குஜராத்திகள் வெளியேறிவிட்டால் மகாராஷ்டிராவில் பணம் இருக்காது – சர்ச்சையை கிளப்பிய ஆளுநர்!

குஜராத்திகள், ராஜஸ்தானியர்கள் மும்பை மற்றும் தானேவை விட்டு வெளியேறினால், மகாராஷ்டிராவில் பணம் இருக்காது என்று அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பேசியது சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. மும்பையின் மேற்கு புறநகர் பகுதியான அந்தேரியில் ஒரு பகுதிக்கு பெயர் சூட்டும் விழாவில் பங்கேற்ற மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி, “மகாராஷ்டிராவில் இருந்து குறிப்பாக மும்பை மற்றும் தானேயில் இருந்து, குஜராத்திகள் மற்றும் ராஜஸ்தானியர்களை அகற்றினால், உங்களிடம் பணம் இருக்காது, மும்பை இந்தியாவின் நிதி தலைநகராக இருக்காது என்று … Read more

மங்களூருவில் 3 நாளில் 2 பேர் படுகொலை – என்ஐஏ விசாரணைக்கு பசவராஜ் பொம்மை பரிந்துரை

பெங்களூரு: கர்நாடகாவின் மங்களூருவில் 3 நாட்களில் 2 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பாஜக நிர்வாகி பிரவீன் நெட்டூரு கொலை வழக்கை தேசிய புலனாய்வு பிரிவு விசாரிக்கும் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். கடந்த 26-ம் தேதி மங்களூரு அருகேயுள்ள பெல்லாரேவை சேர்ந்த பாஜக நிர்வாகி பிரவீன் நெட்டூரு மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து வியாழக்கிழமை இரவு எஸ்டிபிஐ அமைப்பை சேர்ந்த ஃபாசில் (23), சூரத்கலில் மர்ம நபர்களால் குத்திக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தின் … Read more

'மராத்தியர்களை அவமதிப்பதா..!' – ஆளுநரை கிழித்து தொங்கவிட்ட உத்தவ் தாக்கரே!

மகாராஷ்டிர மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு, முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். மகாராஷ்டிர மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி, அந்தேரி என்ற பகுதியில், நேற்று நடைபெற்ற விழா ஒன்றில் பேசுகையில், “மகாராஷ்டிர மாநிலத்தை விட்டு குஜராத்திகளும், ராஜஸ்தானிகளும் வெளியேறி விட்டால், மும்பையில் பணம் இருக்காது. நாட்டின் நிதி தலைநகராக மும்பை இருப்பதற்கும் அவர்கள் தான் காரணம்” என குறிப்பிட்டார். ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியின் இந்த … Read more

உத்தரபிரதேசத்தில் காரும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 7 பேர் பலி!!

பண்டா: உத்தரபிரதேச மாநிலம் பண்டா மாவட்டம் கிர்வான் பகுதியில் காரும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இடிபாடுகளில் சிக்கி 10 வயதுக்கு உட்பட 2 குழந்தைகள் உட்பட 7 பேர் உயரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததால், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து மீட்டுப்பணிகளில் ஈடுபட்டனர். சாலை விபத்தில் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், அவர்களுக்கான … Read more

மும்பையில் இன்ஸ்டண்ட் நூடுல்ஸ் சாப்பிட்ட இளம்பெண் உயிரிழப்பு – நடந்தது என்ன?

மும்பையில் இன்ஸ்டண்ட் நூடுல்ஸ் சாப்பிட்ட இளம்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையிலுள்ள பாஸ்கல் வாடி பகுதியைச் சேர்ந்தவர் ரேகா நிஷாத். 27 வயதான இவருடைய வீட்டில் எலித்தொல்லை அதிகமாக இருந்ததால் ஜூலை 21ஆம் தேதி எலிகளைக் கொல்ல தக்காளியின்மீது எலிவிஷம் கலந்து வைத்துள்ளார். அடுத்த நாள் டிவி பார்த்துக்கொண்டே இன்ஸ்டண்ட் நூடுல்ஸ் சமைத்த ரேகா, தவறுதலான எலி விஷம் கலந்துவைத்த தக்காளியையும் போட்டு சமைத்து சாப்பிட்டுவிட்டார். நூடுல்ஸ் சாப்பிட்ட சிலமணிநேரங்களிலேயே வாந்தி எடுக்க … Read more

