நமிபியா சிவிங்கிப் புலிகளின் ஃப்ர்ஸ்ட் லுக்

புதுடெல்லி: சிவிங்கிப் புலிகளை மறுஅறிமுகப்படுத்தும் திட்டத்தின் மூலமாக நமிபியாவிலிருந்து இந்தியா கொண்டு வரப்பட இருக்கும் நிலையில் அவற்றின் முதல் வீடியோ வெளியாகியுள்ளது. கடந்த 1952-ல் இந்தியாவில் சிவிங்கிப் புலிகள் முற்றிலும் அழிந்து விட்டதாக அரசாங்கம் அறிவித்தது. கடைசியாக சத்தீஸ்கரின் கோரியா மாவட்டத்தில் சால் வனப்பகுதியில் 1948-ல் ஒரு சிவிங்கி இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது தான் இந்தியாவின் கடைசி சிவிங்கியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 70 ஆண்டுகளுக்கு பிறகு, சிவிங்கிப்புலி மறுஅறிமுகத்திட்டம் மூலமாக 8 சிவிங்கிப் புலிகள் இந்தியாவிற்கு … Read more

சீன கடன் செயலி விவகாரத்தில் பேடிஎம் உள்ளிட்ட நிறுவனங்களின் ரூ.46.67 கோடி நிதி முடக்கம்

டெல்லி: சீன கடன் செயலி விவகாரத்தில் பேடிஎம் உள்ளிட்ட நிறுவனங்களின் ரூ.46.67 கோடி நிதியை அமலாக்கத்துறை முடங்கியுள்ளது. ஏற்கனவே சோதனை நடந்த நிலையில் Easebuzz, Razorpay, Cashfree, Paytm நிறுவனத்தின் ரூ.46.67 கோடி நிதி முடக்கப்பட்டுள்ளது.

புதிய தலைமை செயலகத்துக்கு அம்பேத்கரின் பெயர் – முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவிப்பு

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்துக்கு ஹைதராபாத்தில் புதிதாகக் கட்டப்படும் தலைமை செயலக பணிகளை நேற்று முதல்வர் கே.சந்திரசேகர ராவ் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது: இந்திய சட்டத்தை இயற்றி, பிற்படுத்தப்பட்டோரின் வாழ்க் கையில் ஒளி ஏற்றி வைத்த டாக்டர் அம்பேத்கரின் பெயரே புதிய தலைமை செயலகத்துக்கு சூட்டப்படும். சட்டத்தை இயற்றும் இடத்தில் அம்பேத்கரின் பெயரை சூட்டுவதே நியாயமானதாகும். இது நம் நாட்டுக்கே முன்னு தாரணமாக திகழ வழி வகுக்கும். அனைத்து தரப்பு மக்களும் கவுரமாக வாழ வேண்டும் … Read more

டெல்லியில் அம்பேதகரும்-மோடியும் சீர்திருத்திருத்தவாதிகளின் சிந்தனையும் செயல்விரர்களின் நடவடிக்கை: நூல் வெளியிட்டு விழா

டெல்லி: அம்பேதகரும்-மோடியும் சீர்திருத்திருத்தவாதிகளின் சிந்தனையும் செயல்விரர்களின் நடவடிக்கையும் என்ற நூல் டெல்லியில் இன்று வெளியிட்டனர். டெல்லியில் ஒன்றிய தகவல் ஒளிபரப்புத்துறை சார்பில் நடந்த விழாவில் முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நூலை வெளியிட்டார். நூல் வெளியிட்டு விழாவில் ஒன்றிய அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், எல்.முருகன், நடிகை குஷ்பூ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அகமதாபாத் மருத்துவக் கல்லூரிக்கு பிரதமர் மோடியின் பெயரை சூட்ட முடிவு

