மனைவி புகாரில் மபி காங். எம்எல்ஏ மீது பலாத்கார வழக்குபதிவு

போபால்: மத்தியப்பிரதேச மாநிலம், தார் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் காங்கிரஸ் எம்எல்ஏ உமாங் சிங்ஹார். இவர் இயற்கைக்கு மாறான உறவு கொள்ள வற்புறுத்துவதாகவும், குடும்ப வன்முறையில் ஈடுபடுவதாகவும் அவரது மனைவி போலீசில் புகார் கூறி உள்ளார். மேலும், கள்ளக்காதலி சோனாலி பரத்வாஜ் என்பவரின் தற்கொலையிலும் எம்எல்ஏவுக்கு தொடர்பிருப்பதாக  நவ்கான் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகார் தொடர்பாக போலீசார் பலாத்கார வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள எம்எல்ஏ உமாங் சிங்ஹார், … Read more

விமான பயணிகளுக்கு ஏர் சுவிதா படிவம் இனி தேவையில்லை

புதுடெல்லி: வெளிநாட்டில் இருந்து இந்தியா வரும் விமான பயணிகள் இனி ஏர் சுவிதா படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டிய அவசியமில்லை என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து, வெளிநாட்டில் இருந்து வரும் அனைத்து பயணிகளும் கொரோனா தடுப்பூசி செலுத்தியது மற்றும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டதற்கான சுய அறிவிப்பு படிவமான ‘ஏர் சுவிதா’ தளத்தில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து வழங்குதல் கட்டாயமாக்கப்பட்டது. இந்த படிவத்தில் நிரப்பும் அனைத்து … Read more

கடந்த 60 ஆண்டுகளுக்கு பிறகு காவிரியிலிருந்து தமிழகத்துக்கு 600 டிஎம்சி தண்ணீர் திறப்பு

பெங்களூரு: கர்நாடகா-தமிழகம் இடையிலான காவிரி நதி நீர் பங்கீட்டு பிரச்னையில் காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பில் அடிப்படையில் கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும். கடந்த ஒரு மாத காலத்தில் 193 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு திறக்கப்பட்டுள்ளதாகவும் அதன் மூலம் இவ்வாண்டு ஜூன் தொடங்கி நவம்பர் வரை 600 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 60 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக 6 மாதங்களில் … Read more

அடித்து சித்ரவதை, உயிருக்கு ஆபத்து: மண்டோலி சிறையில் இருந்து மாற்றுங்கள்

புதுடெல்லி: மண்டோலி சிறையில் தன்னை அடித்து சித்ரவதை செய்வதாலும், உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாலும் வேறு சிறைக்கு மாற்றக் கோரி மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் தாக்கல் செய்த மனு மீது ஒன்றிய அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இரட்டை இலை சின்னம் பெற்றுத்தர லஞ்சம் கொடுக்க முயன்றது உள்ளிட்ட பல்வேறு மோசடிகளில் சிக்கியவன் சுகேஷ் சந்திரசேகரன். டெல்லி திகார் சிறையில் சொகுசாக இருந்து வந்த இவன், சிறை அதிகாரிகள் தன்னிடம் அதிகளவு லஞ்சம் கேட்பாக … Read more

 ‘இது தமிழகம் அல்ல’ என்று கத்தியவாறு கேரள தலைமை நீதிபதியை தாக்க வந்த டிரைவர் கைது: கேரளாவில் பரபரப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சியில் நேற்று இரவு சென்னையைச் சேர்ந்த கேரள ஐகோர்ட் தலைமை நீதிபதி மணிக்குமாரின் காரை தடுத்து நிறுத்தி வாலிபர் தாக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரள ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருப்பவர் மணிக்குமார். சென்னையை சேர்ந்தவர். கடந்த 3 வருடங்களுக்கு முன்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 11 மணி அளவில் கொச்சி விமான நிலையத்தில் இருந்து தனது வீட்டுக்கு காரில் சென்று கொண்டு இருந்தார். … Read more

வேறொருவரை திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரம்; காதலியின் கழுத்தை அறுத்து குளத்தில் வீசியெறிந்த காதலன்: துப்பாக்கிச் சூடு நடத்தி கொலையாளியை பிடித்த உ.பி போலீஸ்

