விமான பயணத்தின் போது முகக்கவசம் கட்டாயமல்ல – மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: கரோனா பாதிப்பு குறைந்து வருவதால் விமான பயணத்தின்போது முகக்கவசம் அணிவது கட்டாயமல்ல என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வருகிறது. நேற்று காலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 501 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நாடு முழுவதும் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7,561 ஆக குறைந்துள்ளது. இது ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தோரில் 0.02 சதவீதம் ஆகும். குணமடைந்தோர் விகிதம் … Read more

விமானத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை: ஒன்றிய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அனைவரும் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. இதை அணியாதவர்களுக்கு அபராதமும் வசூலிக்கப்பட்டு வந்தது. கொரோனா தடுப்பூசி மற்றும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் காரணமாக தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால், கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் பெருமளவு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்களும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர். விமான பயணத்தின்போது முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், விமான பயணத்தின்போது முக கவசம் அணிவது … Read more

ரவுடிகள் மூலம் மிரட்டி மதமாற்றம் பாதிரியார்கள் உட்பட 15 பேரிடம் விசாரணை

ஹூப்பள்ளி: கர்நாடகாவில் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினராக ஷிக்காலிகர்கள் உள்ளனர். இந்த பிரிவை சேர்ந்த ஒரு தம்பதிக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது. கணவனை கிறிஸ்தவ மதத்துக்கு மாறும்படி மனைவி கட்டாயப்படுத்தி உள்ளார். இதற்கு ஒப்புக்கொள்ளாத கணவன், ஷிக்காலிகர் வகுப்பு தலைவர்களிடம் சென்று முறையிட்டார். இதையடுத்து, அந்த வகுப்பு தலைவர்கள் ஹூப்பள்ளி போலீஸ் நிலையம் சென்று, ‘ஷிக்காலிகர் வகுப்பை சேர்ந்தவர்களை கிறிஸ்தவ அமைப்பினர் கட்டாய மதமாற்றம் செய்கிறார்கள்.,’ என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். புகார் அளித்த சம்பத் என்பவர் கூறுகையில், ‘சில பாஸ்டர்கள் … Read more

குஜராத் தேர்தல் | "கட்சியில் இருந்தே நிறைய நெருக்கடி" – கடத்தப்பட்டதாக சொல்லப்பட்ட ஆம் ஆத்மி வேட்பாளர்

அகமதாபாத்: குஜராத் மாநில சூரத் கிழக்கு தொகுதி ஆம் ஆத்மி வேட்பாளர் கடத்தப்பட்டு, பின்னர் மிரட்டப்பட்டு தனது வேட்புமனுவை வாபஸ் பெறவைக்கப்பட்டதாக சொல்லப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பமாக அந்த வேட்பாளர் சொந்தக் கட்சியையே விமர்சித்துள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் சூரத் கிழக்கு தொகுதி வேட்பாளர் கஞ்சன் ஜரிவாலா திடீரென மாயமானார். நேற்று மாலை அவர் கடத்தப்பட்டதாக வழக்கு பதிவானது. அவர் போலீஸார் புடைசூழ தேர்தல் அலுவலகத்திற்கு வந்து மனுவை வாபஸ் வாங்கியது தெரியவந்தது. இது தொடர்பான வீடியோவை … Read more

வங்கியில் ரூ. 750 கோடி மோசடி ரோட்டோமேக் பேனா நிறுவனம் மீது வழக்கு

புதுடெல்லி: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ.750 கோடி மோசடி  தொடர்பாக ரோட்டோமேக் குளோபல் நிறுவனம் மீது சிபிஐ வழக்கு பதிந்துள்ளது.கான்பூரை தலைமையிடமாக கொண்டு ரோட்டோமேக் குளோபல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. பேனாக்களை உற்பத்தி செய்யும் ரோட்டோமேக் குழும நிறுவனங்களின் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஏற்கனவே பல்வேறு வழக்குகளை பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்நிலையில், ஐஓபி வங்கி அளித்துள்ள புகாரின் அடிப்படையில், ரோட்டோமேக் குளோபல் நிறுவனத்தின் இயக்குனர்களான சாதனா கோத்தாரி மற்றும் ராகுல் கோத்தாரி மீது  … Read more

