முன்னாள் கிரிக்கெட் வீரரான சேவாக் நடத்தும் பள்ளியின் குழந்தைக்கு பாலியல் தொல்லை: அரியானா போலீசார் விசாரணை

ஜஜ்ஜர்: முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் நடத்தும் பள்ளியில் படிக்கும் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், அரியானா மாநிலம் ஜஜ்ஜரில் சர்வதேசப் பள்ளியை நடத்தி வருகிறார். இவர் பள்ளியின் நிறுவனராகவும், அவரது மனைவி ஆர்த்தி தலைவராகவும் உள்ளார். இந்தப் பள்ளியின் விடுதிகளில் ஏராளமான குழந்தைகள் தங்கிப்படித்து வருகின்றனர். இந்நிலையில் மேற்கண்ட பள்ளியில் படித்து வரும் 3ம் வகுப்பு குழந்தையின் தந்தையும், உத்தரபிரதேச … Read more

பெண் தோழியுடன் காரிலிருந்த பாஜக செயலாளர் – சரமாரியாக செருப்பால் அடித்து தாக்கிய மனைவி

தனது பெண் தோழியுடன் காரில் இருந்த பாஜக தலைவரை கையும் களவுமாக பிடித்த அவரது மனைவி சரமாரியாக தாக்கிய வீடியோ இணையங்களில் பரவி வைரலாகி வருகிறது. மோஹித் சோங்கர் ஒரு பாஜக தலைவர். இவர் புந்தேல்கண்ட் பகுதியின் பாஜக செயலாளராக செயல்பட்டு வருகிறார். இவருடைய மனைவி, மாமியார் மற்றும் உறவினர்கள் இவரை நடுரோட்டில் வைத்து செருப்பால் அடித்து சரமாரியாக தாக்கியதாக ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மோஹித்துடன் இருந்த அவரது பெண் தோழியை கணவரான தொழிலதிபரும், மோஹித்தின் … Read more

நீதிமன்றங்களில் நிலுவை வழக்குகள் அதிகரிப்பு – பிரச்சினைகளுக்கு சமரச தீர்வு அவசியம் என நீதிபதி சந்திரசூட் வலியுறுத்தல்

புனே: நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் அதிகரித்து வருவதால், பிரச்சினைகளுக்கு சமரச தீர்வு காண்பது அவசியம் என உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வலியுறுத்தி உள்ளார். மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் 1923-ம் ஆண்டு இந்திய சட்ட சங்கம் (ஐஎல்எஸ்) தொடங்கப்பட்டது. இதன் சார்பில் சட்டக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த சங்கம் நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்நிலையில், ஐஎல்எஸ் நடுவர் மன்றம் மற்றும் சமரச மையத்தை உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் நேற்று முன்தினம் … Read more

பாஜகவின் ஒற்றை இந்தியா: களங்கமடையும் மாநில போலீசார்!

மும்பை போலீஸ் கமிஷனராகவும், மகாராஷ்டிரா டிஜிபியாகவும் இருந்த சிவானந்தன் என்பவர் சமீபத்தில் ஒரு முன்னணி ஆங்கில நாளிதழில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில், அனைத்து முக்கியமான குற்றவியல் விசாரணைகளையும் மத்திய அரசின் நிறுவனங்களான அமலாகத்துறை, சிபிஐ, தேசிய போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு, தேசிய புலனாய்வு முகமை ஆகியவற்றிடம் ஒப்படைக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் கொள்கை மாநில காவல்துறைகளை களங்கமடைய செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஒரே அதிகார மையம் வேண்டும் என்பது இந்து தீவிர வலதுசாரிகளின் கனவாக … Read more

பசுவை கொன்ற 5 பேரை கொன்றோம்: பாஜக மாஜி எம்எல்ஏவின் வீடியோ வைரல்

அல்வார்: பசுவை கொன்ற ஐந்து பேரை நாங்கள் ஏற்கனவே கொன்றுவிட்டோம் என்று பாஜக முன்னாள் எம்எல்ஏ ஒருவர் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய வீடியோ வைரலாகி உள்ளது. ராஜஸ்தான் மாநில முன்னாள் பாஜக எம்எல்ஏ கியான் தேவ் அஹுஜா, தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசுகையில், ‘பசுவை கொல்பவர்களை  ஈவு இரக்கமின்றி கொல்லுங்கள்; அவ்வாறு பசுவை கொன்ற ஐந்து பேரை நாங்கள் ஏற்கனவே கொன்றுவிட்டோம். அவர்களை கொல்வதற்கு உங்களுக்கு முழு சுதந்திரம் தருகிறேன். உங்களை நிரபராதி என்று நிரூபித்து … Read more

