லிவ்-இன் ரிலேஷன்ஷிப் முறையால்தான் குற்றங்கள் அதிகரிப்பு: மத்திய அமைச்சர் கருத்து

புதுடெல்லி: லிவ்-இன் ரிலேஷன்ஷிப் முறையால்தான் குற்றங்கள் அதிகரிக்கிறது என்று மத்திய அமைச்சர் கவுசல் கிஷோர் கருத்து தெரிவித்துள்ளார். டெல்லி மஹரவுலி பகுதியில் இளம்பெண் ஷிரத்தாவை அவரது காதலன் அஃப்தாப் கொலை செய்து 35 துண்டுகளாக உடலை வெட்டி நாய்களுக்கு வீசிய கொடூரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அஃப்தாபிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஷிரத்தா கொலை வழக்கு, இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ஷிரத்தா … Read more

'பயங்கரவாதத்தை எந்த மதத்துடனும் தொடர்பு படுத்தக்கூடாது!' – அமித் ஷா

“பயங்கரவாதத்தை எந்த மதத்துடனும் தொடர்பு படுத்தக்கூடாது,” என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்து உள்ளார். பயங்கரவாதிகளுக்கு நிதி கிடைப்பதை தடுப்பது தொடர்பாக, ‘நோ மணி ஃபார் டெரர்’ என்ற தலைப்பில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் நடக்கும் மாநாட்டில், பாஜக மூத்தத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா பேசியதாவது: சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு பயங்கரவாதம் மிகப்பெரிய அச்சுறுத்தல் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதே நேரத்தில் என்னை பொறுத்தவரை, இதனை … Read more

ராகுல் காந்திக்கு அடையாளம் தெரியாத நபர் எழுதிய கொலை மிரட்டல் கடிதம்: இந்திய ஒற்றுமை பயணத்தில் பரபரப்பு

மகாராஷ்டிரா: மத்தியபிரதேசம் மாநிலம் இந்தூரில் ராகுல் காந்தி கொலைச் செய்யப்படுவார் என்கிற வாசகம் அடங்கிய கடிதத்தில் காவல்துறையினர் கைப்பற்றி விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். நாடு முழுவதும் இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டுவரும் ராகுல்காந்தி தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கிறார். அதை முடித்துக்கொண்டு அடுத்ததாக மத்தியபிரதேசம் செல்ல அவர் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் அம்மாநிலத்தின் இந்தூரில் உள்ள ஒரு இனிப்பு கடையின் வாயிலில் இருந்து ஒரு கடிதம் ஒன்றை காவல் துறையினர் கைப்பற்றினர். அதில் ராகுல் காந்தி விரைவில் கொல்லப்படுவார் … Read more

சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக திறக்கப்பட்டுள்ள நிலையில், பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. இரண்டாம் நாளிலேயே நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்துவரும் நிலை உருவாகியுள்ளது. உலகப் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் நடை, மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக திறக்கப்பட்டுள்ளது. “வெர்ச்சுவல் கியூ” மூலம் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்களுக்கு நிலக்கல்லில் “ஸ்பாட் புக்கிங்” வசதி செய்யப்பட்டுள்ளது. … Read more

சவுதி செல்ல இனி இது தேவையில்லை..!

தங்கள் நாட்டுக்கு வரும் இந்தியர்களுக்கு காவல்துறையினரின் நன்னடத்தை சான்றிதழ் தேவையில்லை என்று சவுதி அரேபியா அரசு அறிவித்துள்ளது. பல்வேறு நாடுகள் இந்தியர்களுக்கு விசா வழங்குவதில் பல கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இதனால், இந்தியர்களுக்கு விசா பெறுவதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. அமெரிக்க அதிபராக ட்ரம்ப் இருந்தபோது இந்தியர்களுக்கு விசா வழங்குவதில் கடும் கெடுபிடி காட்டினார். இதனால், இந்தியர்கள் பலர் பாதிக்கப்பட்டனர். அதன் பின்னர் அமெரிக்காவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்கு பிறகு அதிபர் பைடன் இந்தியர்களுக்கான விசா கெடுபிடிகளை தளர்த்தினார். … Read more

பாஜகவை விமர்சிப்பதால் என்னுடன் நடிக்க அச்சப்படுகிறார்கள்; நடிகர் பிரகாஷ்ராஜ் பேட்டி.!

