இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் விக்ரம்-எஸ் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது

ஸ்ரீஹரிகோட்டா: இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் விக்ரம்-எஸ் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. விக்ரம்-எஸ் ராக்கெட்டானது 2 இந்திய செயற்கை கோள்கள் உட்பட 3 செயற்கை கோள்களை சுமந்து சென்றது. பூமியின் மேற்பரப்பில் இருந்து 120 கி.மீ. உயரத்தில் 3 செயற்கை கோள்களும் நிலை நிறுத்தப்படவுள்ளன. இந்திய விண்வெளித்துறையில் முதன்முறையாக தனியார் வடிவமைத்த ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது. இந்த ராக்கெட்டானது 2 இந்திய செயற்கை கோள்கள் உட்பட … Read more

`Vikram S'-ன் சிறப்பம்சங்கள் என்ன? தனியார் ராக்கெட்கள் பற்றி இஸ்ரோ விஞ்ஞானிகள் கருத்து!

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் ‘விக்ரம்-எஸ்’ ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் ஏவப்பட்டது. பூமியின் மேற்பரப்பில் இருந்து 120 கிலோமீட்டர் உயரத்தில் மூன்று செயற்கைக்கோள்களும் நிலை நிறுத்தப்பட உள்ளன. இந்திய தனியார் விண்வெளித் துறையின் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக, விக்ரம்-எஸ் என்ற நாட்டின் முதலாவது தனியார் ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் பாய்ந்தது. இந்திய அரசின் விண்வெளித் துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி முகாமையான இன்-ஸ்பேஸ் (இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம்) இதற்கான அங்கீகாரத்தை வழங்கியதை அடுத்து, … Read more

ஆம் ஆத்மி அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு நீதிமன்றம் ஜாமீன் மறுப்பு

புதுடெல்லி: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயின் மற்றும் இருவருக்கு ஜாமீன் வழங்க டெல்லி நீதிமன்றம் நேற்று மறுத்துவிட்டது. அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசில் சுகாதார அமைச்சராக இருப்பவர் சத்யேந்திர ஜெயின். இவர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சிபிஐ கடந்த2017-ல் வழக்கு பதிவு செய்தது. இது தொடர்பான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அவரை அமலாக்கத் துறை கடந்த மே 30-ம் தேதி கைது செய்தது. இந்நிலையில் … Read more

பயங்கரவாதத்தை விட நிதியுதவி செய்வது ஆபத்து: அமித்ஷா பேச்சு

டெல்லி: பயங்கரவாதத்திற்கு நிதி உதவி செய்வது பயங்கரவாதத்தை விட ஆபத்தானது என பயங்கரவாத நிதியுதவி தடுப்பு மாநாட்டில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். ஏனெனில் நிதி உதவியால் பயங்கரவாதத்தின் முறை ஊக்குவிக்கப்படுகிறது. தொழில்நுட்ப புரட்சியால் வடிவங்கள் மாறி பயங்கரவாதம் சவாலாக இருக்கிறது. சில நாடுகள் பயங்கரவாதிகளை பாதுகாப்பதோடு அவர்களுக்கு அடைக்கலமும் கொடுக்கின்றன எனவும் குற்றம் சாட்டினார்.

சாவர்க்கர் குறித்து கருத்து | ராகுல் காந்தி மீது தானே காவல் நிலையத்தில் வழக்கு பதிவு

தானே: சுதந்திர போராட்ட வீரர் வி.டி.சாவர்க்கர் குறித்து இழிவான முறையில் கருத்துகள் கூறியதாக காங்கிரஸின் முக்கிய தலைவர் ராகுல் காந்தி மீது தானே காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாலாசாஹேப்பாஞ்சி சிவசேனா பிரமுகர் வந்தனா டோங்ரே என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சாவர்க்கர் குறித்து ராகுல் காந்தி தெரிவித்திருந்த கருத்து உள்ளூர் மக்களின் மனதை புண்படுத்திவிட்டது என்ற புகாரின் பேரில் தானே நகர் காவல் நிலையத்தில், ஐபிசி 500, 501 … Read more

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் Vikram S வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது!

