'டெல்லியில் ஆப்பரேஷன் லோட்டஸ் தோல்வி' – முதல்வர் கெஜ்ரிவால் பேச்சு!

டெல்லியில், பாஜகவின், ஆப்பரேஷன் லோட்டஸ் தோல்வி அடைந்து விட்டதாக, அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்து உள்ளார். டெல்லியில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசிலும், கட்சியிலும், இரண்டாவது இடத்தில் இருப்பவர், துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா. அண்மைையில், இவரது வீட்டில், மதுபானக் கொள்கை விதிமீறல் தொடர்பாக, சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். சுமார் 12 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் பல முக்கிய … Read more

பிரதமர் மோடி மனிதநேயமிக்க தலைவராக திகழ்கிறார் – குலாம் நபி ஆசாத்

பிரதமர் நரேந்திர மோடி மனிதநேயமிக்க தலைவராக திகழ்வதாகவும், ராகுல் காந்தியிடம் அரசியலுக்கான தகுதி இல்லை என்றும் அண்மையில் காங்கிரசில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். இது குறித்து டெல்லியில் பேசிய அவர், பிரதமர் மோடியை முரட்டுத்தனமாக மனிதர் என தாம் தவறாக நினைத்துவிட்டதாக கூறினார். மேலும், ரத்தம் சிந்தி கட்சியை வளர்த்ததாகவும், தன்னை போன்ற மூத்த தலைவர்கள் யார் என்றே தெரியாமல், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்கள் உள்ளதாகவும் குலாம் நபி ஆசாத் கூறினார். இதனிடையே … Read more

ராணுவ பயிற்சி பள்ளி வளாகத்தில் பறந்த ‘டிரோனை’ சுட்டு வீழ்த்த முயன்ற போது மாயம்; அடையாளம் தெரியாத நபர் மீது வழக்கு

நாசிக்: நாசிக் பகுதியில் செயல்படும் ராணுவப் பகுதியில் ஆளில்லா விமானத்தை பறக்கவிட்ட அடையாளம் தெரியாத நபர் மீது அப்நகர் போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் அப்நகர் காவல் நிலைய எல்லையில் ‘காம்பாட் ஆர்மி ஏவியேஷன்’ பயிற்சிப் பள்ளி (சிஏடிஎஸ்) செயல்பட்டு வருகிறது. தடை ெசய்யப்பட்ட ராணுவப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 800 அடி உயரத்தில் ஆளில்லா விமானம் (டிரோன்) பறப்பதாக அங்குள்ள அதிகாரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதையடுத்து அவர் அந்த ஆளில்லா … Read more

விதிகளை மீறி கட்டப்பட்ட 32 மாடி நொய்டா இரட்டை கோபுர கட்டிடம் 9 விநாடிகளில் தரைமட்டமானது – முழு விவரம்

புதுடெல்லி: விதிகளை மீறி 32 மாடிகளுடன் கட்டப்பட்ட நொய்டா இரட்டை கோபுர கட்டிடம் நேற்று 9 விநாடிகளில் தரைமட்டமானது. உத்தர பிரதேசத்தின் கவுதம புத்தர்மாவட்டத்தில் நொய்டா அமைந்துள்ளது. டெல்லிக்கு அருகே அமைந்துள்ள இப்பகுதி அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.நொய்டாவின் ஏடிஎஸ் கிராமத்தில் எமரால்டு கோர்ட்என்ற திட்டத்தின் கீழ் அபெக்ஸ் (32 மாடி), சேயன் (29 மாடி) என 2 அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்கள் கட்டப்பட்டன. இவற்றில் 857 வீடுகள் இருந்தன. இதில் 600 வீடுகள் முன்பதிவு செய்யப்பட்டு … Read more

காவல்துறையினருக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க உத்தரவிடக் கோரிய வழக்கில் ஒன்றிய அரசு உத்தரவு

டெல்லி; காவல்துறையினருக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க உத்தரவிடக் கோரிய வழக்கில் ஒன்றிய அரசு பதில் தர உத்தரவிடப்பட்டது. வழக்கறிஞர் புசைல் அகமத் அய்யுப் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுமீது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. நாடு முழுவதும் காவல்துறையினர் ஊடக தொடர்பை நிர்வகிக்க ஒரே மாதிரியான வழிகாட்டுதல்களை வெளியிடக்கோரி மனு அளிக்கப்பட்டது.

