பழ வியாபாரியின் வேடிக்கையான வியாபார உத்தி.. விழுந்து விழுந்து சிரிக்கும் இணையவாசிகள்!

சந்தைகளில், சாலைகளில் காய்கறி பழங்கள் விற்கும் வியாபாரிகள், விதவிதமாக பேசி, பாடல்களாக பாடி மக்களை கவர்ந்து வியாபாரம் செய்வது வழக்கம். அந்த வகையில் பழ வியாபாரி ஒருவர் தன் கடையில் இருக்கும் பழங்களை விற்க வித்தியாசமான, வேடிக்கையான செயல்களை செய்த வீடியோ ரெடிட் தளத்தில் பகிரப்பட்டு பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. அந்த வீடியோவில், அடையாளம் தெரியாத பழ வியாபாரி ஒருவர், தள்ளுவண்டியில் பழங்களை வைத்து வேடிக்கையான முறையில் விற்பதைக் காணலாம். ஒவ்வொரு முறையும் பழங்களை வெட்டி காண்பிக்கும் … Read more

ஸ்வப்னாவுக்கு மிரட்டல்… அமலாக்கத்துறை சம்மன்: யார் இந்த சாஜ் கிரண்!

கேரளாவில் தங்கக் கடத்தல் விவகாரம் மீண்டும் பூதாகரமாகியுள்ளது. ஜாமீனில் வெளிவந்துள்ள ஸ்வப்னா சுரேஷ், தங்கம் கடத்தலில் கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். வாக்குமூலத்தை அடுத்து ஆடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். இதனால் மாநிலம் முழுவதும் கடந்த சில நாட்களாக முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். முதல்வர் செல்லும் இடங்களில் சாலை மறியல் செய்தும், கருப்புக்கொடி … Read more

விவோ செல்போன் நிறுவனத்துக்கு சொந்தமான 44 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை..!

சீனாவின் முன்னணி செல்போன் தயாரிப்பு நிறுவனமான விவோ மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு சொந்தமான 44 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சீனாவை சேர்ந்த நிறுவனங்களின் பூர்வீகத்தைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள், உத்தரபிரதேசம், பஞ்சாப், பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இன்று காலை சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, ஜியோமி நிறுவனமும் அமலாக்கத்துறையின் கண்காணிப்பில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  Source link

அக்னிபாத் திட்டத்தின் கீழ் கடற்படை பணிக்கு 20% பெண்கள் முதல் தொகுப்பில் சேர்க்கப்படுவார்கள்; இந்திய கடற்படை

டெல்லி: அக்னிபாத் திட்டத்தின் கீழ் கடற்படை பணிக்கு 20% பெண்கள் முதல் தொகுப்பில் சேர்க்கப்படுவார்கள் என இந்திய கடற்படை அறிவித்துள்ளது. பணிக்கு தேர்வாகும் பெண்கள் பல இடங்களில் கடற்படை தளங்களுக்கு பயிற்சிக்கு அனுப்பபடுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

`இந்துக்கடவுள் உள்ள நியூஸ்பேப்பரில் அசைவம் மடித்து கொடுக்கிறார்’- கைது செய்த உ.பி போலீஸ்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் சாம்பல் என்ற பகுதியில் ஹோட்டல் நடத்திவந்த ஒருவர், `வேண்டுமென்றே இந்துக் கடவுள்கள் படம் பதிந்த நியூஸ்பேப்பரில் சிக்கன் வைத்து மடித்துக்கொடுத்தார்’ என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதைத்தொடர்ந்து  அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை உ.பி.யை சேர்ந்த தலிப் ஹூசைன் என்பவர், தனது கறிக்கடையில் கறிகளை கடவுள் படம் இருக்கும் நாளிதழில் வைத்து மடித்து விற்பதாக இணையம் வழியாக சிலர் பதிந்திருந்தனர். அவர் வேண்டுமென்றே இந்துக்களின் மனதை புண்படுத்துவதாக கூறி அவரது புகைப்படத்தையும், அவருடைய கடையிலிருந்த புகைப்படத்தையும் சிலர் … Read more

