ஜார்க்கண்ட் முதல்வரை தகுதி நீக்கம் செய்ய ஆளுநரிடம் தேர்தல் ஆணையம் பரிந்துரை: பின்னணி என்ன?

ராஞ்சி: ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் எம்.எல்.ஏ. பதவியை பறிக்க வேண்டும் என்று மாநில ஆளுநரிடம் தலைமை தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த 2021-ம் ஆண்டு ஜூனில்ஜார்க்கண்ட் சுரங்க துறை சார்பில்மாநில முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு சுரங்க ஒதுக்கீடு வழங்கப்பட்டது. தனது பதவியை தவறாக பயன்படுத்தி சட்டவிரோதமாக சுரங்க உரிமத்தை பெற்றதாக அவர்மீது பாஜக குற்றம் சாட்டியது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம்1951-க்கு எதிராக முதல்வர் ஹேமந்த் சோரன் செயல்பட்டிருப்பதாக தலைமை தேர்தல் … Read more

என்.வி.ரமணா: மறக்க முடியாத தீர்ப்புகளும், விடைபெறும் தருணமும்!

நாட்டின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட அமைப்பாக உச்ச நீதிமன்றம் திகழ்கிறது. இதன் தலைமை நீதிபதியாக பதவி வகிப்பது பலரது கனவாக இருக்கும். அந்த வகையில் உச்ச நீதிமன்றத்தின் 48வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டேவிற்கு பின்னர் ஏப்ரல் 24, 2021 அன்று பதவியேற்றவர் தான் என்.வி.ரமணா. இவர் இன்றைய தினம் (ஆகஸ்ட் 26, 2022) ஓய்வு பெறுகிறார். இதையொட்டி உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெறும் வழக்கு விசாரணைகளை நேரலையில் ஒளிபரப்ப முடிவு செய்யப்பட்டது. காலை 10.20 மணி முதல் … Read more

உச்சநீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக நேரலை செய்யப்பட்ட வழக்கு விசாரணை

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி ரமணா இன்று ஓய்வு பெறும் நிலையில், 72 ஆண்டுகால உச்சநீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக வழக்கு விசாரணை ஆன்லைன் மூலம் இன்று நேரலை செய்யப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் 48 ஆவது தலைமை நீதிபதியாக உள்ள என்.வி ரமணா 65 வயதை பூர்த்தி செய்யும் நிலையில் இன்றோடு ஓய்வு பெற உள்ளளார். உச்சநீதிமன்றத்தின் 49 ஆவது மற்றும் அடுத்த தலைமை நீதிபதியாக யு.யு லலித் நாளை பொறுப்பேற்றுக்கொள்ள இருக்கிறார். ஓய்வு பெறும்  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி … Read more

71 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை!: உச்சநீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணைகள், தீர்ப்புகள் அனைத்தும் நேரலை..!!

டெல்லி: உச்சநீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக இன்று வழக்கு விசாரணைகள் மற்றும் தீர்ப்புகள் அனைத்தும் நேரலையில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா இன்றுடன் ஓய்வுபெறவுள்ள நிலையில், அவரது தலைமையிலான அமர்வு விசாரிக்கும் அனைத்து வழக்குகளின் விசாரணை மற்றும் தீர்ப்புகள், நேரலை செய்யப்பட்டு வருகிறது. உச்சநீதிமன்றத்தின் 71வது ஆண்டுகால வரலாற்றில் வழக்கு விசாரணை நேரலை செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும். காலை 10.30 மணிக்கு தொடங்கிய நேரலை, மாலை வரை ஒளிபரப்பப்பட இருக்கிறது. மொத்தம் 20 வழக்குகள் இன்று … Read more

”பிரஷ்ஷர்னா கேவலமா போச்சா? அவங்களும் மனுஷங்கதான்” – Infosys முன்னாள் தலைவர் அதிரடி பேச்சு!

