உலகின் பெரிய பணக்கார கடவுள் திருப்பதி ஏழுமலையானுக்கு 1,128 இடங்களில் சொத்துகள்; 10 டன் தங்கம், ரூ.8,500 கோடி தங்க பிஸ்கட்

திருமலை: திருப்பதி ஏழுமலையானுக்கு நாடு முழுவதும் 1,128 சொத்துகள், 10 டன் தங்கம், ரூ.8,500 கோடிக்கு தங்க கட்டிகள் உள்ளன. உலகின் பெரிய பணக்கார கடவுள் யார் என்றால் அது திருப்பதி ஏழுமலையான்தான். இவரை தரிசிக்க உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் குவிகின்றனர். அவர்கள் பணம், தங்கம், சொத்துகளாக காணிக்கை செலுத்துகின்றனர். தேவஸ்தான அறக்கட்டளைகளுக்கு ஆண்டுதோறும் ரூ.300 கோடி நன்கொடையும் கிடைக்கிறது. பக்தர்கள் வழங்கிய 10 டன் தங்கம் தேவஸ்தான வங்கியிலும்,  பல்வேறு வங்கிகளில் ரூ.8,500 கோடி … Read more

நாகார்ஜுனா பல்கலைக்கழகம் சார்பில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு முனைவர் பட்டம்

குண்டூர்: தான் படித்த ஆச்சாரியா நாகார்ஜுனா பல்கலைக் கழகத்தின் சார்பில் முனைவர் பட்டம் வாங்குவதை பெருமையாக கருதுகிறேன் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தெரிவித்தார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணாவிற்கு, நேற்று குண்டூர் ஆச்சாரியா நாகார்ஜுனா பல்கலை சார்பில் முனைவர் பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது. அதன் பின்னர், இவ்விழாவில் தலைமை நீதிபதி என்.வி. ரமணா பேசியதாவது, ஆச்சாரியா நாகார்ஜுனா பல்கலைக் கழக முன்னாள் மாணவன் நான் என்பதில் பெருமை கொள்கிறேன். … Read more

3 ஆண்டுக்கு இன்டர்நெட்; 2 சிம் கார்டு வசதி பெண்கள் வாக்குகளை பெற ராஜஸ்தான் காங். தாராளம்: 1.35 கோடி பேருக்கு இலவச ஸ்மார்ட் போன்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் 1.35 கோடி பெண்களுக்கு 3 ஆண்டுகளுக்கு இலவச இணையதள வசதியுடன், ஸ்மார்ட் போன்கள் வழங்கப்பட உள்ளன. ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இந்த ஆண்டு பட்ஜெட்டில் ‘முக்யமந்திரி டிஜிட்டல் சேவா யோஜனா திட்டம்’என்ற திட்டத்தை அறிவித்தார். இத்திட்டத்தின் கீழ், சிரஞ்சீவி உடல்நலக் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்யப்பட்ட  1.35 கோடி குடும்பங்களின் பெண்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு இணையதள வசதியுடன் கூடிய ஸ்மார்ட்போன்கள் வழங்கப்பட உள்ளன. இத்திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பு, அரசு நிறுவனமான ராஜ்காம்புக்கு வழங்கப்பட்டுள்ளது. … Read more

இமாச்சலப் பிரதேசத்தில் பெய்துவரும் கனமழையின் எதிரொலி 22 பேர் பலி

Himachal Flood: இமாச்சலப் பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் பல பகுதிகளில் நாசத்தை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்தில் மழை தொடர்பான சம்பவங்களில் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் காணாமல் போயுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கனமழையால், இமாச்சலப் பிரதேசத்தில் நிலச்சரிவு, திடீர் வெள்ளம் மற்றும் மேக வெடிப்பு சம்பவங்கள் பேரழிவை உருவாக்கியுள்ளன. தொடர் மழை காரணமாக மாநிலத்தின் பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ​​ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் உட்பட … Read more

ராதா – கிருஷ்ணன் ஆபாசமாக சித்தரிப்பு; அமேசானுக்கு கடும் எதிர்ப்பு

புதுடெல்லி: நாடு முழுவதும் நேற்று முன்தினம் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடபட்டது. வீடுகள் தோறும் கிருஷ்ணரை வரவேற்கும் வகையில் மாவிலை தோரணங்கள் கட்டியும் கிருஷ்ணர் பாதத்தை வரைந்தும் பலகாரங்களுடன் வழிபாடு நடத்தினர். குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடமிட்டு, கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இந்நிலையில், அமேசான் விற்பனை தளத்தில் கிருஷ்ணன் ஜெயந்தியை முன்னிட்டு  ராதை, கிருஷ்ணன் இருக்கும் ஒவியம் விற்கப்பட்டதாக தெரிகிறது. இந்த ஓவியம், ராதா – கிருஷ்ணரை ஆபாசமாக சித்தரித்து வரையப்பட்டுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு … Read more

மதுக்கடை உரிமம் ஊழல் விவகாரம் – டெல்லி துணை முதல்வரிடம் விசாரிக்க அமலாக்கத் துறையினர் முடிவு

