தொடங்கி வைக்கிறார் மோடி: இன்று முதல் 5ஜி சேவை

புதுடெல்லி:  அதிவேக இணைய வசதியை அளிக்கும் 5 ஜி சேவையை பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்கிறார். 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் கடந்த ஜூலையில் நடந்தது. ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் அதானி டேட்டா வொர்க்ஸ் லிமிடெட் ஆகிய  நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்கேற்றன. ஏலத்தின் முடிவில் ரூ.1,50,173 கோடிக்கு 5ஜி அலைக்கற்றைக்கான உரிமம் விற்பனை செய்யப்பட்டது. தொலைத்தொடர்புத் துறையில் முன்னணியில் இருக்கும் ஜியோ நிறுவனம் அதிக அளவிலான அலைக்கற்றையை ஏலத்தில் எடுத்துள்ளது. … Read more

நேற்று கெஜ்ரிவாலுடன் வீட்டில் உணவு..இன்று பாஜக பேரணி-குஜராத் ஆட்டோ ஓட்டுநர் போட்ட யூ டர்ன்

சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதை தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜிரிவால் அங்கு முகாமிட்டிருந்தார். அப்போது ஆட்டோ ஓட்டுநர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர் விக்ரம் தண்டாணி என்பவர், ‘ நான் உங்களின் ரசிகன். என் வீட்டிற்கு உணவு அருந்த வருவீர்களா? எனக் கேட்டவுடன், அரவிந்த் கெஜிரிவாலும் அவரது வீட்டிற்குச் சென்று உணவு அருந்தினார். ஆட்டோ டிரைவடன் அரவிந்த் கெஜிரிவால் உணவு அருந்திய புகைப்படம் வைரலானது. இதனைத் தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநர் … Read more

நாடாளுமன்ற கட்டிடத்தின் மீதுள்ள அசோக சின்ன சிங்கங்களில் விதிமுறை மீறல்கள் இல்லை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: டெல்லியில் சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ், புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதன் உச்சியில், சமீபத்தில் கம்பீரமான அசோக சின்ன சிங்கங்கள்  நிறுவப்பட்டன. இதை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த சிங்கங்கள் வழக்கமாக அசோக சின்னத்தில் காணப்படும் அமைதியான சிங்கங்களை போல் இல்லாமல், மிகவும் ஆக்ரோஷமாகவும், பற்கள் கோரமாக தெரியும் வகையில் வாயை திறந்திருப்பதாகவும்  விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், அல்தானிஸ் ரெயின், ரமேஷ் குமார் மிஸ்ரா ஆகிய 2 வழக்கறிஞர்கள், ‘இந்திய அரசு … Read more

10 நாட்களே ஆன தன் பெண் குழந்தையை கொல்ல முயன்ற தந்தைக்கு நேர்ந்த துயரம்!

உத்தரபிரதேசத்தில் பிறந்து 10 நாட்களே ஆன தனது பெண் குழந்தையை பிடிக்காததால் கொல்ல முயன்ற தந்தையை ஆத்திரத்தில் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார் மகன். கோசைங்கன்ஜ் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த வார தொடக்கத்தில் ரமேஷ் சந்திர ராவத்(50) என்ற விவசாயி அவரது வீட்டில் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். அந்த வீட்டிற்கு பக்கத்திலேயே வசிக்கும் அவருடைய மகன்களான அவதேஷ்(29) மற்றும் ரஜ்னேஷ்(25) இருவரும் தனது தந்தையை யாரோ கொலைசெய்துவிட்டதாகவும், முன்பகை காரணமாக உள்ளூர்வாசிகளில் யாரோ … Read more

வித்தை காட்டியவருக்கு நாக பாம்பு ‘மவுத் கிஸ்’: வைரலாகும் வீடியோ

ஷிவமொக்கா: திருமண வீட்டில் இருந்த நாகபாம்பை  பிடித்து முத்தமிட முயன்றவருக்கு, பாம்பு ‘மவுத் கிஸ்’ கொடுத்தது. கர்நாடகா மாநிலம், ஷிவமொக்கா  மாவட்டம், பத்ராவதியை சேர்ந்தவர்கள் அலெக்ஸ், ரோனி. இவர்கள், பொதுமக்களை  அச்சுறுத்தும் பாம்புகளை பிடித்து, காடுகளில் விட்டு வருகின்றனர். இந்நிலையில், பொம்மனக்கட்டில் உள்ள ஒரு திருமண  வீட்டில் 2 நாக பாம்புகள் இருந்தன. இதை பார்த்த மக்கள், அலெக்ஸ், ரோனிக்கு தகவல்  கொடுத்தனர். 2 பேரும் அங்கு சென்று பாம்புகளை மீட்டனர். அதில், ஒரு பாம்புக்கு காயம் … Read more

