CBSE Exam 2023: 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கான முக்கிய செய்தி

CBSE 2023 Board Exam: மத்திய இடைநிலைக் கல்வி வாரியதில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கான முக்கியமான அறிவிக்கை ஒன்று இன்று வெளியானது. நடப்பு கல்வியாண்டுக்கான தேர்வு அட்டவணையை சிபிஎஸ்இ ஏற்கனவே வெளியிட்டிருந்த நிலையில், இன்று (2022, செப்டம்பர் 15) தனித் தேர்வர்களுக்கான விவரங்களை CBSE அறிவித்தது. CBSE 12 ஆம் வகுப்பு தேர்வு பிப்ரவரி 15, 2023 முதல் நடைபெற உள்ளது. பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள், பள்ளிகளின் மூலமே விண்ணப்பிக்கலாம் என்பதால் அவர்களுக்கு தனியான அறிவிக்கை தேவையில்லை. ஆனால், … Read more

2023ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள்: விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

புதுடெல்லி: 2023ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஒன்றிய அரசு ஆண்டு தோறும் பத்ம விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படும் 2023ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு மே 1 முதல் விண்ணப்பிக்கலாம் என ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது. பத்ம விருதுகளுக்கு https://awards.gov.in என்ற முகவரியில் உள்ள தேசிய விருதுகளுக்கான இணையதளத்தில் ஆன்லைன் வழியில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்த விருதுகள் குறித்து … Read more

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் முதல் முறையாக பேராசிரியர்கள் சங்க தலைவராக தமிழக பெண் நியமனம்: முஸ்லிம் அல்லாத 2 நிர்வாக உறுப்பினர்கள் தேர்வு

புதுடெல்லி: அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக பேராசிரியர் சங்க தலைவராக தமிழக பெண் முதல் முறை யாக தேர்வாகி உள்ளார். மேலும்,முஸ்லிம் அல்லாத 2 உதவிப் பேராசிரியர்களும் உறுப்பினர்களாக தேர்வாகி உள்ளனர். உத்தர பிரதேச மாநிலம் அலிகரில் சுமார் 150 ஆண்டு பழமையான அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் உள்ளது. மத்தியப் பல்கலைக்கழகமான இதில், ‘அமுட்டா’ எனப்படும் பேராசிரியர்கள் சங்கம் செயல் பட்டு வருகிறது. இவர்களில் சுமார் 25 சதவிகிதம் பேர் பெண் கள். இவர்கள், சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தலில் … Read more

Mission Cheetah: நமீபியாவில் இருந்து சிறப்பு விமானம் மூலம் இந்தியா வரும் 8 சிறுத்தைகள்!

Mission Cheetah: நமீபியாவில் இருந்து 8 சிறுத்தைகள் இந்தியாவிற்கு வருகின்றன. அவர்களை அழைத்துச் வர சிறப்பு விமானம் நமீபியா சென்றடைந்தது. இந்த விமானம்  சிறப்பான வகையில், அதன் முன் பகுதி புலி வடிவில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தனது பிறந்தநாளில் இந்த சிறுத்தைகளை நாட்டுக்கு அர்பணிப்பார். பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள், அதாவது செப்டம்பர் 17ம் தேதி அன்று, நாட்டில் அழிந்து வரும் , வனவிலங்கான சிறுத்தையின் வருகை  மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. 70 ஆண்டுகளுக்குப் பிறகு, … Read more

கொல்லத்தில் இன்று ஒரு நாள் ஓய்வு; காங்கிரஸ் தேசிய தலைவர்களுடன் ராகுல் காந்தி திடீர் ஆலோசனை: கோவாவில் எம்எல்ஏக்கள் ஓட்டத்தால் அப்செட்டா?

