மூன்று மாதங்களுக்கு தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் தலாக் இ ஹசன் முறை முறையற்றதல்ல: உச்ச நீதிமன்றம் கருத்து

புதுடெல்லி: முத்தலாக் விவாகரத்து முறையைத் தொடர்ந்து, தலாக் இ ஹசன் நடைமுறையையும் தடை செய்ய உத்தரவிட கோாி, உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் பெனாசீர் ஹீனா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். முஸ்லிம்கள் பின்பற்றும் தலாக் இ ஹசன் விவாகரத்து முறையால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த தலாக் இ ஹசன் முறையால் பல பெண்களும் குழந்தைகளும் பாதிக்கப்படுவதாகவும் கூறி, முத்தலாக் விவாகரத்து முறையை தடை செய்தது போல அதையும் தடை செய்ய … Read more

இந்தியாவில் ஒரே நாளில் 12,608 பேருக்கு கொரோனா… 72 பேர் பலி: ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: * புதிதாக 12,608 பேர் பாதித்துள்ளனர். * இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,42,98,864ஆக உயர்ந்தது. * புதிதாக 72 பேர் … Read more

உடல்நிலை காரணமாக பதவியை ஏற்க முடியவில்லை – ராஜினாமா குறித்து சோனியாவுக்கு கடிதம் எழுதிய குலாம் நபி ஆசாத்?

புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீர் காங்கிரஸ் பிரசாரக் குழு தலைவராக நியமிக்கப்பட்ட குலாம் நபி ஆசாத் தனது பதவியை ராஜினாமா செய்வதாக நேற்று அறிவித்தார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. குலாம் நபி ஆசாத்இந்நிலையில், அங்கு சட்டப் பேரவை தேர்தலை நடத்த வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீரில் காங்கிரஸ் கட்சியை … Read more

தேர்தலில் இலவசங்களை அறிவிப்பது பற்றி எல்லா அரசியல் கட்சிகளும் கருத்து தெரிவிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: தேர்தலில் இலவசங்களை அறிவிப்பது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளும் கருத்து தெரிவிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல்களில் அரசியல் கட்சிகள் இலவச அறிவிப்புகளை வெளியிடுவதற்கு தடை விதிக்கக்கோரி வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா தொடர்ந்த பொதுநலன் வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் நேற்றும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்ற உதவிக்காக நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் ஹன்சாரியா, ‘இந்த விவகாரத்தில் முதலில் ஒரு குழு அமைக்க வேண்டும். மாநிலங்களின் பொருளாதார நிலை குறித்தும் முழுமையாக … Read more

அதிமுக தலைமையகத்தை ஓபிஎஸ் ஒப்படைத்தது தொடர்பான வழக்கில் இன்று உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு!

அதிமுக தலைமை அலுவலகத்தை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைத்ததற்கு எதிராக ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வு இன்று விசாரணை செய்ய உள்ளது. சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தொடர்ந்த மனு தலைமை நீதிபதி அமர்வு முன் இன்று விசாரணைக்கு வருகிறது. இவ்வழக்கில் இன்றே உத்தரவு பிறப்பிக்கவும் வாய்ப்புள்ளதாகவும் கருதப்படுகிறது. காலை 11.30மணிக்குள் உத்தரவு பிறப்பிக்க வாய்ப்புள்ளதாக … Read more

அமைச்சருக்கு கைது வாரன்ட் நிதிஷ் மழுப்பல்

பாட்னா: பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அமைச்சரவை  நேற்று முன்தினம் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில், சட்ட அமைச்சராக ராஷ்டிரிய ஜனதா தளத்தை சேர்ந்த கார்த்திகேய சிங் பொறுப்பேற்றார்.  கடந்த 2014ம் ஆண்டு கட்டிட உரிமையாளரை கடத்திய சம்பவத்தில் கார்த்திகேய சிங் மற்றும் 16 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஆகஸ்ட் 16ம் தேதிக்குள் (நேற்று முன்தினம்) அவர் சரணடைய வேண்டும் என்று நீதிமன்றம் கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. நீதிமன்றத்தில் சரணடைய … Read more

குழந்தையின் காது கேளாமையை குணப்படுத்துவதாக கூறி ஓடும் ரயிலின் முன்பு கைக்குழந்தையுடன் நின்ற தந்தை.!

