கர்நாடகா: நின்றிருந்த லாரி மீது கார் மோதி விபத்து – 5 பேர் உயிரிழப்பு

கர்நாடகாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஹைதராபாத்தைச் சேர்ந்த கிரிதர் என்பவர் நேற்று மாலை தனது குடும்பத்துடன் கர்நாடக மாநிலம் கலபுர்கியில் உள்ள கங்காபூர் கோயிலுக்குச் காரில் சென்று கொண்டிருந்தார்.  அப்போது, கர்நாடக மாநிலம் பிதார் தாலுகாவில் உள்ள பங்கூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில், நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரில் பயணம் செய்த கிரிதர் (45), அவரது … Read more

திருப்பதி | விஐபி பிரேக் தரிசனம் ரத்தான பிறகும் 60 ஆதரவாளர்களுடன் சுவாமி தரிசனம் செய்த அமைச்சர்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தற்போது பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. சனி, ஞாயிறு, திங்கள் என 3 நாட்கள் தொடர்ந்து விடுமுறை என்பதால், பக்தர்கள் குவிவார்கள் என்பதை எதிர்பார்த்து, முதியோர், குழந்தைகள், தாய்மார்கள், மாற்று திறனாளி பக்தர்கள் ஆகஸ்ட் 21-ம் தேதி வரை திருமலை யாத்திரையை தள்ளிப்போட வேண்டும் என்று தேவஸ்தானம் கோரிக்கை விடுத்தது. ஆனால், பக்தர்கள் கடந்த வியாழக்கிழமை முதலே வரத் தொடங்கினர். இதனால், திருமலையில் தற்போது சுவாமி தரிசனம் செய்ய 36 மணி நேரம் … Read more

பீகார் அமைச்சரவை விரிவாக்கம்: தேஜஸ்விக்கு 16; நிதிஷ் குமாருக்கு 11

பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு முதல், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்த ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவரும், பீகார் மாநில முதலமைச்சருமான நிதிஷ் குமார், கருத்து வேறுபாடுகள் காரணமாக, கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தொடர்ந்து, முதலமைச்சர் பதவியையும் அவர் ராஜினாமா செய்தார். இதை அடுத்து, எதிர்க்கட்சியான, லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான … Read more

தரமற்ற உணவு வழங்கியதால் கேட்டரிங் சர்வீஸ் மேலாளரின் கன்னத்தில் அறைந்த சிவசேனா எம்எல்ஏ

மகாராஷ்டிராவில் மதிய உணவுத் திட்டத்தில் தரமற்ற உணவு வழங்கியதாக கேட்டரிங் சர்வீஸ் மேலாளரை சிவசேனா எம்எல்ஏ கன்னத்தில் அறைந்த வீடியோ சமூக வலைதளங்களில் மீண்டும் பகிரப்பட்டு வருகிறது. ஹிங்கோலி மாவட்டத்தில் மதிய உணவுத் திட்டத்தில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் உணவு வகைகள் குறித்து முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தரப்பு சிவசேனா எம்எல்ஏ சந்தோஷ் பங்கர் ஆய்வு நடத்தினார். அப்போது, தரமற்ற உணவு தயாரித்து வழங்கியதாகக் கூறி கேட்டரிங் சர்வீஸ் மேலாளரிடம் சந்தோஷ் பங்கர் வாக்குவாதம் செய்து திடீரென கன்னத்தில் … Read more

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான மாநில அமைச்சரவை விரிவாக்கம்; 31 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்பு..!!

