மோசடி பணத்தில் கலைப்பொருட்கள் வாங்கும் தொழிலதிபர்கள்

புதுடெல்லி: வங்கிகளில் பல ஆயிரம் கோடிகடன் பெற்று அதை திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்யும்தொழில் அதிபர்கள் அந்தப் பணத்தைக் கொண்டு என்னவெல்லாம் செய்வார்கள்? நிலம் வாங்குவார்கள், வெளிநாட்டில் முதலீடு செய்வார்கள், சொகுசு வாழ்க்கை வாழ்வார்கள்… இல்லை, இவை மட்டுமில்லை. அவர்கள் அந்தப் பணத்தைக் கொண்டு கலைப்பொருள்களையும் வாங்கிக் குவிக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது சமீபத்திய சிபிஐ சோதனைகள். கடந்த ஜூலை மாதத்தில் சிபிஐ திவான் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தின் பண மோசடி வழக்குத் தொடர்பாக, மும்பையில் சில இடங்களில் … Read more

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் கடும் மழையால் மண்சரிவு.. ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் குடையாத்தூரில் பெய்த கனமழையால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். தொடுபுழா அருகே உள்ள குடையாத்தூரில் நேற்றிரவு பெய்த கனமழையால் மண்சரிவு ஏற்பட்டது. அப்பகுதியில் வசித்து வந்த கூலித்தொழிலாளியான சோமன் உட்பட அவரது குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் மண்சரிவில் சிக்கினர். இதில் சோமனின் மனைவி சீமா,தாயார் தங்கம்மா மற்றும் பேரன் ஆதிதேவ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மீதமுள்ள மூன்று பேரை மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ள … Read more

தேசிய பங்குச்சந்தை முன்னாள் தலைவர் சித்ரா ராமகிருஷ்ணாவின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது சிறப்பு நீதிமன்றம்

மும்பை: தேசிய பங்குச்சந்தை முன்னாள் தலைவர் சித்ரா ராமகிருஷ்ணாவின் ஜாமின் மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பங்குச்சந்தை ஊழல் தொடர்பாக சித்ரா ராமகிருஷ்ணாவை சிபிஐ கைது செய்தது.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் இறுதிகட்டப் பணிகள் தீவிரம்: டாடா புராஜக்ட்ஸ் சி.இ.ஓ. தகவல்

புதுடெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் முதன்மை கட்டமைப்பு பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளதாக டாடா புராஜக்ட்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) மற்றும் நிர்வாக இயக்குநர் வினயக் பய் நேற்று தெரிவித்தா். இதுகுறித்து அவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் மேலும் கூறியதாவது. இந்திய ஜனநாயகத்தின் மாண்பையும், பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கும் விதத்தில், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் பெரியஅரசியலமைப்பு மண்டபத்தை டாடா உருவாக்கி வருகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வறை, நூலகம், ஆலோசனைஅறை, உணவகம், பரந்த வாகனநிறுத்துமிடம் உள்ளிட்ட பல … Read more

இடுக்கி மண்சரிவு… மண்ணில் புதைந்த குடும்பம்- பதறிப் போன கேரளா!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திற்கு உட்பட்ட தொடுபுழா அருகே அமைந்துள்ளது குடையாத்தூர். இப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்த சூழலில் இன்று அதிகாலை 3 மணியளவில் திடீர் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சோமன் என்பவரது குடும்பம் மண்ணில் புதைந்து சிக்கிக் கொண்டதாக தெரியவந்துள்ளது. கூலி தொழிலாளியான சோமன், தனது தாயார் தங்கம்மா, மனைவி சிஜி, மகள் சீமா, மகன் ஆதிதேவ் ஆகியோருடன் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் அதிகாலையில் நன்கு … Read more

பீகார் மாநிலத்தில் சிபிஐ விசாரணையை ரத்து செய்தது நிதிஷ்குமார் அரசு

பாட்னா: பீகார் மாநிலத்தில் விசாரணை நடத்த சிபிஐக்கு தரப்பட்டிருந்த பொது அனுமதியை நிதிஷ்குமார் அரசு ரத்து செய்தது. லாலு பிரசாத் குடும்பத்தினர் தொடர்புடைய வேலைவாய்ப்பு மோசடி குறித்து சிபிஐ விசாரித்து வரும் நிலையில் பீகார் அரசு அதிரடி உத்தரவு வழங்கியது.

லிவ் இன், தன்பாலின உறவாளர்கள் நடத்துவதும் குடும்ப அமைப்புதான்: உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: வின் இன், தன்பாலின உறவாளர்கள் இணைந்து நடத்துவதும் குடும்ப அமைப்புதான். அவர்களும் சட்டத்திற்கு உட்பட்ட பாதுகாப்புக்கு உரித்தானவர்கள் தான் என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. குடும்பம் என்பது இந்திய சட்டப்படி, இந்திய சமூக அமைப்பின்படி தாய், தந்தை, குழந்தைகள் கொண்ட மாறாத அமைப்பு என்று கொள்ளப்படுகிறது. இதனால் பல சூழல்களில் ஒரு தனிநபரின் குடும்ப அமைப்பில் ஏதேனும் மாறுதல் ஏற்பட்டால் அது குடும்பமாக அங்கீகரிப்பட தவறப்படுகிறது. இந்நிலையில், குடும்ப உறவு என்பது திருமணம் செய்துகொள்ளாமல் … Read more

ஆட்டோவின் மேற்கூரையில் அமர்ந்தபடி பள்ளி செல்லும் சிறுவர்கள்.. போலீசார் விசாரணை!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆட்டோ ஒன்றின் மேற்கூரையில் அமர்ந்தவாறு அபாய நிலையில் பள்ளிச்சிறுவர்கள் பயணம் செய்யும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. Bareilly பகுதியில் நடந்த இந்த சம்பவம் குறித்து அம்மாநில போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பந்தப்பட்ட ஆட்டோ ஓட்டுனருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து ஆட்டோ ஓட்டுனர்களும் மோட்டார் வாகன சட்டப்படி தங்களின் வாகனங்களை இயக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். Source link

இந்தியாவில் ஒரே நாளில் 7,591 பேருக்கு கொரோனா… 45 பேர் பலி: ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது.இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: * புதிதாக 7,591 பேர் பாதித்துள்ளனர். * இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,44,15,723 ஆக உயர்ந்தது. * புதிதாக 45 பேர் இறந்துள்ளனர். * இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் … Read more

ஒரு பையன்; 2 பொண்ணுங்க.. நடுரோட்டில் சண்டை: எதிர்பாரத விதமாக காதலன் செய்த செயல்!

காதல் ஒருவரை எந்த பைத்தியகாரத்தனத்தையும் செய்ய வைக்கும், ஏன் செய்யாததை கூட செய்ய துணிய வைக்கும் என கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த வகையில் காத்துவாக்குல ரெண்டு காதல் படம் பாணியில் காதலனுக்காக இரண்டு டீனேஜ் பெண்கள் நடுரோட்டில் அடித்துக்கொண்ட சம்பவம் மகாராஷ்டிராவில் அரங்கேறியிருக்கிறது. ஆனால் காதலனின் செயல்தான் எதிர்பாராத விதமாக அமைந்திருக்கிறது. மகாராஷ்டிராவின் பைதான் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயதான இரண்டு டீனேஜ் பெண்கள் மக்கள் கூட்டம் நிறைந்த பேருந்து நிறுத்தம் முன்பு ஒரு பையனுக்காக சண்டையிட்டிருக்கிறார்கள். இந்த சம்பவம் … Read more