ஜூலை 18-ல் குடியரசுத் தலைவர் தேர்தல் – திரவுபதி முர்மு, சின்ஹா மனுக்கள் ஏற்பு

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, ஜூலை 18-ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரவுபதி முர்மு வேட்பு மனு தாக்கல் செய்தார். இதுபோல, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா வேட்பு மனு தாக்கல் செய்தார். இதுகுறித்து மாநிலங்களவை செயலாளரும் குடியரசுத் … Read more

தையல்கலைஞரைக் கொன்ற 2 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்

உதய்பூரில் தையல்கலைஞர் தலையை வெட்டி படுகொலை செய்த இரண்டு பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அஜ்மீர் நகருக்கு கொண்டு செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கைதான இருவரின் செல்போன்களையும் அதில் உள்ள பாகிஸ்தான் தொடர்புகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதனிடையே போலீசாரின் பாதுகாப்பு குறைபாடு மற்றும் அலட்சியத்தால் தையல்கடைக்கார் கொலை செய்யப்பட்டதாக சர்ச்சை எழுந்ததால் இதே போல் கொலை மிரட்டலுக்கு ஆளான … Read more

ஒன்றிய அரசு தரவரிசை பட்டியல் வெளியீடு எளிதாக தொழில் தொடங்க ஏற்ற மாநிலங்களில் தமிழகம்

புதுடெல்லி: எளிதில் தொழில் தொடங்குவதற்கான சூழலைக் கொண்டிருக்கும் மாநிலங்களின் பட்டியலை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. அதில், ஆந்திரா, குஜராத், தெலங்கானா, தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் முன்னணி சாதனை மாநிலங்கள் பட்டியலில் இடம் வகிக்கின்றன. வர்த்தகம் மேற்கொள்வதற்கான விதிமுறைகளை எளிதாக்கி, சிறந்த வர்த்தக சூழலை (ஈஸி ஆப் டூயிங் பிஸினஸ்) உருவாக்கியுள்ள மாநிலங்கள் தொடர்பான, ‘மாநில வணிக சீர்த்திருத்த செயல் திட்டம் 2020’ தரவரிசை பட்டியலை ஒன்றிய அரசு நேற்று வெளியிட்டது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2020ம் … Read more

பாஜக செயற்குழுவில் பங்கேற்க வரும் பிரதமர் மோடிக்கு தெலங்கானா உணவுகளை செய்து அசத்த உள்ள யாதம்மாள்

ஹைதராபாத்: பாஜக தேசிய செயற்குழு கூட்டம் ஹைதராபாத்தில் ஜூலை 2, 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தெலங்கானா மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் தலைமையில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் மற்றும் பாஜக ஆட்சிபுரியும் 18 மாநிலங்களின் முதல்வர்கள், அனைத்து மாநில பாஜக தலைவர்கள் மற்றும் கட்சியின் முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்கள் … Read more

6 வயது சிறுமியையும், தாயையும் காரில் கடத்தி கூட்டு பலாத்காரம் செய்த 5 பேர் கைது.!

உத்தரகாண்ட் மாநிலம் ஹரிதுவாரில், 6 வயது சிறுமியையும் அவள் தாயையும் காரில் கடத்தி கூட்டு பலாத்காரம் செய்த 5 கொடியவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த ஜூன் 25 ஆம் தேதி தாயும் மகளும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டனர். இருவரும் பாலியல் வன்முறைக்கு ஆளானதை மருத்துவப் பரிசோதனை உறுதி செய்தது. மன நலம் பாதிக்கப்பட்டதால் தாயால் வாக்குமூலம் தர இயலவில்லை. காவல்துறையினர் மின்னணு சாதனங்கள் ,கண்காணிப்பு கேமராக்களை ஆராய்ந்தும் 150  பேரிடம் விசாரணை நடத்தியும் குற்றம் செய்தவர்களை சுற்றி … Read more

