பெகாசஸ் வழக்கு விசாரணைக்கு ஒன்றிய அரசு ஒத்துழைக்கவில்லை: நிபுணர் குழு குற்றச்சாட்டு

புதுடெல்லி: பெகாசஸ் வழக்கு விசாரணைக்கு ஒன்றிய அரசு ஒத்துழைக்கவில்லை என்று நிபுணர் குழு குற்றம் சாட்டியது. வழக்கை 4 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். இஸ்ரேல் பாதுகாப்பு துறையின் ஒரு பிரிவான என்எஸ்ஓ நிறுவனத்தின் தயாரிப்புதான் பெகாசஸ் உளவு மென்பொருள். இந்நிறுவனம் இந்த மென்பொருளை பல நாடுகளின் அரசு அமைப்புகளுக்கு விற்பனை செய்து வருகிறது. நாட்டுக்கு எதிராக சதி திட்டங்கள் தீட்டுபவர்களை கண்டறிய இந்த மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் பத்திரிகையாளர்கள், ஒன்றிய அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், நீதிபதிகள், … Read more

’புழுதி அடங்கவே 10 நிமிடம் ஆகும்’-நொய்டா இரட்டை கோபுர இடிப்பு குறித்து நிபுணர்கள் விளக்கம்

நொய்டா இரட்டை கோபுரங்களை தகர்க்கும்போது உருவாகும் புழுதி தரையில் படிவதற்கு 10 நிமிடங்கள் ஆகும். உத்தரப் பிரதேசம் நொய்டாவில் எமரால்டு கோர்ட் வளாகத்தில் ‘சூப்பர் டெக்ஸ்’ என்ற பெயரில் பிரமாண்டமான இரட்டை கோபுரங்கள் கட்டப்பட்டன. 40 மாடிகள் கொண்ட இந்த இரண்டு கோபுரங்களும் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அவற்றை இடிக்க உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து இந்த இரட்டை கோபுரங்களை இடிக்கும் பணி ‘எடிஃபைஸ்’ என்ற தனியார் நிறுவனத்திடம் … Read more

காங்கிரஸ் தலைவராகிறாரா அசோக் கெலாட்?

2024 நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க அனைத்துக் கட்சிகளும் இப்போதிலிருந்தே தயாராகி வருகின்றன. பாஜக தங்களுக்கான வியூகங்களை வகுத்து வரும் நிலையில், எதிர்க்கட்சிகளும் மறுபுறத்தில் தயாராகி வருகின்றன. முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் இல்லாமல் இருப்பது அக்கட்சிக்குப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்ததை அடுத்து, ராகுல்காந்தி காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து விலகினார். அதன் பின்னர் சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராகச் செயல்பட்டு … Read more

பில்கிஸ்பானு பாலியல் வன்கொடுமை வழக்கு; 11 பேர் விடுதலை செய்யப்பட்டது பற்றி குஜராத் மற்றும் ஒன்றிய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: பில்கிஸ்பானு பாலியல் வன்கொடுமை வழக்கில் 11 பேர் விடுதலை செய்யப்பட்டது பற்றி குஜராத் அரசும்,  நன்னடத்தை அடிப்படையில் 11பேர் விடுதலை செய்யப்பட்ட வழக்கில் ஒன்றிய அரசும் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2002ல் கோத்ரா கலவரத்தின்போது பில்கிஸ்பானுவின் குழந்தை உள்பட 14 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 11 பேரும் சிறையிலிருந்தனர். குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு நடந்த கலவரத்தின் போது, 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு என்ற பெண், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். … Read more

கொல்ல வந்த பயங்கரவாதிக்கு ரத்தம் கொடுத்த இந்திய ராணுவம்.. விசாரணையில் பகீர் வாக்குமூலம்!

