பீகார் முதல்வர் நிதிஷ்குமார் லாலு பிரசாத் யாதவுடன் சந்திப்பு: உடல் நலம் விசாரித்தார்

பீகார்: டெல்லியில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்த லாலு பிரசாத் யாதவ், நேற்று பீகார் திரும்பினார். அவரை பீகார் முதல்வர் சந்தித்து உடல் நலம் விசாரித்தார். கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ், உடல் நிலை பாதிப்பு காரணமாக டெல்லியில் உள்ள தனது மகள் மிசா பாரதியின் இல்லத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். … Read more

ஒடிசா மாநிலத்தில் வெள்ளப் பெருக்கு – 237 கிராமங்களில் மக்கள் தவிப்பு

புவனேஸ்வர்: ஒடிசாவில் மகாநதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் கரையோர கிராமங்களில் வசிக்கும் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கின்றனர். ஒடிசாவில் தொடர் மழை காரணமாக மகாநதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து உயரதிகாரி ஒருவர் நேற்று கூறும்போது, “மகாநதியில் வெள்ளம் தொடர்ந்து அபாய அளவுக்கு மேல் செல்வதால் கரையோர கிராமங்களில் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் 237 கிராமங்களில் உள்ள ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கிக் தவிக்கின்றனர். இந்தப் பருவத்தில் முதல்முறையாக ஏற்பட்டுள்ள இந்த … Read more

நாட்டிற்கு எதிரான போலி செய்திகளை வெளியிட்டதாக 8 யூடியூப் சேனல்களை முடக்கியது ஒன்றிய அரசு..!!

டெல்லி: நாட்டிற்கு எதிரான போலி செய்திகளை வெளியிட்டதாக 8 யூடியூப் சேனல்களை ஒன்றிய அரசு முடக்கியிருக்கிறது. போலி செய்திகளை வெளியிடுவதாக எழுந்த புகாரின் பேரில் ஒன்றிய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் கண்காணிப்பில் ஈடுபட்டது. இதன் அடிப்படையில் பாகிஸ்தானை சேர்ந்த ஒரு சேனல் உட்பட மொத்தம் 8 யூடியூப் சேனல்களை ஒன்றிய அரசு முடக்கியிருக்கிறது. தேசிய பாதுகாப்பு, வெளிநாட்டு உறவு, பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வேறு சேனல்களில் … Read more

அங்கன்வாடி பணியாளருக்கு  ஐஎஸ் மிரட்டல் – 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு

பிஜ்னோர்: உ.பி.யில் தங்கள் பகுதி மக்களுக்கு தேசியக் கொடி விநியோகம் செய்த அங்கன்வாடி பணியாளருக்கு ஐஎஸ் தீவிரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்ததால், அவரது குடும்பத்தினருக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோரை அடுத்த கிராத்பூரைச் சேர்ந்த அன்னு (35) அங்கன்வாடி பணியாளராக உள்ளார். இவரது கணவர் சிறு வியாபாரம் செய்து வருகிறார். சுதந்திர தினத்தை முன்னிட்டு, தங்கள் பகுதி மக்களுக்கு அன்னு தேசியக் கொடியை விநியோகம் செய்துள்ளார். இந்நிலையில், அன்னுவுக்கு ஒரு … Read more

ஜம்மு காஷ்மீர்: இதோ புது உருட்டு… கொதிச்சு போன அரசியல் கட்சிகள்!

ஜம்மு காஷ்மீர் என்ற பெயரை கேட்டாலே முதலில் நினைவுக்கு வருவது சிறப்பு அதிகாரம் அளிக்கும் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதும், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதும் தான். கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த மாற்றத்தின் விளைவுகளை இன்றளவும் அப்பகுதியில் காண முடிவதாக கூறுகின்றனர். இத்தகைய அதிரடி நடவடிக்கையை பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு எடுத்தது. அதன்பிறகு பல்வேறு மாற்றங்கள், திருத்தங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் தேர்தலில் … Read more

சொகுசு காரில் சைரன் பொருத்தி ஓட்டிச் சென்ற கர்நாடக முன்னாள் எம்.பி மருமகனுக்கு ரூ.28,000 அபராதம்..!

