அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள சிவசேனா எம்.பி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் மீது, பண மோசடி வழக்கில் பெண் சாட்சிக்கு கொலை மிரட்டல் விடுத்த புகாரில், 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. பத்ரா சால் மறுசீரமைப்பு பண மோசடி வழக்கில் சாட்சியாக இணைக்கப்பட்டுள்ள ஸ்வப்னா பட்கரை, சஞ்சய் ராவத் மிரட்டுவதாக கூறப்படும் ஆடியோ வைரலான நிலையில், அவர் அளித்த புகாரின் பேரில், குற்றவியல் மிரட்டல், பெண்களை அவமதித்தல் மற்றும் உள்நோக்கத்துடன் அமைதியை சீர்குலைக்கும் வகையில் அவமதித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் … Read more

குரங்கம்மை பரவல் குறித்து ஒன்றிய அரசுக்கு வழிகாட்ட குழு அமைப்பு: மத்திய சுகாதார செயலர் பங்கேற்பு

டெல்லி: குரங்கம்மை பரவல் உள்ளிட்டவை குறித்து ஒன்றிய அரசுக்கு வழிகாட்ட ஒரு குழு உருவாக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர். மத்திய சுகாதார செயலர் ராஜேஷ் பூஷன், கூடுதல் செயலர் உள்ளிட்டோர் பங்கேற்க கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால், பார்மா மற்றும் பயோடெக் செயலர் உள்ளிட்டோர் குழுவில் கலந்து கொண்டனர்.

குஜராத்தில் பரவும் லம்பி ஸ்கின் வைரஸ்: 5000-க்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழப்பு

குஜராத் மாநிலத்தில் கால்நடைகளைத் தாக்கும் தோல் கழலை நோய் மிக வேகமாக பரவி வருகிறது. இதுவரை அங்கு 5000க்கும் மேற்பட்ட இறந்துள்ளன. குறிப்பாக குஜராத்தின் கச் மாவட்டத்தில் பெருமளவில் மாடுகள் உயிரிழந்துள்ளனர். புஜ் பகுதியில் திறந்த வெளியில் ஆயிரக்கணக்கான இறந்த மாடுகளின் சடலங்கள் குவிந்து கிடக்கின்றன. ராஜ்கோட், ஜாம்நகர் பகுதிகளிலும் கால்நடைகள் இறந்து வருகின்றன. கச், புஜ், ராஜ்கோட், ஜாம்நகர் பகுதிகளில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் இறந்துபோன மாடுகளின் சடலங்கள் பொது இடங்களில் … Read more

மலையில் ஏற்பட்ட நிலச்சரிவால் கும்பாவுருட்டி அருவியில் வெள்ளம் பெருக்கு : மதுரையைச் சேர்ந்த குமரன் என்பவர் வெள்ளத்தில் சிக்கி பலி….

திருவனந்தபுரம் : கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கும்பாவுருட்டி அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி மதுரையைச் சேர்ந்த சுற்றுல்லா பயணி ஒருவர் மரணமடைந்துள்ளார். கொல்லம் அடுத்த அச்சன் கோயிலில் புகழ் பெற்ற கும்பாவுருட்டி அருவியில் கொட்டும் தண்ணீரை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதியளித்ததை தொடர்ந்து சுமார் 30 சுற்றுல்லா பயணிகள் குளித்து கொண்டிருந்தன. அப்போது அருவியில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. கும்பாவுருட்டி அருவியில் ஏற்பட்ட … Read more

வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை குறைத்துள்ள எண்ணெய் நிறுவனங்கள்!

வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை 36 ரூபாய் 50 பைசா குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. அதன்படி இன்று முதல், சென்னையில் விற்பனையாகும் 19 கிலோகிராம் எடையிலான வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை இரண்டாயிரத்து 177 ரூபாய் 50 பைசாவிலிருந்து, இரண்டாயிரத்து 141 ரூபாயாக குறைந்துள்ளது. Source link

அதிவேகமாக பரவும் கொடிய நோய்!: குஜராத்தில் தோல் கழலை எனப்படும் வைரஸ் தாக்கி 5,000 கால்நடைகள் உயிரிழப்பு..!!

