"2047-க்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறி இருக்கும் என உறுதியளிக்கிறேன்" – பிரதமர் மோடி

புஜ்: வரும் 2047-க்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறி இருக்கும் என உறுதி அளித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. இதனை தனது சொந்த மாநிலமான கட்ச் மாவட்டத்திற்கு வருகை தந்த போது அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. குஜராத் மாநிலத்தில் பல்வேறு மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தும் வகையில் பிரதமர் மோடி அங்கு பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 2001 வாக்கில் அந்த மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பத்தால் உயிரிழந்த மக்களின் நினைவாக அஞ்சர் பகுதியில் இரண்டு நினைவகங்களை அர்பணித்துள்ளார் … Read more

நொய்டாவில் இடிக்கப்பட்ட இரட்டை கோபுரம்..! – விரிவான வழக்கு விபரம்..!

விதிமுறைகளைமீறி கட்டப்பட்டதாக நொய்டாவில் இரட்டை கோபுரம் இன்று திட்டமிட்டபடி இடிக்கப்பட்டது. இது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் இந்த இரட்டை கோபுரத்திற்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த கோபுரங்களின் கட்டுமானத்தின்போது, உத்தரபிரதேச அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் விதிமுறை மீறப்பட்டிருப்பதாக அந்த மனுவில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது . தங்கள் கட்டடங்களிலிருந்து வெறும் 16மீட்டர் தொலைவு மட்டுமே உள்ள இந்த இரு கோபுரங்களால் சட்டவிதிகள் மீறப்பட்டுள்ளன. தோட்டத்துக்காக … Read more

தற்கொலை செய்ய முயன்ற பெண்- சரியான நேரத்தில் ரயிலை நிறுத்தி காப்பாற்றிய ஓட்டுநர்

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ரயில் முன் நின்று பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற நிலையில், சரியான நேரத்தில் ரயிலை நிறுத்தி அப்பெண்ணை ரயில் ஓட்டுநர் காப்பாற்றினார். சனிக்கிழமையன்று மும்பையின் பைக்குலா ரயில் நிலையத்தில் புறநகர் ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தபோது, ஒரு பெண் தண்டவாளத்தில் நடந்து சென்று திடீரென அதன் முன் நின்றார். ரயில் நிலையத்தில் நின்றிருந்த பயணிகள் பெண்ணை நோக்கி கூச்சலிட்ட நிலையில், ரயிலின் ஓட்டுநர் உடனடியாக பிரேக்கை அழுத்தி அதனை நிறுத்தினார். அப்போது, ஆர்.பி.எஃப். … Read more

”ராக்கெட்ரியில் பொய்களால் இஸ்ரோவை இழிவுப்படுத்தி இருக்கிறார் நம்பி” – முன்னாள் விஞ்ஞானிகள்

ஆர்.மாதவன் இயக்கத்தில் வெளியான ‘ராக்கெட்ரி’ படத்தில் நம்பி நாராயணன் பற்றிய பொய்கள் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவை இழிவுப்படுத்துவதாக அந்நிறுவனத்தின் முன்னாள் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நடிகர் ஆர் மாதவன் எழுதி, தயாரித்து, இயக்கிய “ராக்கெட்ரி” திரைப்படம் இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணானின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. திரைப்படத்தில் நம்பி நாராயணனின் கதாபாத்திரத்தை ஆர்.மாதவன் தான் ஏற்று நடித்து இருந்தார். இன்சாட் ராக்கெட் இஞ்சின் உருவாக்கத்தில் முக்கியப்பங்கு வகித்ததில் இருந்தது கேரள உளவுத்துறை … Read more

2014 முதல் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் 8 ஆண்டில் எதிர்கட்சி ஆண்ட மாநிலங்களில் நடந்தது என்ன? 2024 மக்களவை தேர்தலுக்கு முன் பல மாநிலங்களில் பேரவை தேர்தல்

புதுடெல்லி: கடந்த 2014ம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்து 8 ஆண்டுகள் முடிந்த நிலையில் எதிர்கட்சிகள் ஆளும் பல மாநிலங்களில் ஆட்சியை கவிழ்த்து பாஜக ஆட்சியை கைப்பற்றி உள்ளது. வரும் 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன் பல மாநிலங்களில் பேரவை தேர்தல் நடப்பதால் பாஜக தனது வியூகங்களை வகுத்து வருகிறது. இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில், நாட்டின் தேர்தல் ஜனநாயகம் கேள்விக்குறியாகி வருகிறது. கடந்த 2014, 2019ம் ஆண்டுகளில் மத்தியில் … Read more

பறவை மீது ஏறி தப்பிய சாவர்க்கர்?; பள்ளி மாணவர்கள் ஷாக்!