திருவனந்தபுரம்: கன்னியாகுமரியில் கடந்த 7ம் தேதி பாரத் ஜோடா யாத்திரை என்ற பெயரில் ஒற்றுமை நடை பயணத்தை ராகுல்காந்தி எம்பி தொடங்கினார். இந்த பயணத்தை தேசிய கொடி வழங்கி தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் 4 நாட்கள் தொடர்ந்து நடைபயணம் செய்த ராகுல்காந்தி பல்வேறு அமைப்பு, விவசாயிகள், பொதுமக்களை சந்தித்து பேசினார். அதன் பிறகு கேரளாவில் நடைபயணத்தை தொடர்ந்து வருகிறார். நேற்று கேரளாவில் 4வது நாள் நடைபயணம் மேற்கொண்டவர் கொல்லம் … Read more

”ஐ-பேடுக்கு அதிக விலை! என்னனு கேளுங்க சார்” ட்வீட் போட்ட நபரால் இணையதளத்தில் கலகலப்பு

ஐ-பேடுக்கு அதிக விலை போடுவதாக டிவிட்டரில் புகார் தெரிவித்த நபர் நுகர்வோர் விவகார அமைச்சகத்திற்குப் பதிலாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தைக் டேக் செய்ததால் கலகலப்பு ஏற்பட்டுள்ளது. அமேசான் ஆப்பில் ஆப்பிள் ஐ-பேட் வாங்க விரும்பிய நபர் ஒருவர், அதன் விலை அதிகமாக இருந்ததால் நுகர்வோர் விவகார அமைச்சகத்திற்கு புகார் தெரிவிக்க நினைத்துள்ளார். அதிக விலை பட்டியல் இருக்கும் பக்கத்தை டிவிட்டரில் பகிர்ந்து அதை நுகர்வோர் விவகார அமைச்சகத்திற்கு டேக் செய்ய நினைத்த அந்த நபர் தவறுதலாக சிவில் விமானப் … Read more

"பாலியல் குற்றவாளிகளை விடுதலை செய்தவர்களிடம் பெண்களின் பாதுகாப்பை எதிர்பார்க்க முடியாது" – ராகுல் தாக்கு

புதுடெல்லி: “பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளை விடுதலை செய்தவர்களிடம், பெண்களின் பாதுகாப்பை எதிர்பார்க்க முடியாது” என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். லக்கிம்பூர் கேரியில் இரண்டு பட்டியலின சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தையொட்டி அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் உள்ள நிகாசன் காவல் எல்லைக்குட்பட்ட கிராமத்தின் அருகில் இரண்டு பட்டியலின சிறுமிகள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை … Read more

2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..! – ஜம்மு காஷ்மீரில் தொடரும் பதற்றம்..!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் எப்போதும் பதற்றத்தில் காணப்படும் பகுதிகளில் ஒன்றாகும். அவ்வபோது நடைபெறும் பயங்கரவாத தாக்குதல் தான் இதற்கு முக்கிய காரணமாகும். இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் மாவட்டத்தில் உள்ள நவ்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலை அடுத்து நவ்காம் பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் … Read more

திருப்பதியில் ‘இந்த’ நாளில் விஐபி தரிசனம் ரத்து: TTD

திருப்பதி ஏழுமலையான் ஆலயம் உலகப் புகழ் பெற்ற ஒரு கோவிலாகும். இங்கு இந்தியா மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வார்கள். இந்நிலையில், திருப்பதியில் செம்டம்பர் 20ம் தேதி  விஐபி தரிசனம் ரத்து என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து, அக்டோபர் 5ம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரமோற்வம் நிறைவு பெறுகிறது. இதனையொட்டி ஆலயத்தில் சுத்தம் செய்யும் … Read more

வட்டி விகிதத்தை 0.7% ஆக உயர்த்தியது நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ; இன்று முதல் அமல்..!!

டெல்லி: நாட்டின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி பி.எல்.ஆர். எனப்படும் பிரதான வட்டி விகிதத்தை 0.7 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இதுவரை 12.75 சதவீதமாக இருந்த பிரதான வட்டி விகிதம் 0.7 சதவீதம் உயர்வின் காரணமாக 13.45 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதேபோல் அடிப்படை வட்டி விகிதத்தையும் 8 சதவீதத்தில் இருந்து 8.7 சதவீதமாக பாரத் ஸ்டேட் வங்கி உயர்த்தியுள்ளது. இதனால் அடிப்படை விகிதத்தில் கடன் வாங்கிய கடனாளிகளுக்கு EMI தொகை உயரும். வட்டி விகிதத்தை உயர்த்தியதால் வீடு, … Read more