கூடுதலாக 50,000 கோடி ரூபாய் கடன் வசதி.. கோவிட் நிவாரண வரம்பு அதிகரிப்பு.!

அவசர கால கடனுதவி திட்டத்தின் கீழ் மேலும் 50 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வசதி அளிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கோவிட் பெருந்தொற்றினால் பொருளாதார பாதிப்பு ஏற்பட்ட நிலையில் சிறு, குறு தொழில்களுக்கு நிவாரணம் அளிக்க மத்திய அரசால் அவசர கால கடனுதவி திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் வரம்பை அதிகரிக்க இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இந்நிலையில் அமைச்சரவை கூட்டத்தின் முடிவில் அவசர … Read more

பாஜக நாடாளுமன்றக் குழுவில் அதிரடி மாற்றங்கள் – நிதின் கட்கரி, சிவ்ராஜ் சிங் விடுவிப்பு

புதுடெல்லி: பாஜகவில் மிகப்பெரிய அளவிலான அமைப்பு ரீதியான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி நிதின் கட்கரி, சிவ்ராஜ் சிங் ஆகியோர் நாடாளுமன்றக் குழுவில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இதுதான் பாஜகவின் முடிவெடுக்கும் மிகப் பெரிய அமைப்பாகும். கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா, மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி இக்பால் சிங் லால்புரா, மக்களவை எம்.பி. சத்யநாராயணன் ஜட்டியா, பாஜக தேசிய ஓபிசி மோர்சா தலைவர் கே.லட்சுமணன், தேசியச் செயலர் சுதா யாதவ் ஆகியோர் புதிதாக நாடாளுமன்ற … Read more

பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து போட்டியை இந்தியாவில் நடத்த நடவடிக்கை தேவை – உச்சநீதிமன்றம்

மூன்றாவது நபரின் தலையீடு இருப்பதாக கூறி இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமையை FIFA தற்காலிகமாக ரத்து செய்துள்ளதால், அத்தகைய தலையீடு எதுவும் இல்லாமல் பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து போட்டியை இந்தியாவில் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சர்வதேச கால்பந்து கவுன்சிலான FIFA தொடர்பான வழக்கை மத்திய அரசின் கோரிக்கையின் படி, அவசர வழக்காக உச்சநீதிமன்றம் இன்று விசாரித்தது. உரிமத்தை ரத்து செய்துள்ள ஃபிபா அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக மத்திய அரசின் சார்பில் … Read more

டெல்லியில் பிரதமர் மோடியுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு.! நீட் விலக்கு, காவிரி உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் குறித்து பேச்சு

டெல்லி : பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தமிழ்நாட்டின் கோரிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனு அளித்தார். நீட் விலக்கு, காவிரி உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் குறித்து பிரதமரிடம் முதலமைச்சர் வலியுறுத்தினார். செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்றதற்காக பிரதமருக்கு அவர் நேரில் நன்றி தெரிவித்தார். பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி பொதிகை தமிழ்நாடு இல்லத்திலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்றார். இந்தநிலையில் மாலை 4 மணி அளவில் புதுடெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்திற்கு சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் … Read more

“வெளிநாட்டில் நான் இந்திய அரசியல் பேசுவதில்லை” – தாய்லாந்து வாழ் தமிழருக்கு அமைச்சர் ஜெய்சங்கர் சமாளிப்பு பதில்

பாங்காக்: “வெளிநாட்டில் நான் இந்திய அரசியல் பற்றிப் பேசுவதில்லை” என்று கூறிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், “இந்தியாவுக்கு வந்து கேளுங்கள், இதே கேள்விக்கு நான் பதில் சொல்கிறேன்” என்று சுவாரஸ்யமாக பதிலளித்தார். வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தாய்லாந்து சென்றிருந்தார். பாங்காகில் இந்திய சமூகத்தினருடன் அவர் கலந்துரையாடினார். அப்போது அவரிடம் ஒருவர் “நான் தமிழர், தற்போது மத்திய – மாநில அரசுகளுக்கு இடையே நிலவும் கருத்து வேறுபாடு குறிப்பாக தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே நிலவும் பிரச்சினைகள் … Read more