கர்நாடக பத்திரிகையாளரும், சமூக ஆர்வலருமான கவுரி லங்கேஷ், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். இதையடுத்து கடந்த செப்டம்பர் 5, 2017 அன்று அவர் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு, தனது குற்றப்பத்திரிகையில் இந்துத்துவா ஆதரவுக் குழுவான சனாதன் சன்ஸ்தாவின் பெயரைப் பதிவு செய்துள்ளது. இந்த படுகொலையை தொடர்ந்து கவுரி லங்கேஷின் நெருங்கிய நண்பரும், பிரபல திரைப்பட நடிகருமான பிரகாஷ்ராஜ், பாஜக அரசை தொடர்ந்து கடுமையாக … Read more

சட்டவிரோத சுரங்கத்தில் சிக்கி 30 பேர் பலி?; ஜார்கண்டில் இன்று காலை சோகம்

தன்பாத்: ஜார்கண்டில் செயல்பட்டு வந்த சட்டவிரோத சுரங்கத்தில் சிக்கி 30 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் அடுத்த கபசரா அவுட்சோர்சிங் காலியரியில் சிலர் சட்டவிரோதமாக மண் அள்ளி வருகின்றனர். இதற்காக குறிப்பிட்ட பகுதியில் சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதில் அங்கு வேலை செய்து கொண்டிருந்த 25 முதல் 30 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர். அவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்தால் அப்பகுதி மக்கள் பீதி … Read more

தெலங்கானா அரசு கல்லூரியில் வாயு கசிவு; 25 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி.!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் அரசு கஸ்தூர்பா கல்லூரி இயங்கிவருகிறது. இக்கல்லூரியில் உள்ள ஆய்வகத்தில் ரசாயன வாயு கசிவு ஏற்பட்டதால், சுமார் 25 மாணவர்கள் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து 25 மாணவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வாயு கசிவு ஏற்பட்டத்தை தொடர்ந்து, கல்லூரியில் இருந்த அனைத்து மாணவர்களும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். அதைத் தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள், அரசு கல்லூரிக்கு விரைந்துள்ளனர். சந்தேகத்திற்குரிய வகையில் திடிரென வாயு கசிவு ஏற்பட்டது குறித்து, தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

Breaking! பாகிஸ்தானுக்கு உளவு சொன்ன மத்திய அரசு பணியாளர் டெல்லியில் கைது

நியூடெல்லி: பாகிஸ்தானுக்கு ரகசியமான மற்றும் முக்கியமான தகவல்களை அனுப்பிய வெளியுறவு அமைச்சகத்தில் (MEA) பணியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார். வாகன ஓட்டுநராக அமைச்சகத்தில் பணி புரிந்து வந்த டிரைவரை, பாதுகாப்பு ஏஜென்சிகளின் உதவியுடன் டெல்லி போலீசார் கைது செய்தனர். பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐயின், ஹனி-டிராப் வலையில் இந்த வாகன ஓட்டுநர் சிக்கியிருந்தார் என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பரபரப்பு கைது குறித்து ஏ.என்.ஐ செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது. Delhi … Read more

ஹைதராபாத்தில் உள்ள மகளிர் கல்லூரி ஆய்வகத்தில் ரசாயன வாயு கசிவு: 25 மாணவிகளுக்கு வாந்தி மயக்கம்

தெலங்கானா: ஹைதராபாத்தில் உள்ள கஸ்தூரிபா அரசு மகளிர் கல்லூரி ஆய்வகத்தில் ரசாயன வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. ரசாயன வாயு கசிவினால் 25 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. வாந்தி, மயக்கம் ஏற்பட்ட மாணவிகளை மருத்துவமனையில் அனுமத்து தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்கள். ரசாயன வாயு கசிவு ஏற்பட்டதையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.