ஆணுடன் வாழ விருப்பமில்லை… தன்னை தானே திருமணம் செய்து கொண்ட நடிகை

பெங்களூரு: ஆணுடன் வாழ விருப்பமில்லை என்பதால் நடிகை கனிஷ்கா சோனி தன்னைத் தானே திருமணம் செய்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். குஜராத் மாநிலத்தை சேர்ந்த நடிகை கனிஷ்கா சோனி, தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்திய கலாசாரத்தின் படி, திருமணம் என்பது அன்பு மற்றும் நேர்மையுடன் தொடர்புடையது. என்னை நானே திருமணம் செய்து கொண்டேன். எனது கனவுகள் அனைத்தும் நனவாகியுள்ளன. இந்த உலகில் என்னை மட்டுமே  நான் நேசிக்கிறேன். எனக்கு ஆண் துணை தேவையில்லை. … Read more

கொள்ளைக் கும்பல் தலைவர் கெஜ்ரிவால்: மத்திய அமைச்சர் தாக்கு!

டெல்லியில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது தலைமையிலான அமைச்சரவையில், சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த சத்யேந்திர ஜெயின், சட்ட விரோதப் பணப் பரிமாற்ற வழக்கில் அண்மையில் கைது செய்யப்பட்டார். அந்த சமயத்தில், டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா அடுத்ததாக கைது செய்யப்படலாம் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை … Read more

லக்னோவில் இன்று அதிகாலை நிலநடுக்கம்: 5.2 ரிக்டர் பதிவால் மக்கள் பீதி

லக்னோ: லக்னோவில் இன்று அதிகாலை 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர். உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் இன்று அதிகாலை 1.12 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனால் உறங்கிக் கொண்டிருந்த மக்கள் பீதியடைந்து வீட்டை விட்டு வெளியேறினர். நகரம் முழுவதும் ஒரே நிலநடுக்க பீதியாக இருந்தது. வீட்டிற்குள் இருந்த பொருட்களும் ஆங்காங்கே கீழே விழுந்ததால், என்ன நடக்கிறது என்று கூட தெரியாமல் மக்கள் அச்சமடைந்தனர். ஆனால் இதுவரை உயிர்சேதம் அல்லது சொத்து சேதம் குறித்து … Read more

பயணிகள் தகவல்களை விற்று ரூ.1000 கோடி திரட்ட திட்டம்? என்ன சொல்கிறது IRCTC?

பயணிகள் குறித்த தகவல் தொகுப்பை ஐஆர்சிடிசி வணிகரீதியாக பயன்படுத்தி வருவாய் ஈட்ட திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு அந்நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. தங்களிடம் உள்ள பயனர்களின் மின்னணு தகவல் தொகுப்பை (User data) வணிகரீதியாக அளித்து வருவாய் ஈட்டும் வழிகள் குறித்து ஆலோசனை அளிக்க அண்மையில் ஐஆர்சிடிசி ஒப்பந்தப் புள்ளி கோரியது. பயணிகள் குறித்த தகவல் உள்பட ஐஆர்சிடிசி வசமுள்ள மின்னணு தகவல்களை பகிர்வதன் மூலம் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் திரட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. … Read more

மதுபானக் கடை ஊழல் | பெயரை மாற்றிக் கொள்ளுங்கள் மணிஷ்: மத்திய அமைச்சர் அனுராக் தாகூர்

”மதுபானக் கடை ஊழலில் மணிஷ் சிசோடியா தான் முதல் குற்றவாளி, கேஜ்ரிவால் கொள்ளைக்கூட்டத் தலைவர்” என்று கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர். மதுபானக் கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா வீடு உட்பட 21 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், அதிகாரிகளின் வீடுகளில் இருந்து முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இன்று … Read more

மும்பையில் மீண்டும் வெடிகுண்டு வெடிக்கும்: போலீசுக்கு வந்த வாட்ஸ்அப் பதிவால் பரபரப்பு

