ஒரே நாடு; ஒரே நுழைவுத் தேர்வு கியூட் தேர்வுடன் நீட், ஜேஇஇ தகுதி தேர்வுகளும் இணைப்பு: யுஜிசி அதிரடி திட்டம்

புதுடெல்லி:  ஒரே நாடு; ஒரே நுழைவுத் தேர்வு என்ற அடிப்படையில் கியூட் நுழைவுத் தேர்வுடன் நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளையும் இணைத்து ஒரே தேர்வாக நடத்த  பல்கலைக் கழக மானியக்குழு திட்டமிட்டு இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது ஒவ்வொரு படிப்புக்கும் ஒரு நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு, மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். மருத்துவத்துக்கு நீட் தேர்வு, என்ஐடி, ஐஐடி, ஐஐஐடி  ஆகிய கல்வி நிலையங்களில் உள்ள படிப்புகளுக்கு ஜேஇஇ, ஜேஇஇ அட்வான்ஸ், ஒன்றிய பல்கலைக் கழகங்களின் இளங்கலை, … Read more

வழக்கு விசாரணையில் சிறப்பான பணி | 5 போலீஸாருக்கு மத்திய அரசின் பதக்கம் – சிபிஐ ஆய்வாளர்கள் 2 பேருக்கும் அறிவிப்பு

சென்னை: வழக்கு விசாரணைகளின்போது திறமையாகப் பணியாற்றி, புலனாய்வில் சிறப்பாக செயல்படும் மத்திய புலனாய்வு முகமைகள் மற்றும் மாநில போலீஸாருக்கு பதக்கம் வழங்கி கவுரவிக்கும் திட்டத்தை மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது. இது புலனாய்வில் நுணுக்கமாகச் செயல்படுபவர்களின் புலனாய்வு நிபுணத்துவத்துக்கு அங்கீகாரம் அளிப்பதாகும். அந்த வகையில், புலனாய்வில் திறம்பட செயலாற்றிய 2022-ம் ஆண்டுக்கான மத்திய உள்துறை அமைச்சரின் பதக்கத்துக்கு சிபிஐ.யில் இருந்து 15 அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில், சென்னையில் சிபிஐ.யில் ஆய்வாளர்களாகப் பணியாற்றி வரும் எம்.சசிரேகா, டி.ஸ்ரீதர் … Read more

மகாராஷ்டிராவில் 75% அமைச்சர்கள் தில்லாலங்கடிகள்: பல கோடிக்கு அதிபதி

புதுடெல்லி: மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 20 அமைச்சர்களில் 15 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி ஆட்சியை கவிழ்த்த பின்னர், ஏக்நாத் ஷிண்டே முதல்வராகவும், பாஜ.வை சேர்ந்த தேவேந்திர பட்நவிஸ் துணை முதல்வராகவும் இருக்கின்றனர். இவர்கள் பதவியேற்று 41 நாட்களுக்கு பின் கடந்த 9ம் தேதி அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில், 18 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது. … Read more

நிதீஷ் வெளியேற பின்னரும் சரியாத பிரதமர் மோடியின் செல்வாக்கு – 2024 தேர்தலிலும் பாஜகவே வெற்றி பெறும் என கணிப்பு

புதுடெல்லி: தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து (என்டிஏ) நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளக் கட்சி வெளியேறிய பின்னரும் பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு சரியவில்லை என்று தெரியவந்துள்ளது. மேலும் வரும் 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலிலும் பாஜகவே வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. கடந்த ஜூன் மாதம் மகாராஷ்டிராவில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா ஆகிய கட்சிகள் அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசு கவிழ்ந்தது. சிவசேனாவின் ஏக்நாத் … Read more

கடன் தள்ளுபடிகள் பற்றி எப்போது விவாதிக்கலாம்?: பிரதமர் மோடிக்கு காங். கேள்வி

புதுடெல்லி: ‘வங்கி கடன்கள் தள்ளுபடி, கார்ப்பரேட் வரி குறைப்பு குறித்து  எப்போது விவாதம் நடத்தப்படும்?’ என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கேள்வி கேட்டுள்ளார். ‘வாக்காளர்களைக் கவர இலவச திட்டங்களை கட்சிகள் அறிவிக்கின்றன. இலவச திட்டங்கள், நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் ஆபத்தானது,’ என்று பிரதமர் மோடி சமீபத்தில் பேசினார். இதற்காக மோடியை காங்கிரஸ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கவுரவ் வல்லப் நேற்று கூறுகையில், ‘ரூ.5.8 லட்சம் கோடிக்கான வங்கி … Read more

