உஸ்பெகிஸ்தானில் ஷாங்காய் மாநாடு இன்று தொடக்கம் சீன அதிபரை புறக்கணிக்கும் மோடி : புடினுடன் தனியாக முக்கிய பேச்சு

புதுடெல்லி: உஸ்பெகிஸ்தானில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்று சென்றார். இம்மாநாட்டில் கலந்து கொள்ளும் சீன அதிபர் ஜின்பிங்கை சந்திக்காமல், பிரதமர் மோடி புறக்கணித்துள்ளார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன. சுழற்சி முறையில் ஆண்டுக்கு ஒரு நாடு இந்த அமைப்புக்குத் தலைமை வகிக்கும். ஆண்டுதோறும் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டை, இந்த நாடு … Read more

பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர், குருவிக்காரர் – மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

புதுடெல்லி: பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர், குருவிக்காரர் உள்ளிட்ட சமூகத்தினரை சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளதாக மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டா தெரிவித்தார். தமிழகத்தில் குருவிக்காரர், நரிக்குறவர் உள்ளிட்ட சில சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பிரிவில் சேர்த்து சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று போராடி வருகின்றனர். இதுதொடர்பாக அரசுக்கும், முதல்வருக்கும் அவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்தச் சூழலில், கடந்த மார்ச் 19-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். … Read more

உலகம் முழுவதும் இந்திக்கு பெருமை: பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: உலகமெங்கும் இந்தி மொழி இந்தியாவுக்கு பெருமை தேடி தந்துள்ளது என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 14ம் தேதி இந்தி மொழி தினமாக கொண்டாடப்படும் என நாட்டின் முதல் பிரதமர்  நேரு அறிவித்தார். இந்தியாவின் அலுவல் மொழியாக இந்தி பயன்படுத்தப்படும் என்ற முடிவுக்கு 1950ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி  இந்தியாவின் அரசியல் சாசனம் அங்கீகாரம் அளித்தது. இந்த  தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘உலகமெங்கும் இந்தி … Read more

பேருந்து கவிழ்ந்து 11 பயணிகள் பலி: காஷ்மீரில் பரிதாபம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்ததில் 11 பேர்  உயிரிழந்தனர். 29 பேர் படுகாயம் அடைந்தனர். ஜம்மு- காஷ்மீர், பூஞ்ச் மாவட்டம், கலி மைதான் என்ற பகுதி நோக்கி நேற்று காலை மினி பேருந்து சென்று கொண்டிருந்தது.  சாஜியன் பகுதியில் உள்ள மலைப்பாங்கான பகுதியில் அது சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து  பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.  தகவல் அறிந்த  போலீசார், சம்பவ இடத்திற்கு, விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.  இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த … Read more

விமான தளம் மீதான தாக்குதலை முறியடிக்க 100 டிரோன்கள் வாங்க விமானப் படை முடிவு

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் உள்ள விமான தளங்களை பாதுகாப்பதற்காக, 100 டிரோன்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளதாக விமானப்படை தெரிவித்தது.ஜம்மு காஷ்மீரில் உள்ள விமானப்படை தளத்தின் மீது, கடந்தாண்டு ஜூனில் 2 டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிபொருள் ஏற்றி வந்த 2 டிரோன்கள் நடத்திய இந்த தாக்குதலில் கட்டிடத்தின் மேற்கூரை சேதமடைந்தது. மிகவும் பாதுகாப்பான பகுதியாக கருதப்படும் விமானப்படை தளத்துக்குள், டிரோன்கள் மூலம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியது புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது. இதை எதிர்கொள்ள, வான்வெளி … Read more

