அரசுத் துறை பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கும் திட்டம் எதுவும் இல்லை: மத்திய அரசு

புதுடெல்லி: “அரசுத் துறையில் பணிபுரியும் பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை” என்று விழுப்புரம் எம்.பி. ரவிக்குமாரின் கேள்விக்கு அளித்த பதிலில் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி மக்களவையில் தெரிவித்துள்ளார். இது குறித்து விழுப்புரம் மக்களவை தொகுதி எம்.பியான டி.ரவிகுமார் மக்களவையில் எழுப்பிய கேள்வியில், ”மாதவிடாய் சலுகைகள் மசோதா, 2018-இல் வழங்கப்பட்ட மாதவிடாய் விடுப்பு போன்ற விதிகளை அரசாங்கம் செயல்படுத்துகிறதா? தனியார் அலுவலகங்களில் இந்தக் … Read more

ராஜஸ்தானில் இருந்து கேரளாவுக்கு 12 சிறுமிகள் ரயிலில் கடத்தல்: பாஸ்டர் உள்பட 3 பேர் கைது

திருவனந்தபுரம்: ராஜஸ்தானில் இருந்து 12 சிறுமிகள் ரயிலில் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக எர்ணாகுளத்தைச் சேர்ந்த பாஸ்டர் உள்பட 3 பேரை ரயில்வே போலீசார் கைது செய்தனர். குஜராத் மாநிலம் ஓக்காவில் இருந்து கடந்த 26ம் தேதி எர்ணாகுளம் நோக்கி புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில் கேரள மாநிலம் கோழிக்கோடு ரயில் நிலையத்தை அடைந்தது. ரயிலில் 8 வயது முதல் 18 வயதிலான சிறுமிகள் 12 பேர் பயணம் செய்தனர். அவர்களுடன் 4 பெரியவர்களும் இருந்தனர். அவர்களது செயல்பாடுகளில் பயணிகளுக்கு … Read more

பிரதமர் மோடி, யோகி ஆதித்யநாத்தை ஆதரித்ததால் மனைவிக்கு 'முத்தலாக்' கொடுத்த கணவர்

பிரதமர் மோடி, உத்தரப்பிரதேசம் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரை ஆதரித்ததால் மனைவிக்கு ‘முத்தலாக்’ கொடுத்த கணவன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது நதீம், அதே மாவட்டத்தை சேர்ந்த ஷானா இராம் என்ற பெண்ணை கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பரில் திருமணம் செய்திருந்தார். இந்த நிலையில் ஷானா இராம் பாஜக ஆதரவு நிலைப்பாடு கொண்டவர் எனக் கூறப்படுகிறது. இதனாலேயே ஷானா இராமுக்கும் … Read more

குடியரசுத் தலைவர் குறித்து சர்ச்சை கருத்து: கடிதம் மூலம் மன்னிப்பு கோரினார் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி

புது டெல்லி: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு குறித்து சர்ச்சையான கருத்தை தெரிவித்த காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, எழுத்துப்பூர்வமாக கடிதம் மூலம் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார். குடியரசுத் தலைவர் குறித்து அவர் தெரிவித்த சர்ச்சை கருத்தால் மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளிலும் பாஜக எம்.பிக்கள் கண்டன குரல் எழுப்பினர். குறிப்பாக இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மன்னிப்பு கோர வேண்டும் என தெரிவித்தனர். பாஜக சார்பில் மத்திய … Read more

மக்களவையில் தயாநிதி மாறன் எம்பி கேள்வி தமிழக விமான நிலையங்கள் எப்போது விரிவாக்கப்படும்?

புதுடெல்லி: தஞ்சாவூர், தூத்துக்குடி, கோவை விமான நிலையங்கள் எப்போது விரிவுபடுத்தப்படும் என மக்களவையில் தயாநிதி மாறன் எம்பி கேள்வி எழுப்பி உள்ளார். மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக கேட்டுள்ள கேள்வியின் விவரம்: * தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களை விரிவுபடுத்தவும், அதன் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தவும் ஒன்றிய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதா? கடந்த 3 ஆண்டுகளாக மேற்கொண்ட நடவடிக்கைகளை தெரியப்படுத்தவும்.* கொரோனா காலத்திற்கு பிறகு விமான நிலையங்களுக்கு உதவிடும் வகையில் ஒன்றிய அரசு … Read more

செஸ் ஒலிம்பியாட்: முதல் சுற்றில் இந்திய அணிகள் அசத்தல் – தமிழக வீரர் சசிகிரண் பேட்டி

