கர்நாடக வனப் பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த தமிழக டாக்டர்!!

கர்நாடக வனப் பகுதியில் வன விலங்குகளை வேட்டையாட துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்ததாக தமிழகத்தை சேர்ந்த மருத்துவர் உட்பட மூன்று பேரை கர்நாடக வனத் துறையினர் அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் அடுத்த ஏரிக்காடு பகுதியில் வசித்து வருபவர் மாரிமுத்து (27). இவர் தனது நண்பர்களான நல்லாம்பட்டியைச் சேர்ந்த டாக்டர் கவின்குமார் (27) மற்றும் விக்னேஷ் (25) ஆகியோருடன் கடந்த 3 நாட்களுக்கு முன்பு நாட்டு துப்பாக்கி மற்றும் ஏர்கன் உடன் … Read more

குடும்ப அட்டைதாரர்களுக்கு தீபாவளி பரிசு… மாநில அரசு ஜாக்பாட் அறிவிப்பு!

மகாராஷ்டிர மாநிலத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வரும் தீபாவளி பண்டிகையை ஒட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பரிசுத் தொகுப்பை அளிக்க மாநில அரசு ஆலோசித்து வந்தது. வரும் 24ஆம் தேதி திங்கட்கிழமை தீபாவளி பண்டிகை வருவது கவனிக்கத்தக்கது. இதுதொடர்பாக மும்பையில் ஆலோசனை நடத்திய மாநில அமைச்சரவை, 100 ரூபாய்க்கு மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க ஒருமனதாக முடிவு செய்தது. இதில் ஒரு … Read more

உத்தராகண்ட்டில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து: 25 பேர் உயிரிழந்த பரிதாபம்..!

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தில் பயணிகள் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உத்தராகண்ட்டின் மலை மாவட்டமான பவுரி கார்வாலில் நேற்று இரவு பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. 46 பயணிகளுடன் சென்ற இந்த பேருந்து துமாகோட் பகுதியில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. அப்போது பேருந்து பல முறை உருண்டதால் அதில் இருந்த மக்கள் அலறினர். இதனை தொடர்ந்து மலை கிராமத்தினர் அளித்த தகவலை அடுத்து விரைந்து வந்த பேரிடர் மேலாண்மை படையினர் இரவு … Read more

பணபரிவர்த்தனை மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அனில் தேஷ்முக்கிற்கு ஜாமீன்: மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு

மும்பை: பண பரிவர்த்தனை மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக்கிற்கு ஜாமீன் வழங்கி மும்பை ஐகோர்ட் நீதிபதி என்.ஜே.ஜம்தார் நேற்று உத்தரவிட்டார். ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து அமலாக்கத் துறை சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்வதற்கு வசதியாக இந்த தீர்ப்பை 13ம் தேதிவரை அமல் செய்யக் கூடாது என்றும் நீதிபதி தடை விதித்துள்ளார். உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சியில் உள்துறை அமைச்சராக இருந்தவர் அனில் தேஷ்முக். இவர் … Read more

”370-ஐ நீக்கினால் ரத்த ஆறுதான் ஓடும் என்றார்கள்.. ஆனால்” – காஷ்மீரில் அமித்ஷா பேச்சு

ஜம்மு-காஷ்மீரில் 370 சட்டப்பிரிவை நீக்கினால் ரத்த ஆறு ஓடும் என சிலர் கூறிய நிலையில், மோடி என்ற முழக்கம் மட்டுமே தற்போது எதிரொலிப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீருக்கு 2 நாள் சுற்றுப்பயணம் சென்றுள்ள அமித்ஷா, வைஷ்ணவி கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். பின்னர், ரெஜோரி பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ஜம்மு-காஷ்மீர் இளைஞர்கள் கைகளில் கற்களுக்கு பதிலாக தற்போதுபுத்தகங்கள் மற்றும் மடிக்கணினிகளை வைத்திருப்பதாக அமித் ஷா தெரிவித்துள்ளார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

இலவசங்கள் எப்படி கொடுப்பீங்க? கட்சிகளுக்கு கிடுக்குப்பிடி போட்ட தேர்தல் ஆணையம்!

இந்தியாவில் தேர்தல் அரசியலை பொறுத்தவரை ஏராளமான வாக்குறுதிகளை முன்வைத்தே கட்சிகள் களம் காண்கின்றன. குறிப்பாக தங்களுடைய தேர்தல் வாக்குறுதிகளில் ஏதாவது ஒரு இலவசத்தை கட்டாயம் சேர்த்து விடுகின்றன. இது விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலை ஏற்றம் காணச் செய்யும் நடவடிக்கையாக சில அரசியல் கட்சிகள் கையாண்டாலும், வசதி படைத்தவர்களும் பயன்பெறுவதை தடுக்க இயலவில்லை. இதற்கிடையில் இலவசங்கள் மக்களை சோம்பேறிகளாக மாற்றுகின்றன என்பன போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வெறு விமர்சனமாக மட்டுமின்றி யாரும் எதிர்பாராத வகையில் … Read more

ஹலோ சொல்ல வேண்டாம்; வந்தே மாதரம் சொல்லுங்கள் – அரசு ஊழியர்களுக்கு மகாராஷ்டிரா அரசு உத்தரவு

மும்பை: இனி தொலைபேசியில் பேசும்போது ஹலோ சொல்வதற்கு பதிலாக வந்தே மாதரம் எனக் கூறுமாறு அரசு அதிகாரிகளுக்கு மகராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது. முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிரா அரசு அண்மையில் அரசு அதிகாரிகளுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், ‘அரசு ஊழியர்கள் மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களில் பணியாற்றும் அதிகாரிகள் தொலைபேசியில் குடிமக்கள் அல்லது அதிகாரிகளிடம் பேசும்போது ‘ஹலோ’ என்ற வார்த்தையை பயன்படுத்தக்கூடாது. அதற்குப் பதிலாக ‘வந்தே மாதரம்’ என்று கூறிய தங்களது பேச்சை … Read more

புதுச்சேரி, காரைக்காலில் பலத்த பாதுகாப்புடன் நடந்த ஆர்எஸ்எஸ் பேரணி

புதுச்சேரி மற்றும் காரைக்கால்: தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் யூனியன் பிரதேசமான புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அமைதியான முறையில் பலத்த பாதுகாப்புடன் பேரணி நடத்தப்பட்டது. இப்பேரணியில் புதுச்சேரி அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் சரவணன் குமார் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழகம் முழுவதும் அணிவகுப்பு பேரணி நடத்த ஆர்எஸ்எஸ் சார்பில் அனுமதி கோரப்பட்டது. சட்டம் – ஒழுங்கு பாதுகாப்பு காரணங்களைக் காட்டி ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணிக்கு தமிழக அரசு அனுமதி மறுத்தது. … Read more

சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவ் உடல்நிலை கவலைக்கிடம்

குருகிராம்: சமாஜ்வாதி கட்சியை தொடங்கிய முலாயம் சிங் யாதவ், உ.பி. மாநிலத்தின் முதல்வராக 3 முறை பதவிவகித்துள்ளார். மேலும் மத்திய அமைச்சராகவும் பதவிவகித்துள்ளார். கடந்த 2012-ல் உ.பி.யில் சமாஜ்வாதி பெருவாரியான வெற்றி பெற்றபோது மகன் அகிலேஷ் யாதவை, முதல்வராக பதவியில் உட்கார வைத்தார் 82 வயதான முலாயம். கட்சிப் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தி வந்த முலாயம் 2019 மக்களவைத் தேர்தலில் மைன்புரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி கண்டார். இந்நிலையில் நேற்று அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. … Read more

ராகுல் காந்தி பாத யாத்திரையில் பங்கேற்கிறார் சோனியா

புதுடெல்லி: தமிழகத்தின் கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் மாதம் 7-ம் தேதி பாத யாத்திரையை தொடங்கிய ராகுல் காந்தி, கேரளாவுக்கு அடுத்து கர்நாடகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நுழைந்தார். இந்த மாநிலத்தில் 21 நாட்களில் 511 கி.மீ. வரை அவர் நடைப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த நிலையில், அம்மாநிலத்தில் அக்டோபர் 6-ம் தேதி நடைபெறவுள்ள நடை பயணத்தின்போது காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியும் பங்கேற்க உள்ளார். இவ்வாறு காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. Source link