ரூ.167 கோடி போதை மாத்திரைகள் பறிமுதல்

அய்சால்: மியான்மர் எல்லையில் ரூ.167.86 கோடி மதிப்புள்ள போதை மருந்து மாத்திரைகளை அசாம் ரைபிள்ஸ், மிசோரம் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மியான்மர் எல்லையில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக வந்த தகவலை தொடர்ந்து, மிசோரம் போலீசாரும் அசாம் ரைபிள்ஸ் படையினரும் இணைந்து நேற்று முன்தினம் மியான்மர் எல்லை அருகே உள்ள சம்பாய் மாவட்டத்தின் மெல்பக் கிராமத்தில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு வாகனத்தை நிறுத்தி வீரர்கள் சோதனை செய்தனர். அதில், 5 லட்சம் மெத்தபென்டமைன் என்ற போதை மருந்து … Read more

பெண்கள் பாதுகாப்பாக இருந்தால் மட்டுமே இந்தியா வளர்ச்சி அடையும் – ராகுல் காந்தி

பெண்கள் பாதுகாப்பாக இருந்தால் மட்டுமே இந்தியா வளர்ச்சி அடையும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். உத்தரகண்ட் மாநிலத்தில் பாஜக முன்னாள் அமைச்சரின் மகன், 19 வயது பெண்ணை கொலை செய்த விவகாரத்தை சுட்டிக்காட்டி ராகுல்காந்தி இவ்வாறு கூறியுள்ளார். ஹரித்துவாரில் பாஜக முன்னாள் அமைச்சர் வினோத் ஆர்யாவின் மகன் புல்கித் ஆர்யாவுக்கு சொந்தமான சொகுசு விடுதியில் வரவேற்பாளராக இருந்த 19 வயது பெண்ணை காணவில்லை என அவரது பெற்றோர் கடந்த திங்கட்கிழமை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். … Read more

கொச்சியில் கைது செய்யப்பட்ட பிஎஃப்ஐ அமைப்பினர் 11 பேருக்கு செப். 30-ம் தேதி வரை என்ஐஏ காவல்

கொச்சி: கொச்சியில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் கைது செய்யப்பட்ட பிஎஃப்ஐ அமைப்பினர் 11 பேரை இம்மாதம் 30-ம் தேதி வரை என்ஐஏ காவலில் அனுப்ப சிறப்பு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. தமிழகம், கேரளா, உட்பட 15 மாநிலங்களில் பிஎஃப்ஐ அலுவலகம், நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) கடந்த 22-ம் தேதி சோதனை நடத்தியது. இந்த சோதனையில் ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 45 பேர் கைது செய்யப்பட்டனர். கேரளாவில் கைது … Read more

அரசு பள்ளி கழிவறையை சுத்தம் செய்த பாஜக எம்.பி!

மத்தியப் பிரதேசம் மாநிலம் ரேவா(Rewa) தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் ஜனார்தன் மிஸ்ரா(Janardan Mishra). இவர் கடந்த 22-ம் தேதி தனது தொகுதிக்கு உட்பட்ட கஜூஹா என்ற பகுதியில் உள்ள அரசு பெண்கள் பள்ளியில் மரம் நடு விழாவில் பங்கேற்றார். அப்போது பள்ளி வளாகம் முழுவதும் சுற்றிப்பார்த்த எம்.பி கழிவறை அசுத்தமாக இருப்பதை கண்டு வேதனையடைந்ததாக சொல்லப்படுகிறது. பின்னர், கையுறை, பிரஷ்கள் உள்ளிட்ட எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி வெறும் கைகளால் கழிவறையை சுத்தம் செய்ய தொடங்கியுள்ளார். … Read more

முழு பைத்தியமாகி விட்டார் அமித்ஷா: லாலு தாக்குதல்

புதுடெல்லி: பீகாரில் பாஜ.வுடன் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வந்த ஐக்கிய ஜனதா தள தலைவரும், முதல்வருமான நிதிஷ் குமார், கடந்த மாதம் கூட்டணியில் இருந்து விலகினார். ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரசுடன் இணைந்து புதிய கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளார். சமீபத்தில் பீகாரில் நடந்த பேரணியில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜ.வின் முதுகில் நிதிஷ் குமார் குத்தி விட்டதாக குற்றம்சாட்டினார். மேலும், ‘காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மடியில் அமர்ந்து கொண்டு, தனது பிரதமர் … Read more

