விபரீதம் அறியாமல் முத்தம் கொடுக்க முயற்சி.. இளைஞர் உதட்டை பதம் பார்த்த பாம்பு வீடியோ!

கர்நாடக மாநிலம் சிவமோகா(shivamogga) பகுதியில் குடியிருப்பு பகுதியில் நாகப்பாம்பு ஒன்று புகுந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் அந்த பகுதியில் பாம்பு பிடிக்கும் தொழில் செய்து வரும் அலெக்ஸ் என்ற இளைஞருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த அலெக்ஸ் சுமர் 2 மணிநேரம் போராடி புதர் பகுதியில் ஒளிந்திருந்த விஷ பாம்பை லாவகமாக பிடித்தார். பாம்பை பிடித்த கையோடு அதனை வனப்பகுதியில் கொண்டு சென்று விடாமல் வீரமாக செயல்படுவது போல் நினைத்த அலெக்ஸ் பாம்புக்கு முத்தம் … Read more

கட்சித் தலைவரின் பேச்சால் சர்ச்சை; முதல்வர் பதவிக்கு அவசரப்படவில்லை.! பீகார் துணை முதல்வர் பேட்டி

பாட்னா: முதல்வர் பதவி குறித்த விவகாரத்தில் எனக்கென்று தனிப்பட்ட லட்சியம் ஏதுமில்லை என்று பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.  பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் – ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் ஜெகதானந்த் சிங் டெல்லியில் அளித்த பேட்டியில், ‘துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் அடுத்த ஆண்டு பீகார் முதல்வராக பதவியேற்பார்’ என்று கூறினார். … Read more

காங்கிரஸ் தலைவர் தேர்தல்: சசிதரூர்-கார்கே இடையே நேரடி போட்டி… வெற்றி யார் பக்கம்?

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு நேரடி போட்டி என்பது மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சசி தரூர் இடையே உறுதியாகி உள்ளது. இதில் யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்பது குறித்து சற்று விரிவாக காணலாம். காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில், தான் போட்டியிடப் போவதில்லை என ராகுல் காந்தி அறிவித்ததை அடுத்து காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி மிகப் பிரதானமானதாக இருந்தது. ராஜஸ்தான் முதல்வர் அசோக் கிலாட் தேர்தலில் போட்டியிடுவேன் என அறிவித்திருந்த … Read more

இந்தியாவின் புதிய சகாப்தம் 5ஜி: பிரதமர் மோடி பேச்சு!

டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் 5ஜி சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஆறாவது இந்தியா மொபைல் காங்கிரசையும் தொடங்கி வைத்த அவர், நிகழ்ச்சியில் வைக்கப்பட்டிருந்த ஐஎம்சி கண்காட்சியையும் பார்வையிட்டார். நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், இன்று நடைபெறும் மாநாடு உலகளாவியதாக இருக்கலாம் ஆனால் அதன் விளைவுகள் மற்றும் திசைகள் உள்ளுரில் உள்ளன என்றார். 21ம் நூற்றாண்டில் வேகமாக வளரும் இந்தியாவுக்கு இன்று சிறப்பான நாள் என்றார். “இன்று, 130 கோடி இந்தியர்கள் நாட்டிலிருந்தும் நாட்டின் தொலைத்தொடர்புத் துறையிலிருந்தும் … Read more

உச்சநீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக ஒரே நாளில் 75 வழக்குகள் விசாரணை; நீதிபதி சந்திரசூட் அமர்வு அபாரம்

புதுடெல்லி: உச்சநீதிமன்ற வரலாற்றில் முதன் முறையாக ஒரே நாளில் குறிப்பிட்ட நீதிபதிகள் அமர்வு 75 வழக்குகளை விசாரித்து சாதனை படைத்துள்ளது.  உச்சநீதிமன்ற நீதிபதி டிஒய் சந்திரசூட் மற்றும் நீதிபதி ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு நேற்று காலை வழக்கம் போல் வழக்கு விசாரணையை தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. சில வழக்குகளில் உத்தரவுகளும், தீர்ப்புகளும் வழங்கப்பட்டன. உச்சநீதிமன்ற நீதிபதிகள் டிஒய் சந்திரசூட் மற்றும் ஹிமா கோஹ்லி ஆகிய இருவரும் … Read more

இந்த சான்றிதழ் இல்லன்னா பெட்ரோல் கிடையாது: மாநில அரசு அதிரடி உத்தரவு!