விக்ரம் எஸ் ராக்கெட்: ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் மூலம் தனியாரால் உருவாக்கப்பட்ட நாட்டின் முதல் ராக்கெட் ஆன விக்ரம் எஸ் ராக்கெட்டை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதால் இந்திய விண்வெளித் துறை இன்று மாபெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, நாட்டின் தனியாரால் உருவாக்கப்பட்ட முதல்  ராக்கெட் ஆன விக்ரம்-எஸ்  ராக்கெட்டை இன்று, நவம்பர் 18, 2022 அன்று ஏவியது. இந்திய விண்வெளித் ஸ்டார்ட் அப் நிறுவனமான ஸ்கைரூட் தயாரித்த விக்ரம்-எஸ் ராக்கெட் இன்று … Read more

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் ‘விக்ரம்-எஸ்’, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று விண்ணில் பாய்கிறது..!

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் ‘விக்ரம்-எஸ்’, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று விண்ணில் செலுத்தப்பட உள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த நிறுவனமான ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் தயாரித்துள்ள இந்த ராக்கெட், இன்று காலை 11 மணியளவில் விண்ணில் ஏவப்பட உள்ளது. முப்பரிமாண அச்சு உபகரணங்கள் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ள விக்ரம்-எஸ் ராக்கெட் – ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா, பஜூம்க் ஆர்மீனியா, என்-ஸ்பேஸ் டெக் இந்தியா ஆகிய 3 செயற்கை கோள்களை சுமந்து செல்லும். இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தையான மறைந்த … Read more

2024-ல் சுகன்யான் விண்ணில் செலுத்தப்படும்: ஒன்றிய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் பேட்டி

ஆந்திரா: 50 தனியார் நிறுவனங்களுடன் இஸ்ரோ புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது என்று இன் ஸ்பேஸ் இயக்குநர் கூறியுள்ளார். அடுத்த 4 முதல் 6 வாரங்களில் தனியார் நிறுவன ராக்கெட்டுகள் விண்ணில் பறக்கவுள்ளது. 2024-ல் சுகன்யான் விண்ணில் செலுத்தப்படும் என்று ஒன்றிய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். தனியார் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் இஸ்ரோ அடுத்த தளத்திற்கு சென்றுள்ளது என்று ஒன்றிய இணையமைச்சர் பேட்டி அளித்துள்ளார்.

'தீவிரவாதத்துக்கு நிதி உதவி செய்யும் ஆதார வேர்களை அழிக்க வேண்டும்' – பிரதமர் மோடி

புதுடெல்லி: தீவிரவாதத்துக்கு நிதி உதவி செய்யும் ஆதார வேர்களை அழிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். தீவிரவாதத்துக்கு நிதியுதவி கிடைப்பதைத் தடுக்கும் வகையில் 3வது அமைச்சர்கள் மாநாடு டெல்லியில் இன்றும், நாளையும் (நவ 18, 19) நடைபெறுகிறது. மாநாட்டின் தொடக்க நாளான இன்று நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். தீவிரவாதத்திற்கு நிதி இல்லை என்ற கருப்பொருளில் இந்த மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “தீவிரவாத தாக்குதல் எங்கு நடந்தாலும் … Read more

வங்கிகள் இயங்காது… இன்றே உஷார் ஆகுங்கள் மக்களே…

அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் (AIBEA)நாளை (நவம்பர் 19) வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதால் நாடு முழுவதும் வங்கிகள் செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சங்கத்தில் செயலாற்றியதற்காக வங்கி பணியாளர்கள் மீது பாரபட்சம் காட்டப்படுவதாகவும், அதனை கண்டித்து உறுப்பினர்கள் வேலைநிறுத்தம் செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  AIBEA பொதுச் செயலாளர் சி.ஹெச். வெங்கடாசலம், ஊழியர்களிடம்,”சமீப காலமாக பணியாளர்கள் மீதான வஞ்சகம் அதிகரித்து வருவது மட்டுமின்றி, இவை அனைத்திலும் பொதுவான தொடர்பு ஒன்று உள்ளது. பணியாளர்கள் மீதான இந்த பாரபட்சத்தை திட்டமிட்டு செய்கின்றனர். … Read more