சாட்டையால் அடித்தக்கொண்ட ராகுல் காந்தி!!

ராகுல் காந்தி தற்போது தெலங்கானா மாநிலத்தில் இந்திய ஒற்றுமை யாத்திரையை நடத்தி வருகிறார். நேற்று அவர் ஐதராபாத்தில் தனது ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டார். அந்த பயணத்தில் ம.தி.மு.க. தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ பங்கேற்று ஆதரவையும், தனது தந்தை வைகோ சார்பில் வாழ்த்துகளையும் தெரிவித்தார். காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி உள்ளிட்டோரும் இந்த நடைபயணத்தில் கலந்துகொண்டனர். இந்நிலையில், ஹைதராபாத்தில் உள்ள ருத்ராராமில் இருந்து ராகுல் காந்தி இன்று 57ஆவது நாளாக பாதயாத்திரையை மீண்டும் தொடங்கினார். ஆந்திரா, தெலங்கானா, … Read more

இடைத்தேர்தலில் வாக்களிக்க ஒரு கிராம் தங்க காசு கேட்டு கிராமத்தினர் ஆர்ப்பாட்டம்

நல்கொண்டா: தெலங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டம், முனுகோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இத்தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏ.வாக இருந்த ராஜகோபால் ரெட்டி, திடீரென பாஜகவில் இணைந்து, தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதன் காரணமாக இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. ராஜகோபால் ரெட்டி தற்போது பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார். இத்தேர்தலில், பாஜக, காங்கிரஸ் மற்றும் டிஆர்எஸ் கட்சிகள் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. முனுகோடு சட்டமன்ற இடைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு அதிக பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக … Read more

விவசாய வேலைக்காக டிராக்டரில் சென்ற போது ஏற்பட்ட விபரீதம்.. சம்பவ இடத்திலேயே 6 பெண் கூலித்தொழிலாளர்கள் பலி..!

ஆந்திர மாநிலத்தில் டிராக்டர் மீது மின்கம்பி விழுந்ததில் 6 பெண் கூலித்தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். அனந்தபூர் மாவட்டத்திலுள்ள தர்காஹொன்னூரை சேர்ந்த கூலித்தொழிலாளிகள் விவசாய வேலைக்காக டிராக்டரில் சென்ற போது, எதிர்பாராத விதமாக உயர் அழுத்த மின்கம்பி திடீரென அறுந்து டிராக்டர் மீது விழுந்துள்ளது. இதில் மின்சாரம் தாக்கி 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில்,படுகாயமடைந்த மூன்று பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது. சம்பவம் குறித்து அனந்தபூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். Source link

ஆந்திராவில் டிராக்டர் மீது மின்கம்பி அறுந்து விழுந்ததில் 6 பேர் பரிதாப சாவு

அனந்தபூர்: ஆந்திரா மாநிலம் அனந்தபூர் மாவட்டம் தர்காஹொன்னூரை சேர்ந்த கூலி தொழிலாளர்கள், விவசாய பணிக்காக டிராக்டரில் புறப்பட்டனர். வழியில், எதிர்பாராத விதமாக உயரழுத்த மின்கம்பி திடீரென அறுந்து டிராக்டரில் விழுந்தது. இதில், கூலி தொழிலாளர்கள் மீது மின்சாரம் தாக்கியது. சம்பவ இடத்திலேயே 6 பேர் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பேர் படுகாயத்துடன் உயிருக்கு போராடினர். இதையறிந்த மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக மின் இணைப்பை துண்டித்தனர். இதற்கிடையில், அனந்தபூர் போலீசார் மற்றும் அப்பகுதி மக்கள் சம்பவ இடத்துக்கு … Read more

நிலக்கரி சுரங்க முறைகேடு: ‘முடிந்தால் கைது செய்யுங்கள்’ – ஜார்க்கண்ட் முதல்வர் சவால்

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு விவகாரத்தில் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அளித்திருந்த நிலையில், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகாமல், பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். நிலக்கரி சுரங்கங்களுக்கான உரிமங்களை முறைகேடாக வழங்கியதாகவும், கருப்பு பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகும் படி ஹேமந்த் சோரனுக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் அவர் நேரில் ஆஜராகாமல், ‘முடிந்தால் என்னை அமலாக்கத்துறை கைது … Read more