பாலிவுட் நடிகைக்கு கொலை மிரட்டல்

மும்பை: பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர், நாள்தோறும் தனது சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக இயங்குவது வழக்கம். மேலும், சர்ச்சைக்குரிய கருத்துகளை அவ்வப்போது வெளியிடுவார். தலிபான் தீவிரவாதிகளுடன் இந்துத்துவா தீவிரவாதிகளை ஒப்பிட்டு அவர் சொன்ன கருத்து வைரலானது. இந்நிலையில், ஸ்வரா பாஸ்கருக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இந்தியில் எழுதப்பட்டுள்ள அந்தக்கடிதத்தில், ‘தொடர்ந்து இந்துக்களுக்கு எதிராகப் பேசி வந்தால், அதை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். அதன் விளைவுகள் விபரீதமாக இருக்கும்’ என்று கூறப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்தை மும்பை வெர் … Read more

உதய்பூர் கொலை | விசாரணையை தொடங்கியது என்ஐஏ – கன்னையா குடும்பத்துக்கு ராஜஸ்தான் அரசு ரூ.51 லட்சம் நிதி

புதுடெல்லி: ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தையல்காரர் கொலை வழக்கில் தேசிய புலனாய்வு நிறுவனம் (என்ஐஏ) தனது விசாரணையை தொடங்கியது. இதில் குற்றவாளிகளைப் பற்றிய பல முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. முஸ்லிம்களின் இறைத் தூதர் முகமது நபி குறித்த நுபுர் சர்மாவின் விமர்சனம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனால் அவர் பாஜக.வில் இருந்து நீக்கப்பட்டார். இவருக்கு ஆதரவாக, ராஜஸ்தானின் உதய்பூரில் தையல்கடை நடத்தும் கன்னையா லால் டெனி (40) என்பவர் சமூக ஊடகத்தில் கருத்து பதிவிட்டிருந்தார். இதற்காக, … Read more

“நாட்டின் சூரிய ஒளி மின்னுற்பத்தித் திறன் 8 ஆண்டுகளில் 20 மடங்கு உயர்வு” – பிரதமர் மோடி

இந்தியாவில் சூரிய ஒளி மின்னுற்பத்தித் திறன் கடந்த எட்டாண்டுகளில் 20 மடங்கு அதிகரித்துள்ளதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பெங்களூரில் கட்டப்பட்டுள்ள போஷ் ஸ்மார்ட் வளாகத்தைப் பிரதமர் மோடி காணொலி மூலம் திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புக்காக இன்னும் அதிகமாக முதலீடு செய்ய வேண்டியுள்ளதாகத் தெரிவித்தார். சூழலை மாசுபடுத்தாமல் இந்தியா வளர்ச்சியடைந்து வருவதாகவும், அரசின் அனைத்துச் செயல்பாடுகளிலும் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதே நமது நோக்கம் என்றும் குறிப்பிட்டார். ஜெர்மனியின் போஷ் நிறுவனம் இந்தியாவில் தொழில்தொடங்கி … Read more

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முர்மு, சின்கா மனுக்கள் ஏற்பு

புதுடெல்லி: ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்காவின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டு உள்ளன. 107 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. நாட்டின் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 18ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில், பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில்  திரவுபதி முர்மு வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் ஒன்றிய அமைச்சர் யஷ்வந்த் … Read more

பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது – ககன்யான், சந்திராயன்-3 ஏவுதல் எப்போது?

சென்னை: பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் மூலம் சிங்கப்பூர் நாட்டின் ‘டிஎஸ்-இஓ’ உள்ளிட்ட 3 செயற்கைக்கோள்கள் நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டன. விண்வெளி ஆய்வில் தனியார் துறைகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. இதற்காக 2019-ம் ஆண்டு என்எஸ்ஐஎல் என்ற அமைப்பும், 2020-ல் இன்ஸ்பேஸ் என்ற அமைப்பும் நிறுவப்பட்டன. அதன்படி என்எஸ்ஐஎல் அமைப்பு மூலம் சிங்கப்பூருக்கு சொந்தமான டிஎஸ்-இஒ, நியூசர் உட்பட 3 … Read more