இந்திய ஒற்றுமை யாத்திரையில் கலந்து கொள்ள கர்நாடகா செல்லும் சோனியா காந்தி

புதுடெல்லி: ராகுல் காந்தியின் இந்தியா ஒற்றுமை யாத்திரையில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி திங்கள் கிழமை கர்நாடக செல்கிறார். அக்.6-ம் தேதி கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் நடைபயணம் மேற்கொள்கிறார். காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ராகுல் காந்தி கடந்த செப்.7ம் தேதி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான இந்திய ஒற்றுமை யாத்திரையைத் தொடங்கினார். இந்த யாத்திரை தமிழகம், கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களைக் கடந்த தற்போது பாஜக ஆளும் கர்நாடகாவில் நடந்து … Read more

ஓ மை காட்… பனிச்சரிவில் சிக்கி 10 பேர் பலி; மேலும் 11 பேர் கதி?

உத்தரகண்ட் மாநிலத்தில் கர்வால் இமயமலையின் கங்கோத்ரி மலைத்தொடர் திரவுபதி தண்டா-2 உச்சியில் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டு இருந்த தனியார் மலையேறும் நிறுவனத்தை சேர்ந்த 29 பேர் இன்று திடீரென பனிச்சரிவில் சிக்கினர். இதுகுறித்து தகவல் அறிந்து மாவட்ட நிர்வாகம் பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்க அதிரடியாக களம் இறங்கியது. மாவட்ட நிர்வாகத்துடன் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையும், ராணுவ வீரர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உதவியாக, இந்திய விமான படையின் 2 ஹெலிகாப்டர்கள் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. … Read more

நவராத்திரி, தீபாவளி விழாவை ஒட்டி நாடு முழுவதும் 179 சிறப்பு ரயில்களை இயக்கப்படும்: ரயில்வே நிர்வாகம்

டெல்லி: நவராத்திரி, தீபாவளி விழாவை ஒட்டி நாடு முழுவதும் 179 சிறப்பு ரயில்கள் இருமார்க்கங்களிலும் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் அதிக அளவில் கூடும் முக்கிய ரயில் நிலையங்களில் கூட்டங்களை கட்டுப்படுத்த தனிக்கவனம் செலுத்தப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உத்தரகாண்ட்: பனிச்சரிவில் சிக்கி 10 பேர் பலி! 8 பேர் மீட்பு! எஞ்சிய 11 பேர் கதி என்ன?

உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று காலை 9 மணி அளவில் நேரு மலையேறும் பயிற்சி நிறுவனத்திலிருந்து 34 பயிற்சியாளர்கள் மற்றும் 7 பயிற்றுனர்கள் உட்பட மொத்தம் 41 பேர் பேர் கொண்ட குழு ஒன்று உத்தரகாண்ட் மாநிலம், கர்வாவில் கங்கோத்ரி மலைத்தொடரின் திரௌபதி தண்டா உச்சியில் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட பனிச்சரிவில் அந்தக் குழு சிக்கியது. இது தொடர்பான தகவல் கிடைத்தவுடன் மாவட்ட நிர்வாகத்துடன், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகளும், … Read more

“ராகுல் காந்தி ஒரு போலி காந்தி” – பசவராஜ் பொம்மை

பெங்களூரு: “ராகுல் காந்தி ஒரு போலி காந்தி” என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை விமர்சித்துள்ளார். ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை பயணம் தற்போது கர்நாடகாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் பாஜக அரசு ஒரு ஊழல் அரசு என்றும், 40 சதவீத கமிஷன் வாங்கும் அரசு என்றும் இந்திய ஒற்றுமைப் பயணத்தின்போது ராகுல் காந்தி விமர்சித்திருந்தார். இதனை பாஜக அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களுமே ஒப்புக்கொண்டிருப்பதாகவும் அவர் கூறி இருந்தார். கர்நாடகாவில் … Read more

பண்பலை வானொலி கொள்கை நெறிமுறைகளில் திருத்தம்: மத்திய அரசு ஒப்புதல்!

