மாணவிகளுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட சப் கலெக்டர் – வைரலாகும் வீடியோ!

கேரள மாநில கண்ணூர் அருகே உள்ள தலச்சேரி பகுதியில் நடந்த சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் சார் அனுகுமாரி பள்ளி மாணவிகளுடன் இணைந்து குத்தாட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் 75-வது சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள் மட்டுமின்றி வணிக வளாகங்கள், வீடுகளில் கூட இந்தாண்டு தேசிக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டன. அந்த வகையில் கேரள மாநிலம் கண்ணூர் அருகே தலச்சேரி நகராட்சி … Read more

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவு தினம்: தலைவர்கள் மரியாதை

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவு தினத்தை முன்னிட்டு டெல்லியில் அவரது நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். பாஜக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பாஜக மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாய், கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி தனது 93 வயதில் காலமானார். அவரது நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. அதையடுத்து டெல்லியில் அமைந்துள்ள சதைவ் அடல் நினைவிடத்தில், நாட்டின் ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் உள்ளிட்ட … Read more

காஷ்மீர் ஆப்பிள் தோட்டத்தில் பண்டிட் சகோதரர்கள் மீது துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி

ஸ்ரீநகர்: காஷ்மீரில் ஆப்பிள் தோட்டத்தில் புகுந்து பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த சகோதரர்களை தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஒருவர் படுகாயமடைந்தார். காஷ்மீரில் பண்டிட் சிறுபான்மையினர் சமூகத்தினர், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவது சமீப காலமாகவே அதிகமாக உள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் புட்காம் மாவட்டத்தில் அரசு அலுவலகத்தில் காஷ்மீர் பண்டிட் ஒருவர் கொலை செய்யப்பட்டார். அந்தச் சம்பவத்திற்குப் பின்னர் பண்டிட் சமூகத்தினர் பெரும் போராட்டங்கள் நடத்தினர். தங்களின் உயிருக்கும், … Read more

திருப்பதியில் ரூல்ஸ் பிரேக்… உள்ள புகுந்த பெரும்புள்ளிகள்- டென்ஷனில் பக்தர்கள்!

ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் கடந்த மூன்று நாட்களாக தொடர் விடுமுறை காரணமாக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து தரிசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையொட்டி விஐபிக்கள் மட்டும் தரிசனம் செய்யும் சிறப்பு நடைமுறையை வரும் 21ஆம் தேதி வரை ரத்து செய்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்திருந்தது. எனவே விஐபி பரிந்துரை கடிதங்கள் கொண்டு வந்தால் அவை ஏற்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஆந்திராவில் ஆளுங்கட்சியாக இருக்கும் … Read more

குஜராத்தில் ரூ.1,026 கோடி மதிப்புள்ள 513 கிலோ போதைப்பொருள் பறிமுதல்

குஜராத்: பரூச் மாவட்டம் அங்கலேஷ்வரில் ரூ.1,026 கோடி மதிப்புள்ள 513 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மருந்து உற்பத்தி ஆலையில் சட்டவிரோதமாக போதைப்பொருள் தயாரித்த 1 பெண் உட்பட 7 பேர் கைது செய்துள்ளனர்.

காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் முதன்முறை தேசிய கொடிகளுடன் பிரம்மாண்ட பேரணி

புதுடெல்லி: காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் தல் ஏரிக்கரை சாலையில் முதன்முறையாக தேசியக் கொடிகளுடன் நேற்று முன்தினம் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகள்தோறும் தேசியக் கொடியை ஏற்ற பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார். இதையேற்று கடந்த 13-ம் தேதி நாடு முழுவதும் வீடுகளில் தேசிய கொடியேற்றப்பட்டது. பல்வேறு நகரங்களில்தேசிய கொடிகளுடன் பிரம்மாண்ட பேரணிகள் நடைபெற்றன. ஜம்மு-காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் நேற்று முன்தினம் மாலை பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. அந்த யூனியன் … Read more

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்: காஷ்மீரி பண்டிட் உயிரிழப்பு!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், காஷ்மீரி பண்டிட் ஒருவர் உயிரிழந்தார். மேலும் அவரது சகோதரர் படுகாயம் அடைந்தார். ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் உள்ள, சோட்டிபோரா என்ற பகுதியில் உள்ள ஆப்பிள் தோட்டத்தில், பொது மக்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார்; மேலும் ஒருவர் காயம் அடைந்தார். தாக்குதலுக்கு உள்ளான இருவரும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள். காயம் அடைந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இது குறித்து தகவல் … Read more

பிரேக் செயலிழந்ததால் ஆற்றில் விழுந்த பஸ்… ஏழு ITBP வீரர்கள் பலி; பலர் காயம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் உள்ள சந்தன்வாரி அருகே, இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படையினர் சென்ற வாகனம் இன்று விபத்துக்குள்ளானதில் 7 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ஃபிரிஸ்லான் என்ற இடத்தில் அவர்களின் வாகனம் சாலையில் கவிழ்ந்து ஆற்றங்கரையில் விழுந்ததில் சுமார் 30 வீரர்கள் காயமடைந்துள்ளனர். அமர்நாத் யாத்திரை பாதுகாப்பு பணிக்காக அனுப்பப்பட்ட ITBP ராணுவ வீரர்கள் பணியில் இருந்து திரும்பிக் கொண்டிருக்கும் போது, இந்த சம்பவம் நடந்துள்ளது. 37 ஐடிபிபி (ITBP) பணியாளர்கள் மற்றும் இரண்டு … Read more

காஷ்மீரில் சுதந்திர தினத்தன்று காவல் கட்டுப்பாட்டு அறை மீது கையெறி குண்டு வீச்சு: போலீஸ்காரர் உட்பட 2 பேர் காயம்

ஜம்மு: ஜம்மு – காஷ்மீர் மாநிலம் புட்காம் மற்றும் நகர் மாவட்டங்களில் நடந்த இரண்டு வெவ்வேறு கையெறி குண்டுத் தாக்குதல்களில் பொதுமக்களில் ஒருவரும், காவல்துறை அதிகாரி ஒருவரும் காயமடைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக புட்காம் மாவட்டத்தின் சதுராவில் உள்ள குடியிருப்பு மீதும், நகரில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறை மீதும் கையெறி குண்டு தாக்குதலை தீவிரவாதிகள் நடத்தினர். புட்காமின் கோபால்போரா சதுரா பகுதியில் தீவிரவாதிகள் வீசிய கையெறி குண்டில் கரண் குமார் சிங் என்பவர் காயமடைந்தார். அவர் … Read more

விளம்பரத்தில் நேரு படம் புறக்கணிப்பு – திப்பு சுல்தான், சாவ‌ர்க்கர் ப‌டங்கள் கிழிப்பால் கர்நாடகாவில் பதற்றம்

பெங்களூரு: நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை யொட்டி பாஜக அரசு சார்பில் பத்திரிகைகளுக்கு விளம்பரம் கொடுக்கப்பட்டது. அதில் மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஸ், வல்லபபாய் படேல், அம்பேத்கர், பகத் சிங், சாவர்க்கர் உள்ளிட்டோரின் படங்கள் இடம் பெற்றிருந்தன. ஆனால் சுதந்திரப் போராட்ட வீரரும், நாட்டின் முதல் பிரதமருமான ஜவஹர்லால் நேருவின் புகைப்படம் இடம்பெறவில்லை. இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதற்கிடையில், சுதந்திர தினத்தை … Read more