4ஜி சிம் கார்டுடன் கூடிய மடிக்கணினியை ரூ.15,000 விலையில் விற்பனைக்கு விட முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் திட்டம்..!!

டெல்லி: 4ஜி சிம் கார்டுடன் கூடிய மடிக்கணினியை ரூ.15,000 விலையில் விற்பனைக்கு விட முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் ஜியோ நிறுவனம் தொலைத்தொடர்பு சேவையில் கொடிகட்டி பறந்து வருகிறது. தொலைத்தொடர்பு நிறுவனங்களில் தனக்கென தனி வாடிக்கையாளர்களையும் குறைந்த விலையில் மின்னணு சாதனங்களை சந்தைப்படுத்தும் ஜியோ நிறுவனம் தற்போது புதிதாக மடிக்கணினி ஒன்றை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அதன்படி, கணினி தயாரிப்பில் முன்னணி நிறுவனமான குவால்காம் மற்றும் மைக்ரோசாஃப்ட் உடன் இணைந்து மடிக்கணினியை தயாரிக்கிறது. ஜியோ மடிக்கணினிக்கான சிப்களை … Read more

ஜம்மு-காஷ்மீரில் பயணிகள் பேருந்து கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு, பலர் காயம்

ஜம்மு-காஷ்மீர், உதம்பூரில் பயணிகள் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார், பலர் காயமடைந்தனர். பயணிகள் பேருந்து மௌங்ரி, கோர் கலியில் இருந்து உதம்பூருக்குச் சென்று கொண்டிருந்தபோது மன்சார் மோர் என்ற இடத்தில் சாலையில் கவிழ்ந்திருந்ததாகப் போலீசார் தெரிவித்துள்ளனர்.   Source link

கருணை அடிப்படையில் வேலை வழங்கப்படுவது ஒரு சலுகையே தவிர உரிமை அல்ல: உச்சநீதிமன்றம் கருத்து

டெல்லி: கருணை அடிப்படையில் வேலை வழங்கப்படுவது ஒரு சலுகையே தவிர உரிமை அல்ல என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. எப்.சி.டி.எல். நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர் ஒருவர் 1995 ஏப்ரலில் பணியின்போது உயிரிழந்தார். ஊழியரின் மனைவி வேறொரு நிறுவனத்தில் பணியாற்றி வந்ததால் கருணை அடிப்படையில் வேலை தரப்படவில்லை ஊழியர் இறக்கும்போது அவரது மகள் சிறுமியாக இருந்துள்ளார்.மகள் பெரியவரானதும் கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என்று நிறுவனத்துக்கு விண்ணப்பித்துள்ளார். எப்சிடிஎல் நிறுவன ஊழியர் இறந்து 24 ஆண்டுகளுக்கு பின் … Read more

பீகார், மராட்டியம், அரியானா உள்ளிட்ட 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு நவம்பர் 3ம் தேதி இடைத்தேர்தல்; தேர்தல் ஆணையம் அறிவிப்பு

டெல்லி: பீகார், மராட்டியம், அரியானா, தெலுங்கானா, உத்தரப்பிரதேசம், ஒடிசா மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு நவம்பர் 3ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மராட்டியம், பீகார், ஒடிசா, தெலுங்கானா, உத்தரபிரதேசம் மற்றும் அரியானா ஆகிய மாநிலங்களில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. 6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதிகளுக்கும் நவம்பர் 3-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும். இந்த தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையம் … Read more

செயலிழந்த மங்கள்யான் செயற்கைக்கோள்: என்ன காரணம்?

