`உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக இவர்…’ பரிந்துரைத்த தற்போதைய தலைமை நீதிபதி!

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சந்திரசூட்டை நியமிக்க தற்போதைய தலைமை நீதிபதி யு.யு. லலித் பரிந்துரை செய்துள்ளார். உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதியான லலித் வரும் நவம்பர் எட்டாம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். தனக்கு அடுத்து யார் தலைமை நீதிபதியாக வர வேண்டும் என்ற பெயர் பரிந்துரையை அவர் மத்திய அரசுக்கு வழங்க வேண்டும். அதேநேரம், தற்போது உச்சநீதிமன்றத்தின் அடுத்த மூத்த நீதிபதியொருவரின் பெயரைத்தான் அவரால் பரிந்துரையாக வழங்க முடியும். அந்த வகையில் நீதிபதி சந்திரசூட் … Read more

இந்திய ஒற்றுமை யாத்திரையில் குழந்தைகள் | காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

புதுடெல்லி: ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை குறித்து இந்திய தேர்தல் ஆணையம் காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. யாத்திரையில் குழந்தைகள் பயன்படுத்தப்படுவதாக என்சிபிசிஆர் National Commission for Protection of Child Rights (NCPCR) கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் யாத்திரையில் குழந்தைகள் பயன்படுத்தப்படுவதாக தேசிய குழந்தை உரிமைகள் ஆணையம் (என்சிபிசிஆர்) தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது. இந்தப் புகாரின் … Read more

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி: சந்திரசூட் பெயர் பரிந்துரை!

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த என்.வி.ரமணா ஓய்வுபெற்றதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் 49ஆவது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் கடந்த ஆகஸ்ட் மாதம் பொறுப்பேற்றார். அவரது பதவிக்காலம் வருகிற நவம்பர் மாதம் 8ஆம் தேதியுடன் நிறைவுபெறுகிறது. உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவி பணி மூப்பின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. பொறுப்பில் உள்ள தலைமை நீதிபதி தான் ஓய்வு பெறுவதற்கு முன்னதாக, அடுத்த நீதிபதி யார் என பரிந்துரைத்து அறிவிப்பது நடைமுறையில் உள்ளது. எனவே, கொலீஜியம் உறுப்பினர்களுடன் ஆலோசித்து … Read more

கேரளத்தில் தமிழக பெண் உள்பட 2 பெண்களை ஏமாற்றி நரபலி: ஏஜென்ட் உட்பட 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை

திருவனந்தபுரம்: கேரளத்தில் தமிழக பெண் உள்பட 2 பெண்களை ஏமாற்றி நரபலி கொடுக்கப்பட்டது தொடர்பாக ஏஜென்ட் உட்பட 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறது. கொச்சியில் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்து வந்த தருமபுரியை சேர்ந்த பத்மா என்பவரை ஏமாற்றி அழைத்து சென்று நரபலி கொடுத்தது அம்பலமாகியுள்ளது. பணக்காரர்கள் ஆக வேண்டும் என்பதற்காக லைலா மற்றும் பகவந்த் சிங் தம்பதி 2 பெண்களை கடத்தி சென்று நரபலி கொடுத்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர்: தீவிரவாதிகள் தாக்குதலில் ராணுவ மோப்ப நாய் படுகாயம்

வீட்டிற்குள் நுழைந்த ராணுவ மோப்ப நாய் அங்கிருந்த தீவிரவாதிகளை கவ்வி பிடிக்க முயன்றபோது துப்பாக்கிச்சூடு தாக்குதலுக்கு உள்ளானது. ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் தங்ப்வாரா எனும் பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வீட்டில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் வந்தது. இதனையடுத்து அந்த வீட்டை நோக்கி ராணுவத்தில் பயிற்சி பெற்ற ஜூம் என்ற பெயர் கொண்ட நாய் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது.  வீட்டிற்குள் நுழைந்த ஜூம் அங்கிருந்த தீவிரவாதிகளை கவ்வி பிடிக்க … Read more

