மொழிகள் மீது தாக்குதல் நடத்தினால்… – ஆர்எஸ்எஸ், பாஜகவை எச்சரித்த ராகுல் காந்தி

சித்ரதுர்கா(கர்நாடகா): “கர்நாடகா மக்கள், அவர்கள் மொழிகள் மீது பாஜகவும், ஆர்எஸ்எஸும் தாக்குதல் நடத்தினால் அவர்கள் காங்கிரஸின் முழுபலத்தையும் எதிர்கொள்ள வேண்டியது இருக்கும்” என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை யாத்திரையைத் தொடங்கி நடத்தி வருகிறார். அந்த யாத்திரை தற்போது கர்நாடகாவில் நடந்து வருகிறது.வியாழக்கிழமை நடந்த யாத்திரையில் சித்ரதுர்கா மாவட்டத்தின் மொலகல்முரு என்ற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி … Read more

இரண்டு மாநிலங்கள், மூன்று கட்சிகள்… குஜராத், ஹிமாச்சல் சட்டமன்ற தேர்தல் ஏன் அவ்வளவு முக்கியம்?

அடுத்த இரண்டு ஆண்டுகள் நடைபெறும் அனைத்து தேர்தல்களுமே முக்கியம் தான். ஏனெனில் 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் மத்தியில் ஆட்சியை பிடிக்க மாநில அளவிலான செல்வாக்கு என்பது மிகவும் அவசியமாகிறது. இதனை கருத்தில் கொண்டு தேசிய கட்சிகள் முதல் பிராந்திய கட்சிகள் வரை தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் குஜராத், ஹிமாச்சல் பிரதேச சட்டமன்ற தேர்தலும் முக்கியத்துவம் பெறுகிறது. குறிப்பாக இந்த இரு மாநிலங்களில் பாஜக, காங்கிரஸ் இடையில் தான் பிரதானமான மோதல் என்பது இருக்கிறது. … Read more

கேரளா: 12 பெண்கள் நரபலியா? போலீசார் விசாரணை தீவிரம்

கேரளாவில் இரு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட விவகாரத்தில் மேலும் 12 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் கேரள போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். செல்வம் பெருகும் என்ற மூடநம்பிக்கையின் உச்சமாக கேரளாவில் இரு பெண்களின் உடலை துண்டு துண்டாக வெட்டி புதைத்து நரபலி கொடுத்த சம்பவத்தில் போலி மந்திரவாதி முகம்மது ஷபி, பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த பகவல் சிங், அவரது மனைவி லைலா ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். மூன்று பேரையும், 12 நாட்கள் நீதிமன்றக் … Read more

தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்

டெல்லி: தமிழகத்தில் மின்கட்டண உயர்வுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் 3 மாதத்தில் சட்டத்துறை அதிகாரியை நியமிக்கவும் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

குஜராத், இமாச்சல் மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்கள் எப்போது? தேதிகள் இன்று அறிவிப்பு

குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேச சட்டமன்ற தேர்தல் தேதியை இன்று அறிவிக்கிறது இந்திய தலைமை தேர்தல் ஆணையம். குஜராத் மற்றும் இமாச்சலப்பிரதேச சட்டசபை தேர்தல் தேதியை இன்று அறிவிக்கிறது தலைமை தேர்தல் ஆணையம். மாலை 3 மணிக்கு தேர்தல் தேதி அட்டவணையை டெல்லியில் தேர்தல் ஆணையர்கள் வெளியிட உள்ளனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் குஜராத், இமாச்சலப்பிரதேசத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலாக உள்ளன. குஜராத்தில் பா.ஜ.க. ஆட்சியில் இருக்கிறது. இம்மாநிலத்தில் மொத்தம் 182 சட்டசபை … Read more

குஜராத், இமாச்சலப் பிரதேச தேர்தல் தேதி: இன்று மதியம் 3 மணிக்கு தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது

புதுடெல்லி: குஜராத், இமாச்சலப் பிரதேச தேர்தல் தேதிகளை இன்று (அக்.14) மதியம் 3 மணிக்கு அறிவிக்க இருப்பதாக தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. டெல்லியில் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இந்த அறிவிப்பு வெளியாகிறது. இதனால் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. குஜராத், இமாச்சலப் பிரதேச மாநிலங்களில் இப்போது பாஜக தான் ஆட்சியில் உள்ளது. ஆகையால் ஆட்சியைத் தக்க வைக்க பாஜகவும், குஜராத்தில் ஆட்சியைப் பிடிக்க ஆம் ஆத்மியும் கடும் பிரயத்னம் செய்து வருகின்றன. இந்த ஆண்டு … Read more

குஜராத், ஹிமாச்சல் தேர்தல் தேதி அறிவிப்பு… சரியாக 3 மணிக்கு!

வட மாநிலங்களில் தேர்தல் பரபரப்பு தொற்றிக் கொள்ள ஆரம்பித்து விட்டது. ஏனெனில் குஜராத், ஹிமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படவுள்ளது. பிற்பகல் 3 மணியளவில் இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் அவர்கள் தேர்தல் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவுள்ளார். குஜராத் மாநிலத்தில் முதல்வர் புபேந்திரபாய் படேல் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. 182 எம்.எல்.ஏக்கள் கொண்ட குஜராத் மாநிலத்தின் 14வது சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் … Read more

இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் ட்ரோனை சுட்டுவீழ்த்திய எல்லை பாதுகாப்புப்படை..!

பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் செக்டார் பகுதியில் சர்வதேச எல்லை அருகே பறந்த பாகிஸ்தான் ட்ரோனை, இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். பாகிஸ்தான் பகுதியில் இருந்து, இந்திய பகுதிக்குள் ட்ரோன் ஒன்று இன்று அதிகாலை நுழைந்தது. அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த எல்லை பாதுகாப்புப்படையினர், அந்த ட்ரோனை 17 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர். Source link

கட்டிய கணவனை காத்து நிற்கும் 'கர்வா சவுத்' விரதம் வடமாநிலங்களில் கோலாகலம்: மாங்கல்ய பலம், ஆயுள் கிடைக்கும் என நம்பிக்கை..!!

போபால்: கணவரின் நலன் வேண்டி பெண்கள் அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. கர்வா சவுத் விரதம் அன்று பெண்கள் உணவு உண்ணாமல் நோன்பு இருந்து இரவு சல்லடையில் தீபம் ஏற்றி நிலவு பார்த்து பின்னர் கணவனை அச்சல்லடை வழியாக பார்ப்பார்கள். இதனால் அவர்களுடைய மாங்கல்ய பலம் கூடும் என்பது வழிவழியாக வந்துள்ள நம்பிக்கை. இதனை பொதுமக்கள் மட்டுமின்றி மத்தியப்பிரதேசம், உத்திராக்கண்ட் முதலமைச்சர்களின் மனைவிகளும் கடைபிடித்தனர். போபால் நகரில் மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் … Read more

ஆந்திரா | வெள்ளத்தில் மிதக்கிறது அனந்தபூர் மாவட்டம்

அனந்தபூர்: ஆந்திர மாநிலத்திலேயே மிகவும் வறட்சி மாவட்டமாக கூறப்படும் அனந்தபூரில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அனந்தபூர் நகரில் 12 காலனிகள் மற்றும் ருத்ரம்பேட்டை கிராமத்தில் 5 பஞ்சாயத்துகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளன. அப்பகுதிகளில் மின் துண்டிப்பு செய்யப்பட்டதால், இருள் சூழ்ந்துள்ளது. மற்ற ஊர்களுக்கும் இந்த பகுதிகளுக்கும் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டு விட்டது. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு முதல் பலத்த மழை பெய்து வருவதால், புதன் கிழமையன்று மாலை இப்பகுதிகள் வெள்ள நீரில் சிக்கின. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தன. 5 அடி … Read more