இளங்கலை நீட் 2022-ல் வட இந்தியர்கள் ஆள்மாறாட்டம்: சிபிஐ விசாரணையில் அதிர்ச்சி தகவல்

நேற்று நடந்த நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்ததை கண்டுபிடித்த சிபிஐ இதுதொடர்பாக 8 பேர் அதிரடியாக கைது செய்துள்ளது. நேற்றைய தினம் நாடு முழுவதும் மருத்துவக் கல்வியில் சேர்வதற்காக அகில இந்திய மருத்துவ கல்விக்கான நுழைவுத் தேர்வு நடைபெற்றது. இதில் 18.72 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் டெல்லி மற்றும் ஹரியானாவில் ஒரு சில தேர்வு மையங்களில் ஆள்மாறாட்டம் நடந்துள்ளதை சிபிஐ கண்டுபிடித்துள்ளது. இது தொடர்பாக சிபிஐ முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து குற்றவாளிகளை … Read more

9 மாநிலத்தில் இந்துக்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து கேட்டு வழக்கு – ஆதாரங்களை சமர்ப்பிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: இந்தியாவில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தவர், பார்சிக்கள், சீக்கியர்கள், ஜெயின் சமூம் என 6 மதத்தை சேர்ந்தவர்கள் மதசிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்து மத தலைவர் தேவகி நந்தன் தாக்குர் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது: பஞ்சாப், காஷ்மீர், மிசோரம், நாகாலாந்து, மேகாலயா, மணிப்பூர், கேரளா, அருணாச்சல் பிரதேசம், லட்சத்தீவுகள் ஆகிய 9 மாநிலங்களில் இந்துக்கள் குறைந்த அளவில் உள்ளனர். அவர்களுக்கு அங்கே சிறுபான்மையினர் என்ற அந்தஸ்து கிடைப்பதில்லை. கல்வி … Read more

டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்

டெல்லி; பணவீக்கம், விலைவாசி உயர்வை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.  எதிர்க்கட்சிகளின் ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கலந்து கொண்டுள்ளார்.

காதி – கிராம தொழில் வாரிய ஆணையத்தின் சார்பில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள்!

காதி மற்றும் கிராம தொழில் வாரிய ஆணையத்தின் சார்பில் ஜம்மு காஷ்மீரில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டிருப்பதாக அந்த ஆணையத்தின் மாநில (ஜம்மு காஷ்மீர்) துணைத்தலைவர் ஹினா ஷாஃபி தெரிவித்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளில், காஷ்மீரில் புதிதாக சுமார் 35,184 காதி நிலையங்கள் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அந்நிலையங்களுக்காக ரூ.748 கோடி மானியம் கிடைத்திருப்பதாகவும், அதன்மூலம் 3 லட்ச வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவர் பேசுகையில், “உருவாக்கப்பட்ட நிலையங்கள் அனைத்திலும், பெண்களுக்கு வேலைவாய்ப்பிலும் பிற முக்கிய … Read more

இலங்கை நெருக்கடி | அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்

புதுடெல்லி: இலங்கை கடந்த 70 ஆண்டு களில் இல்லாத அளவுக்கு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி யுள்ளது. இலங்கையில் அந்நிய செலாவணிக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதேபோல் உணவுப்பொருட்கள் மற்றும் எரிபொருள்களின் விலைவும் கடுமையாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி குறித்து டெல்லியில் இன்று அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தின் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளின் கோரிக்கையை ஏற்று இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் … Read more

பொன்னனி கடற்கரையோர பகுதிகளில் கடும் கடல் சீற்றம்.. பல வீடுகள் தரைமட்டம் – பல அடி உயரத்துக்கு எழும் ராட்சத அலைகள்..!

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் கடுமையான கடல் சீற்றம் காரணமாக பல வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகியுள்ளன. ponnani கடற்கரையோர பகுதிகளில் தற்போது கடல் அலைகள் கடும் ஆக்ரோசத்துடன் கரையை நோக்கி சீறி வருகின்றன. இதனால் கரையில் உள்ள வீடுகளில் கடல்நீர் புகுந்துள்ளது. மேலும் வீடுகள் இடிந்தும் தென்னை மரங்கள் வேரொடு பெயர்ந்தும் கீழே விழுந்தும் காணப்படுகின்றன. கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் அனைவரும் உரிய பாதுகாப்புடன் இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Source … Read more

ஜிஎஸ்டியில் பெட்ரோல் கொண்டு வரப்படுமா?

நாடாளுமன்றத்தில் நேற்று எம்பிக்கள் கேட்ட கேள்விகள் மற்றும் ஒன்றிய அமைச்சர்கள் அளித்த பதில்களில் சில: மக்களவையில் ஒன்றிய வனத்துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், ‘கடந்த 2021-22ம் ஆண்டில், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, அருணாச்சல், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட 16 மாநிலங்களில் 532 பேர் காட்டு யானை தாக்கி உயிரிழந்து உள்ளனர்.  அதிகபட்சமாக ஒடிசா மாநிலத்தில் மட்டும் 112 பேர் காட்டு யானை தாக்கி உயிரிழந்த உள்ளனர்’ என கூறி உள்ளார். … Read more

கரோனாவால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு உடனடி நிதி – மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நேரத்தை வீணடிக்காமல் உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இழப்பீடு கிடைக்காதவர்கள் மற்றும் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்கள் தங்கள் புகார்களை குறைதீர் குழுவிடம் தெரிவிக்கலாம் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது. இதுபோன்ற புகார்களுக்கு 4 வாரங்களுக்குள் குறைதீர் குழு தீர்வு காண வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. நாட்டில் … Read more

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய தங்கள் தரப்பு மருத்துவரையும் நியமிக்க வேண்டும் :உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

டெல்லி  : கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய தங்கள் தரப்பு மருத்துவரையும் நியமிக்க வேண்டும் என்று மாணவியின் தந்தை ராமலிங்கம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளார். மனுவை இன்றே அவசர வழக்காக விசாரிக்க கோரி முறையிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டு சதியால் கோதாவரியில் வெள்ளப்பெருக்கு – முதல்வர் சந்திரசேகர ராவ் கருத்துக்கு காங்கிரஸ் கண்டனம்

ஹைதராபாத்: கோதாவரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு செயற்கை மழை மூலம் வெளிநாட்டினரின் சதியாக இருக்கலாம் என தெலங்கானா மாநில முதல்வர் கே. சந்திரசேகர ராவ் கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு பாஜக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன. தெலங்கானா மாநிலத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பியுள்ளன. பல அணைகள் நிரம்பி, அதன் கொள்ளளவை எட்டியதால், மதகுகள் திறக்கப்பட்டன. இதனால் தாழ்வான பகுதிகளில் … Read more