ஆம் ஆத்மி எம்எல்ஏக்களிடம் குதிரை பேரமா? எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மியின் முக்கிய தலைவர்கள், மத்திய புலனாய்வு அமைப்புகளின் கீழ் விசாரணைகளை சந்தித்து வருகின்றனர். டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெய்ன் பண மோசடி வழக்கில் கடந்த மே மாதம் 30-ம் தேதி கைது செய்யப்பட்டார்.  இதனைத் தொடர்ந்து, டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா மீது அண்மையில் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கையில் ஊழல் நடைபெற்றதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இதன் … Read more

கேரளாவில் அதிவேகத்தில் வந்த கார் சாலையோரம் நின்றிருந்த இருவர் மீது மோதி பயங்கர விபத்து – பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்..!

கேரள மாநிலம் கண்ணூர் அருகே அதிவேகமாக வந்த கார், சாலையோரம் நின்றிருந்த இருசக்கர வாகன ஓட்டி உட்பட இருவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. கூரன்முக்கு பகுதியில் அதிவேகத்தில் வந்த கார் சாலையில் இருசக்கர வாகன ஓட்டி மீது மோதிவிட்டு, நடந்து சென்ற ஒருவர் மீது மோதி புதரில் கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்த இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், விபத்து குறித்து கண்ணூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். Source link

ஆன்மீகமும், மருத்துவமும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்த நாடாக இந்தியா திகழ்கிறது: ஹரியானாவில் அம்ரிதா மருத்துவமனையை துவக்கி வைத்து பிரதமர் மோடி பேச்சு..!!

சண்டிகர்: ஆன்மீகமும், மருத்துவமும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்த நாடாக இந்தியா திகழ்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஹரியானாவில் பரிதாபாத்தில் அம்ரிதா மருத்துவமனையை பிரதமர் மோடி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஹரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார், துணை முதல்வர் துஷ்யந்த் சௌதாலா உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர். ஹரியானா மக்களுக்கு மிகப்பெரிய அளவில் மருத்துவ வசதியை ஏற்படுத்தி தரும் நோக்கில், 2,500 படுக்கை வசதிகளுடன் சுமார் 6 ஆயிரம் கோடி … Read more

புதுச்சேரி மக்களுக்கு ஜிப்மர் உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்பது உண்மை – முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி மாநில மக்களுக்கு ஜிப்மர் மருத்துவமனை உரிய சிகிச்சையளிக்கவில்லை என்ற புகார் உண்மை என பேரவையில் முதல்வர் ரங்கசாமி வருத்தம் தெரிவித்தார். புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் நான்காவது அமர்வு இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் உறுப்பினர்களின் கேள்வி, பூஜ்ய நேரத்தில் உறுப்பினர்கள் பேச்சு மற்றும் கடந்த 22-ந்தேதி முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்த பட்ஜெட்டிற்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. அப்போது உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்த முதல்வர் ரங்கசாமி புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் … Read more

துர்கா பூஜை குழுக்களுக்கு ரூ.60 ஆயிரம் நிதி – மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை குழுக்களுக்கான நிதியுதவி ரூ.60,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதோடு மின் கட்டணத்தில் 60% சலுகை வழங்கப்படும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் ஆண்டு தோறும் துர்கா பூஜை மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக அந்த மாநில தலைநகர் கொல்கத்தா மற்றும் முக்கியநகரங்களில் பிரம்மாண்ட பந்தல்கள் அமைக்கப்பட்டு துர்கா சிலைக்கு பூஜை, வழிபாடுகள் நடத்தப்படும். 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவை நடத்துவதற்காக பல்வேறு துர்காபூஜை குழுக்கள் செயல்படு … Read more

டுவிட்டரில் டிரெண்டாகும் #ModiGoBack ஹேஷ்டேக்…! – மீண்டும் விவசாயிகள் போராட்டமா..?