IT துறை என்றதுமே சொகுசான வேலை, மிடுக்கான வாழ்க்கை, டீம் அவுட்டிங், பார்ட்டி, காதல் கல்யாணம் ஆகியவைதான் நினைவில் எட்டும். ஆனால், ஐடி துறையின் கெடுபிடியான வேலையில் ஏற்படும் மன உளைச்சல்களோ, உடல்நல மற்றும் பொருளாதார பாதிப்புகளோ பொதுபுத்தியோடு பேசுபவர்களுக்கு தெரிந்திருக்காது. ஐ.டி. துறையில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கவுதம் கார்த்தி நடித்திருக்கும் ‘இவன் தந்திரன்’ படத்தில் ஆர்.ஜே.பாலாஜி பேசியிருக்கும் வசனம் இளைஞர் பட்டாளத்தை பெரிதளவில் கவர்ந்திருக்கும். அந்த பாணியில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மோகன்தாஸ் … Read more

ராகுலின் சிறுபிள்ளைத்தனத்தால் காங்கிரஸ் வீழ்ந்தது; மீள்வது கடினம்: குலாம் நபி ஆசாத்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களின் அடையாள முகமாக இருந்த குலாம் நபி ஆசாத் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்துப் பதவிகளையும் ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக அவர் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு 5 பக்க கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடித விவரம் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில், காங்கிரஸ் கட்சியில் இருந்த கலந்தாலோசனை முறையை ராகுல் காந்தி முற்றிலுமாக சிதைத்துவிட்டார். 2014 ஆம் ஆண்டு தேர்தல் தோல்விக்கு ராகுல் காந்தியின் … Read more

இலவசங்கள் தொடர்பான வழக்கு: தலைமை நீதிபதி என்.வி.ரமணா புதிய உத்தரவு!

அரசியல் கட்சிகள் தேர்தல் நேரத்தில் இலவசங்களை அறிவிப்பதற்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் பாஜகவின் அஸ்வினி உபாத்யாய் வழக்கு தொடர்ந்திருந்தார். இதற்கு ஆம் ஆத்மி, திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதன் விசாரணையில், தேர்தல் நேரத்தில் எதற்காக வாக்குறுதிகள் வழங்கப்படுகின்றன? அதற்கான பணம் எங்கிருந்து வருகிறது? இதுதொடர்பான அறிவிப்புகளை தேர்தல் ஆணையம் ஏன் ஒழுங்குபடுத்தக் கூடாது? இதில் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விஷயங்களும் இருக்கின்றன. எனவே இலவசங்கள் வழங்குதல் என்பது சிக்கலான விவகாரம் என்று தலைமை … Read more

காங்கிரஸில் கலந்தாலோசனை முறையை முற்றிலும் அழித்துவிட்டார் ராகுல் காந்தி: குலாம் நபி ஆசாத் குற்றச்சாட்டு

டெல்லி: காங்கிரஸில் கலந்தாலோசனை முறையை ராகுல் காந்தி முற்றிலும் அழித்துவிட்டார் என காங்கிரஸில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத் குற்றம் சாட்டியுள்ளார். 2014ம் ஆண்டு தேர்தல் தோல்விக்கு ராகுலின் குழந்தைத்தனமான நடவடிக்கையே காரணம். கட்சியின் முக்கிய முடிவுகள் அனைத்தும் ராகுல் காந்தி அல்லது அவரது உதவியாளராலேயே எடுக்கப்படுகிறது எனவும் கூறினார்.

3700 கிலோ வெடி மருந்து: தகர்க்கப்படும் நொய்டா இரட்டை கோபுர கட்டடம்; மக்களுக்கு எச்சரிக்கை

நொய்டாவில் அமைந்துள்ள 40 மாடிகளை கொண்ட இரட்டை கோபுர குடியிருப்பு கட்டடம் நாளை மறுநாள் வெடிவைத்து தகர்க்கப்பட உள்ள நிலையில் இந்த பகுதியில் கடுமையான கட்டுப்பாடுகளை காவல்துறையினர் விதித்துள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் தனியார் நிறுவனத்தின் 40 மாடிகளை கொண்ட இரட்டை கோபுர கட்டடம் கடுமையான விதிமுறைகளை மீறி கட்டப்பட்டது தெரியவந்ததை அடுத்து உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி நாளை மறுநாள் ஆகஸ்ட் 28-ஆம் தேதி சுமார் 3700 கிலோ வெடி மருந்துகளை பயன்படுத்தி வெறும் ஒன்பது நொடிகளில் … Read more

செப்.7ல் நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு: தேசிய தேர்வுகள் முகமை தகவல்

புதுடெல்லி: மருத்துவ இளநிலை படிப்பில் சேர்வதற்காக நடத்தப்பட்ட நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. நம் நாட்டில் எம்பிபிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (நீட்) கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் இந்த தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பாண்டுக்கான நீட் தேர்வு ஜூலை 17ல் நடைபெற்றது. தமிழ், ஆங்கிலம், … Read more