இந்திய ராணுவத்தை தாக்குவதற்காக, பாகிஸ்தான் உளவுத்துறை 30 ஆயிரம் ரூபாய் கொடுத்ததாக, பிடிபட்ட பயங்கரவாதி வாக்குமூலம் அளித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் உள்ள ரஜோரி பகுதியில் கடந்த 21 ஆம் தேதி நடந்த என்கவுன்டரின் போது பிடிபட்ட தபாரக் ஹுசைன் என்ற பயங்கரவாதி மூலம், பாகிஸ்தான் உளவுத்துறையின் தாக்குதல்கள் அம்பலமாகியுள்ளன. காயமடைந்த தபாரக் ஹுசைனுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பயங்கரவாதிக்கு ரத்த தானம் செய்து இந்திய ராணுவத்தினர் உதவியுள்ளனர்.  மருத்துவமனையில் உள்ள அவர் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் உளவுத்துறையை சேர்ந்த கர்னல் யூனுஸ் சௌத்ரி என்பவர் 30 ஆயிரம் ரூபாய் கொடுத்து தன்னை பணி … Read more

தொழிலாளர் சட்டத்தில் மிகப்பெரிய சீர்திருத்தம்.. அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு அங்கீகாரம்..!

நாட்டின் அடுத்த 25 ஆண்டுகால முன்னேற்றப்பயணத்தில் தொழிலாளர்களின் பங்கு மிக முக்கியமானது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.   அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர்கள் பங்கேற்ற 2 நாள் தேசிய தொழிலாளர் மாநாடு திருப்பதியில் நடைபெறுகிறது. புதுடெல்லியில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக மாநாட்டில் பங்கேற்றுப் பேசினார். கடந்த 8 ஆண்டுகளில் தேவையற்ற பல சட்டங்களை நீக்கி தொழிலாளர் சட்டங்களில் மத்திய அரசு பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டதாக தெரிவித்தார். … Read more

உத்திர பிரதேசத்தில் தங்கத்தில் விநாயகர் சிலை தயாரிப்பு: மும்பையில் பல வடிவங்களில் தயாராகும் விநாயகர் சிலைகள்

லக்னோ: எதிர்வரும் 31-ம் தேதி நாடு முழுவதுமாக ஹிந்துக்களால் விநாயகர் சதுர்த்தி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட இருக்கும் நிலையில் உத்திரபிரதேசத்தில் தங்கத்திலான விநாயகர் சிலை தயாரிக்கப்பட்டு வருகிறது. சந்தாயூசி என்ற இடத்தில் இந்த தங்கத்திலான விநாயகர் சிலை தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த சிலைக்கு ஸ்வர்ண கணேஷ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சிலையில் 40 முதல் 50 சதவிகிதம் வரை தங்கம் பயன்படுத்தப்படும் என்றும் அத்துடன் பிற உலோகங்கள் பயன்படுத்தி இந்த விநாயகர் சிலை செய்யப்பட்டு வருவதாக சிலை … Read more

ஜார்க்கண்ட் முதல்வரின் எம்எல்ஏ பதவியை பறிக்க பரிந்துரை – ஆட்சி கலைப்பு?

சுரங்க முறைகேடு வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் எம்.எல்.ஏ பதவியை பறிக்குமாறு அம்மாநில ஆளுநருக்கு இந்திய தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் இரு கட்சியை சேர்ந்தவர்களும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். இச்சூழலில், கடந்த ஆண்டு ஜார்க்கண்ட் சுரங்க துறை சார்பில் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு சுரங்க ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதையடுத்து  அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி சுரங்க … Read more

தேர்தல் நேரத்து இலவச வழக்கு | நீதிபதி சந்திரசூட் தலைமையில் 3 நீதிபதி அமர்வுக்கு மாற்றம் – தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு

புதுடெல்லி: தேர்தல் நேரத்து இலவசங்களைத் தடை செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கை விரிவாக விவாதிக்க வேண்டும் என்பதால் நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றுகிறோம் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிக்க தடை விதிக்கக் கோரி பாஜக வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய், உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. … Read more

ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொலை

காஷ்மீர்; ஜம்மு-காஷ்மீரின் உரி பகுதியில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து ஏ.கே.-47 துப்பாக்கிகள், சீனாவின் எம்-16 துப்பாக்கி போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது.