நாடு முழுவதும் உயர் நீதிமன்றங்களில் 20 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள வழக்குகள் 2.52 லட்சம்

புதுடெல்லி: நாட்டில் உள்ள 25 உயர் நீதிமன்றங்களில் 2.52 லட்சம் வழக்குகள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் (ஆக.27 நிலவரப்படி) மேலாக நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த என்.வி.ரமணா சமீபத்தில் ஓய்வு பெற்றார். நீதிபதிகளின் பற்றாக்குறையால் வழக்குகள் தேக்கமடைந்துள்ளதை கருத்தில்கொண்டு, தனது 16 மாத பணிக்காலத்தில் நாட்டில் உள்ள உயர் நீதிமன்றங்களில் காலியாக இருந்த நீதிபதி பணியிடங்களுக்கு புதிய நீதிபதிகளை நியமனம் செய்தார். இருப்பினும், தேங்கியுள்ள வழக்குகளுக்கு தீர்வு காணும் விகிதத்தில் அந்த … Read more

சீனியர்கள் விலகல்: காங்கிரஸ் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

சுதந்திர இந்தியாவில் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலத்துக்கு மேலாக ஆட்சி செய்து வந்த காங்கிரஸ் கட்சியின் நிலைமை தற்போது பரிதாபத்துக்குரியதாக மாறி வருகிறது. பல்வேறு மாநிலங்களில் கோலோச்சி வந்த அக்கட்சி படிப்படியாக கீழே இறங்கி பாஜக கொடியை பறக்க விட வழிவகை செய்துள்ளது. கடந்த ஆண்டுகளில் மக்களவை மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் மோசமான செயல்பாட்டிற்குப் பிறகு, சிறந்த வாய்ப்புகளுக்காக காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர்கள் தொடங்கி சீனியர்கள் வரை ராஜினாமா செய்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் … Read more

Shocking! ஆட்டோவின் கூரையில் பயணித்த மாணவர்கள்; அதிர்ச்சியூட்டும் வீடியோ!

ஆட்டோ ரிக்ஷாவின் மேல் அமர்ந்து மூன்று மாணவர்கள் பயணித்ததை காட்டும் வீடியோ பல்வேறு சமூக ஊடக தளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில், 11-13 வயதுக்குட்பட்ட 3 மாணவர்கள், ஆட்டோவின் மேல் அமர்ந்து பயணிப்பதை கேமராவில் ஒருவரு பதிவு செய்து, சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ வைரலானதை அடுத்து, ‘அடையாளம் தெரியாத டிரைவர் மீது பரேலியில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  மாணவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் செயல்பட்ட ஆட்டோ ஓட்டுநரை பலர் விமர்சித்துள்ளனர். ட்விட்டர் பயனர் … Read more

குஜராத் பேரவை தேர்தலில் ஆம்ஆத்மி முதல்வர் வேட்பாளர் மேதா பட்கர்? பாஜக நிர்வாகி தகவல்

புதுடெல்லி: குஜராத் பேரவை தேர்தலில் ஆம்ஆத்மி சார்பில் முதல்வர் வேட்பாளராக மேதா பட்கர் களம் இறக்கப்படுவார் என்று மும்பை பாஜக செய்தித் தொடர்பாளர் சுரேஷ் நகுவா தெரிவித்தார்.  குஜராத்தில் வரும் நவம்பர் – டிசம்பர் மாதம் வாக்கில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெறுகிறது. ஆளும் பாஜகவுக்கு எதிராக ஆம்ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத்தில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் ஆம்ஆத்மி சார்பில் முதல்வர் வேட்பாளர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து மும்பை … Read more

`அதிக தற்கொலை பதிவாகும் மாநிலங்களில் தமிழகத்துக்கு இரண்டாவது இடம்’ – என்.சி.ஆர்.பி தகவல்