மும்பை: மும்பை போலீசுக்கு வந்த வாட்ஸ் அப் பதிவில்,  மும்பையில் மீண்டும் வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறப்பட்டுள்ளதால், போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் போக்குவரத்து காவல்துறைக்கு நேற்று வாட்ஸ்அப் பதிவு ஒன்று வந்தது. அதில், ‘மும்பையில் நடந்த தாக்குதல் போன்று மீண்டும் ஒரு தாக்குதல் நடக்கப் போகிறது. நாங்கள் இதனை உங்களுக்கு நினைவு படுத்துகிறோம். மொத்தம் ஆறு பேர் இந்த சம்பவத்தை அரங்கேற்றுவார்கள். எங்களது இருப்பிடம் உங்களுக்கு வெளிநாட்டை காண்பிக்கும்’ என்று … Read more

டெல்லி துணை முதல்வர் வீடு உட்பட 21 இடங்களில் சிபிஐ சோதனை – அதிகாரிகள் வீடுகளில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்

புதுடெல்லி: மதுபானக் கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா வீடு உட்பட 21 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், அதிகாரிகளின் வீடுகளில் இருந்து முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான அரசு, புதிய மதுபானக் கொள்கையை கடந்த ஆண்டு நவ.16-ல் அறிமுகப்படுத்தியது. அதன்படி, மதுபான மண்டலங்கள் உருவாக்கப்பட்டன. டெல்லி முழுவதும் 849 விற்பனை நிலையங்களில் … Read more

மும்பையில் தீவிரவாதிகளுக்கு வெடிகுண்டு சப்ளை செய்த தீவிரவாதி தமிழகத்தில் கைது

மும்பை: மும்பையில்  தீவிரவாதிகளுக்கு வெடிகுண்டு சப்பளை செய்த தீவிரவாதி கைது செய்யப்பட்ட விஷயம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மகாராஷ்டிர மாநிலம், களிரோலி மாவட்டம், தர்மராஜா அடுத்த பங்கரபேட்டை பகுதியை சேர்ந்தவர் சேட்டா என்கிற சீனிவாசமுல்லாகவுடு. 23 வயது இளைஞரான சேட்டா, மாவோயிஸ்டு பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர். இவர் மீது போலீசில் ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளன. மும்பையில் தீவிரவாதிகளுக்கு வெடிகுண்டு சப்பளை செய்த வழக்கு தொடர்பாக மகாராஷ்டிர போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் சேட்டா என்கிற … Read more

இமாச்சல் மாநிலத்தில் கொட்டி வரும் மிக பலத்த மழை!: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு; பல இடங்களில் நிலச்சரிவு.. மக்கள் கடும் அவதி..!!

சிம்லா: இமாச்சலப்பிரதேசத்தில் மிக பலத்த மழை கொட்டி வருவதால் பல்வேறு இடத்தில் வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. இமாச்சலப்பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், காலை முதல் மிக பலத்த மழை கொட்டி வருகிறது. குறிப்பாக கங்ரா, சம்பா, பிலாஸ்பூர், மாண்டி ஆகிய மாவட்டங்களில் மேகவெடிப்பு போல மிக பலத்த மழை கொட்டியது. இதனால் ஆறுகளில் இரு கரைகளையும் தொட்டு வெள்ளம் பாய்ந்தோடுகிறது. கங்ரா மாவட்டத்தில் சாக்கி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த ரயில்வே பாலம் … Read more

பெரிதாக பேசுபவர்களிடம் தொலைநோக்கு இல்லை – எதிர்க்கட்சியினர் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு

புதுடெல்லி: ‘‘நாட்டை பற்றி கவலைப்படாதவர்கள்தான் பெரிதாக பேசுவார்கள், அவர்களால் குடிநீர் பாதுகாப்பு போன்ற பெரிய தொலைநோக்குடன் பணியாற்ற முடியாது’’ என எதிர்க்கட்சியினரை பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். கோவா மாநிலத்தில் வீட்டுக்கு வீடு குடிநீர் திட்ட நிகழ்ச்சி காணொலி மூலம் நேற்று நடந்தது. இந்தத் நலத்திட்டத்தை நேற்று தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியதாவது: நாட்டை முன்னேற்ற நீண்ட கால அணுகுமுறை தேவை. நாட்டை பற்றி கவலைப்படாதவர்களால் மிக பெரிதாக பேச மட்டும்தான் முடியும். அவர்கள் நிறைய … Read more