தனியார் பண்பலை மூன்றாம் கட்ட கொள்கை வழிகாட்டு நெறிமுறைகள் என்று குறிப்பிடப்படுகின்ற தனியார் முகமைகள் மூலம் பண்பலை வானொலி ஒலிபரப்பு சேவைகள் மூன்றாம் கட்டம் என்பதன் விரிவாக்கம் குறித்த கொள்கை வழிகாட்டு நெறிமுறைகளில் உள்ள சில அம்சங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, உரிம காலமான 15 ஆண்டுகளில் ஒரே நிர்வாகக் குழுமத்திற்குள் பண்பலை வானொலி அனுமதிகளை மறுகட்டமைப்பு செய்வதற்கான மூன்றாண்டு … Read more

உத்தராகண்ட் மாநிலத்தில் திரௌபதியின் தண்டா 2 என்ற மலை சிகரத்தில் ஏற்பட்ட கடும் பனிச்சரிவில் சிக்கிய 10 பேர் பலி: 11 பேரை தேடும் பணி தீவிரம்

டேராடூன் : உத்தராகண்ட் மாநிலத்தில் திரௌபதியின் தண்டா 2 என்ற மலை சிகரத்தில் ஏற்பட்ட கடும் பனிச்சரிவில் சிக்கி 10 மலையேறும் பயிற்சி பெறுபவர்கள் உயிரிழந்துள்ளனர். 8 பேரை மீட்புப்படையினர் மீட்டுள்ளனர், மேலும் மேலும் 11 பேரை மீட்புப் படையினர் தேடி வருகின்றனர். பனி சரிவில் சிக்கியவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில மீட்பு படையினர் மற்றும் இந்திய விமான படையின் 2 சீட்டா ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.  பனி சரிவில் சிக்கிய அனைவரும் நேரு … Read more

ஜம்மு காஷ்மீரில் அதிகாரம் பரவலாக்கப்பட்டுள்ளது: அமித் ஷா

ஜம்மு: ஜம்மு காஷ்மீரை மூன்று குடும்பங்கள் மட்டுமே ஆட்சி செய்து வந்த நிலையில், தற்போது அதிகாரம் பரவலாக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மூன்று நாள் பயணமாக ஜம்மு காஷ்மீருக்கு திங்கள்கிழமை சென்ற அமித் ஷா, இன்று காஷ்மீர் எல்லைப்புர மாவட்டமான ராஜோரியில் உள்ள வைஷ்ணோ தேவி கோவிலுக்குச் சென்று வழிபட்டார். பின்னர் அங்கு நடந்த பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, “காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கிய சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பின் … Read more

PFI உடன் 873 கேரள காவல் துறை அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதா… உண்மை என்ன!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா ( PFI) என்ற தீவிரவாத அமைப்பை மத்திய அரசு தடை செய்த சில நாட்களுக்குப் பிறகு, தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கேரள காவல் துறையில் உள்ள குறைந்தது 873 அதிகாரிகளுக்கு PFI அமைப்புடன் தொடர்பு இருப்பதாக தேசிய புலானாய்வு அறிக்கையில் உள்ளதாக கூறப்படுகிறது. PFI உடன் தொடர்புடைய கேரள காவல்துறை அதிகாரிகளின் பெயர்கள் அடங்கிய பட்டியலை NIA செவ்வாய்க்கிழமை மாநில காவல்துறையிடம் … Read more

பல்வேறு மாநிலங்களில் வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது இந்திய விமான நிலைய ஆணையம்

டெல்லி: இந்திய விமான நிலைய ஆணையம், மேற்குவங்கம், பீகார், ஒடிசா, சத்தீஸ்கர், ஜார்கண்ட், அந்தமான் &நிகோபார் தீவுகள் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில் பல்வேறு பதவிகளுக்கான வேலை வாய்ப்புகளை அறிவித்துள்ளது. அந்த பணிகளுக்கு aai.aero என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.