‘ராமர் நீதியின் உருவகமாக செயல்பட்டவர்’.. ராமாயண போட்டியில் அசத்திய இஸ்லாமிய இளைஞர்கள்!

கேரளாவில் நடந்த ராமாயண வினாடி வினா போட்டியில் முஸ்லிம் மாணவர்கள் இருவர் வெற்றி பெற்றனர். கேரளா மாநிலம் மலப்புரத்தில் ராமாயண வினாடி வினா போட்டி நடந்தது. இந்தப் போட்டியில் மாநிலம் முழுதும் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர். இறுதியில் 5 மாணவர்கள் வெற்றி பெற்றனர். இதில் முகமது ஜபீர் மற்றும் முகமது பஷீத் ஆகிய இருவர் மலப்புரம் மாவட்டம் வளஞ்சேரியில் உள்ள கே.கே.எஸ்.எம். கலை மற்றும் அறிவியல் கல்லுாரியை சேர்ந்த மாணவர்கள் ஆவார். இந்த … Read more

எஸ்.எஸ்.எல்.வி.ராக்கெட்டில் ஏவப்பட்ட செயற்கோளை நீண்ட நாட்கள் பயன்படுத்த முடியாது : இஸ்ரோ அறிவிப்பு

பெங்களுரு: இன்று காலை எஸ்.எஸ்.எல்.வி.ராக்கெட்டில் ஏவப்பட்ட செயற்கோளை நீண்ட நாட்கள் பயன்படுத்த முடியாது என இஸ்ரோ அறிவித்துள்ளது.  எஸ்.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் பள்ளி மாணவிகள் உருவாக்கிய செயற்கைக் கோள் உட்பட 2 செயற்கைக் கோள்கள் ஏவப்பட்டன.

உண்மையை உடைத்த எஸ்.பி.. அயோத்தியில் நிலங்களை அபகரித்த புகாரில் சிக்கிய பாஜக எம்எல்ஏ, மேயர்

அயோத்தியா பகுதியில் சட்டவிரோதமாக நிலங்களை அபகரித்த புகாரில் பாஜக எம்எல்ஏ உள்ளிட்ட 40 பேர் கொண்ட பட்டியல் வெளியாகி உள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அயோத்தி ராமஜென்ம பூமியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. அயோத்தியில் ராமர் கோவில் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதியளித்த பின் அந்த இடத்தின் அருகே பல ஏக்கர் நிலங்களை பாஜக எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் மேயர்களின் உறவினர்கள், அரசு உயர் அதிகாரிகளுடன் … Read more

SSLV ராக்கெட்டின் முதல் பயணம் | இரண்டு செயற்கைக்கோள்களும் பயன்படுத்த இயலாது – இஸ்ரோ அறிவிப்பு

ஸ்ரீஹரிகோட்டோ: இஸ்ரோவின் புதிய தயாரிப்பான எஸ்எஸ்எல்வி (SSLV) ராக்கெட் மூலம் ஏவப்பட்ட இரண்டு செயற்கைக்கோள் இஓஎஸ்-02, ஆசாதிசாட் ஆகியவை பயன்படுத்த இயலாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேசுகையில், “எஸ்எஸ்எல்வி மூலம் சிறிய ரக ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த ஏதுவாக வர்த்தக ரீதியில் அதை இஸ்ரோ தயாரித்தது. அதுதான் இன்றைக்கு வேகமாக வளர்ந்து வரும் புதிய தலைமுறை தொழில்நுட்பமும் ஆகும். அந்த வகையில் தயாரிக்கப்பட்ட எஸ்எஸ்எல்வி செலுத்து வாகனம் 2 சிறிய ரக … Read more

செயற்கைக் கோள்களை இனி பயன்படுத்த முடியாது..! – இஸ்ரோ சொல்வது என்ன..?

