தேசிய பாரம்பரிய சின்னம்; மீண்டும் உயிர் பெறும் ராமர் பாலம் வழக்கு: 26ம் தேதி விசாரணை

புதுடெல்லி: ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை வரும் 26ம் தேதி விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. ‘இந்தியா-இலங்கை இடையிலான கடலின் ஆழத்தில் இருக்கும் ராமர் பாலம் இயற்கையாக உருவானது அல்ல. மனிதர்களால் கட்டப்பட்டது. இதன் கற்கள் 7 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. அதனை மூடியிருக்கும் மணல் படிமங்கள், 4 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தவை,’ என அறிவியல்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது. அதனால், சேது சமுத்திர திட்டத்தின் போது ராமர் பாலத்தை சேதப்படுத்தாமலும், … Read more

4 நாடுகள் பங்கேற்கும் உச்சி மாநாடு: ஜோ பிடன் – மோடி நாளை சந்திப்பு

புதுடெல்லி: காணொலி காட்சி மூலம் இந்தியா, இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா ஆகிய 4 நாடுகள் கலந்து கொள்ளும் உச்சி மாநாடு நாளை நடைபெறுகிறது. இந்தியா, இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா ஆகிய 4 நாடுகள் ‘ஐ2யு2’ என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள நாடுகளின் அமைப்பானது, நீர், எரிசக்தி, போக்குவரத்து, விண்வெளி, சுகாதாரம், உணவு பாதுகாப்பு ஆகிய 6 துறைகளில் கூட்டு முதலீட்டினை ஊக்கப்படுத்தும் திட்டங்களை உருவாக்கும். அதன்படி இந்த அமைப்பின் முதல் உச்சி மாநாடு … Read more

டோலோ 650 மாத்திரை தயாரிப்பு நிறுவனத்தில் வருமான வரி சோதனை.. ரூ.300 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிப்பு..!

டோலோ 650 மாத்திரை தயாரிக்கும் மைக்ரோலேப்ஸ் நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 300 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது. கடந்த வாரம் அந்த நிறுவனம் தொடர்புடைய 36 இடங்களில் சோதனை நடத்தப்பட்டதில், அதன் தயாரிப்புகளை விளம்பரப்படுத்த நெறிமுறையற்ற முறைகளில் சுமார் 1000 கோடி ரூபாய் அளவுக்கு இலவச சலுகைக்காக செலவு செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் கணக்கில் காட்டப்படாத ஒரு கோடியே 20 லட்சம் ரொக்கம், ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் … Read more

பானிபூரி … பானிபூரி ..!: சுற்றுலாப் பயணிகளுக்‍கு பானிபூரி பரிமாறிய முதலமைச்சர் மம்தா பானர்ஜி..வீடியோ வைரல்..!!

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கில் சுற்றுலா பயணிகளுக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி பானிபூரி விநியோகித்தார். மலைகளின் ராணி என்று அழைக்கப்படும் டார்ஜிலிங்கில் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் நடத்தப்படும் பானிபூரி கடையை திறந்து வைத்த மம்தா பானர்ஜி, மிருதுவான ஹாலோ பூரிகளில் மசித்த உருளைக்கிழங்கை வைத்து புளி தண்ணீரில் நனைத்து சுற்றுலா பயணிகளுக்கு அளித்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அரசியல் களத்தில் தன் அதிரடி நடவடிக்கைகள், கருத்துகளால் என்றும் தலைப்பு செய்திகளில் இடம்பிடிக்கும் … Read more

மழைக் கடவுளை மகிழ்விக்க பாஜக எம்.எல்.ஏ.வை சேற்றில் குளிப்பாட்டிய பெண்கள்!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மழைக் கடவுளை மகிழ்விக்க பாஜக எம்.எல்.ஏ.வை பெண்கள் சேற்றில் குளிப்பாட்டிய சம்பவம் அரங்கேறியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் மஹராஜ்கஞ்ச் பகுதியில் வசிப்பவர்கள் மழைக் கடவுளை மகிழ்விக்க ஒரு புதுவழியைக் கண்டுபிடித்து உள்ளனர். மழைக் கடவுளான இந்திரனை மகிழ்விப்பதற்காக அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் பாஜக எம்எல்ஏ ஜெய் மங்கள் கனோஜியா மற்றும் நகராட்சி மன்றத் தலைவர் கிருஷ்ண கோபால் ஜெய்ஸ்வால் ஆகியோரை சேற்றால் குளிப்பாட்டி உள்ளனர். உத்திரப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதியில் வசிப்பவர்கள் ஒருவரை சேற்றில் வீசுவது … Read more

