ஜனநாயக ஆசாத் கட்சி..! – புதுக்கட்சி தொடங்கினார் குலாம் நபி ஆசாத்!

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத், ஜனநாயக ஆசாத் கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கி உள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவராக இருந்த குலாம் நபி ஆசாத், கடந்த ஆகஸ்ட் மாதம், அக்கட்சியில் இருந்து விலகினார். இது தொடர்பான ராஜினாமா கடிதத்தை கட்சித் தலைவர் சோனியா காந்திக்கும் அவர் அனுப்பி வைத்தார். “கடந்த 2019 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தியின் குழந்தைத்தனமான நடவடிக்கைகளே காங்கிரஸ் கட்சி தோல்விக்கு காரணம்” என்று குலாம் … Read more

உத்தரபிரதேசத்தில் சேதமடைந்த பாலத்தை இடித்த போது நீரில் மூழ்கிய புல்டோசர்: அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய டிரைவர்

முசாபர்நகர்: உத்தரபிரதேசத்தில் சேதமடைந்த பாலத்தை இடித்த போது புல்டோசர் நீரில் மூழ்கிய நிலையில், டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் பாயும் கங்கை நதியின் குறுக்கே கட்டப்பட்டிருந்த கால்வாய் பாலம் சேதமடைந்து இருந்ததால், புல்டோசர் மூலம் கட்டமைப்பின் மற்ற பகுதிகள் இடிக்கப்பட்டன. கங்கையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிய போது கங்கை நதியின் கால்வாயின் ஒருபக்கத்தில் இருந்து புல்டோசர் மூலம் பாலத்தின் மற்றொரு பகுதி இடித்து தகர்க்கப்பட்டது. திடீரென பாலம் இடிந்து விழுந்ததால் புல்டோசர் தலைக்குப்புற … Read more

கர்நாடகா டூ கன்னியாகுமரி: காந்தி வேடமிட்டு விழிப்புணர்வு பாத யாத்திரை செல்லும் முதியவர்

கர்நாடகாவில் இருந்து கன்னியாகுமரிக்கு காந்தி போல் வேடமிட்டு வந்த முதியவர் விருதுநகரில் மாவட்ட ஆட்சித்தலைவரை சந்தித்தார். காந்திய கருத்துகளைக்கொண்டு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கர்நாடகாவில் இருந்து கன்னியாகுமரி வரை நடைபயணம் மேற்கொள்ளும் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த முத்தண்ணா என்பவர் விருதுநகர் வந்தார். கர்நாடகாவிலிருந்து கடந்த 9 ஆம் தேதி துவங்கிய பாத யாத்திரையாக காந்தி ஜெயந்தி அன்று கன்னியாகுமரி சென்றடைகிறார். இதையடுத்து பாத யாத்திரையின் ஒரு பகுதியாக மதுரையிலிருந்து விருதுநகர் விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் … Read more

சாப்பிட அழைத்த தூய்மைப் பணியாளரை டெல்லி அழைத்துச் சென்று  மதிய உணவளித்த அரவிந்த் கேஜ்ரிவால்  

புதுடெல்லி: தன்னை வீட்டிற்கு சாப்பிட அழைத்த தூய்மைப் பணியாளரை குடும்பத்துடன் தன்னுடைய டெல்லி வீட்டிற்கு அழைத்து மதிய விருந்தளித்துள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால். இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அரவிந்த் கேஜ்ரிவால், “ஹர்ஷ் மற்றும் குடும்பத்தினருக்கு நல்வரவு. என்னுடைய குடும்பம் அவர்களின் வருகைக்காக காத்திருக்கிறது” என்று தெரிவித்துள்ளார். தேர்தலை நெருங்கிக் கொண்டிருக்கும் குஜராத் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் ஞாயிற்றுக்கிழமை பிரச்சாரம் மேற்கொண்டார்.டெல்லி, பஞ்சாப் வெற்றியை அடுத்து குஜராத் … Read more

மறைந்த பிரதமரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க பிரதமர் மோடி ஜப்பான் பயணம்