பாட்னா: பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான மாநில அமைச்சரவையில் 31 புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர். அவர்களுக்கு ஆளுநர் பகு சவுகான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பீகார் மாநில முதல்வராக நிதிஷ்குமார் மீண்டும் பதவியேற்ற நிலையில் அமைச்சரவை இன்று பதவியேற்றது. ஆட்சி கவிழ்ப்பில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொண்டதோடு பாரதிய ஜனதாவையும் ஓரம்கட்டிய நிதிஷ் குமார், தற்போது ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் இடதுசாரிகள் மற்றும் சுயேச்சைகளின் உதவியோடு மீண்டும் முதலமைச்சராகியுள்ளார். முதலமைச்சராக நிதிஷ் குமாரும், துணை … Read more

ஹரியானா | அனைத்து மதத்தினருக்கான ‘இன்குலாப்’ கோயில்: புரட்சி வீரர்களுக்கு பூஜை

புதுடெல்லி: அனைத்து மதத்தினருக்கான ‘இன்குலாப்’ கோயில், ஹரியானாவில் அமைந்துள்ளது. இங்கு கடந்த 22 வருடங்களாக நாட்டின் சுதந்திரம் பெறப் பாடுபட்ட புரட்சியாளர்கள் பூசிக்கப்படுகின்றனர். சுதந்திரப் போராட்டத்தில் மிகவும் பிரபலமாக எழுப்பப்பட்ட கோஷம், ’இந்துஸ்தான் ஜிந்தாபாத் (இந்தியநாடு வாழ்க)’. இதை முதன்முறையாக 1921 இல் முஸ்லீம் அறிஞரான மவுலானா ஹசரத் மொய்னி எழுப்பியிருந்தார். சுதந்திரப்போராட்ட வீரரான மொய்னி, ஒரு சிறந்த கவிஞராகவும் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவராகவும் இருந்தார். இவரது கோஷத்தை சுதந்திரப் போராட்டத்தில் தூக்கிலிடப்பட்ட பகத்சிங், தொடர்ந்து எழுப்பியதால் … Read more

இந்தியாவின் வளர்ச்சியில் வாழும் அணுகுண்டு நாயகன் வாஜ்பாய்!

“இந்தியா இப்போது அணு ஆயுதங்களை கொண்ட நாடு. நம்மிடம் அணு ஆயுதங்களை வைத்துக் கொள்வதற்கான தகுதி உள்ளது. நாம் அதை ஒருபோதும் ஆத்திரத்துக்காக பயன்படுத்த மாட்டோம்.” போக்ரான் அணுகுண்டு சோதனைக்கு பின்னர் வாஜ்பாய் கூறிய வார்த்தைகள் இவை. மேற்கத்திய நாடுகளின் கண்களில் மண்ணைத்தூவி அணுகுண்டு சோதனை நடத்தியவர் வாஜ்பாய். இதற்காக கடும் கண்டனங்கள் எழுந்து, பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டபோதிலும், இந்தியாவை அணு ஆயுதங்கள் கொண்ட நாடாக்கியவர் அவர். இந்தியாவின் தன்னிகரற்ற தலைவராக விளங்கிய அடல் பிஹாரி வாஜ்பாய், … Read more

முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான பீகார் மாநில அமைச்சரவையில் 31 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

பீகார்: முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான பீகார் மாநில அமைச்சரவையில் 31 புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர். ஏற்கனவே துணை முதல்வராக தேஜஸ்வி யாதவ் பதவியேற்ற நிலையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவு நாள்: குடியரசுத் தலைவர், பிரதமர் அஞ்சலி

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 4 ஆம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி டெல்லியில் அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர், பிரதமர் நரேந்திர் மோடி, அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர். உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரும் சதைவ் அடல் என்ற வாஜ்பாயின் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினர். வாஜ்பாய் 10 அரிய தகவல்கள்: அடல் பிஹாரி வாஜ்பாய், மத்தியப் பிரதேச மாநிலம் … Read more

கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு 2-வது நாளாக குறைப்பு

பெங்களூரு: கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு 2-வது நாளாக 6,159 கன அடியாக குறைந்துள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் 2,159 கன அடி, கபினி அணையில் 4,000 கன அடிநீர் காவிரியாற்றில் வெளியேற்றப்படுகிறது.