கோபி மஞ்சூரியன் சாப்பிடுவதில் பிரச்னை… பாட்டியை கொன்ற பேரன்!!

பெங்களூருவை சேர்ந்த சசிலேகா என்பவர் (50), மகன் சஞ்சய் வாசுதேவ் ராவ் (27) மற்றும் தாய் ஷாந்தகுமாரியுடன் வசித்து வந்தார். ஷாந்தகுமாரிசடங்குகள் மீது நம்பிக்கை கொண்டவர். வெளியே சென்றுவந்தால் குளித்துவிட்டு தான் வீட்டுக்குள் வர வேண்டும், வெளி உணவுகளை வாங்கி சாப்பிடக்கூடாது என பல கட்டுப்பாடுகள் உண்டு. இந்நிலையில், 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி பேரன் சஞ்சய் வீட்டிற்கு கோபி மஞ்சூரியன் வாங்கி வந்துள்ளார். அதற்கு பாட்டி ஷாந்த குமாரி பேரனை திட்டியுள்ளார். ஆத்திரம் அடைந்த … Read more

சட்டப்பிரிவு 370-ஐ கொண்டு வந்த ஜவஹர்லால் நேருவே காஷ்மீர் பிரச்சினைக்கு காரணம்: அமித் ஷா

ஜன்சார்கா( குஜராத் ): சட்டப்பிரிவு 370-ஐ கொண்டு வந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவே, ஜம்மு காஷ்மீர் பிரச்சினைக்குக் காரணம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்துள்ளார். குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜகவின் கவுரவ யாத்திரையை அமித் ஷா ஜன்சார்கா நகரில் தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசியதாவது: “அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தில் பாஜகவை கேலி செய்த கட்சி காங்கிரஸ். அந்தக் கட்சி மத்தியில் … Read more

குடிநீர் குழாயில் சாராயம்; பீதியில் உறைந்த போலீஸ்!

மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடந்து வருகிறது. இங்குள்ள குனா மாவட்டம், பான்புரா கிராமத்தில் சாராயம் காய்ச்சுவதை கிராம மக்கள் செய்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள பெரும்பாலான வீடுகளில் கள்ளச்சாராயம் உற்பத்தி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் எத்தனை முறை சோதனை நடத்தினாலும் மறுநாளே சாராயம் காய்ச்சுவதை வழக்கமாக செய்து வருகின்றனர். இது போலீசாருக்கே பெரும் தலைவலியாக கருதப்பட்டு வந்தாலும் உள்ளூர் அரசியல்வாதிகளின் கடைக்கண் பார்வை இருவர்கள் … Read more

கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் காணாமல் போன 12 பெண்கள் நரபலியா?: போலீஸ் விசாரணை

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் காணாமல் போன 12 பெண்கள் நரபலியா? என போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. தருமபுரி பத்மா உள்பட 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட எலந்தூர் சுற்றுவட்டாரத்தில் மட்டும் 3 பெண்கள் காணாமல் போயுள்ளனர். 5 ஆண்டுகளில் கொச்சி நகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 13 பெண்கள் காணாமல் போன நிலையில் ஒரு பெண் உடல் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. எஞ்சிய 12 பெண்கள் என்ன … Read more

லைலாவை கரெக்ட் பண்ண ஷபி ரகசிய பிளான்; நரபலி வழக்கில் புது ட்விஸ்ட்!

கேரள மாநிலம் எலந்தூரை சேர்ந்த பக்வால் சிங், லைலா தம்பதியினரின் பேராசை இரண்டு உயிர்களை பலி வாங்க வைத்திருக்கிறது. இதற்கு மூளையாக செயல்பட்ட மந்திரவாதியான ஷபி குறித்து தினந்தோறும் புதிய தகவல்கள் வெளியாகி பரபரப்பை கூட்டி வருகிறது. ஷபி ஒரு சைக்கோ என்றும், மூதாட்டி உள்ளிட்ட பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. குறிப்பாக பெண்களை துன்புறுத்தி அதை பார்த்து ரசிக்கும் கொடூர எண்ணம் கொண்டவராக இருந்துள்ளார். இப்படியொரு சூழலில் பக்வால் … Read more

