அரசு ஊழியர்கள் பொதுமக்களிடம் பேசும் போது ‘ஹலோ’வுக்கு பதில் ‘வந்தே மாதரம்’; மகாராஷ்டிரா அரசு திடீர் உத்தரவு

மும்பை: அரசு அதிகாரிகள் பொது மக்களிடம் பேசும்போது  ‘ஹலோ’ என்று செல்வதற்கு பதிலாக ‘வந்தே மாதரம்’ என்ற சொல்லை பயன்படுத்த வேண்டும் என்று மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே – பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மகாராஷ்டிரா அரசு வெளியிட்ட அறிவிப்பில், ‘மகாராஷ்டிரா அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும், ெபாதுமக்களிடமிருந்து தொலைபேசி அல்லது செல்போன் அழைப்புகள் வந்தால், இனிமேல் … Read more

ஆகஸ்ட் மாதத்தில் 23 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகளுக்கு தடை! காரணம் இதுதான்!

ஆகஸ்ட் மாதத்தில் 23 லட்சம் இந்திய கணக்குகளை முடக்கியுள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. சமூக வலைதள நிறுவனங்கள் கடந்த ஆண்டு முதல் அமலுக்கு வந்த புதிய தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் குறிப்பிட்டுள்ள விதிகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று மத்திய அரசு ஆணையிட்டது. அதன்படி 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனர்களை கொண்டுள்ள சமூக வலைதள நிறுவனங்கள், பயனர்கள் அளித்த புகார்கள் குறித்தும், அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் மாதந்தோறும் அறிக்கை வெளியிட வேண்டும். அதன்படி, பயனர்களிடம் … Read more

27 பக்தர்கள் பரிதாப பலி; நெஞ்சை உலுக்கும் சோகம்!

உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவ் பகுதியில் பிரசித்தி பெற்ற சந்திரிகா தேவி கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு, கான்பூர் மாவட்டம், கதம்பூர் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த 50 பக்தர்கள் டிராக்டர் ஒன்றில் ஏறி பயணம் செய்தனர். இவர்கள் அனைவரும் நேற்று கோயிலில் சாமி தரிசனம் செய்த பிறகு மீண்டும் தங்களுடைய வீடுகளுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். கான்பூர் பாஹாதுனா கிராமத்தின் அருகே டிராக்டர் வந்து கொண்டிருந்தபோது திடீரென திடீரென நிலைதடுமாறிய டிராக்டர் குளத்தில் … Read more

சமையல் எண்ணெய் இறக்குமதி மீதான சுங்கவரி சலுகை மார்ச் 2023 வரை நீட்டிப்பு; ஒன்றிய அரசு உத்தரவு

டெல்லி: சமையல் எண்ணெய் இறக்குமதி மீதான சுங்கவரி சலுகையை மார்ச் 2023 வரை நீட்டித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. உள்நாட்டில் சமையல் எண்ணெய் விலையை கட்டுக்குள் வைக்கும் வகையில் சமையல் எண்ணெய் மீதான சுங்க வரிச்சலுகை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய நேர்முக வரிகள் மற்றும் சுங்க வாரியம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: குறிப்பிட்ட சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி சுங்க வரியில் தற்போதுள்ள சலுகை 2023 மார்ச் 31 வரை நீடிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு விநியோகத்தை அதிகரிப்பது மற்றும், விலையைக் … Read more

'அரிசி, கோதுமை விலைகள் கட்டுக்குள் உள்ளது' – மத்திய அரசு தகவல்

உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ய போதுமான உணவு தானிய இருப்பு நாட்டில் உள்ளது என்று நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் கோதுமை மற்றும் அரிசியின் விலைகள் தொடர்புடைய ஆண்டுகளில் குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிப்புக்கு ஏற்ப அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருந்துள்ளது. 2021-22ம் ஆண்டில் விலைகள் ஒப்பீட்டளவில் குறைவாகவே இருந்தன, ஏனெனில் விலைகளைக் கட்டுப்படுத்த ஓ.எம்.எஸ்.எஸ். எனப்படும் வெளிச்சந்தை விற்பனை திட்டத்தின் மூலம் சுமார் 80 லட்சம் … Read more

அன்புக்கு பதில் அன்பு மட்டுமே | உ.பி. சிறையில் இந்துக்களுடன் நவராத்திரி விரதம் மேற்கொண்ட இஸ்லாமியர்கள்