டெல்லியில் காற்று மாசுபாடு பிரச்சினை நீண்ட நாட்களாக நிலவி வருகிறது. காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறது. அந்த வகையில், டெல்லியில் மாசு கட்டுப்பாடு சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் மூலம் இயங்கக்கூடிய வாகனங்களில் இருந்து வெளியேறும் கார்பன் டை ஆக்ஸைடு, கார்பன் மோனாக்சைடு ஆகிய காற்றை மாசுபடுத்தக்கூடிய வாயுக்களின் அளவை கண்காணித்து மாசு கட்டுப்பாடு சான்றிதழ் வழங்கப்படுகிறது. ஆனால், டெல்லியில் … Read more

கேரள முதல்வர் பினராயி விஜயன் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம்; இன்று இரவு புறப்படுகின்றார்

திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அமைச்சர்கள் 10 நாள் ஐரோப்பிய நாட்டு சுற்றுப் பயணத்திற்காக இன்று புறப்படுகின்றனர். கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அமைச்சர்கள் சிவன் குட்டி, ராஜீவ், அப்து ரகுமான் மற்றும் வீணா ஜார்ஜ் ஆகியோர் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்கின்றனர். இன்று இரவு பினராயி விஜயன், அமைச்சர் சிவன்குட்டி மற்றும் தலைமைச் செயலாளர் ஜோய் ஆகியோர் திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்டு டெல்லி வழியாக பின்லாந்து செல்கின்றனர். பின்னர் அங்கிருந்து இருவரும் நார்வே … Read more

இந்தியாவின் தூய்மையான நகரம்: தொடர்ந்து 6வது ஆண்டாக இந்தூர் முதலிடம்!

இந்தியாவில், தூய்மையான நகரமாக, மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர் தொடர்ந்து ஆறாவது முறையாக தேர்வு செய்யப்பட்டு உள்ளது. தூய்மையில் சிறப்பாக செயல்படும் நகரங்களை கண்டறிந்து கவுரவப்படுத்தி ஊக்குவிக்கும் வகையில், ஸ்வஸ் சர்வேக்‌ஷான் என்ற தூய்மையான நகரங்களுக்கான விருது வழங்கும் திட்டத்தை 2016 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்து வைத்தார். இதன்படி பல்வேறு பிரிவுகளின் கீழ் நாட்டில் தூய்மையில் சிறந்து விளங்கும் நகரங்கள் குறித்த தரவரிசை பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் மத்திய வீட்டு வசதி … Read more

செப்டம்பர் மாதம் ரூ.1.47 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூல்; கடந்த ஆண்டை விட 26% அதிகரிப்பு.! ஒன்றிய நிதியமைச்சகம் அறிவிப்பு

டெல்லி: கடந்த செப்டம்பர் மாதம் ஜிஎஸ்டி ரூ. 1,47,686 கோடி வசூலாகி உள்ளதாக ஒன்றிய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு (2021) செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 26% அதிகமாக வசூலாகியுள்ளது. ஜிஎஸ்டி வரி வசூல் தொடர்ந்து 7-வது முறையாக 1.40 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. செப்டம்பர் மாதம் வசூலான ஜிஎஸ்டி ரூ. 1,47,686 கோடியில், ஒன்றிய ஜிஎஸ்டி ரூ.25,271 கோடியும் மாநில ஜிஎஸ்டி ரூ. 31,813 கோடியும் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.80,464 கோடியும் (இறக்குமதியில் சேகரிக்கப்பட்ட … Read more

முத்தமிட்ட நபரை உதட்டில் தீண்டிய பாம்பு | வைரல் வீடியோ

கர்நாடகாவில் நாகப் பாம்பு ஒன்றை பிடித்த பாம்பு மீட்பர் அதனை முத்தமிட முயற்சித்தபோது, அது அந்த நபரின் வாயில் தீண்டியது. பாதிக்கப்பட்ட அந்த நபர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் கர்நாடகா மாநிலம் ஷிவ்மோகா மாவட்டத்தில் பொம்மக்கட்டேவில் நடந்துள்ளது. இவர் வழக்கமாக பாம்புகள் குடியிருப்புப் பகுதிகளில் புகுந்துவிட்டால் அதை பிடித்து வனப்பகுதியில் விடுவார். அதனால், அப்பகுதியில் சற்றே பிரபலமானவர். இந்நிலையில்தான் பாம்பைப் பிடித்ததோடு இல்லாமல், அதை வைத்து சாகசம் செய்ய நினைத்தபோது அவர் தீண்டப்பட்டு சிகிச்சையில் உள்ளார். … Read more