பூமியை கண்காணிக்கும் இ.ஓ.எஸ்-02 & எஸ்.எஸ்.எல்.வி. டி-1 ராக்கெட் இன்று விண்ணில் செலுத்தப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து, இரண்டு செயற்கைக்கோள்களுடன் காலை 9.18 மணிக்கு ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. இதையடுத்து எஸ்எஸ்எல்வி டி1 ராக்கெட் திட்டம் தோல்வியடைந்ததாக இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அந்த செயற்கைக்கோள்களை இனி பயன்படுத்த முடியாது. சென்சார் செயலிழப்பே தோல்விக்கு காரணம். சென்சார் செயலிழப்பைக் கண்டறிந்து, செயற்கைக் கோள்களை மீட்கும் முயற்சி தோல்வியடைந்தது. குழு அமைக்கப்படடு தோல்வி குறித்து ஆராயப்படும். … Read more

அமெரிக்கா காதலரை மணந்த ஆந்திர பெண்: திருப்பதியில் இந்துமுறைப்படி திருமணம்

திருமலை: அமெரிக்கரை காதலித்து அவரையே ஆந்திர பெண் திருமணம் செய்தார். திருப்பதியில் இந்து முறைப்படி திருமணம் நடந்தது. ஆந்திர மாநிலம், திருப்பதியை சேர்ந்தவர் ஜெயச்சந்திரா. இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களது மகள் ஹர்ஷவி. பி.டெக் முடித்து விட்டு அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். அப்போது, அதே நிறுவனத்தில் பொதுமேலாளராக பணிபுரிந்து வந்த அமெரிக்கரான டாமியன் பிராங்குடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அது காதலாக மாறியது. கடந்த ஒரு ஆண்டாக இருவரும் … Read more

இடுக்கி அணையில் இருந்து வினாடிக்கு 100 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் இடுக்கி அணையில் இருந்து வினாடிக்கு 100 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. காலையில் ஒரு மதகு மட்டும் திறக்கப்பட்டு வினாடிக்கு 50 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றபட்டது. தொடர் மழையால் இடுக்கி அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததை அடுத்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 100 கன அடியாக உயர்த்தப்பட்டது.

’என் மரணத்திற்கு கணவரும், மாமியாரும்தான் காரணம்’.. அமெரிக்காவில் இந்தியப் பெண் தற்கொலை!

மனைவிக்கு ஆண் குழந்தை இல்லாததை காரணம் காட்டி அவரை 8 ஆண்டுகளாக கணவர் அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். கொடுமை தாங்க முடியாமல் அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. உத்தரப் பிரதேசத்தின் பிஜ்னோர் நகரை சேர்ந்த மன்தீப் கவுர் என்ற 30 வயதான பெண்ணுக்கு கடந்த 2015-ம் ஆண்டு ரஞ்சோத்வீர் சிங் சந்து என்பவருடன் திருமணம் நடந்தது. இதன்பின்னர் இந்த தம்பதியினர் அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு சென்றனர். இந்த தம்பதிக்கு 6 மற்றும் … Read more

HIV | ‘‘உடலுறவு கொள்ளவில்லை; ரத்தம்கூட ஏற்றியதில்லை’’ – ஒரு ஊசியால் பறிபோன இருவரின் வாழ்க்கை

வாரணாசி: உடலுறவு கொள்ளாத, ரத்தம் ஏற்றாத உத்தரபிரதேச இளைஞர்கள் இருவருக்கு ஹெச்ஐவி பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. உத்திரபிரதேசத்தின் வாரணாசியைச் சேர்ந்த 20 வயது ஆண் மற்றும் 25 வயது பெண் உட்பட 14 பேர் சமீபத்தில் காய்ச்சல் காரணமாக பண்டிட் தீன்தயாள் உபாத்யாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சலுக்கான சிகிச்சைகள் அளித்த போதிலும் குணமாகவில்லை. வைரஸ், டைபாய்டு, மலேரியாவுக்கான சோதனைகள் நடத்தப்பட்ட போதிலும் அந்த ஆணுக்கும், பெண்ணுக்கும் எதுவும் பலன் தரவில்லை, காய்ச்சலும் குறையவில்லை. இதையடுத்து ஹெச்ஐவி பரிசோதனை செய்யுமாறு … Read more

சுழற்சி முறையில் வெவ்வேறு பயிர்களை சாகுபடி செய்யுமாறு நாட்டின் விவசாயிகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு

டெல்லி: சுழற்சி முறையில் வெவ்வேறு பயிர்களை சாகுபடி செய்யுமாறு நாட்டின் விவசாயிகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். பயிறு வகைகள், எண்ணெய் வித்துக்கள், இதர வேளாண் பொருள் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடைய வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.