கான்பூர்: உத்தரப் பிரதேசத்தில் உள்ள முசாபர்நகர் சிறையில் 200க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் நவராத்திரி விரதத்தை கடைபிடிப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்துகளின் திருவிழாக்களில் ஒன்றான நவராத்திரி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மத ஒற்றுமையை நிலை நாட்டும் வகையில் உத்தரப் பிரதேசத்தில் முசாபர்நகர் சிறையில் உள்ள இஸ்லாமியர்கள் சிறையில் உள்ள இந்து மதத்தைச் சார்ந்த கைதிகளுடன் இணைந்து நவராத்திரி விரதத்தை கடைபிடித்துள்ளனர். இதுகுறித்து சிறை அதிகாரிகள் கூறும்போது, “முசாபர்நகர் சிறையில் சுமார் 3,000 கைதிகள் … Read more

சிறுமியின் சுவாசக் குழாயில் சிக்கிக் கொண்ட ‘ஹேர்பின்’; எய்ம்ஸ் மருத்துவர்கள் வெளியே எடுத்தனர்

போபால்: சிறுமியின் சுவாசக் குழாயில் சிக்கிக் கொண்ட 4 சென்டிமீட்டர் ஹேர்பின்னை போபால் எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் வெளியே எடுத்தனர். மத்திய பிரதேச மாநிலம் போபாலை சேர்ந்த சிறுமி ஒருவர் தற்செயலாக பெண்கள் பயன்படுத்தும் ஹேர்பின்னை விழுங்கி விட்டார். அந்த ஹேர்பின், சிறுமியின் சுவாசக் குழாயில் சிக்கிக் கொண்டது. ஆனால் ஹேர்பின் சிக்கிக் கொண்ட விசயத்தை தனது பெற்றோரிடம் சிறுமி தெரிவிக்கவில்லை. அதேநேரம் சிறுமிக்கு மூச்சுவிடுதலில் சிரமம் இருந்ததால், மூன்று நாட்களுக்கு பின் தனது பெற்றோரிடம் நடந்த … Read more

சமையல் எண்ணெய் இறக்குமதி மீதான சுங்கவரி சலுகையை மார்ச் 2023 வரை நீட்டிப்பு

டெல்லி: சமையல் எண்ணெய் இறக்குமதி மீதான சுங்கவரி சலுகையை மார்ச் 2023 வரை நீட்டித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. உள்நாட்டில் சமையல் எண்ணெய் விலையை கட்டுக்குள் வைக்கும் வகையில் சமையல் எண்ணெய் மீதான சுங்க வரிச்சலுகை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நான் சசிதரூர் கிட்ட பேசிட்டேன்… மல்லிகார்ஜுன கார்கே சொன்ன தகவல்!

வேட்புமனு தாக்கல், பிரச்சாரம், வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை என தலைவர் நாற்காலியை அலங்கரிக்கப் போகும் நபரை தேர்வு செய்ய அகில இந்திய காங்கிரஸ் கட்சி தீவிரமாக தயாராகி கொண்டிருக்கிறது. சமீபத்தில் நிலவரப்படி, மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் என இருவர் மட்டும் போட்டியில் இருக்கின்றனர். இவர்களில் யார் வெற்றி பெறப் போகிறார் என்ற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 17ஆம் தேதி தேர்தல் நடந்து அக்டோபர் 19ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. மூத்த … Read more

'வாவ்…' குப்பையில் கோடியை அள்ளும் இந்தூர் – தூய்மையான நகரம் விருதை வென்றது இப்படிதான்!

மத்திய அரசு ஆண்டுதோறும், சுத்தமான நகரம் குறித்து கணக்கெடுப்பை எடுத்து, அதன் முடிவுகளை வெளியிடும். இந்தாண்டுக்கான கணக்கெடுப்பின் முடிவை மத்திய அரசு நேற்று அறிவித்தது. அதில், முதல் மூன்று இடங்களை முறையே இந்தூர் (மத்தியப் பிரதேசம்), சூரத் (குஜராத்), நவி மும்பை (மகாராஷ்டிரா) ஆகிய நகரங்கள் பிடித்துள்ளன. முதலிடம் பிடிக்கும் நகரத்திற்கு ஸ்வச் சர்வேக்ஷன் என்ற பெயரில் மத்திய அரசு விருதளிக்கும். இந்தூர் நகரம் இந்த விருதை தொடர்ந்து ஆறாவது முறையாக பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.  இதில், முதல் … Read more