பழங்குடியினரின் உற்பத்தி பொருட்களை சர்வதேச சந்தையில் விற்பனை செய்ய நடவடிக்கை – பிரதமர் மோடி உறுதி

பீமவரம்: ஆந்திர மாநிலம் பீமவரம் அருகே உள்ள பேத அமிரம் பகுதியில், பழங்குடி இனத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜுவின் 125-வது ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. அப்போது, ரூ.3 கோடியில் 30 அடி உயரத்தில் உருவாக்கப்பட்ட அல்லூரி சீதாராம ராஜுவின் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதன் பின்னர் அவர், தெலுங்கில் தனது உரையை தொடங்கினார். இதனை கேட்டு மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: … Read more

'பெட்ரோல் விலை உயர்வுக்கு தாஜ்மகால் தான் காரணம்' – அசாதுதீன் ஒவைசி

ஷாஜகான் தாஜ்மகாலைக் கட்டியிருக்காவிட்டால் இன்று பெட்ரோல் லிட்டர் 40 ரூபாய்க்கு விற்பனையாகி இருக்கும் என ஹைதராபாத் எம்.பி. அசாதுதீன் ஒவைசி மத்திய அரசைக் கேலி செய்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சித் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி பேசியதாவது: நாட்டின் அனைத்து பிரச்னைகளுக்கும் முகலாயர்கள் மற்றும் முஸ்லிம்களை மத்திய அரசு குற்றம் சாட்டுகிறது. நாட்டில் இளைஞர்கள் வேலையின்றி உள்ளனர். பணவீக்கம் அதிகரித்து வருகிறது. டீசல் லிட்டருக்கு 102 ரூபாய்க்கு … Read more

படிகட்டில் தவறி விழுந்து காயம் லாலு ஐசியுவில் அனுமதி

பாட்னா: ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் படிக்கட்டில் தவறி விழுந்ததில் காயமடைந்ததை அடுத்து நேற்று அதிகாலை ஐசியுவில் அனுமதிக்கப்பட்டார். பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ், மாட்டுத்தீவன முறைகேடு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், சிறுநீரக கோளாறு பிரச்னையால் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்காக அவர் வெளிநாடு செல்ல வேண்டும் என்பதால் கடந்த மாதம் ஜாமீனில் … Read more

மத்திய பிரதேசத்திலும் பீச் இருக்கு? தெரியுமா உங்களுக்கு? இந்த வீடியோவை பாருங்க!

மத்திய பிரதேச மாநிலத்தில் பஞ்சாயத்து மற்றும் நகர்ப்புற அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனுப்பூர் பகுதியில் உள்ள மக்கள் விநோதமான போராட்டம் ஒன்றை கையிலெடுத்துள்ளது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. அதன்படிம் அனுப்பூர் மற்றும் பிஜுரி மனேந்திரகர் பகுதியை இணைக்கும் சாலை முழுவதும் குண்டும் குழியுமாக உள்ளதை, வாக்கு கேட்டு வரும் அரசியல் கட்சியினருக்கு உணர்த்தும் வகையில் சாலையில் இறங்கி போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். சாலையில் போராடுவது வழக்கமானதுதான் என கேள்வி எழலாம். … Read more

'மத உணர்வுகளைப் புண்படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை' – காளி போஸ்டர் சர்ச்சையில் நுஷ்ரத் ஜஹான் கருத்து

மத உணர்வுகளைப் புண்படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை என்று ‘காளி’ போஸ்டர் சர்ச்சை குறித்து நடிகையும் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யுமான நுஷ்ரத் ஜஹான் கூறியுள்ளார். காளி போஸ்டர் சர்ச்சை: நேற்று, இயக்குநர் லீனா மணிமேகலையின் ‘காளி’ ஆவணப்பட போஸ்டர் வெளியானது. அதில் காளியின் கையில் ஒரு சிகரெட் இருப்பது போல் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. மேலும் காளிதேவியின் கையில் திரிசூலம், அரிவாள் ஆகிய ஆயுதங்களுடன் LGBTQ+ சமூகத்தினரின் (தன்பாலின உறவாளர்கள்) பெருமித அடையாளக் கொடியும் இருக்கிறது. இந்தப் படம் இணையத்தில் வைரலானது. … Read more