எலெக்ட்ரிக் பைக் ஷோரூமில் தீ விபத்து சென்னையை சேர்ந்த 2 பேர் உட்பட 8 பேர் கருகி பலி

திருமலை: ஷோரூமில் சார்ஜ் போட்டிருந்த எலெக்ட்ரிக் பைக் தீப்பிடித்து எரிந்ததில் 8 பேர் பரிதாபமாக இறந்தனர். 14 பேர் பலத்த தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். தெலங்கானா மாநிலம், செகந்திராபாத் ரயில் நிலையம் அருகே 5 மாடி கட்டிடத்தின் கீழ் தளத்தில் எலெக்ட்ரிக் பைக் ஷோரூம் உள்ளது. இதன் மேல்மாடியில் லாட்ஜ் உள்ளது. நேற்று முன்தினம் இரவு ஷோரூமில் சார்ஜ் போடப்பட்டிருந்த எலெக்ட்ரிக் பைக் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால், அங்கு நிறுத்தி இருந்த 23 பைக்குகளும் … Read more

ஏழுமலையான் கோயில் உண்டியலில் ஒரே நாளில் ரூ.5.14 கோடி காணிக்கை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழக்கம்போல் பக்தர்களின் கூட்டம் அதிகமாகவே உள்ளது. இதனால் சர்வ தரிசனத்தில் சென்று சுவாமியை தரிசிக்க நேற்று 14 மணி நேரம் ஆனது. திங்கட்கிழமையன்று ஏழுமலையானை 74,231 பேர் தரிசித்தனர். இதில், 33,591 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தினர். சுவாமி உண்டியலில் பக்தர்கள் ரூ.5.14 கோடி காணிக்கை செலுத்தினர். அன்னபிரசாதத்தில் இயற்கை வேளாண் வகைகள்: திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் நேற்று தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி தலைமையில், சித்தூர், … Read more

2023ம் ஆண்டு ஜி-20 தலைவர்கள் உச்சிமாநாட்டை இந்தியா நடத்த உள்ளதாக அறிவிப்பு

டெல்லி: 2023ம் ஆண்டு ஜி-20 தலைவர்கள் உச்சிமாநாட்டை இந்தியா நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்தாண்டு டெல்லியில் செப்டம்பர் 9,10 ஆகிய தேதிகளில் ஜி-20 மாநாடு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் எஸ்.ஐ. தேர்வில் முறைகேடு – 33 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் சப்-இன்ஸ்பெக்டர் (எஸ்.ஐ) பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வை ஜம்மு காஷ்மீர் அரசு பணியாளர் தேர்வு வாரியம் கடந்த மார்ச் மாதம் நடத்தியது. இதன் முடிவுகள் கடந்த ஜூன் 4-ம் தேதி வெளியானது. இதில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்ததையடுத்து, இதுகுறித்து விசாரிக்க காஷ்மீர் நிர்வாகம் விசாரணைக் குழுவை அமைத்தது. எழுத்து தேர்வில் முறைகேடு செய்ததாக 33 பேர் மீது விசாரணைக்குழு குற்றம் சுமத்தியது. இதையடுத்து இதுகுறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என காஷ்மீர் நிர்வாகம் … Read more

ராகுல் காந்தி 8-வது நாளாக நடைபயணம்

திருவனந்தபுரம்: இந்திய ஒற்றுமை பயணத்தின் 8-வது நாளை கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து ராகுல் காந்தி தொடங்கியுள்ளார். ராகுல் காந்தி கேரளாவில் 4-வது நாளாக இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.

காசநோயாளிக்கு ஊட்டச்சத்து – திட்டம் தொடங்கிய 3 நாட்களில் 1.7 லட்சம் பேர் தத்தெடுப்பு

புதுடெல்லி: காசநோயாளிகளை தத்தெடுத்து அவர்களுக்கு ஊட்டச்சத்து அளிக்க ‘நிக்சய் மித்ரா’ என்ற திட்டத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். திட்டம் தொடங்கிய மூன்றேநாட்களில் 1.7 லட்சம் காச நோயாளிகள் தத்தெடுக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து கிடைப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட நிக்சய் மித்ரா திட்டம் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. நாட்டில் 13.5 லட்சம் பேர் காசநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில், ஏறக்குறைய 9 லட்சம் … Read more