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சார்பில் செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய ‘மங்கள்யான்’ விண்கலம் உருவாக்கப்பட்டு கடந்த 2013ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி.-25 ராக்கெட் மூலம், சுமார் ரூ.450 கோடி செலவில் விண்ணில் ஏவப்பட்ட மங்கள்யான் வின்கலம் 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இந்த நிலையில், ‘மங்கள்யான்’ செயற்கைகோள் தனது செயல்பாட்டை நிறுத்திக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதையில் … Read more

திருப்பதி ஏழுமலையான்கோயிலில் 2வது நாளாக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தரிசனம்

திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி உதய்உமேஷ்லலித் தனது குடும்பத்தினருடன் ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் வந்தார். அங்கு அவரை ஆந்திர மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரசாந்த்குமார் மிஸ்ரா, கலெக்டர் வெங்கடரமணா, இணை கலெக்டர் பாலாஜி, சித்தூர் மாவட்ட முதன்மை நீதிபதி பீமாராவ் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திருமலை பத்மாவதி விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். தொடர்ந்து, திருமலை … Read more

Breaking: பெய்ஜிங் சென்ற ஈரான் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: களத்தில் இறங்கிய IAF

டெஹ்ரானில் இருந்து சீனாவின் குவாங்சோவுக்குச் சென்ற மஹான் ஏர் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, அந்த விமானம் டெல்லி ஏடிசியை தொடர்பு கொண்டதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது. விமானம் ஜெய்ப்பூரில் தரையிறங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. எனினும், இதற்கு மறுப்பு தெரிவித்த விமானம் இந்திய வான்வெளியை விட்டு வெளியேறியது. இந்த திடீர் நெருக்கடிக்கு எதிர் நடவடிக்கையாக, இந்திய விமானப்படை (IAF) பஞ்சாப் மற்றும் ஜோத்பூர் விமானத் தளங்களில் இருந்து அதன் சுகோய் Su-30MKI போர் விமானங்களைக் கொண்டு அந்த … Read more

உ.பி.யில் நவராத்திரி துர்கா பூஜை விழாவில் பயங்கர தீ விபத்து: 3 குழந்தைகள் உட்பட 5 பேர் பரிதாப பலி.. 60க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!!

பதோஹி: உத்திரப்பிரதேசத்தின் பதோஹியில் அமைக்கப்பட்டுள்ள துர்கா பூஜை பந்தலில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இந்தாண்டு, நவராத்திரி செப்டம்பர் 26ம் தொடங்கி தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது.  ஒவ்வொரு மாநிலங்களிலும் தனித்துவமான பூஜை சடங்குகளுடன் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. நவராத்திரியில் முக்கிய நிகழ்வாக துர்கா பூஜை பண்டிகை நேற்று நாட்டின் வட மாநிலங்களில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதேபோல், உத்தரப் பிரதேச மாநிலம் பதோஹி மாவட்டத்தில்  அமைக்கப்பட்டிருந்த துர்கா பந்தலில் இரவு 9:30 … Read more

Prachand: மேட் இன் இந்தியா… IAFல் இணைந்த இலகுரக ஹெலிகாப்டர்!

Made in India எனப்படும் உள்நாட்டு தயாரிப்புகளை அதிகம் ஊக்குவிக்கும் வகையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் பாதுகாப்புத் துறையில் அதிநவீன ஆயுதங்கள், விமானப்படை ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவை இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) தயாரித்துள்ள இலகுரக ஹெலிகாப்டர் அதிக உயரமான மலைப் பகுதிகளில் திறம்பட செயல்படக் கூடியது. இதற்கு ’பிரச்சாண்ட்’ (Prachand) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் … Read more

நாட்டின் பாதுகாப்பை விமானப்படை பலப்படுத்துகிறது: ராஜ்நாத் சிங்

டெல்லி: இந்திய விமானப்படை தனது அசாத்திய தைரியம், வீரத்தால் தேசிய பாதுகாப்பை பலப்படுத்தி வருகிறது என ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இந்தியாவின் இறையாண்மையை பாதுகாப்பதில் இந்திய விமானப்படை முக்கிய பங்காற்றியுள்ளது. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இலகு ரக போர் ஹெலிகாப்டருக்கு பிரசந்த் என பெயர் வைக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.