வங்கதேச தீவிரவாத குழுவைச் சேர்ந்த 12 பேர் அசாம் மாநிலத்தில் கைது

குவாஹாட்டி: அன்சாருல் இஸ்லாம் என்ற பெயரில் வங்கதேச தீவிரவாதக் குழு அந்நாட்டில் இயங்கி வருகிறது. இந்தக் குழுவுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் இந்தியாவில் இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் அந்தக் குழுவைச் சேர்ந்த 12 பேரை (ஜிஹாதிகள்) கைது செய்ததாக குவாஹாட்டி போலீஸ் எஸ்.பி. அமிதாப் சின்ஹா நேற்று தெரிவித்தார். தேசிய அளவிலான ஒத்துழைப்புடன் இந்த தீவிரவாத தேடுதல் வேட்டை நடந்ததாக அசாம் முதல்வர் ஹிமந்தா விஸ்வ சர்மா தெரிவித்தார். கைது செய்யப்பட்ட முப்தி முஸ்தபா என்பவர், மோய்ராபரி போலீஸ் … Read more

சர்ச்சை கருத்து கூறிய விவகாரம்.. வாய் தவறி அப்படி கூறிவிட்டேன்! :ஜனாதிபதிக்கு ஆதிர் ரஞ்சன் மன்னிப்பு கடிதம்

புதுடெல்லி: சர்ச்சை கருத்து கூறிய காங்கிரஸ் எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குடியரசுத் தலைவருக்கு எழுதிய மன்னிப்பு கடிதத்தில் வாய் தவறி அந்த வார்த்தையை கூறியதாக எழுதியுள்ளார்.நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 18ம் தேதி தொடங்கிய நிலையில், எதிர்கட்சிகளின் தொடர் போராட்டத்தில் அலுவல்கள் ஏதும் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு, ஜிஎஸ்டி உள்ளிட்டவை குறித்து அவையில் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனால் ஆளுங் கட்சியோ எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை … Read more

சர்வதேச தங்க விலை நிர்ணயத்தில் இந்தியாவின் கை ஓங்கும் – நிர்மலா சீதாராமன் பேச்சு

இந்தியாவின் முதலாவது சர்வதேச தங்க வர்த்தகச் சந்தை அகமதாபாத்தில் தொடங்கப்பட்டுள்ள நிலையில் இனி சர்வதேச தங்க விலை நிர்ணயத்தில் இந்தியாவின் கை ஓங்கும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தங்கத்தின் விலை, சர்வதேச தங்கச் சந்தையில் நிர்ணயிக்கப்படும் அடிப்படையில் தினந்தோறும் அறிவிக்கப்படுகிறது. தங்கத்தின் தேவையில் பெருமளவுக்கு இறக்குமதியை நம்பியுள்ள நிலையில், இந்தியாவில் பங்கு வணிகம் போலவே தங்க வர்த்தகச் சந்தையை அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. அதன் மூலம், இந்தியாவில் நடைபெறும் தங்க … Read more

’மராட்டிய மண்ணின் மைந்தர்களுக்கு அவமானம்’ – ஆளுநர் பேச்சுக்கு உத்தவ் தாக்கரே கண்டனம்

மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷியாரி மராட்டிய மண்ணின் மைந்தர்களுக்கு அவமானம் ஏற்படுத்திவிட்டார் என்று கண்டித்துள்ளார். மும்பை அந்தேரியில் அமைக்கப்பட்டுள்ள ஒரு கட்டிட திறப்பு விழாவில் ஆளுநர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் “மகாராஷ்டிராவில் குஜராத்தி, ராஜஸ்தானிகள் மட்டும் இல்லாவிட்டால் பணமே இருக்காது. அதுவும் குறிப்பாக மும்பை, தானேவில் பணமே இருக்காது. ராஜஸ்தானி, மார்வாரி மற்றும் குஜராத்தி சமூகத்தினரின் வியாபார பங்களிப்பு போற்றுதற்குரியது. இச்சமூகத்தினரால் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் மட்டுமல்ல நேபாளம், மொரீசியஸ் என நிறைய … Read more

நீதி கிடைப்பது எளிதாக இருக்க வேண்டும்: பிரதமர் மோடி!

நமது நீதித்துறை பழங்கால இந்திய நீதியின் மாண்புகளை மதிப்பதுடன் 21 ஆம் நூற்றாண்டின் நடைமுறை உண்மைகளுக்கு பொருத்தமான அர்ப்பணிப்புடனும் உள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். முதலாவது அகில இந்திய மாவட்ட சட்ட சேவைகள் அதிகாரிகள் கூட்டத்தின் தொடக்க அமர்வில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்திய தலைமை நீதிபதி என்.வி.ரமணா, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நீதிபதி யு.யு.லலித், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, இணையமைச்சர் எஸ்.பி.சிங் பாகேல், மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், … Read more