ஒன்பது பேர் அடுத்தடுத்து பலி… அதிர்ச்சியில் உறைந்திருக்கும் மும்பை… காரணம் இதுதான்!

கடந்த 2020, 2021 ஆகிய இரு ஆண்டுகளில் ஒட்டுமொத்த உலகையும் கொரோனா வைரஸ் வாட்டி வதைத்து வந்தது. இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் பல்லாயிரகணக்கான உயிர்கள் கொரோனாவுக்கு பலியாகின. பொது முடக்கம், தடுப்பூசி என தொடர் நடவடிக்கைகள் மூலம் உலக அளவில் தற்போது கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அப்பாடா… கொரோனா அலை ஒரு வழியாக ஓய்ந்தது என உலக மக்கள் நிம்மதி அடைந்திருந்த நிலையில், ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில்பரவிய குரங்கு அம்மை அந்நாட்டு … Read more

நிலக்கரி திருட முயன்ற கும்பலுக்கும், மத்திய தொழில்துறை பாதுகாப்பு படைக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூடு..!

ஜார்கண்டில், நிலக்கரி திருட முயன்ற கும்பலுக்கும், மத்திய தொழில்துறை பாதுகாப்பு படைக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். தன்பத் மாவட்டத்திலுள்ள Denidih பகுதியில் இருந்து நிலக்கரி கடத்த முயற்சித்த கும்பலை, பாதுகாப்பு பணியில் இருந்த வீரர்கள் தடுத்துள்ளனர். பாதுகாப்பு படை வீரர்கள் மீது அந்த கும்பல் துப்பாக்கிச்சூடு நடத்திய நிலையில், வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் நால்வர் உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமடைந்தனர். Source link

சிறையில் அமைச்சருக்கு மசாஜ் விவகாரம்: அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் நோட்டீஸ்.! நாளைக்குள் பதிலளிக்க உத்தரவு

புதுடெல்லி: டெல்லி திகார் சிறையில் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு மசாஜ் செய்யும் சம்பவம் தொடர்பாக அமலாக்கத்துறை நாளைக்குள் பதிலளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பணமோசடி வழக்கில் கைதாகி டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ெடல்லி ஆம்ஆத்மி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினின் மசாஜ் வீடியோ நேற்று வெளியானது. அந்த வீடியோவில் சத்யேந்தர் ஜெயினுக்கு திகார் சிறையில் சிலர் மசாஜ் செய்கின்றனர். அவரது கால்களிலும்,  தலையிலும் வலி நிவாரணிகளை தடவி விடுகின்றனர். இந்த வீடியோ விவகாரம் பெரும் … Read more

உத்தரபிரதேச பெண் கான்ஸ்டபிளுடனான கள்ளக்காதல் அம்பலமானதால் போலீஸ் எஸ்ஐ தற்கொலை

கான்பூர்: உத்தரபிரதேச பெண் கான்ஸ்டபிளுடனான கள்ளக்காதல் விவகாரம் அம்பலமானதால் ரவுடியை சுட்டுக் கொன்ற பிரபலமான போலீஸ் எஸ்ஐ தற்கொலை செய்து கொண்டார். உத்தரபிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த பிரபல ரவுடி விகாஸ் துபேவை என்கவுன்டர் செய்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அனூப் சிங் கடந்த 10ம் தேதி விஷம் குடித்தார். தொடர்ந்து, அவர்  ரீஜென்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த 14ம் தேதி இறந்தார். இவ்விவகாரம் தொடர்பாக தற்கொலை செய்து கொண்ட அனூப் சிங்கின் மனைவி … Read more

புற்றுநோயிலிருந்து மீண்ட 24 வயது இளம் நடிகை மாரடைப்பால் மரணம் – சோகத்தில் திரையுலகம்

புற்றுநோயிலிருந்து மீண்டு வந்த பிரபல பெங்காலி நடிகை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. பிரபல பெங்காலி நடிகை ஆண்ட்ரிலா சர்மா, கடந்த 20 நாட்களாக  மேற்கு வங்கம் மாநிலம் ஹவுராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்றிரவு அவருக்கு பலமுறை மாரடைப்பு ஏற்பட்டு பின்னர் சிபிஆர் கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த சிகிச்சை பலனளிக்காததால் நடிகை ஆண்ட்ரிலா சர்மா இன்று மதியம் உயிரிழந்தார். நடிகை … Read more

இன்னும் 10 நாட்கள் தான்… திடீர்னு 7 பேரை கெட் அவுட் பண்ண பாஜக- என்ன நடக்கிறது குஜராத்தில்?