2021-ம் ஆண்டில் இந்திய அளவில் நடந்த தற்கொலைகளில் அதிக தற்கொலை பதிவான மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2021-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் 18,295 தற்கொலைகள் பதிவாகியிருப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டுக்கு முன் முதலிடத்தில் மஹாராஷ்ட்ரா உள்ளது. அங்கு 22,207 தற்கொலைகள் பதிவாகியிருந்துள்ளன. இந்திய அளவில் பதிவான தற்கொலைகளில், 11.5% தற்கொலைகள் தமிழ்நாட்டில் தான் இருந்துள்ளது தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டில் பதிவான தற்கொலைகளில் 8,073 குடும்ப பிரச்னைகளினால் ஏற்பட்டிருப்பதாக … Read more

பத்ம விருதுக்கு பரிந்துரைக்க செப். 15-ம் தேதி கடைசி நாள்

புதுடெல்லி: பத்ம விருதுகளுக்கு பெயர்கள் பரிந்துரை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், கல்வி, தொழில்நுட்பம், சமூகநலன், பொதுப்பணிகள், தொழில் மற்றும் இதர பிரிவுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் அசாதாரணமான பணிகள் ஆற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்படும். குடியரசு தினத்தை முன்னிட்டு விருதுக்கு தேர்வானவர்கள் பட்டியல் வெளியிடப்படும். பின்னர் விருது வழங்கப்படும். அந்த வகையில் 2023-ம் ஆண்டின் பத்ம விருதுக்கான விண்ணப்பம் www.padmaawards.gov.in என்ற இணையதளத்தில் … Read more

ஜம்மு-காஷ்மீரின் கிஸ்துவார் மாவட்டத்தில் பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழப்பு

ஜம்மு: ஜம்மு-காஷ்மீரின் கிஸ்துவார் மாவட்டத்தில் பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் படுகாயமடைந்த 3 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர்.

கட்சித் தலைவர் தேர்தல்: காங்கிரஸில் தொடரும் குழப்பம்; ரேஸில் யாரெல்லாம் தெரியுமா?

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்க ராகுல் காந்தி தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வரும் நிலையில், காந்தி குடும்பத்தைச் சேராத தலைவர்கள் களத்தில் இறங்குவார்களா என்பது குறித்து கட்சிக்குள் கடும் குழப்பம் நிலவுகிறது. ஒருவேளை ராகுல் காந்தி கட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட மறுத்துவிட்டால், முன்னாள் மக்களவை சபாநாயகர் மீரா குமார் அல்லது ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஆகியோரில் ஒருவரை களம் இறக்க வேண்டும் என சோனியா காந்திக்கு நெருக்கமான தலைவர்கள் கருதுகிறார்கள். அடுத்த தலைவர் … Read more

திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்வதும், தன் பாலின உறவுகளால் குடும்ப அமைப்பு பல வடிவங்கள் பெற வாய்ப்பு – உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக சேர்ந்து வாழ்வது மற்றும் தன் பாலின ஈர்ப்பு உள்ளிட்ட காரணங்களால் குடும்ப உறவின் வடிவங்கள் மாற்றம் பெற வாய்ப்புள்ளதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். சமீபத்திய ஒரு வழக்கில் குடும்ப உறவுகள் என்றால் என்ன? என்பது குறித்து உச்ச நீதிமன்றம் விரிவான மற்றும் முக்கியமான கருத்துகளை தெரிவித்திருந்தது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட் மற்றும் ஏ.எஸ். போபண்ணா அடங்கிய அமர்வு இது தொடர்பாக பிறப்பித்த உத்தரவு ஆகஸ்ட் 28-ல் தான் … Read more

ஜார்க்கண்ட் அரசியல் நெருக்கடி: ஆளும் கூட்டணி எம்எல்ஏக்கள் சத்தீஸ்கருக்கு இடம் பெயர்வு!

ஜார்க்கண்ட் மாநிலத்தில், அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், ஆளுங்கட்சி மற்றும் கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள், சத்தீஸ்கர் மாநிலத்திற்கு இடம் பெயர்வு செய்யப்பட்டு உள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில், முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. 81 சட்டப்பேரவை உறுப்பினர்கள் கொண்ட ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவையில், ஆளும் கூட்டணி அரசுக்கு, 49 உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறது. இதில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு, 30 உறுப்பினர்களும், காங்கிரஸ் கட்சிக்கு, … Read more