மண்டல கால பூஜை சபரிமலை கோயில் நடை திறப்பு: பாதுகாப்புக்கு 1,250 போலீசார் குவிப்பு

திருவனந்தபுரம்: சபரிமலையில் மண்டல கால பூஜைக்காக நேற்று மாலை சரண கோஷம் முழங்க கோயில் நடை திறக்கப்பட்டது.  சபரிமலையில் 2 வருட இடைவெளிக்குப் பின்னர் கொரோனா கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாத ஒரு மண்டல காலம் இன்று முதல் தொடங்குகிறது.  இதற்காக நேற்று மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறந்து ஐயப்பனுக்கு தீபாராதனை நடத்தினார். வேறு எந்த பூஜைகளும் நேற்று நடைபெறவில்லை. இரவு 7 … Read more

டெல்லி தேர்தலில் போட்டியிட லஞ்சம் எம்எல்ஏ.வின் உறவினர், உதவியாளர்கள் கைது: ரூ. 33 லட்சத்துடன் பிடிபட்டனர்

புதுடெல்லி: மாநகராட்சி தேர்தலில் போட்டியிட கட்சி தொண்டரிடம் லஞ்சம் பெற்ற வழக்கில் ஆம் ஆத்மி எம் எல் ஏவின் உறவினர் மற்றும் உதவியாளர்கள் 2 பேரை லஞ்ச ஒழிப்புதுறை கைது செய்துள்ளது. டெல்லியில் 2014 ம் ஆண்டு முதல் ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினராக இருந்து வருபவர் கோபால் காரி. இவர் லஞ்ச ஒழிப்பு துறையில் ஒரு புகார் மனுவை கடந்த சில நாட்களுக்கு முன்பு அளித்தார். அதில்  கமலா நகரில் உள்ள வார்டு எண் 69ல் … Read more

ஜெயலலிதா செருப்பு ஏலம் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

புதுடெல்லி: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்களை ஏலம் விடக் கோரிய வழக்கில், உச்ச நீதிமன்ற தகவல் பெறும் மேல்முறையீட்டு அதிகார வரம்பு ஆணையம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது. மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கை விசாரித்த பெங்களூரு தனி நீதிமன்றம். 4 பேருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை கர்நாடகா உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இதை எதிர்த்து … Read more

தென்பெண்ணை நீர் பங்கீடு 4 வாரத்தில் நடுவர் மன்றம்: உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு உறுதி

புதுடெல்லி: தென்பெண்ணையாறு நீர்பங்கீடு விவகாரத்தில் அடுத்த 4 வாரத்தில் நடுவர் மன்றம் அமைக்கப்படும் என உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் பாயும் காவிரி ஆற்றின் கிளை நதியாக தென்பெண்ணையாறு உள்ளது. இதன் கிளை நதியாக உள்ள மார்கண்டேய நதியின் குறுக்கே யர்கோல் என்ற இடத்தில் கர்நாடக அரசு புதியதாக தடுப்பணை கட்ட முயன்று வருகிறது. இதை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அணை கட்ட அனுமதி வழங்கியது. இதனால், … Read more

நாட்டின் முதலாவது தனியார் ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது விக்ரம்

புதுடெல்லி: நாட்டின் முதலாவது தனியார் ராக்கெட்டான விக்ரம்- எஸ் நாளை விண்ணில் ஏவப்படுகிறது. இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) விண்வெளி துறையில் பல சாதனைகளை புரிந்து வருகிறது.  விண்வெளித்துறையில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் முன்னணியில் உள்ளன. இந்த நாடுகளுக்கு இணையாக விண்வெளி துறையில் வளர்ச்சி அடைய இந்தியாவில் தனியார் துறையின் பங்களிப்பு முக்கியம். நாட்டில் பல தனியார் நிறுவனங்கள்  விண்வெளி துறையில் இறங்கி உள்ளன. அதில் ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் என்ற ஸ்டார்ட் அப் … Read more