கொள்ளையர்கள் தலைவன் நான்: பீகார் அமைச்சர் சர்ச்சை

பாட்னா:  பீகார் மாநிலம், கைமூர் மாவட்டத்தில் விவசாயிகள் கூட்டம் நடைபெற்றது. இதில், இம்மாநில வேளாண் துறை அமைச்சர் சுதாகர் சிங் கலந்து கொண்டார். விவசாயிகளிடையே பேசிய அவர், ‘‘நான் இருக்கும் வேளாண் துறையில் கொள்ளையில் ஈடுபடாத பிரிவு என்று ஒன்று கூட இல்லை. நான் இந்த துறையின் அமைச்சர் என்பதால், இந்த கொள்ளையர்களுக்கு எல்லாம் நானே தலைவன் ஆகிறேன். அரசை எச்சரிக்க வேண்டியது மக்களின் கடமை. விதைக்கழகம் சார்பில் ரூ.200 கோடி ஊழல் நடந்துள்ளது. ஊழலை எதிர்த்து … Read more

மேற்கு வங்கத்தில் வன்முறையில் முடிந்த பாஜக பேரணி!

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில், பாரதிய ஜனதா பேரணி, வன்முறையில் முடிந்தது. காவல்துறை வாகனம் தீக்கிரையாக்கப்பட்டது. வன்முறை தொடர்பாக பாஜக எம்எல்ஏவும் எதிர்க்கட்சித்தலைவருமான சுவெந்து அதிகாரி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். மேற்குவங்க அரசை கண்டித்து புதிய தலைமைச்செயலகம் நோக்கி பாரதிய ஜனதா கட்சி பேரணி அறிவித்திருந்தது. அனுமதியின்றி நடத்தப்பட்ட பேரணியை தடுக்கும் வகையில், நார்த்24 பர்கானாஸ், ‘ஹவுரா உள்ளிட்ட இடங்களில் காவல்துறையினர் தடுப்புகளை அமைத்திருந்தனர். ஆயினும் தடுப்புகளை மீறி பேரணியாக வந்த பாஜகவினருக்கும் காவல்துறையினருக்கும், இடையே மோதல் ஏற்பட்டது. … Read more

சோனாலி கொலை வழக்கு சிபிஐ வசம் ஒப்படைப்பு

புதுடெல்லி: ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்தவர் நடிகை சோனாலி போகட். டிக்டாக் உள்ளிட்ட செயலிகள் மூலம் பிரபலமாக இருந்தார். பாஜக மூத்த தலைவராகவும் இருந்தார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி கோவாவுக்கு சோனாலி போகட் தனது நண்பர்களுடன் சுற்றுலா சென்றார். அங்கு அவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதைக் கொலை வழக்காகப் பதிவு செய்த போலீஸார், சோனாலியுடன் வந்த 2 உதவியாளர்கள் உள்பட 5 பேரை கைது செய்துள்ளனர். அவர்கள் சோனாலிக்கு வலுக்கட்டாயமாக போதை மருந்தை அளித்த … Read more

அத்தியாவசிய பட்டியலில் 34 புதிய மருந்து: ஏற்கனவே இருந்த 26 நீக்கம்

புதுடெல்லி: முக்கிய நோய்களுக்கான மருந்துகளை அத்தியாவசிய பட்டியலில் ஒன்றிய அரசு சேர்த்து வருகிறது. இந்த மருந்துகள் அதிக விலைக்கு விற்கப்படுவதையும், பதுக்கி விற்பதை தடுக்கவும் இது செய்யப்படுகிறது. இந்த தேசிய அத்தியாவசிய மருந்து பட்டியல், 276 மருந்துகளுடன் கடந்த 1996ம் ஆண்டு வகுக்கப்பட்டது. பின்னர் 2003, 2011, 2015ம் ஆண்டுகளில் இந்த மருந்து பட்டியல் திருத்தப்பட்டது. தற்போது, 4வது முறையாக திருத்தம் செய்யப்பட்ட பட்டியலை ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று வெளியிட்டார். இது குறித்து … Read more