ரூ.200 கோடி மதிப்பிலான போதை பொருளுடன் பாக். படகு சிக்கியது: 6 பேர் பிடிபட்டனர்

அகமதாபாத்: குஜராத் கடல் பகுதி வழியாக கடத்தி வரப்பட்ட ரூ.200 மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் மீன்பிடி படகை இந்திய கடற்படை பறிமுதல் செய்துள்ளது. படகில் இருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய கடற்படை மற்றும் குஜராத் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் குஜராத் கடல் பகுதியில் அரபிக்கடலில் திடீர் சோதனை நடத்தினர். கட்ச் மாவட்டம், ஜக்காவ் துறைமுகம் அருகே பாகிஸ்தான் மீன்பிடி படகை மடக்கி அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில், 40 கிலோ … Read more

குழந்தைகளை கடத்துபவர்கள் என சந்தேகித்து 4 துறவிகள் மீது கிராம மக்கள் தாக்குதல்

குழந்தைகளை கடத்துபவர்கள் என்று தவறாக புரிந்து கொண்டு, 4 துறவிகளை கிராம மக்கள் தாக்கியது குறித்து மகாராஷ்டிரா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உத்தர பிரதேச மாநிலம் மதுராவை சேர்ந்த துறவிகள், சோலாப்பூரில் உள்ள பந்தார்பூருக்கு சுவாமி தரிசனத்துக்காக சென்று கொண்டிருந்தனர். சாங்லி பகுதியில் சிறார் ஒருவரிடம் சில உதவிகளை அவர்கள் கேட்டபோது, அங்கு வந்த கிராம மக்கள், குழந்தைகளை கடத்துபவர்கள் என்று தவறாக புரிந்து கொண்டு தாக்கியுள்ளனர். துறவிகள் புகார் எதுவும் அளிக்காத நிலையில், தாக்கப்பட்டபோது … Read more

சொத்து குவிப்பு விவகாரத்தில் வேலுமணி மீதான 2 மனுவையும் சென்னை ஐகோர்ட் விசாரிக்கும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ‘சொத்து குவிப்பு விவகாரத்தில் எப்.ஐ.ஆரை ரத்து செய்யக்கோரியது உட்பட எஸ்.பி.வேலுமணியின் 2 மனுவையும் சென்னை உயர்நீதிமன்ற டிவிசன் அமர்வு விசாரிக்கும்’ என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என்றும், லஞ்சஒழிப்புத் துறை விசாரணை அறிக்கை அடிப்படையில் விசாரணை நடத்தலாம் எனவும் உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. … Read more

2024 தேர்தல் தொடர்பாக ஆலோசனை?.. – நிதிஷ் குமாருடன் பிரசாந்த் கிஷோர் திடீர் சந்திப்பு

பாட்னா: பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் நேற்றிரவு திடீரென பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை சந்தித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் இதற்குமுன் 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்தார். அதன்பின் 2015 ஆம் ஆண்டு நடந்த பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், ஜேடியு, ஆர்ஜேடி சேர்ந்த மகா கூட்டணிக்கு ஆதரவாக பிரசாந்த் கிஷோர் செயல்பட்டு தேர்தலில் வெற்றி பெற வைத்தார். … Read more

மகாராஷ்டிராவில் இருந்து குஜராத்துக்கு போன வேதாந்தா நிறுவனத்தின் பிரம்மாண்ட திட்டம்…காரணம் என்ன?

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஸ்மார்ட்ஃபோன், டிவி, கம்பயூட்டர் உள்ளிட்ட மின்னணு சாதனங்களில் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சாதனங்களின் இயக்கத்துக்கு பயன்படும் பல்வேறு மின்னணு பொருட்களில் செமிகண்டக்டர் (Semiconductor) முக்கியமானதாக உள்ளது. இதனை இந்தியா இதுவரை பெரும்பாலும் வெளிநாடுகளில் இறக்குமதி செய்து வந்தது. இந்த நிலையில் உள்நாட்டிலேயே இதனை உற்பத்தி செய்ய மத்திய அரசு திட்டமிட்டது. . உற்பத்தி சார்ந்த ஊக்குவிப்பு திட்டத்தின்கீழ், நாட்டிலேயே முதல்முறையாக செமிகன்டக்டர் தயாரிப்பு ஆலையை மகாராஷ்டிர மாநிலத்தில் நிறுவுவற்கான … Read more