புதுடெல்லி: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே (67) கடந்த ஜூலை 8ம் தேதி நாரா நகரில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் படுகொலை செய்யப்பட்டார். துப்பாக்கிச் சூடு நடத்திய டெட்சுயா யமகாமி என்பவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ச்சியாக ஜூலை 12ம் தேதி ஷின்சோ அபேவுக்கு தனிப்பட்ட முறையிலான இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. ஆனால் பொதுவான இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகள் நடத்தப்படவில்லை. இந்நிலையில் நாளை (செப். 27) ஷின்சோ அபேவுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறுகின்றன. அதற்காக தலைநகர் … Read more

பிரதமர் மோடி நாளை ஜப்பான் பயணம்: சின்சோ அபே இறுதிச் சடங்கில் பங்கேற்கிறார்

படுகொலை செய்யப்பட்ட ஜப்பான் முன்னாள் பிரதமர் சின்சோ அபேவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை ஜப்பான் பயணம் ஆகிறார். தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கடந்த ஜூலை எட்டாம் தேதி ஜப்பான் முன்னாள் பிரதமர் சின்சோ அபே நபர் ஒருவரால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். ஜப்பானின் நீண்ட நாட்கள் பிரதமராக பணியாற்றியவர் என்ற பெருமை கொண்டவர் என்பதால் அவரது இறுதிச் சடங்கை மிக பிரம்மாண்டமான முறையில் நடத்த ஜப்பான அரசு … Read more

“ராகுல் காந்தி செல்லும் இடங்களில் மலரும் தாமரை” – கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை

பெங்களூரு: “காங்கிரஸ் கட்சியின் பல்வேறு அடுக்குகளில் ஊழல்கள் நிறைந்திருக்கும் நிலையில், அவர்கள் எனக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு பிரசாரத்தை தொடங்கி உள்ளனர்” என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். மைசூரிவில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பசவராஜ் பொம்மை, “கர்நாடகாவில் காங்கிரஸ் வீழ்ச்சி அடைந்து வருகிறது. காங்கிரஸ் கட்சியின் பல்வேறு அடுக்குகளில் ஊழல்கள் நிறைந்திருக்கும் நிலையில், அவர்கள் எனக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு பிரசாரத்தைத் தொடங்கி உள்ளனர். காங்கிரஸ் தலைவர்கள் சுயநலவாதிகள். மாநிலத்தின் நலனை தியாகம் செய்யத் … Read more

ரூ.200 கோடி மோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி நீதிமன்றம்

டெல்லி: 200 கோடி ரூபாய் மோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு டெல்லி நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது. அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலரை ஏமாற்று 200 கோடி ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக 2019 ஆண்டு கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கில் அமலாக்கத்துறை விசாரணையின் போது சுகேஷ் சந்திரசேகர், நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு கோடி கணக்கில் அரசு பொருட்கள் வாங்கி கொடுத்திருப்பது வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து வழக்கு தொடர்பாக நடை … Read more

ஹவாலா விவகாரங்களுக்கு அபுதாபி உணவகத்தைப் பயன்படுத்திய பிஎஃப்ஐ – அமலாக்கத் துறை

புதுடெல்லி: வளைகுடா நாடுகளில் இருந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் ஹவாலா நடவடிக்கை மூலமாக இந்தியாவிற்கு பணம் அனுப்ப அபுதாபியின் உணவகம் ஒன்றினை தலைமையகமாக பயன்படுத்தியுள்ளனர் என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறுகையில், “பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிற்கு வளைகுடா நாடுகளில் ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் இருந்தனர். அவர்கள் அங்கிருந்து நிதிதிரட்டி அதனை ஹவாலா பரிமாற்றம் மூலமாக இந்தியாவிற்கு அனுப்பியுள்ளனர். இந்தியா மற்றும் வளைகுடா நாடுகளில் இந்த நிதி திரட்டும் … Read more

புதுச்சேரியில் மேலும் 6 பேருக்கு பன்றிக்காய்ச்சல் தொற்று உறுதி..!

புதுச்சேரியில் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நேற்று 82 பேருக்கு பன்றிக்காய்ச்சல் சோதனை செய்யப்பட்டது. இதில் ஒரு குழந்தை உள்ளிட்ட 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 15 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். Source link