57 ஆண்டுகளுக்கு பிறகு சிலிண்டர்.. கிராம மக்கள் கொண்டாட்டம்..!

இந்தியாவில் முதல் எல்பிஜி சிலிண்டர் இணைப்பு கடந்த 1965-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 22-ம் தேதி கொல்கத்தாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பிறகு 57 ஆண்டுகள் கடந்த நிலையில், அருணாச்சல பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு கடந்த 2 நாட்களுக்கு முன்புதான் சிலிண்டர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அருணாச்சல பிரதேசத்தில் மியான்மார் எல்லையை ஒட்டிய சாங்லாங்க் மாவட்டத்தின் மியாவ் டிவிஷன் பகுதிக்கு உட்பட்ட விஜயநகர் என்ற கிராமத்தில் சுமார் 15 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். மாவட்ட தலைநகரில் இருந்து … Read more

கார், பணம் பறித்த வழக்கில் நிழல் உலக தாதாவின் உதவியாளர் கைது

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் உதவியாளர் ரியாஸ் பதி என்பவரை மிரட்டி பணம் பறித்தல் புகாரின் அடிப்படையில் மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து வெர்சோவா போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘வெர்சோவா பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை மிரட்டி, அவரிடம் இருந்து ரூ.30 லட்சம் மதிப்புள்ள கார், ரூ.7.5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை ரியாஸ் பதி பறித்துள்ளார். அதையடுத்து மிரட்டி பணம் பறித்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ரியாஸ் பதி … Read more

வரலாற்றில் முதன்முறை: பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கான 10% இடஒதுக்கீடு வழக்கு விசாரணை நேரலை

உச்சநீதிமன்றத்தின் மூன்று அரசியல் சாசன அமர்வுகள் வரலாற்றில் முதன்முதலாக நேரலை செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கடந்த மாதம் 26-ம் தேதி பதவி ஏற்று கொண்ட யு.யு. லலித் உச்சநீதிமன்ற நடவடிக்கைகளில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். தற்போது வாரத்தின் செவ்வாய், புதன், வியாழன் ஆகிய மூன்று நாட்களில் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முக்கியமான வழக்குகளை விசாரணை செய்து வருகிறது. உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வுகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான … Read more

“பாலியல் தொழிலின் கூடாரமாகவே இருந்தது” – உத்தராகண்ட் சொகுசு விடுதியின் முன்னாள் ஊழியர்கள் வாக்குமூலம்

டேராடூன்: உத்தராகண்ட் சொகுசு விடுதி ஒன்றில் வரவேற்பாளராக வேலை பார்த்து வந்த அங்கிதா பண்டாரி என்ற 19 வயது இளம் பெண்ணின் கொலை வழக்கில், அந்த விடுதியின் வேலை பார்த்த முன்னாள் ஊழியர்கள் கொடுத்துள்ள வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தராகண்ட் மாநிலத்தின் பாஜக மூத்த தலைவராக இருந்தவர் வினோத் ஆர்யா. இவர் மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் ஆவார். இவரது மகன் புல்கிட் ஆர்யாவுக்கு ரிஷிகேஷ் அருகே சொகுசு விடுதி ஒன்று உள்ளது. இதில் வரவேற்பாளராக அங்கிதா … Read more

புதுவையில் பதற்றம்!!தமிழ்நாடு அரசு பேருந்துகள் மீது தாக்குதல்…

திமுக எம்.பி. ஆ.ராசா இந்துக்கள் குறித்து அவதூறாக பேசுவதாகவும், அதைக்கண்டித்தும் புதுவையில் இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் இன்று (செப்.27) முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் இன்று புதுவையில் தனியார் பேருந்துகள் ஓடவில்லை. பெரும்பாலான இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. டெம்போக்களும் ஓடவில்லை. தமிழ்நாடு அரசு பேருந்துகள் மட்டுமே காலையில் இயக்கப்பட்டது. இன்று காலை சுமார் 5 மணியளவில் விழுப்புரத்தில் இருந்து புதுவை நோக்கி தமிழ்நாடு அரசு பேருந்து வந்தது. வில்லியனூர் மேம்பாலம் … Read more

ராஜஸ்தான் காங்கிரஸில் நீடிக்கும் குழப்பம் | சச்சின் பைலட்டுக்கு தூதுவிடும் பாஜக

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் காங்கிரஸில் குழப்பம் நீடித்து வரும் சுழலில், அம்மாநில முன்னாள் துணை முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவருமான சச்சின் பைலட்டுக்கு பாஜகவின் கதவுகள் திறந்திருப்பதாக அம்மாநில பாஜக தலைவர் சத்தீஷ் பூனியா தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெலாட், காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். அவர் கட்சித் தலைவராகும் பட்சத்தில், சச்சின் பைலட்டை ராஜஸ்தான் முதல்வராக்க காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டது. இதற்கு அஷோக் கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் 90 பேர் எதிர்ப்பு … Read more

விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை – காங்கிரஸ் பிரமுகர் கைது!

டெல்லியில், விமானப் பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த காங்கிரஸ் கட்சி பிரமுகரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். டெல்லியில் மெஹ்ருலி பகுதியை சேர்ந்தவர் 30 வயது பெண். இவர் தனியார் விமான நிறுவனத்தில் பணிப்பெண்ணாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஹர்ஜீத் யாதவ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த இளம்பெண்ணின் வீட்டிற்கு ஹர்ஜீத் யாதவ் மது போதையில் வந்துள்ளதாக தெரிகிறது. அப்போது அவரிடம் என்னவென விசாரித்து … Read more

உயர்சாதியினருக்கான 10% இட ஒதுக்கீடு வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு

டெல்லி: உயர்சாதியினருக்கான 10% இட ஒதுக்கீடு வழக்கில் விசாரணை முடிந்த நிலையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது. தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன் விசாரணை நடந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் தேர்தல்: போட்டியில் இருந்து அசோக் கெலாட் விலகல்?

அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் போட்டியில் இருந்து ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவரைத் தேர்வு செய்ய வரும் அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் கட்சியில் சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு நேரு குடும்பத்தைச் சாராத ஒருவர் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்க உள்ளார். தாங்கள் தலைவராகப் போவதில்லை என சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் உறுதியுடன் … Read more

உயர்சாதியினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் முதன்முறையாக வழக்கு விசாரணை நேரலை

டெல்லி : உச்சநீதிமன்றம் அரசியல் சாசனம் அமர்வில் விசாரிக்கப்படும் வழக்கு நேரலையில் ஒளிபரப்பப்பட்டது. கவனமாக கையாளவேண்டிய பாலியல் வழக்குகள் மற்றும் திருமணம் சார்ந்த வழக்குகளை தவிர பிற வழக்குகளின் விசாரணை நேரலை செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் 2018-ம் ஆண்டில் தீர்ப்பு வழங்கியது. எனினும் 4 ஆண்டுகளாக நேரலை நடைமுறைக்கு வராத நிலையில் அரசியல் சாசன அமர்வில் விசாரிக்கப்படும் வழக்குகளை நேரலை செய்ய தலைமை நீதிபதி லலித் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டது. இதன்படி முன்னேறிய … Read more