கீழமை நீதிமன்றத்தில் 30 ஆண்டுக்கும் மேலாக 1 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன

புதுடெல்லி: தேசிய நீதிசார் தரவுத் தொகுப்பில் இருந்து பெறப்பட்ட புள்ளிவிவரத்தில் பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் நாடு முழுவதிலும் உள்ள மாவட்ட மற்றும் தாலுகா நீதிமன்றங்களில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. இதில் 67 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் கிரிமினல் வழக்குகள், 33 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் சிவில் வழக்குகள் ஆகும். இதில் உத்தரபிரதேசம் 41,210 வழக்குகளுடன் முதலிடத்திலும் மகாராஷ்டிரா 23,483 வழக்குகளுடன் 2-ம் இடத்திலும் உள்ளன. மேற்கு வங்கம் … Read more

ஏழுமலையானுக்கு சொந்தமான 960 சொத்துக்களின் விவரம் இணையதளத்தில் வெளியீடு: மொத்த மதிப்பு ரூ.85,705 கோடி

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான ரூ.85,705 கோடி மதிப்புள்ள 960 சொத்துக்களுடன் கூடிய வெள்ளை அறிக்கை இணையத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் நேற்று அதன் தலைவர் சுப்பா தலைமையில் நடைபெற்றது. அப்போது, அவர் பேசியதாவது: திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு நாடு முழுவதும் மற்றும் இதர நாடுகளிலும் மொத்தம் 85 ஆயிரத்து 705 கோடி மதிப்புள்ள 960 சொத்துக்கள் உள்ளன. இது குறித்த வெள்ளை … Read more

இதை விட கொடுமை இருக்குமா..!! சாலையில் பெண்ணுக்கு பிரசவம்… 2 கி.மீ. பெற்ற குழந்தையை தூக்கி கொண்டு நடந்த தாய்!!

ஒடிசா மாநிலம் தஸ்மந்திபூர் பகுதிக்கு உட்பட்ட துங்கால் கிராமத்தில் சாலை வசதி இல்லை. மேலும் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் அப்பகுதி முழுவதும் சேரும் சகதியுமாக இருந்துள்ளது. இந்த நிலையில், துங்கால் கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த ஆம்புலன்ஸ் கிராமத்திற்கு வரும் வழியில் சாலையில் இருந்த சேற்றில் சிக்கிக் கொண்டது. இதனால் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் … Read more

தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நிர்வாகத்தில் ஸ்திரத்தன்மையை கொண்டு வந்தது – பிரதமர் நரேந்திர மோடி தகவல்

புதுடெல்லி: தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கொள்கை உருவாக்கம், நிர்வாகத்தில் ஸ்திரத்தன்மையை கொண்டு வந்தது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். இமாச்சல பிரதேச மாநிலம் மண்டியில் உள்ள பேடில் மைதானத்தில் நேற்று பாஜக சார்பில் யுவ விஜய் சங்கல்ப யாத்திரை நடைபெற்றது. இந்த பேரணியை பிரதமர் மோடி டெல்லியில் இருந்தபடி காணொலி மூலம் தொடங்கிவைத்தார். பின்னர் விழாவில் அவர் பேசியதாவது: பல தசாப்தங்களாக நாட்டில் கூட்டணி அரசுகள்தான் ஆட்சி செய்தன. இதனால் அவை சரியாக செயல்பட … Read more

ஜம்மு மாநகராட்சியின் மேயர், துணை மேயர் திடீர் பதவி விலகல்

ஜம்மு: ஜம்மு மாநகராட்சி மேயர் சந்தர் மோகன் குப்தா, துணை மேயர் பூர்ணிமா சர்மா ஆகியோர் நேற்று திடீரென தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இது தொடர்பாக ஜம்மு காஷ்மீர் பாஜ தலைவர் ரவீந்தர் ரெய்னா தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின் ஜம்மு மாநகராட்சி மேயர் சந்தர்மோகன் குப்தாவும், துணை மேயர் பூர்ணிமா சர்மாவும் தங்களின் ராஜினாமா கடிதத்தை சமர்பித்தனர். இது தொடர்பாக ரவீந்தர் ரெய்னா கூறுகையில், ‘சந்தர் மோகன், பூர்ணிமா … Read more