முடிவுக்கு வந்தது அமைச்சரவை இழுபறி! பதவி கிடைக்காமல் பல சிவசேனா எம்எல்ஏக்கள் அதிருப்தி?
மகாராஷ்டிராவில் ஆட்சியமைத்து ஒரு மாதம் கடந்த நிலையில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசில் புதிய அமைச்சர்கள் இன்று பொறுப்பேற்றுள்ளனர். உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியில் பிளவு ஏற்பட்ட நிலையில் அக்கட்சியின் ஏக்நாத் ஷிண்டே, பாஜகவுடன் இணைந்து கடந்த ஜூன் மாதம் 30ஆம் தேதி ஆட்சியமைத்தார். அன்றைய தினம் முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டேவும் பாஜகவைச் சேர்ந்த முன்னாள் முதலமைச்சரான தேவேந்திர பட்னாவிஸ் துணை முதலமைச்சராகவும் பதவியேற்றனர். அமைச்சரவை அமைக்கும் விவகாரத்தில் இரு கட்சிகளிடையே கருத்து வேறுபாடு நீடித்த … Read more