குஜராத்தில் பிரம்மாண்ட கிரிக்கெட் ஸ்டேடியத்துக்கு பிரதமர் மோடியின் பெயர் சூட்டப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது மருத்துவக் கல்லுாரிக்கும் அவரது பெயர் சூட்டப்பட உள்ளது. குஜராத்தில் உள்ள அகமதாபாத் மாநகராட்சி பாஜக வசம் இருந்து வருகிறது. அகமதாபாத்தின் மணி நகா் பகுதியில் மருத்துவக் கல்வி அறக்கட்டளை சாா்பில் மருத்துவக் கல்லூரி நடத்தப்படுகிறது. இந்நிலையில், அகமதாபாத் மருத்துவக் கல்வி அறக்கட்டளை மருத்துவக் கல்லூரி என்ற பெயரில் செயல்பட்டு வந்த இந்த கல்லூரி, தற்போது நரேந்திர மோடி மருத்துவக் கல்லூரி எனப் பெயா் … Read more

குலாம் நபி ஆசாத்திற்கு கொலை மிரட்டல்: ஆயுதங்களைக் கைவிட வேண்டுகோள் விடுத்த நிலையில் தீவிரவாதிகள் அச்சுறுத்தல்

அனந்த்நாக்: தீவிரவாதிகள் ஆயுத கலாச்சாரத்தை கைவிட வேண்டும் என்று குலாம் நபி ஆசாத் வேண்டுகோள் விடுத்ததைத் தொடர்ந்து, தீவிரவாத குழு ஒன்று அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியில் இருந்து சமீபத்தில் வெளியேறியவருமான குலாம் நபி ஆசாத் புதுக்கட்சி தொடங்க இருப்பதாக அறிவித்திருந்தார். அதுதொடர்பாக அவர் காஷ்மீர் முழுவதும் பொதுக்கூட்டங்களும் நடத்தி வருகிறார். அப்படியான பொதுக்கூட்டம் ஒன்றில் வியாழக்கிழமை பேசிய குலாம் நபி ஆசாத் காஷ்மீரில் உள்ள தீவிரவாதக் குழுக்கள் … Read more

நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான சீருடையை அமல்படுத்தக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்..!!

டெல்லி: நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான சீருடையை அமல்படுத்தக்கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த விவகாரம் உச்சநீதிமன்ற வரம்பிற்கு உட்பட்டது அல்ல எனக்கூறி மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: தமிழகம் உள்பட 45 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

புதுடெல்லி: டெல்லி அரசின் மதுபானக் கொள்கை தொடர்பான ஊழல் வழக்கில், நாடு முழுவதும் தமிழகம் உள்பட 40க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். மதுபான தொழிலதிபர்கள், விநியோகஸ்தர்கள் இத்தொழிலில் உள்ள சப்ளை செயின் தொடரில் இருப்பவர்களுக்கு சம்பந்தப்பட்ட இடங்களில் இச்சோதனை நடைபெறுகிறது. ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு, டெல்லி, தெலங்கானா, மகாராஷ்டிரா, ஹரியாணா, உத்தரப் பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மொத்தம் 40க்கும் மேற்பட்ட இடங்களில் ரெய்டு நடந்து வருகின்றது. அண்மையில் தான் டெல்லி … Read more

2014-ம் ஆண்டுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்ட13,147 வழக்குகளை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: 2014-ம் ஆண்டுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்டு தற்போது நிலுவையில் உள்ள 13,147 வழக்குகளை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கூடுதல் மனுக்களை தக்கல் செய்ய உச்சநீதிமன்றம் கால அவகாசம் வழங்கியும் தாக்கல் செய்யாததால் வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லக்னோவில் சுவர் இடிந்து விழுந்து விபத்து: 9 தொழிலாளர்கள் பலி; இருவர் காயம்

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் தில்குஷா கன்டோன்மென்ட் கனமழை காரணமாக சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 3 சிறார் உள்பட 9 பேர் பலியாகினர். இரண்டு பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் லக்னோ சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரீ சூர்ய பால், நேரில் சென்று பார்வையிட்டார். சம்பவம் குறித்து காவல்துறை இணை ஆணையர் பியுஷ் மோர்டியா கூறுகையில், “தில்குஷா பகுதியில் ராணுவ குடியிருப்பை ஒட்டி சில தொழிலாளர்கள் குடிசை அமைத்து வசித்துவந்தனர். … Read more