தேஜஸ்வி யாதவுக்கு ‘இசட்’ பாதுகாப்பு

பாட்னா:  பீகாரில் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவிற்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்குவதற்கு மாநில அரசு முடிவு செய்துள்ளது. பீகாரில் பாஜ கூட்டணியில் இருந்து வெளியேறிய நிதிஷ் குமார், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகளுடன் மீண்டும் கூட்டணி அமைத்து முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். இந்த கூட்டணி அரசில் லாலு பிரசாத் யாதவின் மகனும், ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான தேஜஸ்வி யாதவ், துணை முதல்வராக பதவியேற்றுள்ளார். இந்நிலையில், தேஜஸ்விக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்குவதற்கு மாநில அரசு … Read more

சசி தரூருக்கு பிரான்ஸ் செவாலியர் விருது

திருவனந்தபுரம்: உலகம்  முழுவதும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு பிரான்ஸ் அரசு  உயரிய செவாலியர் விருதை வழங்கி கவுரவித்து வருகிறது. மறைந்த நடிகர் திலகம்  சிவாஜி கணேசனுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இந்த நிலையில், காங்கிரஸ்  எம்பி சசி தரூருக்கு செவாலியர் விருது கிடைத்து உள்ளது. பேச்சு மற்றும்  எழுத்துத் துறையில் பல சாதனைகளை படைத்ததற்காக இந்த விருது அவருக்கு  வழங்கப்படுகிறது. இது குறித்து சசி தரூர் கூறுகையில், ‘எனக்கு உயரிய செவாலியர் விருதை வழங்க  தீர்மானித்துள்ள … Read more

உச்ச நீதிமன்றம் உத்தரவு: ஹஜ் கமிட்டிகள் பற்றி தகவல் தர வேண்டும்

புதுடெல்லி: ஹஜ் கமிட்டி அமைத்தது தொடர்பாக 2 வாரத்தில் பதில் அளிக்க வேண்டுமென அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ‘ஹஜ் கமிட்டி சட்டத்தின்படி, ஹஜ் கமிட்டி அமைப்பதிலும், அதற்கான நிதியை பயன்படுத்துவதிலும் சில மாநில அரசுகளும், ஒன்றிய அரசும் முறையாக செயல்படவில்லை. இது அரசியலமைப்பு சட்டத்தை மீறும் செயலாகும்’ என ஹஜ் கமிட்டியின் முன்னாள் உறுப்பினர் ஹபிஸ் நவுசத் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் … Read more

“ஏதாவது தவறு நடந்திருந்தால் இறந்திருக்கலாம்” – ‘அஸ்ஸாம் நாட்கள்’ குறித்து ஏக்நாத் ஷிண்டே

மும்பை: அதிருப்தி எம்எல்ஏக்களுடன் மகாராஷ்டிராவை விட்டு வெளியேறி பத்து நாட்கள் குவஹாத்தியில் முகாமிட்டிருந்தது குறித்து மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பேசியுள்ளார். மகாராஷ்டிராவில் நடைபெற்று வந்த சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்த மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி கடந்த மாதம் கவிழ்ந்தது. சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் 39 பேர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பிரிந்து பா.ஜ.க ஆதரவுடன் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதையடுத்து கடந்த ஜூன் மாதம் 30-ம் தேதி ஏக்நாத் … Read more

துவரம் பருப்பு பதுக்கலை கண்காணிக்க நடவடிக்கை: மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு உத்தரவு

புதுடெல்லி: துவரம் பருப்பின் விலை உயர்ந்து வருவதால் பதுக்கலை தடுக்க வியாபாரிகள், மொத்த விற்பனையாளர்களை கண்காணிக்கும்படி மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் 2வது வாரத்தில் இருந்து துவரம் பருப்பின் விலை உயர்ந்து வருகிறது. சந்தையில் செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கும் விதமாக சிலர் இதன் விற்பனையை கட்டுப்படுத்தி வருவதாக செய்திகள் வெளியாயின. இந்நிலையில், ஒன்றிய நுகர்வோர் விவகாரத்துறை அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், ‘அத்தியாவசிய பொருட்கள் சட்டம் 1955ம் … Read more