இந்திய ஒற்றுமை யாத்திரைக்கு எதிர்க்கட்சி தலைவர்களை ஏன் அழைக்கவில்லை? – பாஜக கேள்வி

புதுடெல்லி: எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையைப் பற்றி பேசி வரும் காங்கிரஸ் கட்சி ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரைக்கு மம்தா பானர்ஜி, கேசிஆர், அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியேரை ஏன் அழைக்கவில்லை என்று பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த பாஜத தலைவர் சுஷில் மோடி கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் இந்த யாத்திரையின் நோக்கம் காங்கிரஸ் கட்சியை ஒற்றுமை படுத்துவதுதானே தவிர, இந்தியாவை ஒற்றுமைப் படுத்துவது இல்லை. இந்தியா ஏற்கெனவே ஒற்றுமையாகத்தான் இருக்கிறது என்றார். ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் … Read more

கேரளாவில் நரபலி தொடர்பான வழக்கை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு நியமனம்!

கேரளாவில் நரபலி தொடர்பான வழக்கை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட வழக்கை கொச்சி நகர காவல் துணை ஆணையர் எஸ்.சசிதரன் தலைமையிலான சிறப்புக் குழு விசாரணை நடத்த கேரள காவல்துறை உத்தரவிட்டுள்ளது. பெரும்பாவூர் துணை காவல் கண்காணிப்பாளர் அனுஜ் பாலிவால் முதன்மை விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். எர்ணாகுளம் துணை ஆணையர் உள்ளிட்ட மேலும் சில அதிகாரிகளும் இந்த சிறப்பு விசாரணைக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டு அதில் … Read more

இமாச்சலப்பிரதேசம் – உனா மாவட்டத்தில் 4வது வந்தே பாரத் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி..!!

உனா: இமாச்சலப்பிரதேசம் – உனா மாவட்டத்தில் 4வது வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அம்ப் அந்தவுரா ரயில் நிலையத்தில் இருந்து டெல்லிக்கு ரயில் இயக்கம் – 5 மணி 20 நிமிடங்களில் 412 கி.மீ. தூரத்தை இந்த ரயில் சென்றடையும். மிகவும் இலகுவான, அதிநவீன வசதிகளை கொண்ட வந்தே பாரத் ரயில் அதிவேகத்தில் செல்லும் திறன் கொண்டது. வந்தே பாரத் ரயில் சேவை நிகழ்வில் இமாச்சல் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர், … Read more

விளம்பரத்தில் இந்து மத நம்பிக்கை அவமதிப்பா? – அமீர்கானை வேண்டுமென்றே வம்பிழுக்கிறதா பாஜக?

அமீர்கான் மற்றும் கியாரா அத்வானி நடிப்பில் புதிதாக வெளியாகி உள்ள வங்கி விளம்பரம் ஒன்று இந்து மத நம்பிக்கையை அவமதித்து விட்டதாக புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது பாஜக மற்றும் இந்துத்துவா அமைப்புகள். திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களில் இந்து மத நம்பிக்கைகள் புண்படுத்தப்பட்டு விட்டதாக இந்துத்துவா அமைப்புகளும், பாஜக தலைவர்கள் குற்றம்சாட்டுவது தொடர் கதையாகிவிட்டது. சில நேரங்களில் போராட்டங்கள் வரை இவை சென்றுவிடுகின்றன. திரைப்படங்களை முடக்கும் அளவிற்கு கூட எதிர்ப்புகள் திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றன. எதிர்ப்புகள் காரணமாக சில நேரங்களில் சர்ச்சைக்குள்ளான … Read more

கர்நாடகா ஹிஜாப் தடை விவகாரம்: உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்துவர தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. கர்நாடகா மாநிலம் உடுப்பி பியுசி கல்லூரியில் பயிலும் முஸ்லிம் மாணவிகள் சிலர் ஹிஜாப் தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடினர். கடைசியாக இந்த வழக்கின் விசாரணை கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி நடைபெற்றது. நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதான்சு துலியா அடங்கிய அமர்வு இந்த மனுக்களை விசாரித்தது. இந்த வழக்கில் இரு தரப்பிலும் நீண்ட … Read more

கல்விக் கடனுக்கான உத்தரவாத வரம்பை ரூ.10 லட்சமாக அதிகரிக்க பொதுத்துறை வங்கிகள் திட்டம்

டெல்லி: கல்விக் கடனுக்கான உத்தரவாத வரம்பை ரூ.7.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக அதிகரிக்க பொதுத்துறை வங்கிகள் திட்டமிட்டுள்ளது. கடன்களை தள்ளுபடி செய்வதில் தாமதம் ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், ஒன்றிய அரசின் அறிவுரையின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

‘கனகபுரா பாறை' டி.கே.சிவகுமார் குறி வைக்கப்படுவது ஏன்?

