சாலையைக் கடக்க முயன்ற காண்டா மிருகம் சரக்கு லாரி மீது மோதி காயம்..!

அசாமில் சாலையைக் கடக்க முயன்ற காண்டா மிருகம், சரக்கு லாரி மீது மோதி காயமடைந்த வீடியோவை டிவிட்டரில் பகிர்ந்த முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா ஷர்மா, காசிரங்கா பகுதியில் 32 கிலோ மீட்டர் தூர மேம்பாலம் கட்டப்படும் என அறிவித்துள்ளார். ஹல்திபாரி என்ற இடத்தில் சரக்கு லாரி ஒன்று சென்றபோது, சாலையில் சென்ற காண்டா மிருகம், அதன் மீது மோதி சரிந்து விழுந்தது. பின்னர் எழுந்து நடந்த காண்டா மிருகம், மீண்டும் தடுமாறி கீழே விழுந்து பிறகு காட்டுப் … Read more

தேசிய மாநாட்டை புறக்கணித்த ஆர்ஜேடி மாநில தலைவர் ஜக்தானந்த் சிங் – கட்சியில் புதிய குழப்பம்

ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தேசிய மாநாட்டை  அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஜக்தானந்த் சிங் புறக்கணித்தது கட்சிக்குள் புதிய குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவுக்கு மாட்டுத் தீவன ஊழல் தொடர்பான பல்வேறு வழக்குகளில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது ஜாமீனில் உள்ள அவர் அக்டோபர் 10 முதல் 25ஆம் தேதி வரை சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்ல நீதிமன்றத்திடம் அனுமதி கோரியிருந்தார். அதற்கு … Read more

வாகன ஓட்டிகளுக்கு வந்தது புது சிக்கல்! அதிரடி உத்தரவு!

வாகனம் இல்லாத வீடுகளே இல்லை என்கிற நிலைமை தற்போது வந்துவிட்டது, இப்போதெல்லாம் யாருமே மிதிவண்டிகளை பயன்படுத்துவதில்லை.  பைக், கார், பேருந்து போன்ற வாகனங்களை தான் போக்குவரத்திற்கு பயன்படுத்துகின்றனர், இதுபோன்ற வாகனங்கள் ஒருபுறம் நமக்கு சௌகரியத்தை கொடுத்தாலும் மறுபுறம் இது நம்முடைய சுற்றுசூழலுக்கு முழுக்க முழுக்க தீங்கினை விளைவிக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.  வாகனங்களிலிருந்து வெளியேறும் நச்சு புகையால் நமது வளிமண்டலம் மாசடைகிறது, நமது சுற்றுசூழல் ஆரோக்கியமாக இருந்தால் தான் நாமும் ஆரோக்கியமாக இருக்க முடியும்.  … Read more

ராஜஸ்தான்: கொலுசுக்கு ஆசைப்பட்டு 100 வயது மூதாட்டியின் கால்களை துண்டாக்கிய கொள்ளையர்கள்!

கொலுசுக்கு ஆசைப்பட்டு 100 வயது மதிக்கத்தக்க பெண்ணின் காலையே கொள்ளையர்கள் வெட்டிச்சென்ற கொடூர சம்பவம் ராஜஸ்தானில் நடந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 100 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் வீட்டிற்கு வெளியே வேலையில் ஈடுபட்டிருந்துள்ளார். அப்போது அங்குவந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மூதாட்டியின் காலிலிருந்த பழங்கால நகையான கொலுசை பறிக்க முயன்றுள்ளனர். அதற்காக மூதாட்டியின் கால்களையே வெட்டி கொலுசை திருடிச்சென்றுள்ளனர். இதுகுறித்து ஜெய்ப்பூர் காவல்துறை அதிகாரி கல்தா பி.எஸ் கூறுகையில், ’’கிட்டத்தட்ட 100 வயது மதிக்கத்தக்க … Read more

’ஒற்றுமை யாத்திரையின் முடிவில் ராகுல் ஒரு புதிய அவதாரமாக உருவெடுப்பார்’ – திக்விஜய் சிங்

கர்நாடகா: இந்திய ஒற்றுமை யாத்திரையின் முடிவில் ராகுல் காந்தி ஒரு புதிய அவதாரமாக பார்க்கப்படுவார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார். இந்திய ஒற்றுமை யாத்திரையை கடந்த மாதம் ராகுல் காந்தி கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து தொடங்கினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் யாத்திரையை தொடங்கிவைத்தார். ஒருமாத காலம் நிறைவடைந்துள்ள நிலையில் ராகுல் தற்போது கர்நாடகாவில் யாத்திரையில் ஈடுபட்டுள்ளார். விரைவில் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கும் கர்நாடகாவில் ராகுல் காந்தி 19 நாட்களுக்கு நீண்ட பயணத்தை மேற்கொள்கிறார். இந்நிலையில் … Read more

தொழிலதிபரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற இருவர் – அச்சத்தை ஏற்படுத்த கடை முன் துப்பாக்கிச்சூடு..!