அசம்கர்: உத்தரபிரதேசத்தை சேர்ந்த தனது காதலி வேறொருவரை திருமணம் செய்து கொண்டதால் அவரது தலையை துண்டித்து குளத்தில் வீசிய காதலனை போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி கைது செய்தனர். உத்தரபிரதேச மாநிலம் அசம்கர் மாவட்டம் கவுரி கா புரா என்ற கிராமத்தில் கடந்த 6 நாட்களுக்கு முன்பு பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. அந்த சடலம் பல துண்டுகளாக வெட்டப்பட்ட நிலையிலும், பெண்ணின் துண்டிக்கப்பட்ட தலை அதேபகுதியில் இருந்த கிணற்றிலும் வீசப்பட்டு இருந்தது. இந்த கொலைச் சம்பவம் … Read more

பாஜக எம்எல்ஏவுக்கு தர்ம அடி – சட்டையை கிழித்த பொது மக்கள்!

யானைகளுக்கும் மனிதர்களுக்கு இடையேயான மோதல்கள் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. யானைகள் சராசரியாக 250 கிலோ அளவிலான உணவை உட்கொள்கிறது. யானை தனக்காக தயார் செய்யும் உணவில் பெரும் பகுதியை அப்படியே விட்டுச் செல்கிறது. அவை சிறிய விலங்குகளுக்கு உணவாகப் பயன்படுகிறது. வன உணவுச் சங்கிலியில் யானையில் பங்கு முக்கியமானது. யானைகள் பயன்படுத்தாத காடுகளில் மனிதனால் நுழைய முடியாது. உணவிற்காகவும் காலநிலையைப் பொறுத்தும் யானைகள் ஒரு வனப்பகுதியிலிருந்து வேறு ஒரு வனப்பகுதிக்குச் செல்கின்றன. யானைகளின் வாழ்விடம் என்பது ஒரே … Read more

11 எம்.எல்.ஏக்களை அதிரடியாக சஸ்பெண்ட் செய்த டெல்லி பாஜக

நியூடெல்லி: டெல்லி மாநகராட்சி தேர்தலுக்கு முன்னதாக, அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 11 பேரை பாரதிய ஜனதா கட்சி சஸ்பெண்ட் செய்துள்ளது. இந்த 11 எம்.எல்.ஏக்களும் வெவ்வேறு தொகுதிகளில் போட்டியிடுகின்றனர், மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் இந்த எம்.எல்.ஏக்களினால் கட்சிக்கு பாதகம் வரும் என்று பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில், இன்று பாரதிய ஜனதா கட்சி திடீரென முடிவெடுத்துள்ளது.   இது தொடர்பாக ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது. Delhi BJP suspends 11 rebel candidates from the party for 6 … Read more

கொச்சியில் இருந்து வீட்டுக்கு காரில் சென்றபோது கேரள தலைமை நீதிபதியை தாக்க முயற்சி: லாரி டிரைவரிடம் தீவிர விசாரணை

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சியில் நேற்றிரவு சென்னையை சேர்ந்த கேரள ஐகோர்ட் தலைமை நீதிபதி மணிக்குமாரின் காரை, ஒரு வாலிபர் தடுத்து நிறுத்தி தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரள ஐகோர்ட் தலைமை நீதிபதி மணிக்குமார். சென்னையை சேர்ந்தவர். கடந்த 3 வருடங்களுக்கு முன்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். நேற்றிரவு 11 மணியளவில் கொச்சி விமான நிலையத்தில் இருந்து, தனது வீட்டுக்கு காரில் புறப்பட்டார். அப்போது சேராநல்லூர் என்ற பகுதியில் இருந்து ஒருவர், தலைமை நீதிபதியின் … Read more

பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டவர்கள் மீண்டும் பதவிக்காக நடைபயணம்.. ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையை, மறைமுகமாக விமர்சித்த பிரதமர் மோடி

பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டவர்கள் மீண்டும் பதவிக்காக நடைபயணம் மேற்கொள்வதாக, ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையை, பிரதமர் மோடி மறைமுகமாக விமர்சித்தார். குஜராத் சட்டமன்ற தேர்தலையொட்டி சுரேந்திர நகரில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அதில் உரையாற்றிய அவர், பாதயாத்திரையாக செல்பவர்களையும், நர்மதா திட்டத்திற்கு எதிராக செயல்பட்டவர்களையும், இந்த தேர்தலில் மக்கள் தண்டிப்பார்கள் என்றார். நாட்டின் மொத்த உப்பு உற்பத்தியில் 80 சதவீதம் குஜராத்தின் பங்களிப்பு உள்ளதாகவும், அந்த உப்பை உட்கொண்டு சிலர், மாநிலத்திற்கே … Read more