காலிஸ்தான் பிரிவினைக்கு ஆதரவளிக்கும் பாகிஸ்தான் – மத்திய அரசு, இந்துக்களுக்கு எதிராக இந்திய சீக்கியர்களை தூண்ட முயற்சி

புதுடெல்லி: சீக்கியர்களுக்கு காலிஸ்தான் என்ற பெயரில் தனி நாடு உருவாக்கும் நோக்குடன் காலிஸ்தான் இயக்கம் உருவானது. 1980-ம் ஆண்டுக்குப் பிறகு இதற்கு பிந்தரன்வாலே தலைமை ஏற்று தீவிரவாதப் பாதைக்கு மாறினார். இதனால் தான் பஞ்சாபின் அமிர்தசரஸ் பொற்கோயிலில் பதுங்கியிருந்த சீக்கிய தீவிரவாதிகளை இந்திய ராணுவம் உள்ளே புகுந்து சுட்டுக் கொன்றது. இதற்கான உத்தரவை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி பிறப்பித்தார். இந்த நடவடிக்கைக்காக இந்திரா காந்தி 1984-ல் சுட்டுக் கொல்லப்பட்டார். காலிஸ்தான் தீவிரவாதப் பாதைக்கு மாறியது, அந்த … Read more

பள்ளியில் மது விருந்து ஆசிரியர் சஸ்பெண்ட்

சிவபுரி: மத்தியப் பிரதேச மாநிலம் சிவபுரி மாவட்டத்தில் அரசுப் பள்ளி வளாகத்தில் மது மற்றும் அசைவ உணவு விருந்து வழங்கிய ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கானியாதானா பிளாக்கிற்கு உட்பட்ட போட்டா கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி வளாகத்தில் நடந்த மது மற்றும் அசைவ விருந்து தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆனால் மதுவிருந்து எப்போது நடந்தது என்ற தகவல் வெளியாகவில்லை. பள்ளி வளாகத்தில் பார்ட்டி நடந்தபோது, அந்த … Read more

ஹேர்கட் பண்ண போய் படுத்த படுக்கையான ஐதராபாத் பெண்.. அது என்ன பியூட்டி பார்லர் ஸ்ட்ரோக்?

பக்கவாதங்கள் குறித்து பொதுவெளியில் பலவாறு தொடர்ந்து விவாதிக்கப்பட்டும், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தாலும் அண்மையில் ஐதராபாத்தில் உள்ள அழகு சாதன நிலையத்தில் நடந்த சம்பவம் சற்று அதிர்வலைகளையே ஏற்படுத்தியிருக்கிறது. அழகு சாதனப் பொருட்களை புதிதாக பயன்படுத்தினாலோ, பியூட்டி பார்லருக்கு முதல் முறையாக செல்பவர்களுக்கு வேண்டுமானால் பொதுவாக ஒவ்வாமை ஏற்படுவதுண்டு. ஆனால் அடிக்கடி அழகு சாதன நிலையத்துக்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டிருந்த ஐதராபாத்தைச் சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க சீமா என்ற பெண்ணுக்கு பியூட்டி பார்லர் ஸ்ட்ரோக் என்ற பக்கவாதம் … Read more

குஜராத்தில் உடனடியாக அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிமுறை!!

குஜராத் சட்டமன்ற தேர்தல் இரண்டு கட்டங்களாக அடுத்த மாதம் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. குஜராத் சட்டசபை தேர்தல் தேதி அட்டவணையை தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வெளியிட்டுள்ளார். டிசம்பர் 1 மற்றும் 5ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் டிசம்பர் 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக டிசம்பர் 1ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள 89 தொகுதிகளுக்கு வரும் 5ஆம் தேதி முதல் வேட்பு … Read more

ஊழல்வாதிகள் புகழப்படுவது நாட்டுக்கு நல்லதல்ல: பிரதமர் மோடி

புதுடெல்லி: ஊழல்வாதிகள் என நிரூபிக்கப்பட்ட பிறகும், அத்தகையவர்கள் புகழப்படுவது நாட்டுக்கு நல்லதல்ல என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும் ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியது: “ஊழலுக்கு எதிராக உறுதியாக போராடுவதற்கான நேரம் வந்துவிட்டது. ஊழல் ஒரு தீமை. அதில் இருந்து நாடு விலகி இருக்க வேண்டும். போதிய வசதிகள் இல்லாதது, அரசாங்கத்தின் தேவையற்ற அழுத்தம் எனும் இரண்டும்தான் ஊழலுக்கு மிக … Read more