வைஷ்ணவ தேவி கோயில் யாத்திரை தற்காலிக நிறுத்தம்

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் உள்ள வைஷ்ணவ தேவி கோயில் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி அன்சுல் கார்க் கூறியது: கனமழை காரணமாக கத்ராவில் இருந்து வைஷ்ணவ தேவி கோயிலுக்கு பக்தர்கள் மேல்நோக்கி வருவது நிறுத்தப்பட்டுள்ளது. அதேசமயம், பவான் பகுதியில் சன்ஜிசத் நோக்கி கீழே வரும் பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை நள்ளிரவு முழுவதும் தொடர்ந்து மழை பெய்ததால் கோயில் வளாகத்தில் ஆயிரக்கணக்கானோர் தங்கியுள்ளனர். அதன் விளைவாக, பேட்டரி வாகன பாதையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கோயில் வாரியத்தின் தலைமை … Read more

பி.கே போடும் தூள் ப்ளான்; தூக்கம் இழந்து தவிக்கும் பாஜக!

பீகாரில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வந்த நிலையில் முதலமைச்சர் நிதீஷ்குமாருக்கும், பாஜக மேலிடத்துக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. இந்நிலையில் அதிருப்தி எம்எல்ஏக்களை உருவாக்கி நிதீஷ் குமாரின் ஐக்கிய தனதா தளம் கட்சியை உடைக்க பாஜக ரகசிய ப்ளானில் இறங்கியது. இதை அறிந்து டென்ஷன் ஆன நிதீஷ் குமார் பாஜகவுடன் கூட்டணியை முறிப்பதாக அறிவித்தார். அப்போது ஐக்கிய ஜனதா தளத்தை உடைக்கும் முயற்சியில் பாஜக இறங்கியதால் தான் உறவை முறிப்பதற்கான காரணம் … Read more

2024-ல் மோடிக்கு மக்கள் லுக் அவுட் நோட்டீஸ் கொடுப்பார்கள்: டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா பதில்

புதுடெல்லி: 2024ல் மோடிக்கு மக்கள் லுக் அவுட் நோட்டீஸ் கொடுப்பார்கள் என்று டெல்லி மாநில துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். டெல்லியில் மதுபானக் கடைகள் ஒதுக்கியதில் முறைகேடுகள் மற்றும் கொள்கைகள் குறித்து சிபிஐ டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா மற்றும் இந்த முறைகேட்டில் தொடர்புடையதாக கூறப்படும் 14 நபர்களிடம் விசாரணை மேற்கொண்டது. டெல்லியில் இருந்து தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம் வரை இந்த விசாரணை நீண்டுள்ளது. விசாரணைக்குப் பின்னர் அமலாக்கத்துறையும் மணீஷ் சிசோடியாவிடம் விசாரணை மேற்கொள்ளும் … Read more

இன்ஸ்டண்ட் லோன் ஆப்கள் மூலம் கடன் – சுமார் ரூ.500 கோடிக்கு மேல் பண மோசடி.!

ரூ.500 கோடிக்கு மேல் செல்போன் கடன் ஆப்கள் மூலம் கடனுதவி மோசடி மற்றும் மிரட்டி பணம் பறித்த கும்பல் பிடிக்கப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் ரூபாய் 500 கோடிக்கு மேல் உடனடி கடனுதவி செய்வதாக மோசடி செய்தும், மிரட்டி பணம் பறித்தும் வந்த கும்பலை முறியடித்துள்ளது டெல்லி காவல்துறை. இதன் பேரில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 22 பேரை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. செல்போன் ஆப் கடன் செயலிகள் மூலம் உடனடி … Read more

'மோடியின் கவனம் சிபிஐ ரெய்டில், வளர்ச்சியை சிந்திக்கிறார் கேஜ்ரிவால்' – சிசோடியா

புதுடெல்லி: மோடி தனது அரசியல் போட்டியாளர்களுக்கு எதிராக சிபிஐ அமைப்பைப் பயன்படுத்தும் நேரத்தில் அரவிந்த் கேஜ்ரிவால் பள்ளிகளில் கவனம் செலுத்துகிறார் என டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா செய்தியாளர்களிடம் பேசும்போது, “ஆம் ஆத்மி கட்சியின் கல்வி மற்றும் சுகாதாரத்துறை உலகளவில் விவாதிக்கப்படுகிறது. இதனாலேயே நான் சிபிஐ-யால் குறி வைக்கப்படுகிறேன். முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் புகழ் அதிகரித்து வருவதைக் கண்டு மத்தியில் ஆளும் பாஜக அரசு … Read more

