ரெப்போ வட்டி விகிதம் 0.5 சதவீதம் உயர்வு!சாமானியர்களுக்கு பெரும் அதிர்ச்சி!!

ரிசர்வ் வங்கியின் கொள்கைக் கூட்டம் கடந்த 28-ம் தேதி தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெற்ற இந்தக் கூட்டம் நேற்று முடிவடைந்தது. இந்த கூட்டத்துக்கு பின்னர் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நாட்டின் பணவீக்கத்தை குறைக்கவும், பண புழக்கத்தை கட்டுப்படுத்தவும் ரெப்போ ரேட் விகிதத்தை 0.50 சதவீதம் அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளதாக அறிவித்தார். இதன் மூலம் தற்போது ரெப்போ வட்டி விகிதம் 5.40 சதவீதத்தில் இருந்து 5.90 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதன்மூலம் வட்டி … Read more

யூதர்கள், முக்கிய பிரமுகர்கள் மீது தாக்குதல் நடத்த பிஎஃப்ஐ சதி – தேசிய புலனாய்வு முகமை விசாரணையில் அம்பலம்

புதுடெல்லி: தமிழகம் உட்பட பல மாநிலங்களில் பிஎஃப்ஐ அலுவலகம் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ கடந்த மாத இறுதியில் 2 முறை சோதனை நடத்தி 250-க்கும் மேற்பட்டோரை கைது செய்து விசாரித்தது. இவர்களிடம் தீவிரவாத சதி தொடர்பாக ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. வளைகுடா நாடுகளில் இருந்து ஹவாலா முறையில் பணம் பெறப்பட்டு, வங்கிகளில் ரூ.120 கோடி டெபாசிட் செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. என்ஐஏ விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட பிஎஃப்ஐ தொண்டர்கள் … Read more

தீவு வாங்கிய பாடகர்

மும்பை: பிரபல பஞ்சாபி பாடகர் மிகாசிங், ஏராளமான இந்தி படங்களில் பாடல்களை பாடியுள்ளார். தமிழிலும் அவர் பாடியிருக்கிறார். இந்த நிலையில் மிகாசிங் சொந்தமாக வெளிநாட்டில் ஒரு தீவை விலைக்கு வாங்கியுள்ளார். இந்த தீவில் ஒரு ஏரியும் அடங்கும். மேலும் ஏரியுடன் கூடிய இந்த தீவில் 7 படகுகள் மற்றும் 10 குதிரைகளும் உள்ளன என மிகாவின் நெருங்கியவர்கள் தெரிவித்தனர். பாடகர் மிகா சிங் தான் வாங்கிய ஏரியுடன் கூடிய தீவின் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் … Read more

அனைத்துத் தரப்பு மக்களையும் திரைப்படங்கள் இணைக்கின்றன – தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் குடியரசுத் தலைவர் பேச்சு

புதுடெல்லி: டெல்லியில் நேற்று 68-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில், நடிகர்கள் சூர்யா, அஜய் தேவ்கன் ஆகியோருக்கு சிறந்த நடிகர்களுக்கான விருதை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். கடந்த 2020-ம் ஆண்டுக்கான, 68-வது தேசிய திரைப்பட விருதுகள் ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டன. இதில், சிறந்த நடிகர்களாக இந்தி நடிகர் அஜய் தேவ்கன் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த சூர்யா ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். மேலும், சிறந்த படம், சிறந்த நடிகர் (சூர்யா), சிறந்த … Read more

மகேஷ் பாபு வீட்டில் திருட முயற்சி: சுவர் ஏறி குதித்த வாலிபர் கால் முறிவு

திருமலை: ஐதராபாத்தில் தெலுங்கு திரைப்பட சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு வீட்டில் திருட முயன்ற வாலிபரின் கால் முறிந்தது. தெலங்கானா மாநிலம், ஐதராபாத் ஜூப்லி ஹில்ஸ் பகுதி பிலிம் நகரில் தெலுங்கு திரைப்பட சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் வீடு உள்ளது. சம்பவத்தன்று இரவு மர்மநபர் ஒருவர் மகேஷ்பாபுவின் வீட்டு சுவர் ஏறி குதித்து திருட முயன்றார். ஆனால், வீட்டின் மதில் சுவர் 10 அடி உயரத்திற்கு மேல் இருந்ததால் சுவர் ஏறி குதித்தபோது கால் முறிந்தது. இதனால் அந்த … Read more