ரோஹிங்கியாக்கள் தடுப்பு மையத்தில் தான் இருப்பார்கள் -உள்துறை அமைச்சகம் விளக்கம்

புது டெல்லி: டெல்லி பக்கர்வாலாவில் உள்ள EWS (பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான குடியிருப்பு) குடியிருப்பில் தங்கியுள்ள ரோஹிங்கியா அகதிகள் குறித்து மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அவரது அறிக்கைக்கு எதிர்ப்பு அதிகரித்த நிலையில், ​​​​ரோஹிங்கியாக்கள் தடுப்பு மையங்களில் தங்கியிருப்பார்கள் என்று உள்துறை அமைச்சகம் தெளிவுபடுத்தியது. சட்டவிரோதமாக குடியேறிய புதிய ரோஹிங்கியாக்கள் EWS குடியிருப்புகளை வழங்குவதற்கு உள்துறை அமைச்சகம் (MHA) எந்தப் பிரதிநிதித்துவமும் செய்யவில்லை என்று HMO … Read more

3 லட்சம் வரையிலான குறுகிய கால விவசாயக் கடன்களுக்கு 1.5% மானியம் அளிக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்..!!

டெல்லி: 3 லட்சம் வரையிலான குறுகிய கால விவசாயக் கடன்களுக்கு 1.5 சதவீதம் மானியம் அளிக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. விவசாயிகளுக்கு 1.5 சதவீதம் வட்டி மானியம் அளிக்க ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பணவீக்கம் வேகமாக அதிகரித்து வந்ததால் சமீபத்தில் ரிசர்வ் வங்கி 2 முறை வட்டி விகிதங்களை அதிகரித்தது. இதனால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக இவ்வாண்டு வட்டிக்கு மானியம் அளிக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. பொதுவாக ஒரு மானியத்தை … Read more

பாஜக நாடாளுமன்ற குழு: எடியூரப்பா, பட்னவிஸ் 'உள்ளே'.. நிதின் கட்கரி, யோகி, சவுகான் 'வெளியே!'

பாஜக நாடாளுமன்ற குழுவில் இருந்து, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் ஆகியோர் வெளியேற்றப்பட்டு உள்ளனர். பாஜகவின், உயர்மட்ட அமைப்பாக நாடாளுமன்றக் குழு உள்ளது. இந்தக் குழு, முதலமைச்சர், மாநில தலைவர்கள் மற்றும் பிற முக்கியப் பதவிகளை முடிவு செய்கிறது. இந்நிலையில் இன்று, பாஜக நாடாளுமன்ற குழு மறு சீரமைப்பு செய்யப்பட்டு உள்ளது. இதன்படி, அதிகாரமிக்க குழுவில் நான்கு புதுமுகங்களுக்கு … Read more

38 ஆண்டுகளுக்கு பின் கண்டெடுக்கப்பட்ட ராணுவ வீரரின் உடலுக்கு முழு ராணுவ மரியாதை.!

உலகின் மிகவும் உயரமான போர்களமான சியாச்சின் பனிப்பிரதேசத்தில் 38 ஆண்டுகளுக்கு முன் பனிச்சரிவில் சிக்கி காணாமல் போன இந்திய ராணுவ வீரர் லேன்ஸ்நாயக் சந்திர சேகரின் உடல் பாகங்கள் லே நகருக்கு கொண்டுவரப்பட்டது. அண்மையில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த போது இந்திய வீரர்கள் அவரது உடல் பாகங்களை கண்டெடுத்தனர். மறைந்த வீரர் சந்திர சேகரின் உடலுக்கு லே நகரில் மலர் வளையம் வைத்து முழு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது.  Source link

பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தமிழ்நாட்டின் கோரிக்கைகள் குறித்து மனு அளித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

டெல்லி : பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தமிழ்நாட்டின் கோரிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனு அளித்தார் . நீட் விலக்கு, காவிரி உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் குறித்து பிரதமரிடம் முதலமைச்சர் வலியுறுத்தினார். செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்றதற்காக பிரதமருக்கு அவர் நேரில் நன்றி தெரிவித்தார்.