பேக்கரியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.50 கோடி ‘ஐஸ்’ போதை பொருள் பறிமுதல்

இம்பால்: பேக்கரி மற்றும் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிரந்த ரூ.50 கோடி மதிப்பிலான  ‘ஐஸ்’ போதை பொருளை மணிப்பூர் போலீசார் அதிரடியாக மீட்டு, சம்பந்தப்பட்டவரை கைது செய்தனர். மியான்மர் எல்லையில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக மணிப்பூர் ரைபிள்ஸ் (எம்ஆர்) படையினருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து மியான்மர் எல்லையில் உள்ள மோரே நகரில் உள்ளூர் போலீசாருடன் இணைந்து மணிப்பூர் ரைபிள்ஸ் படையினர் சோதனை நடத்தினர். அப்போது இம்பாலை சேர்ந்த பிஷ்னு பானிக் (32) என்பவனிடம் இருந்து ரூ.50 கோடி மதிப்பிலான … Read more

’என்னை திருமணம் செய்துகொள்’.. மறுத்த காதலிக்கு கத்திக்குத்து.. இளைஞரும் விபரீத முடிவு!

மத்திய பிரதேசத்தில் திருமண புரோபசலை நிராகரித்த பெண்ணை இளைஞர் ஒருவர் கத்தியால் சரமாரியாக குத்தியதில் அவர் கவலைக்கிடமாக உள்ளார். மத்திய பிரதேச மாநிலம் கந்த்வா மாவட்டத்திலுள்ள இந்திரா சாகர் டேம் கிராமத்தைச் சேர்ந்த பப்லு என்ற இளைஞர் பக்கத்து கிராமத்தில் பாதுகாவலராக பணிபுரிந்து வந்துள்ளார். அவர் தனது கிராமத்திலுள்ள 20 வயது பெண் ஒருவரை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக அணுகியுள்ளார். ஆனால் அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பப்லு திங்கட்கிழமை அந்த … Read more

குடும்ப கட்டுப்பாடு செய்த நான்கு பெண்கள் மரணம் ..! – தெலுங்கானாவில் பரபரப்பு..!

குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்ட பெண்களில் 4 பேர் மரணமடைந்தது தெலுங்கானாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு மருத்துவமனையில் நடந்த கருத்தடை முகாமில் கலந்து கொண்ட பெண்கள் நான்கு பேர் உயிரிழந்தனர். குடும்ப கட்டுப்பாடு செய்தவர்களில் நான்கு பெண்கள் மரணம் அடைந்துள்ளனர். தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கருத்தடை முகாமில் கலந்து கொண்டு குடும்ப கட்டுப்பாடு … Read more

RIP: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாய் இத்தாலியில் காலமானார்

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் பாவ்லா மைனோ ஆகஸ்ட் 27 அன்று இறந்தார், அவரது இறுதிச் சடங்கு செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சோனியா காந்தி கடந்த வாரம் தனது தாயாரை சந்திக்க இத்தாலிக்கு சென்றிருந்தார். மருத்துவப் பரிசோதனைக்காக சென்றிருந்த சோனியா காந்தியுடன், அவரது மகன் ராகுல் காந்தியும் , மகள் பிரியங்கா காந்தியும் அவருடன் சென்றிருந்தனர். காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், சோனியா காந்தியின் தாயார் இறந்த செய்தியை … Read more

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கர்ப்பப்பை வாய் புற்று நோய்க்கான தடுப்பூசி நாளை அறிமுகம்!