பெங்களூரு: இன்றைய தேதியில் பாஜகவினராலும், மத்திய, மாநில‌ அரசுகளின் ஏஜென்சிகளாலும் அதிகமாகக் குறி வைக்க‌ப்படுவது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியோ, ராகுல் காந்தியோ அல்ல. தொட்டாலஹள்ளி கெம்பேகவுடா சிவகுமார் தான். சுருக்கமாக டிகேசி. கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவரான சிவகுமாருக்கு எதிராக எதிர்க்கட்சியினர் மட்டுமல்லாமல் சொந்த கட்சியினருமே உள்ளடி வேலைகளை பார்த்துக் கொண்டிருப்பது முரண் நிறைந்த நிதர்சனம். கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டம் கனகபுராவை அடுத்துள்ள தொட்டாலஹள்ளியை சேர்ந்தவர் டி.கே.சிவகுமார். கர்நாடக அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் ஒக்கலிகா … Read more

தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் தொலைத்தொடர்பு சேவை வழங்க அதானிக்கு உரிமம்: ஒன்றிய அரசு வழங்கியது

புதுடெல்லி: தமிழ்நாடு உட்பட 6 இடங்களில் தொலைதொடர்பு சேவை வழங்க அதானி நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு உரிமம் வழங்கி உள்ளது. சுரங்கம், துறைமுகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைத் தொடர்ந்து தொலைதொடர்பு துறையிலும் நுழைந்துள்ள அதானி குழுமம் சமீபத்தில் நடந்த 5ஜி ஏலத்தில் பங்கேற்றது. இதில் அதானியின் டேட்டா நெட்வொர்க்ஸ் நிறுவனம், 26 ஜிகா ஹொ்ட்ஸ் அதிர்வெண் கொண்ட 400 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையை ரூ.212 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. ஏலம் விடப்பட்ட மொத்த அலைக்கற்றையில் 1 சதவீதத்துக்கும் … Read more

‘லட்சுமணன் கோடு’ பற்றி அறிந்துள்ளோம், பணமதிப்பிழப்பு குறித்து விசாரிப்போம் – உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அறிவிப்பு

புதுடெல்லி: நாட்டில் உள்ள கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக ரூ.1000 மற்றும் ரூ.500 நோட்டுக்களை செல்லாததாக அறிவிக்கும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு கொண்டு வந்தது. இந்த நடவடிக்கையை எதிர்த்தும், பணமதிப்பிழப்பு சட்டத்துக்கு எதிராகவும் உச்சநீதிமன்றத்தில் கடந்த 2016-ம் ஆண்டே வழக்குகள் தொடரப்பட்டன. அப்போது இது குறித்து 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரிக்க அப்போதைய தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் பரிந்துரைத்தார். பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்குகள் உச்ச நீதிமன்ற நீதிபதி … Read more

நிர்வாண பூஜையும், நரபலி விருந்தும்; சைக்கோ ஷபியை சிக்க வைத்த செல்போன்!

கேரளாவை உலுக்கிய நரபலி வழக்கில் புதிய புதிய தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. பணக்காரராக வேண்டும் என்ற ஆசைப்பட்ட தம்பதியை வைத்து இரண்டு பெண்களை அழைத்து வந்து நரபலி கொடுத்துள்ளார் சைக்கோ ஆசாமியும், பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவருமான ஷபி. இவர் மாந்திரீகம் பார்த்து வந்துள்ளார். கிட்டதட்ட மந்திரவாதி ரேஞ்சுக்கு மக்கள் மத்தியில் பேசப்பட்டு வந்தவர். ஷபி பின்னணி குறித்து போலீசார் தெரிவித்த தகவல்கள் பலரையும் பதற வைத்து வருகிறது. கேரளாவில் மூதாட்டி உள்ளிட்ட … Read more