காசி தமிழ் சங்கமம்: வேட்டி, சட்டை அணிந்து பிரதமர் மோடி பங்கேற்பு!

தமிழகத்துக்கும், உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசிக்கும் (காசி) இடையே நீண்டகால தொடர்பு உள்ளது. இந்த தொடர்பை வலுப்படுத்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக வாரணாசியில் ஒரு மாத காலம் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. காசி தமிழ் சங்கமம் என்ற பெயரில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிகள் நவம்பர் 11ஆம் தேதி (இன்று) முதல் டிசம்பர் 16ஆம் தேதி வரை ஒருமாத காலம் நடைபெறவுள்ளது. சென்னை ஐ.ஐ.டி. மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் இந்த சங்கமத்தில் … Read more

காசியை போன்று தமிழ்நாடும் மகத்தான பழமையும் பெருமையும் வாய்ந்தது: பிரதமர் மோடி

காசி: பல வேற்றுமைகளை கொண்டுள்ள சிறப்பான நாடான இந்தியாவை கொண்டாடவே இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. காசியை போன்று தமிழ்நாடும் மகத்தான பழமையும் பெருமையும் வாய்ந்தது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்துள்ள தமிழர்களை வரவேற்கிறேன் என்று பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார்.

டெல்லியில் தொடங்கியது பனிக்காலம் – இன்று காலை 9℃ ஆக வெப்பநிலை பதிவு

டெல்லியில் குளிர் காலம் தொடங்கிய நிலையில் இன்று காலை 9℃ ஆக வெப்பநிலை பதிவாகியுள்ளது. டெல்லியில் பொதுவாக அக்டோபர் மாதம் வெயிலின் தாக்கம் குறைந்து நவம்பர் மாதங்களில் குளிர்காலம் உச்சத்துக்கு செல்ல தொடங்கும் கடந்த சில வாரங்களாகவே வெப்பநிலை குறைந்து வந்த நிலையில்  இன்று டெல்லியில்  9℃ ஆக வெப்பநிலை பதிவாகியுள்ளது.  வழக்கமாக டிசம்பர்-பிப்ரவரி முதல் வரை கடும் குளிர் நீடிக்கும் நிலையில், இந்த ஆண்டு நவம்பர் மாதத்திலே குளிர் அதிகரித்து காணப்படுகிறது. இது இந்த பருவத்திற்கான … Read more

மக்கள் தொகையை கட்டுப்படுத்த 2 குழந்தைகள் திட்டத்தை அமல்படுத்த கோரிய மனு நிராகரிப்பு

புதுடெல்லி: நாட்டின் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த 2 குழந்தைகள் திட்டத்தைக் கொண்டு வரக் கோரும் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதுதொடர்பாக டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வனி குமார் உபாத்யாயா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.கே.கவுல், ஏ.எஸ்.ஓகா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கறிஞர் அஸ்வனி குமார் கூறியதாவது: நாட்டில் மக்கள் தொகை பிரச்சினை ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது. இதைத் … Read more

திகார் சிறையில் சத்யேந்திர ஜெயினுக்கு சகல வசதிகள்? – மணீஷ் சிசோடியா விளக்கம்!

டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு, உடல்நிலை சரியில்லாத காரணமாகவே பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டதாக டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா விளக்கம் அளித்துள்ளார். டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது தலைமையிலான அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சராக இருப்பவர் சத்யேந்திர ஜெயின். இந்நிலையில், இவர் மற்றும் குடும்பத்தினர் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒன்றரை கோடி ரூபாய் பண மோசடி செய்ததாக சிபிஐ வழக்குப் … Read more

சிறையா? வீட்டு அறையா? திகார் சிறையில் ஆம் ஆத்மி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினின் சொகுசு வாழ்க்கை.. வெளியான சிசிடிவி காட்சிகள்

டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு சிறையில் ஒருவர் மசாஜ் செய்யும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சத்யேந்தர் ஜெயின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறைக்குள் அவர் மெத்தையில் சொகுசாக படுத்திருப்பதும், அவருக்கு ஒருவர் மசாஜ் செய்வது போன்ற காட்சிகளும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.

திகார் சிறையில் அமைச்சர் சத்யேந்திரஜெயினுக்கு பிசியோதெரபிதான் தரப்பட்டது, மாசாஜ் அல்ல: துணை முதல்வர் சிசோடியா விளக்கம்

டெல்லி : ஊழல் வழக்கில் சிக்கி டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் டெல்லி அமைச்சர் சத்தியேந்திர ஜெயிந்த் அங்கு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவது போன்று வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்ட விரோதம், பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த மே மாதம் அமலாக்கத்துறையால் சத்தியேந்திர ஜெயின் கைது செய்யப்பட்டார். டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் அவருக்கு மசாஜ் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விடியோவை வெளியிட்டு இருக்கும் பாரதிய ஜனதா கட்சி … Read more

ஜெட் ஏர்வேஸ் ஊழியர்களை சம்பளம் இல்லா நீண்டகால விடுப்பில் அனுப்ப முடிவு?

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் அதன் ஊழியர்களின் சம்பளத்தை 50 சதவீதம் வரை குறைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் முன்னணி விமானச் சேவை நிறுவனமாக இருந்த ஜெட் ஏர்வேஸ், கடந்த 2019ல் பெரும் இழப்பை சந்தித்து திவாலானதாக அறிவிக்கப்பட்டது.  இதையடுத்து அந்நிறுவனத்தின் விமான சேவை நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை ஜலான் – கல்ராக் கூட்டமைப்பு ஏலத்தில் எடுத்து அதனை மறு கட்டமைப்பு செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ஜெட் ஏர்வேஸ் … Read more

புல்டோசரால் வீடுகளை இடிப்பதற்கு எந்தச் சட்டமும் அனுமதிப்பது இல்லை: கவுகாத்தி ஐகோர்ட் காட்டம்

கவுகாத்தி: எவ்வளவு தீவிரமான வழக்குகளின் விசாரணை என்றாலும் தேடுதல் என்ற பெயரில் புல்டோசர்களைக் கொண்டு வீடுகளை இடிப்பதற்கு எந்த குற்றவியல் சட்டமும் பரிந்துரைக்கவில்லை என்று கவுகாத்தி உயர் நீதிமன்றம் காட்டமாக கூறியுள்ளது. அசாம் மாநிலம் நாகோன் மாவட்டடத்தில் காவல் நிலையத்திற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டவர்களின் வீடுகள் இடிக்கப்பட்டது தொடர்பாக கவுகாத்தி உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து கொண்டது. அந்த வழக்கு வியாழக்கிழமை தலைமை நீதிபதி ஆர்எம் சாயா முன்பு விசாரணைக்கு … Read more

அருணாசலத்தின் முதல் புதிய விமான நிலையம்

இடாநகர்: அருணாசலப் பிரதேசத்தில் புதிதாக கட்டப்பட்ட டோன்யி போலோ விமான நிலையத்தை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். அருணாசலப் பிரதேசத்தில் விமான நிலையம் இல்லை. 80 கிமீ தொலைவில் அசாமின் வடக்கு லக்கிம்பூரில் உள்ள லிலாபரி விமான நிலையம் தான் இதற்கு அருகில் உள்ள ஒரே விமான நிலையமாகும். இந்நிலையில், ஒன்றிய மற்றும் மாநில அரசின் பங்களிப்புடன் ரூ.645 கோடி செலவில், அருணாச்சல பிரதேசத்தல் பசுமை விமான நிலையம் கட்டப்பட்டு வந்தது. இதன் பணிகள் முடிந்த … Read more