புதுடெல்லி: மதுக்கடை உரிமம் ஊழல் விவகாரம் தொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவிடம் விசாரிக்க அமலாக்கத் துறை முடிவு செய்துள்ளது. டெல்லியில் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, கடந்த ஆண்டு நவம்பர் 17-ம் தேதி புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்தியது. இதன்படி, 849 தனியார் நிறுவனங்களுக்கு மதுக்கடை உரிமங்கள் வழங்கப்பட்டன. இதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக தலைமைச் செயலர் நரேஷ் குமார், துணைநிலை ஆளுநர் சக்சேனாவிடம் கடந்த ஜூலை மாதம் அறிக்கை அளித்தார். அதன்பேரில், … Read more

நிலுவை எண்ணிக்கை 5 கோடியை எட்டுகிறது 50 வழக்கை முடிப்பதற்குள் 100 வழக்குகள் பதிவாகிறது; ஒன்றிய சட்ட அமைச்சர் வேதனை

புதுடெல்லி: நாட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 5 கோடியை நெருங்கிக் கொண்டிருப்பதாக கூறிய ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ, 50 வழக்கை தீர்த்து வைப்பதற்குள், 100 புதிய வழக்குகள் பதிவாவதாக கூறி உள்ளார். டெல்லியில் ஆயுதப்படை தீர்ப்பாயம் சார்பில் கருத்தரங்கம் நேற்று நடந்தது. இதில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ பங்கேற்றனர். கூட்டத்தில் கிரண் ரிஜிஜூ பேசியதாவது: நீதித்துறையில் நிலுவை வழக்குகளை குறைக்க அரசு நவீன தொழில்நுட்பங்களை … Read more

மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு ரூ.4 ஆயிரம் கோடி செலுத்திய மாநிலங்கள் – நிலுவை ரூ.1,037 கோடியாக குறைந்தது

புதுடெல்லி: மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை உரிய நேரத்தில் செலுத்தாமல் ரூ.5,085 கோடி பாக்கி வைத்திருந்ததால், மின் சந்தையில் மின்சாரம் வாங்குவதற்கும், விற்பதற்கும் தமிழ்நாடு உட்பட 13 மாநிலங்களுக்கு மத்திய அரசு தடைவிதித்தது. இந்நிலையில், ஆந்திரா, மகாராஷ்டிரா உட்பட 6 மாநிலங்கள் பாக்கித் தொகையை உடனடியாக திருப்பிச் செலுத்தியுள்ளன. ஏறத்தாழ ரூ.4 ஆயிரம் கோடிக்கு மேல் பாக்கி நிலுவைத் தொகை செலுத்தப்பட்டுள்ளது. இதனால், மின் உற்பத்தி நிறுவனங்களுக்கான நிலுவை ரூ.1,037 கோடியாகக் குறைந்துள்ளது. தடை … Read more

விரைவுசாலை வருவதால் இடிக்க மனமில்லை, ரூ.1.5 கோடியில் கட்டிய வீட்டை பின்னோக்கி நகர்த்தும் விவசாயி; பஞ்சாபில் நெகிழ்ச்சி

சண்டிகர்: தேசிய விரைவுசாலை வர உள்ளதால், ஆசை ஆசையாக ரூ.1.5 கோடியில் கட்டிய வீட்டை இடிக்க மனமில்லாத விவசாயி, தனது கனவு இல்லத்தை 500 அடி பின்னோக்கி நகர்த்திக் கொண்டிருக்கிறார். வீடு என்பது அனைவருக்கும் வாழ்க்கை லட்சியம். வாழ்நாளில் சொந்தமான ஒரு வீட்டையாவது கட்டி விட வேண்டுமென பலரும் இரவு, பகல் பாராமல் உழைக்கின்றனர். அப்படித்தான், பஞ்சாப் மாநிலம், சங்ரூர் அடுத்த ரோஷன்வாலா கிராமத்தை சேர்ந்த விவசாயி சுக்விந்தர் சிங் சுகியும், மிகவும் கஷ்டப்பட்டு இடத்தை வாங்கி … Read more

இளநிலை அதிகாரிகளின் பதவி உயர்வு முறையில் ரயில்வே அதிரடி மாற்றம்‘ஓபி’அடிப்பவர்களுக்கு விஆர்எஸ்

புதுடெல்லி: இளநிலை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கும் முறையில் ரயில்வே நிர்வாகம் அதிரடி மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்குவதில் ஒன்றிய அரசு 360 டிகிரி மதிப்பீடு முறையை அறிமுகப்படுத்தியது. தற்போது இந்த நடைமுறையை ரயில்வேயும் பின்பற்ற உள்ளது. இதுதொடர்பாக ரயில்வே வாரியம், இளநிலை அதிகாரிகளின் ஆண்டு செயல்திறன் மதிப்பீடு அறிக்கையை தயாரிப்பது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஒவ்வொரு ஆண்டும் மேலதிகாரிகளுக்கு அறிக்கை சமர்பிப்பதற்கான இணைப்பு (லிங்க்) அனுப்பப்படும். … Read more