டோலோ 650 மாத்திரை தயாரிப்பு நிறுவனம் டாக்டர்களுக்கு ரூ.1000 கோடிக்கு பரிசுப் பொருட்கள் வழங்கியது வருமான வரித்துறை சோதனையில் அம்பலம்

டெல்லி: டோலோ 650 மாத்திரை தயாரிப்பு நிறுவனம் டாக்டர்களுக்கு ரூ.1000 கோடிக்கு பரிசுப் பொருட்கள் வழங்கியது தெரியவந்துள்ளது. 9 மாநிலங்களில் 36 இடங்களில் நடத்தப்பட்ட வருமானவரி சோதனையில் ரூ.1.2 கோடி ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ.1.4 கோடி மதிப்புள்ள தங்கம், வைர நகைகளையும் வருமானவரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கொரோனா காலகட்டத்தில் குறிப்பாக 2020-21 காலகட்டத்தில் மருத்துவ துறையில் பல்வேறு நிறுவனங்கள் வருமான வரி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தொடந்து புகார்கள் வந்துள்ளது. அதன் அடிப்படையில் ஏற்கனவே ஆர்த்தி … Read more

ஜூலை 15-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி இலவசம்: ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: ஜூலை 15-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்திக்கொள்ளலாம் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. அடுத்த 75 நாட்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியை அனைவருக்கும் இலவசமாக வழங்க ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக அச்சுறுத்தி வரும் கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் பெரிதும் உதவி வருகிறது. கடந்த ஆண்டு ஜனவரி 16-ம் தேதி தொடங்கிய தடுப்பூசி … Read more

’யார் பார்த்த வேலை இது’ வீட்டின் பின்புறம் திடீர் கஞ்சா தோட்டம்..ஷாக் ஆன முன்னாள் எம்எல்ஏ!

பெங்களூரு அருகே முன்னாள் எம்எல்ஏ வீட்டின் பின்புறம் மர்ம நபர்கள் கஞ்சா செடிகள் வளர்த்து வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே புலிகேசி நகர் பகுதியில், ஆர்டி நகர் மஞ்சுநாதா லேஅவுட் சாலையில் முன்னாள் எம்எல்ஏ பேளூர் கோபாலகிருஷ்ணா என்பவரின் வீடு அமைந்துள்ளது. இவரது வீட்டின் பின்புறம் உள்ள நிலத்தில் கோதுமை செடிகளை சிலர் பயிரிட்டு வளர்த்து வந்துள்ளனர். இதனைத் தாண்டி உள்ள நிலப்பரப்பில் சில மர்ம நபர்கள் ஏராளமான கஞ்சா செடிகளையும் சாகுபடி … Read more

‘டைம்’ இதழின் உலகின் சிறந்த 50 இடங்கள் பட்டியலில் கேரளா, அகமதாபாத்

நியூயார்க்: 2022-ம் ஆண்டில் உலகின் ஆகச் சிறந்த 50 இடங்கள் என்று டைம் இதழ் வெளியிட்டுள்ள பட்டியிலில் இந்தியாவின் கேரள மாநிலம் மற்றும் அகமதாபாத் நகரம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. உலகின் சிறந்த இடங்கள்: டைம் இதழால் வெளியிடப்பட்டும் உலகின் சிறந்த இடங்களுக்கான இந்தப் பட்டியல், உலகெங்கிலும் உள்ள டைம் இதழின் சிறப்பு நிருபர்கள் மற்றும் பங்களிப்பாளர்களால் பரிந்துரைக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான சிறந்த இடங்களின் பட்டியலில், ஐக்கிய அரபு அமிரகத்தின் ராஸ் அல் கைமா, உட்டாவின் பார்க் … Read more

திருவனந்தபுரம் மத்திய சிறையில் இருந்து தப்பி ஓடிய கைதி: மரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மத்திய சிறையில் இருந்து தப்பி ஓடிய ஆயுள் தண்டனை கைதி மரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் சுபாஷ் அன்சாரி (35). ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர். ஆகவே திருவனந்தபுரத்தில் உள்ள திறந்தவெளி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இதற்கிடையே கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கொரோனா பரவலைத் தொடர்ந்து பரோலில் வீட்டுக்கு சென்றார். அதன் பிறகு சிறைக்கு திரும்பவில்லை. இதையடுத்து போலீசார் சுபாஷ் அன்சாரியை … Read more