செஸ் ஒலிம்பியாட் போட்டித் தொடரை இந்திய அணிகள் வெற்றியுடன் தொடங்கியுள்ளன. 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் தொடங்கியுள்ளது. இதில் இந்தியாவின் சார்பில் ஓபன் மற்றும் மகளிர் பிரிவில் தலா 3 அணிகள் பங்கேற்றுள்ளன. ஓபன் பிரிவுக்கான முதல் சுற்றில், இந்திய ஏ அணி, ஜிம்பாப்வே அணியையும், பி அணி ஐக்கிய அரபு அமீரக அணியையும், சி அணி தெற்கு சூடானையும் தோற்கடித்தன. மகளிர் பிரிவில் இந்தியாவின் 3 அணிகளும் வெற்றியை வசமாக்கின. மகளிர் ஏ அணி தஜிகிஸ்தானையும், பி அணி வேல்ஸையும், சி அணி ஹாங்காங்கையும் தோற்கடித்தன. செஸ் ஒலிம்பியாட் … Read more

அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் ஓபிஎஸ் கோரிக்கை நிராகரிப்பு: ஐகோர்ட்டில் முறையிட உச்ச நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கடந்த 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவை ரத்து செய்ய வேண்டும் என்ற ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், வழக்கை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. அதிமுகவில் யாருக்கு அதிகாரம், ஒற்றைத் தலைமை விவகாரம் ஆகிய பிரச்னை உச்சம் தொட்டுள்ள நிலையில் கடந்த 11ம்தேதி நடந்த பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி அமர்வு, பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளதால் பொதுக்குழுவை … Read more

கிரேன் கம்பி அறுந்து விழுந்ததில் பீகாரை சேர்ந்த 5 தொழிலாளர்கள் உயிரிழப்பு..!

தெலங்கானாவின் நாகர்குர்னூல் மாவட்டத்தில் கிரேன் கம்பி அறுந்து விழுந்ததில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ரெகுமானா கடா பகுதியில் பாலமுரு – ரங்காரெட்டி இடையே பாசன திட்டத்துக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், 100 அடி ஆழமுள்ள சுரங்கப்பாதையில் கிரேன் உதவியுடன் கேபிள் பதிக்கும்போது திடீரென கம்பி அறுந்து விழுந்தது. Source link

விசாகப்பட்டினத்தில் திருமண நாளை கொண்டாட கணவருடன் கடற்கரைக்கு வந்த மனைவி திடீர் மாயம்

*கடலில் அடித்து சென்றதாக புகார்*ஹெலிகாப்டர், படகுகளில் தேடிய அதிகாரிகள்*காதலனுடன் சென்றது அம்பலம்திருமலை : விசாகப்பட்டினத்தில் திருமண நாளை கொண்டாட கணவருடன் கடற்கரைக்கு வந்த மனைவி கடல் அலையில் அடித்து சென்றதாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, ஹெலிகாப்டர் மற்றும் படகுகளில் அதிகாரிகள் தேடினர். இதற்கிடையே காதலுடன் இளம்பெண் சென்றது தெரியவந்தது. ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் சஞ்சீவய்யா நகரை சேர்ந்தவர் சாய் பிரியா. இவருக்கும் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தை சேர்ந்த உறவினரான சீனிவாஸ் என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு  முன்பு  பெரியோர்கள் … Read more

மழைநீரில் கால் நனைந்துவிடாது என்பதற்காக மாணவர்கள் போட்ட நாற்காலிகள் மீது ஏறி சென்ற ஆசிரியை..!

உத்தரபிரதேசத்தில் மழைநீரில் கால் நனைந்துவிடாது என்பதற்காக மாணவர்களை நாற்காலிகளை போட வைத்து அதன் மீது ஏறி சென்ற ஆசிரியை பணிடைநீக்கம் செய்யப்பட்டார். மதுரா மாவட்டத்தில் அரசுப் பள்ளிக்கு பணிக்கு வந்த ஆசிரியை, தேங்கியிருந்த மழைநீரில் நடந்து செல்ல விருப்பமில்லாமல் இந்த செயலை செய்துள்ளார். மேலும், நாற்காலிகள் சரிந்துவிடாது என்பதற்காக மாணவர்களை பிடித்துக் கொள்ளுமாறும் கூறிய ஆசிரியையின் வீடியோ வெளியானதை அடுத்து கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.  Source link