவு மானியம் ரூ.3 லட்சம் கோடியை தாண்டும்

புதுடெல்லி: நடப்பு நிதியாண்டில் மத்திய அரசின் உணவு மானியம் ரூ.3 லட்சம் கோடியைத் தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனாவின் (பிஎம்ஜிகேஏஒய்) கீழ் வழங்கப்படும் இலவச உணவு தானிய திட்டம் டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக உணவு மானியத்திற்காக மத்திய அரசு செலவிடும் தொகை கணிசமான அளவில் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த இலவச உணவு தானிய திட்டத்தால் 80 கோடி பேர் பயன்பெறுவார்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. … Read more

ஃபோர்ஸ் நிறுவனத்தின் அர்பேனியா வேன் இந்தியாவில் ஒரு மாதத்திற்குள் அறிமுகப்படுத்த இருப்பதாக அறிவிப்பு!

இந்தியாவில் ஃபோர்ஸ் நிறுவனத்தின் அர்பேனியா வேன் ஒரு மாதத்திற்குள் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற கண்காட்சியில் முதல் முறையாக அர்பேனியா வேன் காட்சிபடுத்தப்பட்டது. ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட அர்பேனியாவின் தொடர் உற்பத்தி தற்போது தொடங்கி இருப்பதாகவும், டீலர்ஷிப்களுக்கு விரைவில் அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் முதல் முறையாக இந்த வகை வாகனங்களில் ஓட்டுனர் மற்றும் ஓட்டுனருக்கு அருகில் உள்ள இருக்கையில் அமர்பவருக்கும் ஏர்பேக் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. Source link

ராகுல் மீது பிரதமர் மோடி பாய்ச்சல் மீண்டும் ஆட்சியை பிடிக்க பாதயாத்திரை

சுரேந்திரநகர்: பதவியில் இருந்து துாக்கி எறியப்பட்டது காங்கிரஸ் என்றும் மீண்டும் ஆட்சியை பிடிக்க ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டுள்ளார் என்று பிரதமர் மோடி சாடினார். குஜராத் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 1 மற்றும் 5ம் தேதிகளில் நடக்கிறது. இதையொட்டி பிரதமர் மோடி சுரேந்திர நகரில் நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: தேர்தலில் வளர்ச்சி குறித்து காங்கிரசார் பேசுவது இல்லை. அதற்குபதில் தேர்தலில் மோடியின் தகுதியை காட்டுவோம் என்று கூறுகின்றனர். இது அவர்களுடைய ஆணவத்தை … Read more

புஷ்பா பட பாணியில் செம்மரக் கட்டைகளை கடத்தல்… 9 தமிழர்கள் கைது!!

ஆந்திர மாநிலம் தமிழ்நாடு எல்லையை ஒட்டியுள்ள அன்னமையா மாவட்டம் சுண்டுப்பள்ளியில் இருந்து வி.கோட்டா வழியாக டாடா சுமோ வாகனத்தில் செம்மர கட்டைகளை கடத்திச் சென்றதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 கூலித் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக பலமநேரி டிஎஸ்பி சுதாகர் ரெட்டி தெரிவித்துள்ளார். மாவட்ட எஸ்பி ரிஷாந்த் ரெட்டி உத்தரவின் பேரில், வி.கோட்டா எஸ்.எஸ்.ராம்புபால் தலைமையிலான போலீசார், தனமய்யகரிபள்ளில் சோதனை நடத்திக் கொண்டிருந்தபோது, வாகனத்தை நிறுத்திவிட்டு ஓட்டுநர் தப்பியோடியதாகவும், பின்னர் 9 பேரை பிடித்து விசாரித்தபோது, அவர்கள் சட்டவிரோதமாக … Read more