ஜெகன் கட்சி எம்.பி. நிர்வாண வீடியோ விவகாரம் – விசாரணை நடத்த குடியரசுத் தலைவர் உத்தரவு

அனந்தபுரம்: ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், ஹிந்துபுரம் நாடாளுமன்ற தொகுதியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி உறுப்பினராக கோரண்ட்ல மாதவ். இவர், ஒரு பெண்ணுடன் தனது செல்போனில் நிர்வாணமாக பேசுவதாகக் கூறப்படும் வீடியோ புயலை கிளப்பி வருகிறது. ஆனால், இந்த வீடியோ தான் உடற் பயிற்சி செய்யும் போது எடுக்கப்பட்டது என எம்பி தரப்பில் கூறப்பட்டது. ஆனால், அந்த வீடியோவில் உண்மையிலேயே எம்பி முழு நிர்வாணமாக உள்ளாரா ? இல்லையா ? என்பது குறித்து ஆய்வு நடத்த வேண்டுமென … Read more

கடற்படைக்கு வலுசேர்க்க உள்ள ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பல்..!

கடற்படைக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பலை கொச்சியில் செப்டம்பர் 2ஆம் தேதி நடைபெறும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் முழுக்க, முழுக்க உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்கப்பல், கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்ட அந்த கப்பலை கட்டும் பணி முடிவடைந்ததை தொடர்ந்து வெற்றிகரமாக சோதனை … Read more

கடந்த ஆண்டில் நாடு முழுவதும் 1.64 லட்சம் பேர் தற்கொலை: பெண்களை விட ஆண்களே அதிகம்

புதுடெல்லி: நாடு முழுவதும் 2021ம் ஆண்டில் மட்டும் 1 லட்சத்து 64 ஆயிரத்து 33 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ‘இந்தியாவில் விபத்து மரணங்கள் மற்றும் தற்கொலைகள்’ என்ற தலைப்பில் மாணவர்கள், சம்பளம் பெறுபவர்கள், தினசரி ஊதியம் பெறுபவர்கள், ஓய்வு  பெற்றவர்கள், வேலையில்லாதவர்கள், சுயதொழில் செய்பவர்கள், வீட்டு வேலை செய்யும் பெண்கள், விவசாயத் துறையில் ஈடுபட்டுள்ள நபர்கள் மற்றும் பிற நபர்கள் என 9 வகையான பிரிவுகள் மற்றும் தொழில் அடிப்படையில் மக்களை வகைப்படுத்தி புதிய பட்டியலை … Read more

இவர் ஐபிஎல் ஆடினால் ரூ.15 கோடி நிச்சயம்… சொல்கிறார் அஷ்வின்!!

கடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய டாப் ஆர்டரை தட்டித்தூக்கி நமது வெற்றியை தட்டிப் பறித்தவர்  பாகிஸ்தான் அணியின் இடதுகை நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி. தற்போது ஆசிய கோப்பை தொடரில் இவர் இல்லாமலே பாகிஸ்தான் அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.  எதிர்வரும் உலகக்கோப்பை தொடரில் அவர் வரும் பட்சத்தில் பாகிஸ்தான் அணி கூடுதல் பலத்தோடு செயல்படும் என்று கிரிக்கெட் வட்டாரங்களில் பேசி வருகின்றனர். இது தொடர்பாக பேசிய ரவிச்சந்திரன் அஸ்வின், கடந்த டி20 … Read more

நாளை வெளியாகிறது சென்னைப் பல்கலை செமஸ்டர் தேர்வு முடிவுகள்..!!

இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த செமஸ்டர் தேர்வுகளுக்கான முடிவுகள் வரும் செப்டம்பர் 1-ம் தேதி www.unom.ac.in என்கிற இணையதளத்தில் வெளியிடப்படும். மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் செப்டம்பர் 5ம் தேதி முதல் 14 வரை www.unom.ac.in என்கிற இணையதள முகவரியில் கையெழுத்திட்டு 300ரூபாய் வரைவு காசோலையினை The Registrar university of madras என்கிற பெயரில் செப்டம்பர் 15ஆம் தேதிக்கு முன்னதாக சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

பெங்களூரு ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நடத்த  உச்ச நீதிமன்றம் அனுமதி மறுப்பு

புதுடெல்லி: பெங்களூரு சாம்ராஜ்பேட்டையில் உள்ள ஈத்கா மைதானம் வக்ப் வாரியத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்த மைதானம் அரசுக்கு சொந்தமானது என கர்நாடக அரசு அண்மையில் அறிவித்தது. இதையடுத்து சுதந்திர தினத்தின்போது பலத்த போலீஸ் பாதுகாப்புடன் முதல் முறையாக அங்கு தேசியக் கொடி ஏற்றப்பட்டது. இந்நிலையில், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி பந்தல் வைக்கப்போவதாக அறிவித்தனர். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த‌ எஸ்டிபிஐ கட்சியினர், அதனைக் கண்டித்து போராட்டம் நடத்தப்போவதாகவும் எச்சரித்தனர். இதனால் … Read more

கொச்சி, கோட்டயம் உள்ளிட்ட இடங்களில் இன்றும் கனமழை பெய்யும் என வானிலை மையம் ஆரஞ்சு எச்சரிக்கை.

கேரளாவில் பலத்த மழை பெய்து வருவதால் கொச்சி, கோட்டயம் போன்ற நகரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. பல குடியிருப்புப் பகுதிகளிலும் மழை நீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். இன்றும் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. கோட்டயத்தில் அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதனிடையே கேரளாவிலும், கர்நாடகாவிலும் மழைக்கு சுமார் இரண்டரை லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். Source link

முழு பார்வை திறன் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி மென்பொறியாளருக்கு மைக்ரோசாஃப்டில் வேலை

போபால்: மத்திய பிரதேசத்தை சேர்ந்த முழு பார்வை திறன் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி மென்பொறியாளர் யஷ் சோன்கியாவுக்கு ரூ.47 லட்சம் ஆண்டு ஊதியத்துடன் மைக்ரோசாஃப்டில் வேலை வழங்கப்பட்டுள்ளது. திரைவாசிப்பு மென்பொருள் உதவியுடன் தன்னுடைய கல்வியை பெற்றதாகவும், இலக்கை சாதிக்க உடலில் உள்ள குறைபாடுகள் தடையில்லை என யஷ் தெரிவித்துள்ளது.

துணை முதலமைச்சர் வங்கி லாக்கரில் சிபிஐ ரெய்டு!!

மதுபான உரிம முறைகேடு தொடர்பான வழக்கில் டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவின் வங்கி லாக்கரை சிபிஐ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில், மணீஷ் சிசோடியா கணக்கு வைத்திருக்கும் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு, சிபிஐ அதிகாரிகள் 5 பேர் சென்றனர். அவர்களுடன் சிசோடியாவும், அவரது மனைவியும் சென்றனர். இதையடுத்து சிசோடியாவின் வங்கி லாக்கரை திறந்து சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மணீஷ் சிசோடியா, தமது லாக்கரில் கணக்கில் வராத எந்த … Read more

வங்கதேசத்தை பந்தாடிய ஆப்கானிஸ்தான்!!

ஆசியக் கோப்பை டி20 போட்டியில் வங்கதேச அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆப்கானிஸ்தான் முதல் அணியாக சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது. டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால் ஆப்கானிஸ்தான் ஸ்பின்னர்கள் வங்கதேசத்தை சுருட்டிவிட்டனர். ஆப்கன் அணியின் ரஷீத் கான் மற்றும் முஜீப் இணைந்து ஒவ்வொரு விக்கெட்டாக வீழ்ந்தனர். இதனால் 89 ரன்கள் எடுப்பதற்குள் வங்க தேசம் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கடைசிநேரத்தில் ஆல் ரவுண்டர் மொசாடெக் ஹொசைன் … Read more