உயர்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழக்கில் நாளை தீர்ப்பு

புதுடெல்லி: உயர் பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு அளிக்கிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் பிரிவினருக்கு ஒன்றிய அரசு கல்வி நிலையங்கள், வேலை வாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீட்டை பிரதமர் மோடி வழங்கினார். இதை எதிர்த்து பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதில், திமுகவும் ஒரு மனுதாரராக உள்ளது. இந்த வழக்கை விசாரித்து வரும் உச்ச நீதிமன்றம், இந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குவதாக அறிவித்துள்ளது. … Read more

டெல்லியில் புதிய கலால் கொள்கை முறைகேடு துணை முதல்வரின் உதவியாளர் கைது: அமலாக்கத்துறை அதிரடி

புதுடெல்லி: புதிய கலால் கொள்கை முறைகேடு தொடர்பாக டெல்லி முதல்வர் சிசோடியாவின் உதவியாளரை அமலாக்கத்துறை கைது செய்து உள்ளது. டெல்லியில் நடைமுறைபடுத்தப்பட்டு திரும்ப பெறப்பட்ட புதிய கலால் கொள்கை முறைகேடு தொடர்பாக துணை முதல்வர் சிசோடிய உள்ளிட்ட 14 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணபரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதுதொடர்பாக துணை முதல்வர் சிசோடியா வீடு, வங்கி லாக்கர் உள்ளிட்ட … Read more

கெஜ்ரிவால் என்னிடம் ரூ.500 கோடி கேட்டார்: சுகேஷ் சந்திரசேகர் பரபரப்பு குற்றச்சாட்டு

புதுடெல்லி: ஆம் ஆத்மிக்கு தேர்தல் நிதிக்காக ரூ.500 கோடி திரட்ட கூறியதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது சுகேஷ் சந்திரசேகர் குற்றம்சாட்டி உள்ளார். பெங்ளூருவை சேர்ந்த மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் மீது பல்வேறு மோசடி புகார்கள் உள்ளன. தற்போது டெல்லி மண்டோலி சிறையில் உள்ளார். இவர் டெல்லி துணைநிலை ஆளுனர் சக்சேனாவுக்கு கடிதம் எழுதினார். அதில், ஆம் ஆத்மியின் சார்பில் மாநிலங்களவை எம்பி பதவி பெறுவதற்காக நான் பல கோடி ரூபாய் கொடுத்துள்ளேன்,’என்று குறிப்பிட்டிருந்தார். … Read more

மாணவர் விஷம் கொடுத்து கொலை போலீஸ் சீல் வைத்த மாணவியின் வீட்டு பூட்டு உடைப்பு: ஆதாரங்களை அழிக்க முயற்சியா?

திருவனந்தபுரம்: கல்லூரி மாணவரை விஷம் கொடுத்து கொன்ற மாணவி கிரீஷ்மாவின் வீட்டுக்கு போலீசார் சீல் வைத்திருந்த நிலையில், பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், நெய்யூர்  கல்லூரி மாணவர் ஷாரோன் கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கொல்லப்பட்ட சம்பவத்தில், அவரது காதலி கிரீஷ்மா, தாய் சிந்து மற்றும் மாமா நிர்மல்குமார் ஆகியோர் தற்போது கேரள போலீஸ் காவலில் உள்ளனர். சிந்து, நிர்மல் குமாருக்கு 5 நாள் போலீஸ் காவலும், கிரீஷ்மாவுக்கு 7 நாள் … Read more

வாழ்க்கையில் 34 முறை ஓட்டு போட்டவர் நாட்டின் முதல் வாக்காளர் மரணம்: பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல்

சிம்லா: இந்தியாவின் முதல் வாக்காளர் ஷியாம் சரண் நேகி நேற்று காலமானர். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, இமாச்சல் முதல்வர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இமாச்சலப் பிரதேசம் மாநிலம், கின்னூரை சேர்ந்தவர் ஷியாம் சரண் நேகி (106). இவர் இந்தியாவின் முதல் வாக்காளர் என்ற பெருமைக்குரியவர். இதுவரை 34 முறை தபால் வாக்கு மூலம் வாக்காளித்துள்ளார். தேர்தல் ஆணையத்தின் விளம்பர பிரதிநிதியாக இருந்துள்ளார். கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நேகி நேற்று காலமானார். … Read more

பைக் மீது மோதி சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் சாலையில் இழுத்துச்சென்ற கார்..!

உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத் அருகே, பைக் மீது  கார் மோதி சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் சாலையில் அதனை இழுத்துச்சென்ற கார் ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். இந்திராபுரம் பகுதியில், இருசக்கர வாகன ஓட்டி மீது கார் மோதியதில், கீழே விழுந்த நபர் கார் ஓட்டுநரை கீழே இறங்க கூறியுள்ளார். ஆனால் கீழே இறங்காத ஓட்டுநர், கார் முன்புறம் சிக்கிய பைக்குடன் காரை வேகமாக செலுத்தியுள்ளார். இதனால் சாலையில் நெருப்பு பொறி பறந்த நிலையில், பின்னே இருசக்கர … Read more

139 தொகுதியில் வெற்றி பெற்று குஜராத்தில் மீண்டும் பாஜ ஆட்சி அமைக்கும்: கருத்துக்கணிப்பில் பரபரப்பு தகவல்

அகமதாபாத்: குஜராத் தேர்தலில் 139 சீட்களுடன் அமோக வெற்றி பெற்று மீண்டும் பாஜ ஆட்சி அமைக்கும் என கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. குஜராத்தில் கடந்த 27 ஆண்டுகளாக பாஜ ஆட்சி நடைபெற்று வருகிறது. வரும் டிசம்பர் 1 மற்றும் 5ம் தேதிகளில் அம்மாநிலத்தில் 2 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பாஜவை எதிர்த்து காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் போட்டியிடுகின்றன. இதனால் மும்முனை போட்டி உருவாகி உள்ளது. பாஜ ஆட்சி மீது குஜராத் மக்கள் அதிருப்தி … Read more

தகுதியானவர் நீதிபதியாக வேண்டும் கொலிஜியத்திற்கு தெரிந்தவர் அல்ல: ஒன்றிய சட்ட அமைச்சர் மீண்டும் சர்ச்சை

மும்பை: ‘நீதிபதியாக தகுதியான நபர்களே நியமிக்கப்பட வேண்டும். கொலிஜியத்திற்கு தெரிந்தவர்கள் அல்ல’ என ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு மீண்டும் கொலிஜியம் முறையை எதிர்த்து பேசி உள்ளார். நாடு முழுவதும் தற்போது நீதிபதிகள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான 5 மூத்த நீதிபதிகளை கொண்ட கொலிஜியம் அமைப்பு தேர்வு செய்து அரசுக்கு பரிந்துரைக்கிறது. அவர்களையே அரசு நீதிபதிகளாக நியமிக்க வேண்டும். இந்த நடைமுறையை ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு பொது வெளியில் வெளிப்படையாக … Read more

அதிவேகத்தில் வைரஸ்.. அரசு அதிரடி; பீதியில் உறைந்த மக்கள்!

பருவமழை தொடங்கி உள்ள நிலையில் ‘புளூ காய்ச்சல்’ வைரஸ் வேகமாக பரவி வருகிறது. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரையில் அனைவரும், இதனால் பாதிக்கப்படுகின்றனர். இந்த காய்ச்சல் சுமார் 6 நாட்கள் வரை இருக்கும். உரிய சிகிச்சை மூலம் இதிலிருந்து மீளலாம். குழந்தை பருவத்தில் உடல் உறுப்புக்கள் வளர்ச்சி அடையும். மேலும் பெரியவர்களை காட்டிலும் குழந்தைகளுக்கு தான் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். எனவே குழந்தைகளுக்கு காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக டாக்டரை அணுக வேண்டும் என, … Read more

மத்திய பிரதேசத்தில் தகவல் சட்டத்தில் பெறப்பட்ட 8,500 பக்க ஆவணங்களை மாட்டு வண்டியில் எடுத்து சென்ற ஆர்வலர்

சிவ்புரி: மத்திய பிரதேசத்தில் சுமார் 8,500 பக்க ஆவணங்களை மாட்டு வண்டியில் தகவல் ஆர்வலர் ஒருவர் எடுத்து செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது. மத்திய பிரதேச மாநிலம் சிவ்புரி மாவட்டம் பைராட் நகரை சேர்ந்த மஹ்கான் தாகத் என்ற சமூக ஆர்வலர்,  கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அவரது பஞ்சாயத்தில் நடைபெற்ற திட்டங்கள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்து  இருந்தார். அவருக்கான பதிலை உரிய காலத்தில் பஞ்சாயத்து நிர்வாகம் அளிக்க வில்லை. அதனால் … Read more