அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு வெள்ளிக்கிழமை உச்சநீதிமன்றத்தில் விசாரணை..!!

டெல்லி: அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது. கடந்த ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்தார். இதனை எதிர்த்து இரு நீதிபதிகள் அமர்வில் எடப்பாடி பழனிசாமி தரப்பு மேல்முறையீடு செய்தது. தனி நீதிபதியின் தீர்ப்பில் சில தவறுகள் உள்ளதாகவும், இதனால் கட்சி நடவடிக்கைகள் ஸ்தம்பித்துவிட்டதாகவும் பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் துரைசாமி, சுந்தரமோகன் அமர்வு, பொதுக்குழு … Read more

2024 வரை பாஜக தலைவராக நீடிக்கும் ஜெ.பி. நட்டா? -மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பாஜக திட்டம்

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவரான ஜெகத் பிரகாஷ் நட்டா, வருகிற 2024-ம் ஆண்டு வரை அந்தப் பதவியிலேயே தொடர, பாஜக தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். ஜெகத் பிரகாஷ் நட்டாவின் பதவிக்காலம் அடுத்த வருடம் ஜனவரி மாதம் முடிவுக்கு வருகிறது. இந்நிலையில் அவர் அந்தப் பதவியில் தொடர வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் கருதுவதாக பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர். ஜெகத் பிரகாஷ் நட்டாவின் தலைமை … Read more

மொட்டை மாடியில் வெள்ளை உடை அணிந்த பேய் மீது எஃப்ஐஆர் பதிவு

வைரல் வீடியோ: வாரணாசியில் வெள்ளை உடை அணிந்த ‘பேய்’ வீட்டின் கூரைகளில் நடமாடும் வீடியோ வைரலாக பரவி, அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. செய்திகள், அச்சு ஊடகத்தில் மட்டுமே பிரதானமாக இருந்த காலம் மாறி, வீடியோக்களாகவும், டிஜிட்டல் முறைக்கும் மாறிவிட்டன. வீடியோ செய்திகள் அனைவராலும் அதிகமாக விரும்பப்படுகின்றன. சில நாட்களுக்கு முன்பு பாடி காபி பகுதியில் அமைந்துள்ள விடிஏ காலனியின் வீடியோ வாட்ஸ்அப்பில் வைரலானதால் மக்களிடையே தொடங்கியது. அந்த வீடியோவில் ஒரு பெண் வெள்ளை உடையில் மிதப்பதைக் காண … Read more

8 மாநிலங்களில் பி.எஃப்.ஐ. தொடர்புடைய இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் மீண்டும் சோதனை: அசாமில் 21 பேர், கர்நாடகாவில் நூற்றுக்கணக்கானோர் கைது..!!

கர்நாடகா: நாடு முழுவதும் 8 மாநிலங்களில் பாப்புலர் பிரண்ட் ஆப் அலுவலகங்கள், நிர்வாகிகளுக்கு சொந்தமான வீடுகளில் என்.ஐ.ஏ. மீண்டும் சோதனை நடத்தி வருகிறது. கர்நாடகாவில் முன்னெச்சரிக்கையாக நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, எஸ்.டி.பி.ஐ. கட்சிகளின் அலுவலகங்கள், நிர்வாகிகள் வீடுகள் என கடந்த வியாழக்கிழமை சுமார் 15 மாநிலங்களில் தேசிய புலனாய்வு முகமை, அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் நாடு முழுவதும் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் தீவிர விசாரணை … Read more

அசோக் கெலாட் மீது ஒழுங்கு நடவடிக்கை? – காங்கிரஸ் தலைமை காட்டம்

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் தலைமை திட்டமிட்டுள்ளது. சச்சின் பைலட்டை அடுத்த ராஜஸ்தான் முதல்வராக்க காங்கிரஸ் தலைமை அளித்த அறிவுரையை அசோக் கெலாட் ஏற்காததால், காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்தி கடும் கோபத்தில் உள்ளார் என்றும், விரைவில் கெலாட் ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் புதிய தலைமுறைக்கு தகவல் அளித்துள்ளனர். ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடத்தி சச்சின் … Read more