டெல்லியில், தொழிலதிபரை மிரட்டி பணம் பறிக்கும் நோக்கில், அவரது கடையை நோக்கி துப்பாக்கியால் சுட்ட இருவரை போலீசார் தேடி வருகின்றனர். தரிய்பூர் பகுதியில் உள்ள கடைக்கு, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், கடையின் முன் துப்பாக்கிச்சூடு நடத்தி, கடை உரிமையாளரிடம் 50 லட்ச ரூபாய் தருமாறு, மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. டெல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர். Source link

உத்தரபிரதேசத்தில் மழை மற்றும் மின்னல் தாக்கிய சம்பவத்தில் கடந்த 3 நாளில் 23 பேர் உயிரிழப்பு; மாநில அரசு தகவல்

லக்னோ: உத்தரபிரதேசத்தில் மழை மற்றும் மின்னல் தாக்கிய சம்பவத்தில் கடந்த 3 நாளில் 23 பேர் பலியானதாக மாநில நிவாரண ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது. உத்தபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் இடி மின்னலுடன் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 6ம் தேதி முதல் நேற்று வரை மாநிலம் முழுவதும் மழை பாதிப்பு தொடர்பான சம்பவங்களில் இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் ஒன்பது பேர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடியாக நிவாரணம் … Read more

நடப்பு நிதியாண்டின் நேரடி வரி வசூல் உயர்வு… விவரங்களை வெளியிட்ட நிதி அமைச்சகம்

நடப்பு நிதியாண்டான 2022-23க்கான நேரடி வரி வசூல், அக்டோபர் 8, 2022 வரையில் ரூ. 8.98 லட்சம் கோடி என்று நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. நிதியாண்டு 2022-23க்கான வரிவசூல் குறித்து நிதி அமைச்சகம் தெரிவித்திருப்பதாவது, நடப்பு நிதியாண்டுக்கான அக்டோபர் 8, 2022 வரையிலான நேரடி வரி வசூலின் தற்காலிக இலக்கம், தொடர்ந்து சீரான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதன்படி மொத்த வசூல் ரூ. 8.98 லட்சம் கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தின் மொத்த … Read more

உதயசூரியன் சின்னம் கேட்ட உத்தவ் தாக்கரே… தீராத குழப்பத்தில் சிவசேனா!

மகாராஷ்டிர அரசியலில் ஆளுங்கட்சியாக உள்ள சிவசேனாவிற்கு தீராத சோதனை காலம். பால் தாக்கரே தொடங்கி வைத்து இந்துத்துவா கொள்கையை தூக்கி பிடித்து வளர்ந்த கட்சி தற்போது யாருக்கு சொந்தம் என்ற கேள்விக்கு விடை தெரியாமல் நிற்கிறது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா ஆதரவாளர்களுடன் பிரிந்து சென்று பாஜக உடன் கைகோர்த்து முதல்வர் நாற்காலியில் அமர்ந்து கொண்டது. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா எதிர்க்கட்சி போல ஓரங்கட்டப்பட்டு விட்டது. கட்சி தங்களுக்கு தான் என இருதரப்பினரும் மாறி மாறி … Read more

மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.2.9 கோடி மதிப்பிலான 665 வெளிநாட்டு விலங்குகள் பறிமுதல்

மும்பை: மலேசியாவில் இருந்து மும்பைக்கு கடத்தி வரப்பட்ட சுமார் ரூ.2.9 கோடி மதிப்பிலான 665 வெளிநாட்டு விலங்குகளை வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மலேசியாவில் இருந்து மும்பைக்கு தொட்டியில் வைத்து வளர்க்கக் கூடிய மீன்கள் என்ற போர்வையில் வெளிநாட்டு விலங்குகள் கடத்தி வந்துள்ளதாக வருவாய் புலனாய்வு இயக்குனரகத்திற்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து  வைல் பார்லே மேம்பாலத்தில் வாகன சோதனையிட்ட அதிகாரிகள், வெளிநாட்டு விலங்குகளை கடத்திச் சென்ற வாகனத்தை மடக்கிப் பிடித்தனர். அந்த வாகனத்தை சோதனையிட்ட … Read more