மகாராஷ்டிரா மாநிலத்தில், கடந்த 1883ம் ஆண்டு பிறந்தவர் விநாயக தாமோதர் சாவர்க்கர். இந்தியா சுதந்திரம் அடைவதற்காக பாடுபட்ட வீரர்களில் இவரும் ஒருவர் என கூறப்படுகிறது. இதன் காரணமாக, ஆங்கிலேயரால் 50 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து இருந்தாலும், 12 ஆண்டுகளிலேயே விடுவிக்கப்பட்டார். இதன் பின்னணியில் சாவர்க்கர் ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தார் என கடந்த பல ஆண்டுகளாகவே தகவல் பரவி வருகிறது. அப்படி இருக்கையில், சாவர்க்கரை வீர புருஷனாக மாற்றும் முயற்சியை பாஜக கடந்த சில … Read more

நீட் தேர்வின் போது உள்ளாடையை அகற்ற வைத்த மாணவிக்கு செப்.4-ல் மறுதேர்வு

டெல்லி: நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு கடந்த மாதம் 17-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வு, கேரள மாநிலம், கொல்லத்தில் உள்ள ஆயூர் மார்த்தோமா தகவல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் ‘நீட்’ தேர்வு எழுத வந்த மாணவிகளில் ஒருவரை ‘மெட்டல் டிடெக்டர்’ கொண்டு சோதனை நடத்தியபோது, அவரது உள்ளாடையில் இருந்த கொக்கியை ‘மெட்டல் டிடெக்டர்’, ‘பீப் ‘ஒலி எழுப்பியது. இதையடுத்து அந்த மாணவி தேர்வு எழுத வேண்டுமானால், உள்ளாடையை அகற்றியாக வேண்டும் என்று … Read more

வழக்கறிஞராக இருந்து நீதிபதியாக நியமிக்கப்பட்ட 6-வது நபர் – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் முன்னிலையில், உச்ச நீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். 2021 ஏப்ரல் 6-ம் தேதி உச்ச நீதிமன்றத்தின் 48-வது தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா பொறுப் பேற்றார். அவர் நேற்று முன்தினம் ஓய்வுபெற்றார். இதையடுத்து, குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில், உச்ச நீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக உதய் … Read more

தெலுங்கானா மாநிலம் டேங்கர் லாரி விபத்து: குடம், குடமாக பெட்ரோலை பிடித்துச் சென்ற மக்கள்

தெலுங்கானா: தெலுங்கானா மாநிலம் கம்மத்தில் பெட்ரோல் ஏற்றி வந்த டேங்கர் லாரி விபத்துக்குள்ளான நிலையில் டேங்கில் இருந்து பெட்ரோல் கசிந்துள்ளது. லாரியிலிருந்து பெட்ரோலை குடம், குடமாக  போட்டிப் போட்டு அப்பகுதி மக்கள் பிடித்துச் செல்கின்றனர்.

உடலின் மீதேறி ஒய்யாரமாக படமெடுத்து நின்ற நாகப்பாம்பு..அசையாமல் கட்டிலில் படுத்திருந்த பெண்

பாம்பு என்றதுமே படையே நடுங்கும் என்ற சொற்றொடர்தான் பாம்பு தொடர்பான வீடியோக்கள் சமூல வலைதளங்களில் பார்க்கும் போது நினைக்க வைக்கும். ஆனால் வயலில் வேலை பார்த்து முடித்துவிட்டு ஆசுவாசமாக படுத்திருக்கும் பெண்ணின் முதுகின் மீது ஒரு நாகப்பாம்பு ஒன்று தலையை தூக்கி படமெடுத்து நின்றிருந்த காணொலி காண்போரின் விழியை பிதுங்கச் செய்திருக்கிறது. கர்நாடகாவின் கல்புர்கி அருகே உள்ள மல்லபா கிராமத்தில்தான் இந்த சம்பவம் அரங்கேறியிருக்கிறது. பங்கம்மா ஹனமந்தா என்ற பெண் தனது விவசாய வேலைகளை முடித்துவிட்டு வயல்வெளியில் … Read more