பஞ்சாபில் புற்று நோய் மருத்துவமனையை திறந்து வைப்பதற்காக இன்று பஞ்சாப் வந்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த மருத்துவமனையில் சுமார் 2,600 நோயாளிகள் சிகிச்சை பெரும் வகையில் இந்த மருத்துவமனை அமைந்துள்ளது. இது சுமார் ரூ.660 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அதிநவீன மருத்துவமனையாகும். இந்த மருத்துவமனையில் ஜம்மு காஷ்மீர், ஹரியானா, ஹிமாச்சல் பிரதேசம், உத்தர்காண்ட், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் இங்கு தங்கி சிகிச்சை பெரும் வகையில் இந்த மருத்துவமனை பல்வேறு வசதிகளுடன் இது கட்டமைக்கப்பட்டுள்ளது. … Read more

ரூ.6000 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள அம்ரிதா மருத்துவமனை திறப்பு!

ஆன்மீகமும் மருத்துவமும் ஒன்றோடு ஒன்று இணைந்த நாடாக இந்தியா திகழ்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஹாரியானா மாநிலம் பரிதாபாத்தில் மாதா அமிர்தானந்த மயி மடத்தின் சார்பில் 2,500 படுக்கை வசதிகளுடன் 6000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அம்ரிதா மருத்துவமனையை பிரதமர் நரேந்திரமோடி திறந்து வைத்தார். அப்போது பேசிய பிரதமர் கல்வி மற்றும் சுகாதாரத்தில் மிகப்பெரும் மாற்றத்தை கொண்டு வருவதற்கான முக்கிய நோக்கத்தை நோக்கி நாடு நடைபோடுவதாக தெரிவித்தார். ஆன்மீகமும் மருத்துவமும் ஒன்றோடு ஒன்று இணைந்த … Read more

செல்போனில் அமைச்சருடன் இன்ஸ்பெக்டர் வாக்குவாதம்; இடமாற்றம் செய்து உத்தரவு.! கேரளாவில் பரபரப்பு

திருவனந்தபுரம்: தனது தொகுதிக்கு உட்பட்ட ஒரு பெண்ணின் குடும்பத் தகராறு தொடர்பான புகாரில் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி போன் செய்த கேரள உணவுத்துறை அமைச்சர் அனிலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார். கேரள உணவுத்துறை அமைச்சராக இருப்பவர் அனில். கடந்த சில தினங்களுக்கு முன்பு நெடுமங்காடு தொகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண், தன்னையும், தனது குழந்தையையும் 2வது கணவர் துன்புறுத்துவதாக கூறி திருவனந்தபுரம் வட்டப்பாறை போலீசில் புகார் செய்தார். இது … Read more

கேரளா: பரோட்டா சாப்பிட்ட இளைஞர் உயிரிழப்பு; போலீஸ் விசாரணை

பரோட்டா சாப்பிட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் பரோட்டா சாப்பிட கடைக்கு சென்ற பாலாஜி என்ற இளைஞர் தொண்டையில் பரோட்டா சிக்கி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் பரோட்டா சாப்பிட்டதால் தான் அவர் உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் பிரச்சனைகள் உள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திலுள்ள பூப்பாறை சூண்டலைச் சேர்ந்தவர் பாலாஜி. இவர் கட்டப்பனா மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள … Read more

அலோபதி மருத்துவர்களை இழிவுபடுத்தக் கூடாது – பாபா ராம்தேவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: அலோபதி மருத்துவர்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவிக்கக் கூடாது என யோகா குரு பாபா ராம்தேவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யோகா குரு பாபா ராம்தேவ் பதஞ்சலி ஆயுர்வேத் என்ற நுகர்பொருள் நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஆயுர்வேத மருத்துவ முறையை ஊக்குவிக்கும் அவர், நவீன மருத்துவ முறை மற்றும் அலோபதி மருத்துவர்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்து வருகிறார். அத்துடன் அவருடைய நிறுவன விளம்பரங்களிலும் இதுபோன்ற கருத்துகள் இடம்பெறுகின்றன. குறிப்பாக கரோனா தடுப்பூசி குறித்தும் ராம்தேவ் … Read more