இந்திய வான் எல்லையில் பறந்த ஈரான் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு

டெல்லி: இந்திய வான் எல்லையில் பறந்த ஈரான் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது. சீனாவில் விமானம் தரையிறங்க உள்ள நிலையில் மிரட்டல் விடுக்கப்பட்டதால் இந்திய விமானப்படை கண்காணித்து வருகிறது.

எச்சரிக்கைகளில் அலட்சியம் கூடாது.. அமைச்சர்களுக்கு பிரதமர் அறிவுரை..!

தேசிய பாதுகாப்பு ஆலோசகர்,தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் மூலமாக வரும் எச்சரிக்கைகளை அலட்சியப்படுத்த வேண்டாம் என்று மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். பிரதமர் மோடி தலைமையில் நேற்று டெல்லியில் மத்திய அமைச்சர்களின் கூட்டம் நடைபெற்றது. சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற இக்கூட்டத்தில் மத்திய அரசின் அனைத்து அமைச்சக செயலாளர்களும் கலந்துக் கொண்டனர். தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் விக்ரம் மிஸ்ரி சில பரிந்துரைகளை உள்ளடக்கிய அறிக்கையை பிரதமர் மோடியிடம் தாக்கல் செய்தார். இதையடுத்து எந்த … Read more

'பிரிட்டிஷ் பேரரசை காந்தி எதிர்த்து போராடியது போல், காந்தியை சுட்டுக்கொன்ற சித்தாந்தத்துடன் காங். போராட்டம்': கொட்டும் மழையில் ஆவேசமாக பேசிய ராகுல்காந்தி..!!

பெங்களூரு: பிரிட்டிஷ் பேரரசை காந்தி எதிர்த்து போராடியது போல் காந்தியை சுட்டுக்கொன்ற சித்தாந்தத்துடன் காங்கிரஸ் இன்று போராடி கொண்டிருப்பதாக கொட்டும் மழையிலும் ராகுல் காந்தி ஆவேசத்துடன் பேசியுள்ளார். தமிழ்நாடு, கேரளாவை தொடர்ந்து கர்நாடகாவில் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை ராகுல் காந்தி தொடங்குகிறார். காந்தி பிறந்தநாளை முன்னிட்டு மைசூரில் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேச வந்தபோது திடீரென கனமழை பெய்ய தொடங்கியது. ஆனாலும் கனமழையை பொருட்படுத்தாமல் நனைந்தபடியே உரையை தொடர்ந்தார் ராகுல் காந்தி. இடைவிடாது மழைக்கு மத்தியில் … Read more

கொட்டும் மழையில் ராகுல் செய்த தரமான சம்பவம்… திருப்புமுனை ஏற்படுத்துமா மைசூரு?

2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பலம் வாய்ந்த பாஜகவை வீழ்த்த முடியுமா? என்பது தான் பல்வேறு தரப்பினரின் கேள்வியாக இருக்கிறது. இந்த விஷயத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டால் மட்டுமே சாத்தியம் என்று சொல்லப்படும் நிலையில், அரசியல் களம் புதிய திருப்பங்களை அளித்து வருகிறது. இருப்பினும் காங்கிரஸை தூக்கி நிறுத்துவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு களமிறங்கியுள்ளார் ராகுல் காந்தி. காங்கிரஸ் இனிமேல் அவ்வளவு தான் என்று பலரும் பேசிக் கொண்டிருக்கையில் புது ரத்தம் பாய்ச்ச இந்திய ஒற்றுமை பயணத்தை … Read more

முலாயம் சிங் ஐசியுவில் அனுமதி

புதுடெல்லி: சமாஜ்வாடி கட்சி நிறுவனரான முலாயம் சிங் உடல் நிலை கவலைக்கிடமானதைத் தொடர்ந்து அவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சி நிறுவனருமான முலாயம் சிங் (வயது 82), உடல் நலக் குறைவால் குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று அவரது உடல் நிலை கவலைக்கிடமானது. இதனால் உடனடியாக அவர் ஐசியு வார்டுக்கு மாற்றப்பட்டிருப்பதாகவும், முலாயம் சிங்குக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிப்பதாகவும் சமாஜ்வாடி கட்சி … Read more

டி-20 கிரிக்கெட்டில் இரட்டை சாதனை படைத்த சூர்யகுமார் யாதவ்..!

தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக நேற்று நடந்த இரண்டாவது டி 20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் இரட்டை சாதனைகளைப் படைத்தார். குறைந்த பந்துகளில் அதிவேக அரை சதம் எடுத்தது,  மற்றொன்று டி 20 போட்டிகளில் அதிவேகமாக 1000 ரன்களைக் கடந்த இந்திய வீரர்களின் வரிசையில் மூன்றாவதாக இணைந்தது என்ற சாதனைகளை படைத்தார். அதிவேகமாக ஆயிரம் ரன்களை கடந்தவர்களில் முதலாம் இடத்தில் விராட் கோலியும், இரண்டாம் இடத்தில் கே.எல்.ராகுலும் உள்ளனர் Source link

8 ஆண்டுகளுக்குப் பிறகு மங்கள்யான் செயலிழந்தது? இஸ்ரோ தகவல்

புதுடெல்லி: கடந்த 8 ஆண்டுகளாக செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்த மங்கள்யான் விண்கலம் செயல் இழந்திருப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக ரூ.450 கோடியில் இந்தியாவில் மங்கள்யான் விண்கலத்தை இஸ்ரோ தயார் செய்தது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து கடந்த 2013ம் ஆண்டு நவம்பர் 5ம் தேதி பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் இந்த விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. அதே ஆண்டு டிசம்பர் 1ம் … Read more

உத்தரபிரதேச மாநிலம் பதோஹியில் துர்கா பூஜை பந்தலில் ஏற்பட்ட தீ விபத்தில் 52 பேர் காயம்; 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் உயிரிழப்பு

லக்னோ; உத்தரபிரதேச மாநிலம் பதோஹியில் துர்கா பூஜை பந்தலில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 52 பேர் காயமடைந்தனர். உத்தரபிரதேச மாநிலம் பதோஹியில் துர்கா பூஜை பந்தலில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்தில் 52 பேர் காயமடைந்தனர். இரவு 9.30 மணியளவில் ஆரத்தி நடைபெற்றுக் கொண்டிருந்த போது இந்த தீ விபத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பவத்தின் போது பந்தலுக்குள் சுமார் 150க்கும் மேற்பட்டோர் இருந்தனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. … Read more

தேதி குறிச்சாச்சு… BJP-ஐ வீழ்த்த வரும் BRS… கே.சி.ஆரின் புதிய அரசியல் அவதாரம்!

தேசிய அளவில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இருப்பினும் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என்ற வியூகம் தொடர்ந்து பின்னடைவை சந்தித்துக் கொண்டே இருக்கிறது. மூன்றாவது அணி, நான்காவது அணி, தனிக்கட்சி என அதிரி புதிரி சம்பவங்களை நிகழ்த்தி வருகின்றனர். அடுத்த மக்களவை தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகளே (2024) இருக்கும் நிலையில் வரும் 5ஆம் தேதி பாரத் ராஷ்டிரிய சமிதி (BRS) என்ற புதிய தேசிய கட்சியை தொடங்கவுள்ளார் … Read more

உத்தர பிரதேசம் மாநிலம் பதோஹி துர்கா பூஜை நிகழ்ச்சியில் பயங்கர தீ விபத்து

டெல்லி: உத்தர பிரதேசம் மாநிலம் பதோஹி துர்கா பூஜை நிகழ்ச்சியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 52 பேர் படுகாயம் அடைந்த நிலையில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.