போரைக் கண்டு அஞ்சும் நாடு அல்ல இந்தியா: ராஜ்நாத் சிங்

புதுடெல்லி: இந்தியா அமைதியை விரும்பும் நாடு என்றபோதிலும், போரைக் கண்டு அஞ்சும் நாடு அல்ல என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ஹிமாச்சல் பிரதேசத்தின் கங்கரா மாவட்டத்தில் உள்ள பதோலி என்ற இடத்தில் பணியின்போது உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கான நினைவஞ்சலி கூட்டத்தில் ராஜ்நாத் சிங் ஆற்றிய உரை: இந்திய ராணுவத்தின் வலிமையை உலகம் மதிப்புடன் பார்க்கிறது. எனவே, ஒட்டுமொத்த உலகத்தின் அமைதிக்காகவும் குரல் கொடுக்கும் தகுதி கொண்ட ஒரே நாடாக இந்தியா விளங்குகிறது. … Read more

புதுச்சேரியில் முழு அடைப்பு காரணமாக பள்ளியை மூட பாஜகவினர் நிர்பந்தம்… வெளியே போ என பெற்றோர்கள் முழக்கம்

புதுச்சேரி: புதுச்சேரியில் பள்ளியை மூட வற்புறுத்திய பாஜகவினரை சூழ்ந்து கொண்டு வெளியே போ, வெளியே போ என பெற்றோர்கள் முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்து மதம் பற்றி தவறாக பேசப்பட்டு விட்டதாக கூறி புதுச்சேரியில் இந்து முன்னணி சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆனால் பெரும்பாலான பகுதிகளில்  வழக்கம் போல் அன்றாட பணிகள் தொடர்கின்றன. இந்த நிலையில் உப்பளத்தில் உள்ள தனியார் பள்ளிக்குள் புகுந்த பாஜகவினர் சிலர் பள்ளியை விடுமுறை அறிவித்து மூடுமாறு வற்புறுத்தியுள்ளார். … Read more

எழுத்துப்பிழை செய்ததற்காக பட்டியலின மாணவனை அடித்தேக்கொன்ற ஆசிரியர்; உ.பியில் நடந்த கொடூரம்

இந்தியாவில் சிறுபான்மையினர்கள், பட்டியலினத்தவர்களுக்கு எதிராக அவ்வப்போது கொடூரங்கள் நடந்தேறி வருகின்றன. குறிப்பாக வடமாநிலங்களில் தொடரும் பல விதமான தீண்டாமை கொடுமைகள் குறித்து கேள்வியுறும்போது நாட்டு மக்கள் பலரும் அதிர்ச்சியில் உறைந்துப்போகிறார்கள். இப்படி இருக்கையில், உத்தரப் பிரதேசத்தில் 20 நாட்களுக்கு முன்பு சமூக அறிவியல் பாடத்தில் வைக்கப்பட்ட வகுப்பு தேர்வில் பட்டியலினத்தைச் சேர்ந்த 15 வயதுடைய மாணவன் சரியாக பதில் எழுதாததால் அந்த சிறுவனை அஸ்வினி சிங் என்ற ஆசிரியர் குச்சியால் தாக்கியிருக்கிறார். ஏற்கெனவே உடல்நலனில் பிரச்னை இருந்த அந்த சிறுவனை … Read more

புதுச்சேரியில் தமிழக எம்.பி ஆ.ராசாவை கண்டித்து இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இன்று முழு அடைப்பு போராட்டம்..!!

நீலகிரி திமுக எம்.பி. ஆ.ராசா , நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சொல்லப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரியில் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் காரணமாக மாலை 5 மணி வரை அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. மேலும் தனியார் பேருந்துகள் முற்றிலுமாக இயங்கவில்லை. ஒரு … Read more

ஆர்வம் இல்லை: காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட கமல்நாத் மறுப்பு

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மத்திய பிரதேச முன்னாள் முதல்வருமான கமல்நாத், காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார். காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை டெல்லியில் அவரது இல்லத்தில் கமல்நாத் சந்தித்தார். இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் தேர்தலில் அவரும் போட்டியிடலாம் என்று கூறப்பட்டது. இதற்கு பதில் அளிக்கும் விதமாக “காங்கிரஸ் தலைமை பதவிக்கு போட்டியிட எனக்கு விருப்பம் இல்லை. நான் நவராத்திரி விழாவுக்காகவே டெல்லி வந்தேன்” என்று கூறி … Read more