UPI பண பரிமாற்றத்திற்கு கட்டணம் வசூலிக்கப்படலாம்: ரிசர்வ் வங்கி சூசகம்

UPI charges as IMPS: UPI ஐப் பயன்படுத்தி நிதி பரிமாற்றம் செய்வது என்பது IMPS போன்றது என ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது, எனவே இனி அதற்கு கட்டணம் வசூலிக்கப்படலாம். யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் என்பதன் சுருக்கமான UPI, இந்தியாவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. கார்டு மூலம் பணத்தை செலுத்துவதற்கு மாற்றாகவும், டிஜிட்டல் பேமெண்ட்டுகளுக்கான மற்றொரு தெரிவாகவும் தொடங்கப்பட்ட UPI இப்போது இந்தியாவிற்கு வெளியிலும் பயன்படுத்த ஏதுவாக இருக்கிரது. இதுவரை இலவசமாக பயன்படுத்தப்பட்ட இந்த வசதிக்கு இனி மேல் … Read more

டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட் கும்பல் சிக்கியது: சென்னையில் மூலப்பொருட்களை கொள்முதல் செய்தது அம்பலம்

புதுடெல்லி: போலி பாஸ்போர்ட், விசாக்களை தயாரித்து கொடுத்த கும்பலை டெல்லி விமான நிலைய போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கும்பல் சென்னையில் மூலப்பொருட்களை கொள்முதல் செய்தது அம்பலமாகி உள்ளது. தலைநகர் டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய போலீசார் விமான நிலையம் வந்த பயணிகளிடம் வழக்கமான தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, போலி பாஸ்போர்ட் மற்றும் விசா மோசடி செயல்களில் ஈடுபட்ட கும்பலிடம் இருந்து 325 இந்திய பாஸ்போர்ட்கள், கனடா, அமெரிக்கா, … Read more

'காலை எழுந்ததும் சிபிஐ மூலம் எதிர்க்கட்சிகளை முடக்கிறது மத்திய அரசு'- அரவிந்த் கெஜ்ரிவால்

வேலையில்லாமல் நாடு முழுவதும் இளைஞர்கள் திண்டாடி வரும் நிலையில் மத்திய அரசு காலை எழுந்தவுடன் சிபிஐ மற்றும் அமலாக்க துறையை கொண்டு எதிர்க்கட்சிகளை முடக்கும் வேலைகளை தொடங்குவதாக? என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார். புதிய கலால் வரி கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக கூறி டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா, கலால் வரித்துறை அதிகாரிகள் உட்பட 13 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. அத்துடன் கடந்த வெள்ளிக்கிழமை மனிஷ் சிசோடியா வீடு … Read more

மாநில அரசுகளுடன் மோதல் போக்கிருந்தால் தேசம் எப்படி வளரும்? – அரவிந்த் கேஜ்ரிவால் கேள்வி

மாநில அரசுகளுடன் மோதல் போக்கினை மட்டுமே மத்திய அரசு கடைபிடிக்குமேயானால் நாடு எப்படி வளார்ச்சிக் காணும் என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால். இது தொடர்பாக அரவிந்த் கேஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் கேஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளதாவது: சாமான்ய மனிதர்கள் பணவீக்கன், வேலைவாய்ப்பின்மையுடன் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையி மத்திய அரசு மாநில அரசுகளுடன் கைகோத்து இப்பிரச்சினைகளுக்கு அல்லவா தீருவ் காரண வேண்டும். ஆனால் அதற்குப் பதிலாக மாநில அரசுகளுடன் … Read more

யாரையும் காலில் விழ விடக்கூடாது: அமைச்சர்களுக்கு தேஜஸ்வி உத்தரவு

பாட்னா: ‘புதியதாக கார் வாங்கக் கூடாது, யாரையும் காலில் விழ அனுமதிக்கக் கூடாது,’ என்பது உட்பட பல்வேறு உத்தரவுகளை ராஷ்டிரிய ஜனதா தள அமைச்சர்களுக்கு பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி உத்தரவிட்டுள்ளார். பீகாரில் நிதிஷ் குமார் தலைமையில் சமீபத்தில் அமைக்கப்பட்ட மகா கூட்டணி அரசில், முக்கிய கூட்டணி கட்சியாக ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளது. இக்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக உள்ளார். இவருடைய கட்சியை சேர்ந்த 16 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். இம்மாநில சட்ட … Read more