ஹிஜாப்புக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு-2 நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு

கர்நாடக கல்வி நிறுவனங்களில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்ற அமர்வில் இடம்பெற்ற 2 நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு வெளியிட்டுள்ளனர். ஹிஜாப்புக்கு தடை விதித்ததை எதிர்க்கும் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அதை உறுதி செய்தது. இதை எதிர்த்து தொடுக்கப்பட்ட மனுக்கள் மீது உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதான்சு துலியா தீர்ப்பு வெளியிட்டனர். தடையை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது செல்லும் என்ற நீதிபதி குப்தா, இஸ்லாமில் கட்டாயம் ஹிஜாப் அணிய … Read more

இமாசல பிரதேசத்தில் ‘வந்தே பாரத்’ விரைவு ரயிலின் நான்காவது ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்

உனா: இந்தியாவின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள வந்தே பாரத் ரயில்கள் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. இது நாட்டின் அதிவேக ரயிலாக உள்ளது. இது சுமார் 160 கி.மீ. வேகத்தில் பயணிக்க கூடியது. இந்த ரயில் சேவை கடந்த 2019-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. வந்தே பாரத்தின் 3-வது ரயில் சேவை குஜராத் மாநிலம், காந்தி நகருக்கும், மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கும் இடையில் தொடங்கப்பட்டது. இந்த ரயில் சேவை கடந்த மாதம் பிரதமர் மோடி … Read more

180 கி.மீ வேகம் | இமாச்சல் – டெல்லி ‘வந்தே பாரத்’ ரயிலை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

அம்ப் அண்டவ்ரா: இமாச்சலப் பிரதேசம் உனாவின் அம்ப் அண்டவ்ராவிலிருந்து புதுடெல்லிக்கு இன்று (அக்.13) புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கிவைத்தார். முன்னதாக, வந்தே பாரத் எக்ஸ்பிரஸின் பெட்டிகளை ஆய்வு செய்த பிரதமர், அதில் உள்ள வசதிகளை பார்வையிட்டார். வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் என்ஜின் கட்டுப்பாட்டு மையத்தையும் மோடி சோதனையிட்டார். உனா ரயில் நிலையத்தையும் அவர் ஆய்வு செய்தார். உனா மாவட்டம், அம்ப் அண்டவ்ரா ரயில் நிலையத்திற்கு பிரதமர் வந்து … Read more

திருப்பதி ஏழுமலையான் கோயில் மூடல்: தேவஸ்தானம் தகவல்!

வானியல் நிகழ்வுகளில் முக்கியமானவை கிரகணங்கள். குறிப்பாக, சூரிய, சந்திர கிரகணங்கள் முக்கியமானவை. சந்திர கிரகணம் என்பது சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும் போது ஏற்படும் நிகழ்வு. அதேபோன்று பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சந்திரன் வரும்போது அது சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது. அந்த வகையில், 2022 ஆண்டுக்கான சூரிய கிரகணம் அக்டோபர் 25ஆம் தேதியும், சந்திர கிரகணம் நவம்பர் 8ஆம் தேதியும் வருகிறது. இதனை முன்னிட்டு அந்த தினங்களில் திருப்பதி … Read more

மூட நம்பிக்கைகளைத் தடுக்க சட்டம் இயற்ற வேண்டும் : நாடு முழுவதும் வலுக்கும் குரல்கள்

கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்தின் இலந்தூரைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவரான பகவல் சிங் மற்றும் அவரது மனைவி லைலா ஆகியோர், பணக்காரர்கள் ஆக வேண்டும் என்பதற்காக தமிழகத்தைச் சேர்ந்த 2 பெண்களை நரபலி கொடுத்தனர். மந்திரவாதி என அறிமுகமாகிய ரஷீத் என்கிற முகமது ஷபியின் பேச்சை பகவல் சிங்கும், அவரது மனைவியும் முழுமையாக நம்பி இதனை செய்துள்ளனர்.  இந்த நரபலி குறித்து காவல்துறை வெளியிட்ட தகவல்கள், அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக உள்ளன. பலியான இருவரின் உடல்களும் … Read more