காந்திநகர்: குஜராத்தில் தோல் கழலை எனப்படும் வைரஸ் நோய் தாக்கி 5 ஆயிரத்திற்கும் அதிகமான கால்நடைகள் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் 17 மாவட்டங்களில் உள்ள வளர்ப்பு பிராணிகள் தோல் கழலை எனப்படும் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. சூரத், ஆரவல்லி, ராஜ்கோட் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த நோய் தாக்கி மாடுகள், ஆடுகள் என 5 ஆயிரத்திற்கும் அதிகமான கால்நடைகள் இறந்திருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து தடுப்பு நடவடிக்கைகளை குஜராத் அரசு முடுக்கி விட்டுள்ளது. பாதிக்கப்பட்ட கால்நடைகளை … Read more

குரங்கு அம்மைக்கு இந்தியாவில் முதல் இறப்பு – விசாரணைக்கு உத்தரவு

கேரளாவில் குரங்கு அம்மை அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் இறந்தது குறித்து விசாரணை நடத்தி வருவதாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் 75 நாடுகளில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்புஏற்பட்டுள்ளது. குரங்கு அம்மை நோய்க்கு இதுவரை கேரளாவில் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருமே வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்குத் திரும்பியவர்கள்தான். இந்நிலையில் கேரளாவில் குரங்கு அம்மை நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நபர் நேற்று உயிரிழந்தார். ஐக்கிய … Read more

பயங்கரவாத வேட்டையில் குண்டு பாய்ந்து உயிரிழந்த ராணுவ மோப்ப நாய்க்கு இறுதி அஞ்சலி..!

காஷ்மீரில் ராணுவத்தினருக்கும்-பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியான ராணுவ மோப்ப நாய்க்கு வீரர்கள் மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர். பாராமுல்லா மாவட்டத்தில் வானிகாம் பகுதியில், பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க, பஜாஜ் மற்றும் ஆக்சல் என்ற 2 ராணுவ நாய்கள் பாடி கேமராக்கள் அணிந்து பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த வீட்டிற்குள் அனுப்பப்பட்டன. பாதுகாப்புப் படையினருக்கும்-பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த கடும் துப்பாக்கி சண்டையில், மறைந்திருந்த பயங்கரவாதிகள் ஆக்சல் என்ற மோப்ப நாயை நோக்கி சுட்டதில் படுகாயமடைந்து … Read more

அழுக்கு மெத்தையில் துணைவேந்தரை படுக்க வைத்ததால் சர்ச்சை : பஞ்சாப் சுகாதார அமைச்சரை நீக்க இந்திய மருத்துவர் சங்கம் வலியுறுத்தல்!!

சண்டிகர்: நோயாளிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் அறைகளில் இருந்த அழுக்கு மெத்தையில் துணை வேந்தரை படுக்க வைத்த விவகாரத்தில் பஞ்சாப் சுகாதாரத்துறை அமைச்சரை நீக்க இந்திய மருத்துவ சங்கம் வலியுறுத்தி உள்ளது. பஞ்சாபில் ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. 2 தினங்களுக்கு முன்பு பரித்கோட்டில் உள்ள குரு கோவிந்த் சிங் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சுகாதார துறை அமைச்சர் ஜூரமஜ்ரா ஆய்வு மேற்கொண்டார். அப்போது, நோயாளிகளுக்காக படுக்கைகள் மிகவும் அழுக்காக இருந்ததை கண்டு கோபமடைந்த அவர், … Read more

காஷ்மீரில் குறுகிய காலத்தில் 170 அடி பாலம் அமைத்து பக்தர்களுக்கு உதவிய ராணுவம்!

காஷ்மீரில் குறுகிய காலத்தில் 170 அடி பாலம் அமைத்து பக்தர்களுக்கு ராணுவம் உதவியுள்ளது. கிஸ்த்வார் மாவட்டத்தில் மச்சயில் மாதா இமயமலை கோயிலில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு புனித யாத்திரை இன்று தொடங்குகிறது. இந்த கோயிலுக்கு செல்லும் வழியில் கட்டப்பட்டிருந்த ஆற்றுப்பாலம் அண்மையில் பெய்த மழையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், ராஷ்ட்ரீய ரைபிள் படை என்ஜினீயர் குழுவுடன் இணைந்து ராணுவம் மேற்கொண்ட பணிகளால் பாலத்தின் கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. Source link