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவில் தந்தை ஒருவர், தனது குழந்தையின் காது கேளாமையை குணப்படுத்துவதாக கூறி, ஓடும் ரயிலின் முன்பு கைக்குழந்தையுடன் நின்ற சம்பவம் அரங்கேறி உள்ளது. கஞ்ச்மொராதாபாத் சந்திப்பு அருகே, இளைஞர் ஒருவர் தனது குழந்தையுடன் ரயில் வரும் தண்டவாளத்தில் நின்றார். இதைக் கண்ட அப்பகுதி மக்கள் அவரை அப்புறப்படுத்த முயன்ற நிலையில், அவர் கேட்காமல் அடம்பிடித்தார். தொடர்ந்து, ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்தி ஹாரன் அடித்து அவரை தண்டவாளத்திலிருந்து விலகிச் செல்லும் படி அறிவுறுத்தினார். குழந்தைக்கு … Read more

பாபா வங்காவின் கணிப்பின்படி இந்தாண்டு இந்தியாவில் வெட்டுக்கிளி படையெடுப்பு நடக்குமா?: பஞ்சம் தலைவிரித்தாடும் அபாயம்

புதுடெல்லி: இந்தியாவில் இந்தாண்டு வெட்டுக்கிளிகளின் தாக்குதலால் பயிர்கள் அழிக்கப்பட்டு, நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடும் என்று பாபா வங்கா கூறியது நடக்குமா? என்று பீதி ஏற்பட்டுள்ளது. பல்கேரியாவை சேர்ந்தவர் பாபா வங்கா. இவர், எதிர்காலத்தில் உலகில் நடக்கப் போகும் அசம்பாவிதங்களை  முன்கூட்டியே கணித்து கூறிவிட்டு சென்றுள்ளார். இவரின் கணிப்புக்களில் ஒரு சில நடக்கவில்லை என்றாலும், பெரும்பாலானவை உண்மையாகி உள்ளன. இந்தாண்டில் என்ன நடக்கும் என்று பாபா வங்கா கணித்து கூறியுள்ளவற்றில் 2 கணிப்புக்கள் உண்மையாகி உள்ளன. ஆஸ்திரேலியாவின் சில … Read more

லாலு பிரசாத் யாதவுடன் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் சந்திப்பு.!

பீகாரில் பாஜகவை விட்டு விலகி புதிய கூட்டணி அமைத்து மீண்டும் முதலமைச்சராக பதவியேற்ற நிதிஷ்குமார், நேற்று ராஷ்ட்ரிய ஜனதா கட்சியின் தலைவர் லாலுபிரசாத் யாதவை அவர் இல்லத்தில் சந்தித்தார். தோள்பட்டை காயம் காரணமாக டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அண்மையில் பாட்னா திரும்பிய லாலு பிரசாத்தை நிதிஷ்குமார் நேரில் சந்தித்து மலர்கொத்து அளித்து நலம் விசாரித்ததோடு, புதிய அரசு மேற்கொள்ள வேண்டிய பணிகள், புதிதாக நியமிக்கப்பட்ட கூட்டணி அரசின் அமைச்சர்கள் குறித்து ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. … Read more

கவுதம் அதானிக்கு இசட் பாதுகாப்பு

புதுடெல்லி: இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர்கள் பட்டியலில் இருப்பவர் கவுதம் அதானி. இவருக்கு பல்வேறு தரப்புக்களில் இருந்து அச்சுறுத்தல்கள் இருப்பதால் இசட் பிரிவு பாதுகாப்பு தேவை என புலனாய்வு துறை அறிக்கை சமர்பித்து இருந்தது. இதனை தொடர்ந்து, கவுதம்  அதானிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்குவதற்கு ஒன்றிய அரசு முடிவு செய்தது. இதன்படி, கவுதம் அதானிக்கு பாதுகாப்பு வழங்கும்படி மத்திய ரிசர்வ் போலீஸ் படையை உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. இதன்படி, சிஆர்பிஎப் கமாண்டோக்கள் மூலம் கவுதம் … Read more