வரும் டிசம்பர் 1, 5 என இரண்டு கட்டங்களாக குஜராத் மாநில சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8ஆம் தேதி நடத்தப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 92 இடங்களை கைப்பற்றும் கட்சியே பெரும்பான்மை பெற்று ஆட்சிக் கட்டிலில் அமரும். சுமார் 27 ஆண்டுகளாக பாஜகவின் கோட்டையாக குஜராத் மாநிலம் திகழ்ந்து வருகிறது. தொடர்ந்து 7வது முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர அக்கட்சி முனைப்பு காட்டி கொண்டிருக்கிறது. இம்முறை அதை … Read more

Isha Ambani Baby: அம்பானி குடும்பத்திற்கு வந்தாச்சு புதிய 'வாரிசு'.. இரட்டை குழந்தைகளுக்கு தாயான இஷா அம்பானி!

உலகின் பெரும் கோடீஸ்வரரும், தொழிலதிபருமான முகேஷ் அம்பானி – நிதா அம்பானி தம்பதிக்கு, ஆகாஷ், இஷா, ஆனந்த் என்று மூன்று பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், அம்பானியின் மகள் இஷா, அவரது கணவர் ஆனந்த் பிரமல் ஆகியோர் நேற்று (நவ. 19) இரட்டை குழந்தைகளால் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளனர்.  இதுகுறித்து அம்பானி குடும்பத்தார் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,”எங்கள் மகள் – மருமகன், இஷா – ஆனந்த் தம்பதியர் நேற்று இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்து, எல்லாம் வல்ல இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளனர்.  இஷா, பெண் … Read more

மங்களூரில் ஆட்டோ வெடி விபத்தில் கோவைக்கும் தொடர்பு – கர்நாடக டிஜிபி தகவல்..!

மங்களூருவில் ஆட்டோவில் வெடி விபத்து ஏற்பட்ட நிகழ்வோடு கோவைக்கும் தொடர்பு இருப்பதாக கர்நாடக டி.ஜி.பி. பிரவீன் சூட்  தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், சம்பவம் தொடர்பாக சந்தேகிக்கப்படும் நபர் கர்நாடகாவை சேர்ந்தவர் என்றும், கடந்த சில மாதங்களில் கோவை மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளுக்கு அவர் பயணித்ததாகவும் கூறினார். இதனிடையே, அந்நபர் கோவையில் போலியான விவரங்கள் வழங்கி சிம் கார்டு வாங்கியுள்ளதாகவும், அவர் தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்ததை அவரது … Read more

சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 4 நாட்களில் சுமார் 2 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம்

கேரளா: சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 4 நாட்களில் சுமார் 2 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்திருக்கும் நிலையில் விடுமுறை நாளான இன்றும் சுமார் 67 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து தரிசனத்திற்காக காத்திருக்கின்றனர்.   சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 16ம் தேதி மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மாலை அணிந்து இருமுடி கட்டி வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சரணம் கோஷங்கள் … Read more

'எல்லா வாக்குச்சாவடியிலும் பாஜக வெற்றியே எனது இலக்கு' – பிரதமர் மோடி பிரச்சாரம்

வெராவல்: பாஜக அனைத்து வாக்குச்சாவடியிலும் வெற்றி பெறுவதே குஜராத் தேர்தலில் எனது இலக்கு என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி சோம்நாத் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் நரேநந்திர மோடி வெராவல் தொகுதி மக்கள் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பாஜகவுக்கு வெற்றியைத் தர வேண்டும் என்று கோரினார். குஜராத் சட்டப்பேரவைக்கு வரும் டிசம்பர் 1 மற்றும் 5 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அவ்வப்போது … Read more