காஷ்மீர் பாஜக தலைவர்களுடன் அமித் ஷா ஆலோசனை: சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெறுவதற்கு வியூகம்

புதுடெல்லி: கடந்த 2019-ல் ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இதனுடன் இணைந்திருந்த லடாக்கை பிரித்து இரண்டு யூனியன் பிரதேசங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது காங்கிரஸின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், அக்கட்சியில் இருந்து விலகியது பாஜகவிற்கு சாதகமாகி உள்ளது. இதனால், நேற்று முதல் ஜம்மு-காஷ்மீரின் தலைவர்களை டெல்லிக்கு அழைத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வியூகம் அமைக்கத் தொடங்கி உள்ளார். ஜம்மு-காஷ்மீரில் ஆளும் கட்சியாக பிடிபி இருந்தபோது அதனுடன் கூட்டணி வைத்திருந்தது பாஜக. இதன் … Read more

நியூசிலாந்தில் வேலைவாங்கி தருவதாக கூறி ரூ. 5 லட்சம் ‘ஆட்டை’ போட்ட நைஜீரியன் கைது; கோவா போலீஸ் அதிரடி

பனாஜி: நியூசிலாந்தில் வேலைவாங்கித் தருவதாக கூறி ரூ. 5 லட்சம் மோசடி செய்த நைஜீரியனை கோவா போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கோவாவை சேர்ந்த பட்டதாரி இளைஞர் வெளிநாடுகளில் தேடி வந்தார். அவர் ஆன்லைன் தனியார் வேலைவாய்ப்பு மையத்தில் தனது வேலைக்கான விபரங்களை பதிவு செய்திருந்தார். அவரை தொடர்பு கொண்ட நைஜீரிய நாட்டைச் சேர்ந்த இபியானி காலின்ஸ் சிக்வெண்டு (39) என்பவர், நியூசிலாந்து நாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறினார். அதற்காக முன்பதிவு கட்டணமாக சில லட்சம் … Read more

நடிகை சோனாலி போகட் மரண வழக்கை தேவைப்பட்டால் சிபிஐயிடம் ஒப்படைப்பேன்: கோவா முதல்வர் தகவல்

பனாஜி: நடிகை சோனாலி போகட் மரண வழக்கை, தேவைப்பட்டால் சிபிஐ வசம் ஒப்படைக்கத் தயார் என கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார். பாஜக பிரமுகரும் நடிகையுமான சோனாலி போகட் ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் கடந்த 22-ம் தேதி கோவா சென்றிருந்தார். அடுத்த நாள் அவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். 2 பேர் கைது இதனிடையே, அவரது உடலில்காயங்கள் இருந்தது பிரேதப் பரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து, அவரது உதவியாளர் மற்றும் அவரது நண்பர் என 2 … Read more

ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம் தொடர்பாக புதிய விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி: இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம் தொடர்பாக புதிய விசாரணை நடத்த கோரிய பொதுநல மனுவை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளின் மூலம், எந்த வழக்கையும் அதிகார வரம்பைப் பயன்படுத்த முடியாது என தலைமை நீதிபதி யு.யு. லலித் மற்றும் நீதிபதி எஸ்.ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது. 2016 இந்திய-பிரான்ஸ் ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக விமான உற்பத்தியாளர் டசால்ட் ஏவியேஷன் இந்திய நிறுவனத்திற்கு … Read more

என்.எஸ்.இ முறைகேடு: சித்ரா ராமகிருஷ்ணாவின் ஜாமீன் மனு தள்ளுபடி

தேசிய பங்குச் சந்தை ஊழியர்களின் செல்போன்கள் ஓட்டுக்கேட்கப்பட்ட விவகாரத்தில் அதன் முன்னாள் இயக்குனர் சித்ரா ராமகிருஷ்ணாவின் ஜாமீன் மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை தேசிய பங்குச் சந்தையின் இயக்குனராக இருந்த சித்ரா ராமகிருஷ்ணனை, தேசியப் பங்குச் சந்தையின் ரகசிய தகவல்களை முன்கூட்டியே பங்கு நிறுவனங்களின் சர்வரிலிருந்து எடுக்க உதவியதாகக் கூறப்படும் ‘கோ-லொக்கேஷன்’ ஊழல் தொடர்பான வழக்கில் கைது செய்து விசாரித்து வருகிறது அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ … Read more