கர்நாடகாவில், சொகுசு காரில் சைரனை பொருத்தி அதிவேகமாக ஓட்டிச் சென்ற முன்னாள் எம்.பியின் மருமகனுக்கு 28 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடக முன்னாள் எம்.பி எல்.ஆர்.சிவராமேகவுடாவின் மருமகனும் நடிகருமான ராஜீவ் ரத்தோட், தனது ஆடி சொகுசு காரில் சைரன் பொருத்தி அதனை ஒலிக்கவிட்டவாறு, பெங்களூரு விஜயநகரில் காரை அதிவேகமாக ஓட்டிச் சென்றுள்ளார். அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இதனை வீடியோ எடுத்ததோடு போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து காரை பின் தொடர்ந்து சென்று வழிமறித்து பிடித்த … Read more

மகாராஷ்ட்ரா மாநிலம் ராய்காட் மாவட்டம் அருகே கடல் பகுதியில் ஒதுங்கிய படகில் ஆயுதங்கள் பறிமுதல்

மும்பை: மகாராஷ்ட்ரா மாநிலம் ராய்காட் மாவட்டம் அருகே கடல் பகுதியில் ஒதுங்கிய படகில் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கு இடமான வகையில் கரை ஒதுங்கிய படகில் ஏ.கே.47 துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

8 யூடியூப் சேனல்களை முடக்கியது மத்திய அரசு – காரணம் என்ன?

இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டதாக 8 யூடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கியுள்ளது. இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரான செய்திகளையும், தவறான பிரசாரங்களையும் செய்து வரும் யூடியூப் சேனல்களுக்கு எதிராக, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை பரப்பியதாக 8 யூடியூப் சேனல்கள், ஒரு ஃபேஸ்புக் ஐடி, இரண்டு ஃபேஸ்புக் பதிவுகள் ஆகியவற்றை தகவல் தொழில்நுட்ப சட்டம் 2021இன் கீழ் மத்திய அரசு முடக்கியுள்ளது. இதில் பாகிஸ்தானைச் … Read more

ரோஹிங்கியாக்களுக்கு வீடு? – மத்திய உள்துறை மறுப்பு

புதுடெல்லி: மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது: இந்தியாவில் தஞ்சமடைந்த மியான்மர் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும். டெல்லியை அடுத்த பக்கர்வாலா பகுதியில் அமைந்துள்ள அரசு குடியிருப்புகளில் அவர்களுக்கு வீடுகள் வழங்கப்படும். அங்கு அவர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும். மதம், இனம், நிறம் என பாகுபாடு பார்க்காமல் அனைத்து அகதிகளுக்கும் சம மான அளவில் மரியாதையை இந்தியா அளிக்கும். இவ்வாறு மத்திய அமைச்சர் ஹர்தீப் … Read more

கல்வி, கலாச்சாரப் பயணமாக புதுவை வந்துள்ள துருக்கி மாணவர்கள்!: சுடு களிமண் பொம்மை செய்யும் முறை குறித்து பயிற்சி..!!

புதுச்சேரி: கல்வி மற்றும் கலாச்சாரப் பயணமாக புதுச்சேரி வந்துள்ள துருக்கி மாணவர்களுக்கு சுடு களிமண் பொம்மை செய்யும் முறை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளில் இருந்து புதுச்சேரிக்கு கல்வி மற்றும் கலாச்சார சுற்றுலா வரும் மாணவர்கள், அம்மாநிலத்தின் கல்வி, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை அறிந்துக் கொள்கின்றனர். அந்த வகையில் துருக்கி நாட்டில் இருந்து புதுச்சேரிக்கு வந்துள்ள 15க்கும் மேற்பட்ட உயர்கல்வி மாணவர்கள், பாரம்பரிய கலையான சுடு களிமண் பொம்மை செய்யும் பயிற்சியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு … Read more