காஷ்மீரில் துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளாகியும் தீவிரவாதிகளுடன் போராடிய நாய்

ஸ்ரீநகர்: ராணுவத்தில் சேவையில் உள்ள நாய் ஒன்று தீவிரவாதிகளால் சுடப்பட்ட பின்னரும் கூட அவர்களுடன் போராடி அவர்களை பாதுகாப்புப் படையினரிடம் பிடித்துக் கொடுத்துள்ள சம்பவம் கவனம் பெற்றுள்ளது. ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் தங்ப்வாரா எனும் பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வீட்டில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் வந்தது. இதனையடுத்து அந்த வீட்டை நோக்கி ராணுவத்தில் பயிற்சிபெற்ற நாய் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டது. ஜூம் என்ற பெயர் கொண்ட அந்த நாய் … Read more

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளில்,அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான முதற்கட்ட கலந்தாய்வு தொடக்கம்..

எய்ம்ஸ், ஜிப்மர் போன்ற மத்திய அரசின் மருத்துவக்கல்வி நிறுவனங்கள் மற்றும் அனைத்து மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளில், அகில இந்திய ஒதுக்கீட்டில் சேருவதற்கான முதற்கட்ட கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கு வரும் 17ம் தேதி முதல் 28ம் தேதி வரை முதற்கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது. அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதற்கட்ட கலந்தாய்வில் சேரும் மாணவர்களுக்கு, வரும் 15ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என … Read more

தேவர் குருபூஜையில் பங்கேற்பு: அக்.30ம் தேதி தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி?

டெல்லி: ஒரு நாள் பயணமாக அக்டோபர் 30ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வருகிற 30ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை நடைபெற உள்ளது. பசும்பொன்னில் நடைபெறவுள்ள தேவர் ஜெயந்தி குரு பூஜை விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குருபூஜை நிகழ்வில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு தமிழக பாஜக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பினை ஏற்று பிரதமர் மோடி வரும் 30ஆம் … Read more

`வருமானத்தைவிட 579% கூடுதல் சொத்து சேர்த்துள்ளார் ஆ.ராசா’- குற்றப்பத்திரிகை தாக்கல் விவரம்

பாஜக தலைமையிலான மத்திய அரசில் இணை அமைச்சராக இருந்த திமுக எம்.பி ஆ.ராசாக்கு எதிராக 2015ஆம் ஆண்டில் வருனானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த்தாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் சென்னை சிபிஐ, சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன் முழு விவரம், இங்கே. ஏழு வருடங்கள் பழமையான இந்த வழக்கின் விசாரணை ஏற்கெனவே முடிந்த போதும், சமீபத்தில் சென்னையில் உள்ள சிபிஐ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஆ. ராசா மற்றும் ஐந்து பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகையை ஏஜென்சி தாக்கல் … Read more

காங்கிரஸ் கட்சியை புதிய உச்சத்திற்கு எடுத்துச் செல்வேன் – மல்லிகார்ஜூன கார்கே

கவுகாத்தி: “கூட்டுத்தலைமை மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அனைத்து உறுப்பினர்களுடனும் இணைந்து பணியாற்றி கட்சியை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வேன்” என்று காங்கிரஸ் மூத்த தலைவர், கட்சி தலைவர் வேட்பாளர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். வடகிழக்கு மாநிலங்களின் காங்கிரஸ் கட்சியினரிடம் மல்லிகார்ஜூன கார்கே திங்கள்கிழமை உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,”உதய்பூர் பிரகடன”த்தை அமல்படுத்துவதே எனது முக்கியமான நோக்கம்.பெண்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், பட்டியல், பழங்குடி இனத்தவர் உள்ளிட்ட 50 வயதிற்கும் குறைவானவர்களை கட்சி பொறுப்புகளில் நியமித்து கட்சிக்கு புதிய ரத்தம் … Read more