இந்தியாவில் முதன்முறையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கர்ப்பப்பை வாய் புற்று நோய்க்கான தடுப்பூசி நாளை அறிமுகப்படுத்தப்படுகிறது. பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் , கர்ப்பப்பை வாய் புற்று நோயை தடுக்க வெளிநாடுகளில் இருந்தே தடுப்பூசிகள் வரவழைக்கப்பட்டு வந்தன. ஆனால், முதன்முறையாக சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் உள்நாட்டிலேயே இந்த தடுப்பூசியை தயாரித்துள்ளது. இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்தின் அனுமதியின் பேரில் பலகட்ட சோதனைகளுக்கு பிறகு இந்த தடுப்பூசி நாளை பயன்பாட்டிற்கு வருகிறது. இந்த தடுப்பூசிக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோயை … Read more

நாளை நடைபெற இருந்த நீட் முதுகலை கலந்தாய்வு செப்டம்பர் 19ம் தேதிக்கு ஒத்திவைப்பு

டெல்லி: நாளை நடைபெற இருந்த நீட் முதுகலை கலந்தாய்வு செப்டம்பர் 19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2022 முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே மாதம் 21ம் தேதி நடைபெற்றது.

ஜனனி சுரக்‌ஷா யோஜனா | தமிழகத்தில் 3.36 லட்சம் பிரசவங்களுக்கு நிதியுதவி

சென்னை: ஜனனி சுரக்‌ஷா யோஜனா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 3.36 லட்சம் பிரசவங்களுக்கு நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது. ஜனனி சுரக்‌ஷா யோஜனா மத்திய அரசால் கர்ப்பிணித் தாய்மார்கள் இறப்பு விகிதத்தையும், பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதத்தையும் குறைக்க செயல்படுத்தும் திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் நகர்புறங்களில் அரசு மருத்துவமனைகளில் குழந்தை பெற்றுக் கொள்பவர்களுக்கு 700 ரூபாயும், கிராமப்புறங்களில் அரசு மருத்துவமனைகளில் குழந்தை பெற்றுக் கொள்பவர்களுக்கு 600 ரூபாயும் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின்படி தமிழகத்தில் 2019-20ம் ஆண்டில் 4,21,182 … Read more

சோனியா காந்தியின் தாயார் இத்தாலியில் காலமானார்..! – தலைவர்கள் இரங்கல்..!

காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் தாயார், பாவ்லா மைனோ உடல்நல குறைவால் ஆகஸ்ட் 27-ஆம் தேதி சனிக்கிழமை அன்று இத்தாலியில் உள்ள அவரது வீட்டில் காலமானார் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளரும் சமூக ஊடக பொறுப்பாளருமான ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சோனியா காந்தியின் தாயாரின் இறுதிச்சடங்கு நேற்று நடைபெற்றது என்றும் பதிவிட்டுள்ளார். சோனியா காந்தியின் தாயார் மறைவிற்கு பலர் தங்கள் இரனகளை தெரிவித்து வருகின்றனர்.

நிதிஷ்குமார் – சந்திரசேகரராவ் சந்திப்பு : எதிர்க்கட்சிகளின் நகைச்சுவை என பாஜக விமர்சனம்

பீகார் சென்றுள்ள தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், பாட்னாவில் அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமாரையும், துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவையும் நேரில் சந்தித்துப் பேசினார். கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீனப் படைகளுடனான மோதலில் கொல்லப்பட்ட வீரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு, ஏற்கனவே அறிவித்த ரூ.10 லட்சம் இழப்பீட்டுத் தொகைக்கான காசோலைகளையும் சந்திரசேகர ராவ் வழங்கவுள்ளார். மத்திய பாஜக அரசை தொடர்ந்து விமர்சித்து வருபவரான சந்திரசேகர ராவ், எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கவும் முயற்சித்து வருகிறார். பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் … Read more

கையிருப்பில் உள்ள 15 லட்சம் மெட்ரிக் டன் பருப்பு வகைகளை சலுகை விலையில் வழங்க ஒப்புதல்!

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு சலுகை விலையில் பருப்பு வகைகளை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூடியது. கொள்முதல் செய்யப்பட்டுள்ள 15 லட்சம் மெட்ரிக் டன் பருப்புகளை காலி செய்யவும், துவரை, உளுந்து மற்றும் மசூர் பருப்புகளை கொள்முதல் செய்வதற்கான வரம்பை 25 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக அதிகரிக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 12 மாத காலத்திற்கு வழங்கப்படும் இந்த சலுகை திட்டம் … Read more