இரு குழந்தைகளை மட்டும்தான் பெற்றுக்கொள்ள வேுண்டுமென உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம்

நாடு முழுவதும் இரண்டு குழந்தை கொள்கைகளை அமல்படுத்த தங்களால் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும் இது கொள்கை முடிவு சார்ந்த விஷயம் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சிய சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்தியாயா என்பவர் தொடர்ந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது “இந்த விவகாரத்தை நீதிமன்றம் எவ்வாறு நடைமுறைப்படுத்த முடியும்?” என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த மனுதாரர், … Read more

கொரோனாவை போல் மிரட்டும் புதிய வைரஸ் கோஸ்டா -2

புதுடெல்லி: கடந்த 2 ஆண்டுகளாக உலகை ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் பெருந்தொற்று, கிட்டத்தட்ட உலகளவில் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரஸ் ஜிப்ரியேசிஸ் நேற்று முன்தினம் இதை மகிழ்ச்சியுடன் அறிவித்தார். ஆனால், கொரோனாவை போன்றே மனிதர்களை அச்சுறுத்தக் கூடிய புதிய வைரஸ் கண்டு பிடிக்கப்பட்டு இருக்கிறது. அதற்கு  ‘கோஸ்டா-2’ என்று பெயரிடப்பட்டு உள்ளது. ரஷ்ய வவ்வால்களில் காணப்படும் இந்த வைரஸ், தற்போதுள்ள எந்த தடுப்பூசிக்கும் கட்டுப்படாது என்று விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளனர். இதனால், புதிய … Read more

'எடுத்த முடிவை மனதில் போட்டு குழப்பிக் கொள்ளக்கூடாது' – ரோஜர் பெடரர் ஆறுதல் பதிவு!

தனது டென்னிஸ் வாழ்க்கையின் நினைவுகளில் மூழ்கிய ரோஜர் ஃபெடரர், இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றில் அதனை வெளிப்படுத்தியிருந்தார். சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர்களில் ஒருவரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், அண்மையில் தனது ஓய்வு முடிவை அறிவித்தார். இதையடுத்து லண்டனில் நடந்த  தனது கடைசி போட்டியில் தோல்வியுடன் டென்னிஸில் இருந்து ஓய்வு பெற்றார் ரோஜர் ஃபெடரர்.  கடைசி போட்டி என்பதால் கண்ணீருடன் விடைபெற்றார் அவர். இதுகுறித்து பேசிய ரோஜர் ஃபெடரர், ”எனக்கு எந்த வருத்தமும் இல்லை.  … Read more

சித்தூரில் போலி ஆவணம் தயாரித்து வெளிநாட்டில் வசிப்பவர்களின் ரூ73 கோடி மதிப்பு நிலம் மோசடி: இளம்பெண் உள்பட 7 பேர் கைது

சித்தூர்: சித்தூரில் போலி ஆவணம் தயாரித்து வெளிநாட்டில் வசிப்பவர்களின் நிலங்களை ரூ73.70 கோடிக்கு விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்ட இளம்பெண் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம், சித்தூர் நகர டிஎஸ்பி சுதாகர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ஆந்திராவில் சித்தூர் மாநகரத்தில் போலீசார் நடத்திய விசாரணையில், கட்டமஞ்சு பகுதியில் தினேஷ்குமார் என்பவருக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை மீனாட்சி மற்றும் பார்வதி ஆகிய இருவரின் பெயருக்கு கருணாகர், யமுனா, ராஜசேகர், ஜெயச்சந்திரா, சுரேந்திரபாபு … Read more

இந்தியாவில் முதன்முறையாக பிடிக்கப்பட்ட ‘ப்ளாக் கொக்கைன்’ – சிக்கியது எப்படி?

இந்தியாவில் முதன்முறையாக போதைப்பொருள் தடுப்பு பிரிவால் ப்ளாக் கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பிரேசிலில் இருந்துவந்த வெளிநாட்டவர் ஒருவரிடமிருந்து மும்பை விமான நிலையத்தில் 3.20 கிலோ ப்ளாக் கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இதன் மதிப்பு ரூ.13 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது. ப்ளாக் கொக்கைன் என்பது வழக்கமான கொக்கைனுடன் சில வேதிப்பொருட்கள் கலக்கப்பட்டிருப்பது. இப்படி ரசாயனம் ஏற்றப்பட்ட கொக்கைனை விமான நிலைய பரிசோதனையில் டிடெக்ரடாலோ அல்லது மோப்ப நாய்களாலோ கண்டறியமுடியாது. இதுபோன்ற போதைபொருள் இந்தியாவில் பறிமுதல் செய்யப்பட்டது இதுதான் முதன்முறை … Read more