மெட்ரோ ரயிலில் கீழே சிந்திய உணவை கைக்குட்டையால் சுத்தம் செய்த இளைஞர்

புதுடெல்லி; டெல்லியைச் சேர்ந்த 24 வயது இளைஞர் பிரஞ்சால் தூபே. இவர் தினமும் டெல்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்து வருகிறார். ஒருநாள் இவர் பயணம் செய்யும்போது அவர் கொண்டு வந்த உணவு ரயில் பெட்டியில் கீழே சிந்திவிட்டது. இதையடுத்து சிறிதும் யோசிக்காத தூபே, தனது கைக்குட்டையைக் கொண்டு அந்த இடத்தை சுத்தம் செய்தார். இதைப் பார்த்த சக பயணியான சுபம் வர்மா என்பவர் இதை வீடியோவாகவும், புகைப்படமாகவும் எடுத்து ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் … Read more

இந்தியாவில் ஒரே நாளில் 14,092 பேருக்கு கொரோனா… 41 பேர் பலி: ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 14,092 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,42,53,464 ஆக உயர்ந்தது.* புதிதாக 41 பேர் இறந்துள்ளனர்.* இதனால், … Read more

கர்நாடக பாஜகவின் முதல்வர் வேட்பாளர் பசவராஜ் பொம்மை – மேலிடப் பொறுப்பாள‌ர் அருண் சிங் தகவல்

புதுடெல்லி: கர்நாடக பாஜக மேலிடப்பொறுப்பாளர் அருண் சிங் நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பாஜக ஆட்சி மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. அவரது நலத் திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைந்துள்ளது. பாஜக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று காங்கிரஸார் வதந்தி பரப்பி வருகின்றனர். அதேபோல முதல்வர் பதவியில் இருந்து பசவராஜ் பொம்மை மாற்றப்பட இருப்பதாகவும் கூறிவருகின்றனர். கர்நாடகாவில் முதல்வர் மாற்றம் என்ற … Read more

பிரபல பங்குசந்தை முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா காலமானார்

மும்பை: தொழிலதிபரும், பிரபல பங்குசந்தை முதலீட்டாளருமான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா உடல்நலக்குறைவால் காலமானார். ராகேஷ் ஜுன்ஜுன்வாலா கடந்த சில வாரங்களாக உடல் நலம் குன்றி இருந்துள்ளார். இந்நிலையில் மும்பையில் இன்று ஜுன்ஜுன்வாலா காலமானார்.

கர்நாடகாவில் அரசு பணிக்கு ரூ.300 கோடி லஞ்சம் – காங். எம்எல்ஏ குற்றச்சாட்டால் சர்ச்சை

பெங்களூரு: கர்நாடக காங்கிரஸ் மூத்த எம்எல்ஏவும் செய்தி தொடர்பாளருமான பிரியங்க் கார்கே குல்பர்காவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: கர்நாடகாவில் பாஜக அரசு பதவியேற்ற பிறகு அரசு பணிகள் விற்பனை செய்யப்படுகின்றன. சப் இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு, பொறியாளர் தேர்வில் ஊழல் ஆகியவை பற்றி நீதிபதி தலைமையிலான உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் கர்நாடக மின் வாரிய‌த்தில் நடந்த 1,429 பணியிடங்களுக்கான நியமனத்தில் 600 பணியிடங்கள் லஞ்சம் கொடுத்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது. உதவி பொறியாளர் பணிக்கு … Read more

75வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் மூவர்ணக்கொடியை ஏற்றுகிறார் பிரதமர் மோடி!

75வது சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்பட உள்ளதை அடுத்து, தலைநகர் டெல்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. நம் நாட்டிற்கு கடந்த 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் கிடைத்தது. இதை அடுத்து, ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி சுதந்திர தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி, ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதியான நாளை, நம் நாட்டின், 75வது சுதந்திர தின விழா … Read more

திருப்பதி கோயிலில் பிளாக்கில் தரிசன டிக்கெட் விற்ற 6 பேர் கைது

திருமலை: திருப்பதியில் தரிசன டிக்கெட்டுகளை கூடுதல் விலைக்கு விற்ற தேவஸ்தான கண்காணிப்பாளர் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முறைகேடாக டிக்கெட் பெற்று, பக்தர்களுக்கு  அதிக விலைக்கு விற்பனை  செய்து வருவது அதிகரித்துள்ளது. தேவஸ்தானத்தில் பணிபுரியும் கண்காணிப்பாளர் மல்லிகார்ஜுனாவும், சில ஊழியர்களும் இந்த முறைகேட்டில் ஈடுபடுவதாக தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் விசாரணையில் தெரிந்தது. 760 விஐபி தரிசன டிக்கெட், 350 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள், 25 சுப்ரபாதம் சேவை டிக்கெட்டுகள் … Read more

மதமாற்ற தடை சட்டம் இமாச்சலில் நிறைவேற்றம்

சிம்லா: இமாச்சல பிரதேச சட்டப்பேரவையில் மதமாற்ற தடை சட்டம் நேற்று நிறைவேற்றப்பட்டது. இமாச்சல பிரதேசத்தில் முதல்வர் ஜெய்ராம் தாக்குர் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அந்த மாநிலத்தில் கடந்த 2006-ம் ஆண்டு முதலே மத மாற்ற தடை சட்டம் அமலில் உள்ளது. சட்ட விதிகளை கடுமையாக்கி கடந்த 2019-ம் ஆண்டில் புதிய சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்பட்டது. கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பரில் மாநில சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதன்படி அதிகபட்சம் 3 ஆண்டுகள் மட்டுமே … Read more

டெல்லியில் வெளிநாட்டு பெண்ணுக்கு குரங்கம்மை

புதுடெல்லி: டெல்லியில் ஆப்பிரிக்காவை சேர்ந்த 22 வயது பெண் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக ஆப்பிரிக்காவை சேர்ந்த இந்த பெண் நைஜீரியா சென்று வந்துள்ளார். டெல்லியில் உள்ள எல்.என்.ஜே.பி மருத்துவமனையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட அந்த பெண்ணின் மாதிரிகள் எடுத்து ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. அதன் முடிவுகள் நேற்று வெளியானதில் குரங்கம்மை உறுதி செய்யப்பட்டு இருப்பதாக டெல்லி சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து, டெல்லியில் குரங்கம்மை பாதித்தவர்கள் … Read more

உலகின் உயரமான ரயில்வே பாலம் ஜம்மு காஷ்மீரில் திறப்பு

ஜம்மு: உலகின் மிக உயரமானதாக கருதப்படும் செனாப் ரயில்வே பாலம் நேற்று திறந்துவைக்கப்பட்டது. ஜம்முவின் ரியாசி மாவட்டத்தில் பக்கால் மற்றும் கவுரி என்ற இடத்துக்கு இடையே செனாப் ஆற்றின் குறுக்கே 1,178 அடி உயரத்தில் ரயில்வே பாலம் கட்டுமான பணி கடந்த 2004-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த பாலத்தின் நீளம் 4,314 அடி. கடந்த 2017-ம் ஆண்டு அடித்தளம் அமைக்கும் பணி முடிவடைந்து வளைவுப் பகுதி கட்டுமானம் தொடங்கியது. இரும்பு மற்றும் கான்கிரீட் பாலமாக இது அமைக்கப்பட்டுள்ளது. … Read more