காங்கிரஸ் தலைவர் தேர்தல் | கார்கே, சசி தரூர், திரிபாதி மனு தாக்கல் – அக்டோபர் 17-ம் தேதி வாக்குப்பதிவு

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட மல்லிகார்ஜுன கார்கே, சசி தரூர், கே.என்.திரிபாதி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அக். 17-ல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோர் போட்டியிட மறுத்துவிட்ட நிலையில், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக கூறினார். ஆனால், முதல்வர் பதவியை சச்சின் பைலட்டுக்கு விட்டுக்கொடுக்க மறுத்த விவகாரத்தால், போட்டியில் இருந்து விலகினார். திருவனந்தபுரம் எம்.பி. சசி … Read more

முப்படை தலைமை தளபதி பதவியேற்பு: சவால்களை சந்திக்க தயார் என சூளுரை

புதுடெல்லி: முப்படைகளின் தலைமை தளபதியாக நேற்று பொறுப்பேற்ற  அனில் சவுகான், நாட்டின் பாதுகாப்பை இன்னும் பலப்படுத்தி அனைத்து சவால்களையும் சந்திக்க தயார் என சூளுரைத்தார். ராணுவம், விமானப்படை, கப்பற்படை என முப்படைகளை ஒருங்கிணைத்து செயல்படும் வகையில் முப்படைகளின் தலைமை தளபதி பதவி, கடந்த 2019ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.  இதன் முதல் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்ட பிபின் ராவத்,   கடந்தாண்டு நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தார். பின்னர்,  கடந்த 9 மாதங்களாக இப்பதவி காலியாக இருந்தது. இந்நிலையில், முப்படைகளின் … Read more

ஓடும் ரயிலில் உயிருக்காக கெஞ்சிய திருடன்! வைரல் வீடியோ

பீகார் மாநிலத்தில் ஜாமல்பூர்-சாகிப்காஞ்ச் பயணிகள் ரயில் லைலாக் பகுதியில் சென்ற போது, ரயிலின் ஜன்னல் வழியாக ஒரு பயணியிடமிருந்து செல்போனை திருடன் பறிக்க முயன்றுள்ளார். அப்போது பயணி திருடனின் கையையும், பணியனையும் லாவகமாக பிடிக்க ரயில் வேகமாக செல்ல தொடங்கியிருக்கிறது. வெளியே தொங்கிய திருடன் தன்னை காப்பாற்றுமாறும் தனது கைகளை விட்டுவிட வேண்டாம் என்றும் கொஞ்சி உள்ளார். இதை மற்ற பெரெத்தில் இருந்த பயணிகள் தங்களது செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளனர். ஆத்திரமடைந்த … Read more

முகேஷ் அம்பானிக்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு

புதுடெல்லி: தொழில் அதிபர் முகேஷ் அம்பானிக்கு கடந்த 2013-ம் ஆண்டு முதல் ‘இசட்’ பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அவர் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மத்திய உளவுத்துறை தகவல் அளித்ததையடுத்து, மத்திய அரசு முகேஷ் அம்பானிக்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு வழங்குவதாக அறிவித்துள்ளது. இதன்படி, இனி 40 முதல் 50 கமாண்டோ படை வீரர்கள் முகேஷ் அம்பானியை பாதுகாக்கும் பணியில் ஈடுபடுவார்கள். ‘இசட் பிளஸ்’ என்பது மிக உச்சபட்ச பாதுகாப்பு பிரிவாகும். நாட்டின் மிக முக்கியமான … Read more

இந்திய ஒற்றுமை பாதயாத்திரையை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: கர்நாடகாவில் ராகுல் ஆவேசம்

பெங்களூரு: ‘இந்திய ஒற்றுமையை வலியுறுத்தி நான் மேற்கொண்டுவரும் பாதயாத்திரையை  எந்த சக்தியாலும் தடுக்க முடியாது,’ என்று ராகுல் காந்தி தெரிவித்தார். நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தி இந்திய ஒற்றுமை நடை பயணத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார். கடந்த 7ம் தேதி குமரியில் பயணத்தை தொடங்கிய அவர், தமிழகத்தை தொடர்ந்து கேரளாவில் நடை பயணம் செய்து வந்தார். நேற்று அவர்  சாம்ராஜ் நகர் மாவட்டத்தின் வழியாக கர்நாடகாவில் நுழைந்தார். அவரை சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் … Read more