வைஷ்ணவ தேவி கோயில் யாத்திரை தற்காலிக நிறுத்தம்

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் உள்ள வைஷ்ணவ தேவி கோயில் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி அன்சுல் கார்க் கூறியது: கனமழை காரணமாக கத்ராவில் இருந்து வைஷ்ணவ தேவி கோயிலுக்கு பக்தர்கள் மேல்நோக்கி வருவது நிறுத்தப்பட்டுள்ளது. அதேசமயம், பவான் பகுதியில் சன்ஜிசத் நோக்கி கீழே வரும் பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை நள்ளிரவு முழுவதும் தொடர்ந்து மழை பெய்ததால் கோயில் வளாகத்தில் ஆயிரக்கணக்கானோர் தங்கியுள்ளனர். அதன் விளைவாக, பேட்டரி வாகன பாதையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கோயில் வாரியத்தின் தலைமை … Read more

பி.கே போடும் தூள் ப்ளான்; தூக்கம் இழந்து தவிக்கும் பாஜக!

பீகாரில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வந்த நிலையில் முதலமைச்சர் நிதீஷ்குமாருக்கும், பாஜக மேலிடத்துக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. இந்நிலையில் அதிருப்தி எம்எல்ஏக்களை உருவாக்கி நிதீஷ் குமாரின் ஐக்கிய தனதா தளம் கட்சியை உடைக்க பாஜக ரகசிய ப்ளானில் இறங்கியது. இதை அறிந்து டென்ஷன் ஆன நிதீஷ் குமார் பாஜகவுடன் கூட்டணியை முறிப்பதாக அறிவித்தார். அப்போது ஐக்கிய ஜனதா தளத்தை உடைக்கும் முயற்சியில் பாஜக இறங்கியதால் தான் உறவை முறிப்பதற்கான காரணம் … Read more

2024-ல் மோடிக்கு மக்கள் லுக் அவுட் நோட்டீஸ் கொடுப்பார்கள்: டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா பதில்

புதுடெல்லி: 2024ல் மோடிக்கு மக்கள் லுக் அவுட் நோட்டீஸ் கொடுப்பார்கள் என்று டெல்லி மாநில துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். டெல்லியில் மதுபானக் கடைகள் ஒதுக்கியதில் முறைகேடுகள் மற்றும் கொள்கைகள் குறித்து சிபிஐ டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா மற்றும் இந்த முறைகேட்டில் தொடர்புடையதாக கூறப்படும் 14 நபர்களிடம் விசாரணை மேற்கொண்டது. டெல்லியில் இருந்து தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம் வரை இந்த விசாரணை நீண்டுள்ளது. விசாரணைக்குப் பின்னர் அமலாக்கத்துறையும் மணீஷ் சிசோடியாவிடம் விசாரணை மேற்கொள்ளும் … Read more

இன்ஸ்டண்ட் லோன் ஆப்கள் மூலம் கடன் – சுமார் ரூ.500 கோடிக்கு மேல் பண மோசடி.!

ரூ.500 கோடிக்கு மேல் செல்போன் கடன் ஆப்கள் மூலம் கடனுதவி மோசடி மற்றும் மிரட்டி பணம் பறித்த கும்பல் பிடிக்கப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் ரூபாய் 500 கோடிக்கு மேல் உடனடி கடனுதவி செய்வதாக மோசடி செய்தும், மிரட்டி பணம் பறித்தும் வந்த கும்பலை முறியடித்துள்ளது டெல்லி காவல்துறை. இதன் பேரில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 22 பேரை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. செல்போன் ஆப் கடன் செயலிகள் மூலம் உடனடி … Read more

'மோடியின் கவனம் சிபிஐ ரெய்டில், வளர்ச்சியை சிந்திக்கிறார் கேஜ்ரிவால்' – சிசோடியா

புதுடெல்லி: மோடி தனது அரசியல் போட்டியாளர்களுக்கு எதிராக சிபிஐ அமைப்பைப் பயன்படுத்தும் நேரத்தில் அரவிந்த் கேஜ்ரிவால் பள்ளிகளில் கவனம் செலுத்துகிறார் என டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா செய்தியாளர்களிடம் பேசும்போது, “ஆம் ஆத்மி கட்சியின் கல்வி மற்றும் சுகாதாரத்துறை உலகளவில் விவாதிக்கப்படுகிறது. இதனாலேயே நான் சிபிஐ-யால் குறி வைக்கப்படுகிறேன். முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் புகழ் அதிகரித்து வருவதைக் கண்டு மத்தியில் ஆளும் பாஜக அரசு … Read more